Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Itharku Munbum Itharku Piragum
Itharku Munbum Itharku Piragum
Itharku Munbum Itharku Piragum
Ebook270 pages1 hour

Itharku Munbum Itharku Piragum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Manushya Puthiran (born 1968) is a poet and also a DMK supporter in Tamil Nadu. He was born as S.Abdul Hameed in Tiruchirappalli District district Thuvarankurichi. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as a young writer.

Over the past two decades, several of his poems got published in popular Tamil Magazines like Ananda Vikatan, Kumudam, Kalki and Kalachuvadu. His political and topical columns are regular in Tamil periodicals such as Kungumam, Nakeeran and Tamil popular daily Dinamalar.

He is known for his progressive views on various socio-political issues like capital punishment abolition, caste system annihilation, women liberation etc.

Now he lives in Chennai He is running Uyirmmai publication and Uyirmmai magazine. On Aug 19th 2015, he joined leading political party Dravida Munnetra Kazhagam of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114002035
Itharku Munbum Itharku Piragum

Read more from Manushya Puthiran

Related to Itharku Munbum Itharku Piragum

Related ebooks

Reviews for Itharku Munbum Itharku Piragum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Itharku Munbum Itharku Piragum - Manushya Puthiran

    http://www.pustaka.co.in

    இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

    Itharkum Munbum Itharku Piragum

    Author:

    மனுஷ்ய புத்திரன்

    Manushya Puthiran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/manushya-puthiran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

    மனுஷ்ய புத்திரன்

    மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 1968இல் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதி வரும் இவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தியா டுடே இவரை தமிழகத்தின் 10 செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. 2011இல் கனடாவின் தமிழ்த் தோட்ட விருது அதீதத்தின் ருசி தொகுப்பிற்காக வழங்கப்பட்டது. அதே ஆண்டில் ஆனந்த விகடனால் அதீதத்தின் ருசி சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை மாத இதழ், உயிரோசை இணைய வார இதழ் ஆகிய இதழ்களை நடத்தி வருகிறார். 2011இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக இவர் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்று கொண்டுவந்த டைம்ஸ் இன்று சிறப்பிதழ் பெரிதும் கவனம் பெற்றது. ஊடகங்களில் முன்னணி விமர்சகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

    இவரது கவிதைத் தொகுப்புகள்:

    மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993), இடமும் இருப்பும் (1998), நீராலானது (2002), மணலின் கதை (2004), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2006), அதீதத்தின் ருசி (2009), இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் (2010), பசித்த பொழுது (2011), அருந்தப்படாத கோப்பை (2012)

    கட்டுரைத் தொகுப்புகள்: காத்திருந்த வேளையில் (2003), எப்போதும் வாழும் கோடை (2003), என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009), டினோசர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன (2012), தோன்ற மறுத்த தெய்வம் (2012)

    e-mail: manushyaputhiran@gmail.com

    கவிதையும் சிகிச்சையும்

    இந்த அதிகாலையில் நல்ல குளிரோடு மழையும் சேர்ந்து கொண்டுவிட்டது. எப்போது மழை பெய்ய ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஒரு கனவு; ஒரு பெரிய இலைமீது உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறேன். அறிமுகமில்லாத மனிதர்கள் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கிறார்கள். இந்த இலை எந்த மரத்தினுடையது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். இவ்வளவு பெரிய இலை எப்படி வளர்கிறது என்றோ அதன்மீது என்னை ஏன் படுக்க வைத்திருக்கிறார்கள் என்றோ எனக்குப் புரியவில்லை. அப்புவும் அம்முவும் என்மீது ஏறி குதித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த இலை கிழிந்துபோய்விடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. என் பயத்தைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள். வேகமாக அதன்மீது குதித்துக் காட்டுகிறார்கள். உண்மையில் அது ஒரு மெல்லிய இலை தான். ஆனால் அது எங்களை அவ்வளவு பிரியத்துடன் உறுதியுடன் தாங்குகிறது.

    எவ்வளவோ நேரமாக மழையின் சப்தத்தை மட்டுமே கேட்டுக்கொண்டு படுத்திருக்கும்போதுதான் சென்ற ஆண்டும் இதேபோன்ற ஒரு நாளில்தான் அதீதத்தின் ருசிக்கான முன்னுரையையும் எழுதிக்கொண்டிருந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது. எழுத்து, வாழ்க்கை, அன்பு என்பதெல்லாம் ஒரு பருவத்தில் மட்டுமே வளரும் செடி என்று தோன்றுகிறது. அந்தத் தொகுப்பு வந்த பிறகு கடும் நோய்மையில் வீழ்ந்தேன். அதை எழுதிய காலத்தில் உடலால் என்னை எவ்வளவு அழிக்கமுடியுமோ அழித்துக்கொண்டேன். மனதை விடுதலை செய்வதற்கு உடலை அழிப்பதைத்தவிர எனக்கு வேறு எந்த மார்க்கமும் தெரியவில்லை. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவார்’ என்ற மெய்ப்பொருள் சித்தனின் வாக்கிற்கு எதிராக உடல் அழிய அழிய உயிர் சுடர்விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டும் ஒரு அனுபவம். உக்கிரமான காமமும் கவிதையும் மரணத்தோடு நிகழ்த்தும் விளையாட்டு. உடலின் சுமையையும் நினைவின் சுமையையும் கடந்துசெல்வதற்கு வேறு உபாயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு முழுக்க சிகிச்சையிலும் கவிதையிலும்தான் கடந்து சென்றது. பல நிறங்களுள்ள மருந்துகளையும் வாக்கியங்களையும் நான் மாறி மாறி பயன்படுத்தி வந்திருக்கிறேன். அவற்றின் விளைவுகள்தான் இந்தத் தொகுப்பு.

    இந்த ஓராண்டில் எழுதிய கவிதைகள்தான் ஒரு எழுத்துப் பருவத்தில் நான் மிக அதிகமாக எழுதியவை. இதைப் பற்றி என் சக எழுத்தாளர்களைப் போலவே எனக்கும் மிகுந்த சஞ்சலமும் புகாரும் சந்தேகங்களும் இருக்கின்றன. நான் இதையெல்லாம் நிறுத்திவிட்டு அவர்களைப் போலவே நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். ஆனால் என்ன செய்வது, இளம் எழுத்தாளன் என்று எனக்குக் கொடுக்கப்பட்ட சலுகை அட்டை கள் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. ஒரு மூத்த எழுத்தாளன் என எனக்குக் கிடைக்கவிருக்கும் இலவச ரேஷன்களுக்கு இன்னும் நான் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். நாற்பதுகளில் வாழ்வது என்பதைப் போல ஒரு தமிழ் எழுத்தாளனுக்குக் கடினமான காலம் வேறு எதுவும் இல்லை. ஒன்று அவன் இறந்துபோக வேண்டும் அல்லது நிறைய எழுதவேண்டும்.

    நிறைய எழுதும்போது எப்படி இவ்வளவு எழுதுகிறாய் என்கிற கேள்வியை ஒருவர் பாக்கியில்லாமல் கேட்கிறார்கள். தன்னுடைய மனதை, ஒரு கலாச்சார வாழ்க்கையின் கூட்டு மனதின் ஒரு பகுதியாக கரைத்துக்கொண்டுவிடும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எல்லையற்றவை. என்னுடைய உடலை, என்னுடைய நினைவை அழித்துக் கொள்வது என்பது எண்ணற்ற உடல்களையும் மனங்களையும் எனக்குள் ஏற்பதற்கான ஒரு இடத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சிதான். என் உடல் எத்தனையோ உடல்களின் உணர்ச்சிகளால் ததும்பிக்கொண்டிருக்கிறது. என் மனம் எத்தனையோ மனங்களின் நினைவுகளால் விம்முகிறது. ஒரு கூட்டு மனமாகச் செயல்படும் கவிஞன் எழுதுமாறு தூண்டப்படுகிறான், பிரார்த்தனை செய்யப்படுகிறான், சித்ரவதைக்கு ஆளாகிறான், ஆசை காட்டப்படுகிறான், அந்தரங்கங்களைத் திருடுபவனாக மாற்றப்படுகிறான். பிறருடைய மறைவிடங்களில் காவல் வைக்கப்படுகிறான். ரத்த ருசியுள்ளவனாகிறான். ரத்த ருசிகொண்ட ஒரு மிருகத்திற்கு உணவுக்கட்டுப்பாடுகளைச் சொல்லிக் கொடுப்பது எப்படி?

    இந்தக் கவிதைகளுக்குள் அடையும் எண்ணற்ற வெற்றிகளைப் பற்றி மகிழ்ச்சியோ எண்ணற்ற தோல்விகளைப் பற்றி கசப்புகளோ எனக்கு இல்லை. இந்த வாழ்க்கையின் விசித்திரங்களை எந்த அளவிற்குத் தொகுக்க முடியும், அதன் மேல் மூடியிருக்கும் திரைகளை விலக்க முடியும் என்பதைப் பற்றித்தான் முழுக்க முழுக்க கவனம் கொண்டிருக்கிறேன். ‘நீங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதத்தான் வேண்டுமா?’ என்று ஒரு நண்பர் கேட்டார். ‘தமிழ்க் கவிஞனுக்கு எதுவுமே தெரியாது என்கிற அவமானத்தை யாராவது துடைக்க வேண்டாமா?’ என்று அவருக்குப் பதில் சொன்னேன். அது ஒரு வீம்புக்காகச் சொல்லப்பட்ட பதிலேயன்றி நான் என்னைப் பற்றிக் கொள்கிற மூடநம்பிக்கை அல்ல. அதே சமயம் இன்று தமிழில் எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் நமது ஈராயிரம் ஆண்டுக் கவிதை மரபை இழிவுபடுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அவை நமது சொற்களின் நிலத்தை நஞ்சாக்குகின்றன. ஆயத்த ஆடையகங்களின் டெய்லர்களைப் போல நமது கவிஞர்கள் ராப்பகலாய் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். சிறிய விளம்பரங்களின் மூலம் அவற்றை எங்காவது விற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள். கவிஞனைப் பற்றிய கேலிச்சித்திரங்களை இன்னும் உறுதியானதாக மாற்றுகிறார்கள். ஒருவனுக்கு சொல்வதற்கு எந்த அளவிற்கு ஒன்றுமே இல்லாமல் போக முடியும் என்பதன் உதாரணங்களாக நமது கவிகள் உருமாறிவிட்டார்கள். அவர்கள் கைகளில் இந்த வாழ்க்கையின் ஈரம் ஒட்டுவதே இல்லை. அவர்கள் கண்களில் நமது காலத்தின் கனல் ஏறுவதுமில்லை. நான் நூற்றுக் கணக்கான கவிஞர்களுடன் வேலை செய்கிறேன். ஆனால் ஒருவரிடம் அவர்களுடையதல்லாத ஏதேனும் ஒரு கவிதையைப் பற்றிப் பேசுவதற்கு எப்போதாவது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா என்று யோசிக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.

    இந்தக் கவிதையை எழுதுவதற்குக் காரணமாக யார் இருந்தார்களோ அவர்கள் எவ்வாறு என் மனதை அணைய விடாமல் பார்த்துக்கொண்டார்கள் என்பதை விவரிப்பது கடினம். நான் அவர்களது நிழல்களாக இருக்கிறேன். அவர்களை

    Enjoying the preview?
    Page 1 of 1