Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2
()
About this ebook
நமது வணக்கத்திற்குரிய தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள “மதமும் - மனித வாழ்வும்” என்கிற இந்த நூலுக்கு முன்னுரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். தோழர் ஜீவானந்தம், தமிழகத்தில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் இருவர்களில் ஒருவர். மற்றவர் தோழர் ம. சிங்காரவேலர். கம்யூனிஸத் தத்துவ பிரச்சாரத்தையும், தமிழ் இலக்கியத்தையும் இழையோட்டி தமிழ் மக்களுக்கு வழங்கிய மேதை தோழர் ஜீவா. அவருடைய கருத்து செலுத்தப்பட்டு, தமிழ் இலக்கியமும் சிறப்புப் பெற்றது.
மதம் மக்களை மயக்கும் அபின். இருப்பினும் விஞ்ஞான ரீதியில் மத ஆதிக்கத்தையும், மூடநம்பிக்கைகளையும் எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது மனித சமுதாய மாறுதலின் மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப்பிரச்சினையாகும். பொருளாதார அமைப்பிலும், அரசியலிலும் சுரண்டுகிற வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற சமுதாயத்தில், மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆஸ்திகப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்தும். மதமும் கடவுளும், சுரண்டுகிற வர்க்கங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அபயம் புகும் கடைசி ஆயுதம் ஆகும். எனினும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களாகிய தொழிலாளர்கள், விவசாயிகள், படித்த நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பகுதி, மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், தலைவிதியின் பெயரால், புண்ணியம் பாவத்தின் பெயரால், நல்வினை - தீவினையின் பெயரால், மூடநம்பிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க இடமளிக்காதவாறு மதம், கடவுள், மூடநம்பிக்கை போன்றவைகளை எதிர்த்துப் போராடி இருக்கவேண்டும். மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற முறைகள், வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதற்கு உட்பட்டிருக்கவேண்டும்.
Read more from Thozhar P. Jeevanandham
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2
Related ebooks
Kaaladiyil Pootha Kamala Malar Rating: 0 out of 5 stars0 ratingsMadha Sirasetham Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Purana Thuligal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSinthikka Sila Nodigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsVaazhum Deivam Mahatma Rating: 5 out of 5 stars5/5Chanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5Shirdi Baba Rating: 0 out of 5 stars0 ratings40+ Maatram Rating: 0 out of 5 stars0 ratingsSamuthaya Marumalarchi Ilakkiyangal Rating: 0 out of 5 stars0 ratingsThirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal Rating: 3 out of 5 stars3/5Maha Periyavar Rating: 4 out of 5 stars4/5Purana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsThathuvamedhai J.k.vum Manavargalum Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Oru Payanam… Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Punitha Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsAmaithiyana Vazhkaiku Aanmeega Vazhikatti Rating: 5 out of 5 stars5/5Sinthikkum Naanal Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsVathai Padum Vazhvu Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Deivathin Kural - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsManitham Punitham Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Neri Koorum Subhashithangal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2
0 ratings0 reviews
Book preview
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 - Thozhar P. Jeevanandham
https://www.pustaka.co.in
தோழர் ப. ஜீவானந்தம் படைப்புகள் - தொகுதி 2
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2
Author:
தோழர் ப. ஜீவானந்தம்
Thozhar P. Jeevanandham
For more books
https://www.pustaka.co.in/home/author/thozhar-p-jeevanandham
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
மதமும் மனித வாழ்வும்
முன்னுரை
நான் ஒரு நாத்திகன்
மதமும் மனித வாழ்வும்
கம்யூனிஸ்டுகளும் மதமும்
அராஜகவாதிகளுக்குக் கண்டனம்
மூவகைக் கருத்துக்கள்
மார்க்சிய வேஷம்
மதத்தைப் பற்றி சோவியத் குடியரசின் கொள்கை
நான் நாத்திகன் – ஏன்?
பகத்சிங்கைப்பற்றி குடி அரசு!
மதமும் மனித வாழ்வும்
மற்றும்
நான் நாத்திகன் – ஏன்?
ஆக்கியோன்:
k. பகத்சிங்
மொழிபெயர்ப்பாளர்:
தோழர் ப. ஜீவானந்தம்
முன்னுரை
சுதந்திரப் போராட்ட வீரர், இலக்கியப் பேராசான், தோழர் ப. ஜீவானந்தம் கம்பராமாயணத்தின் மானுடநேயக் கருத்துக்களை மக்களிடம் எளிய தமிழில் கொண்டு சென்றவர்.
எல்லாரும் தேசியக்கவி மட்டுமே என்று குறுக்கிய காலத்தில் பாரதியை உலக மகாகவி
என்று அங்கீகரிக்க விவாதங்கள் மூலமாக வென்று அவரைப் போற்றி பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் ஜீவா. மேலும் பாரதியின் கருத்துக்களை மக்களிடத்தில் பாரதி வழி ஜீவா
என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார்!
பெண்களின் சமூக விடுதலைக்காகவும் பெண்கள் சமூகத்தில் சம ஊதியம் பெறவும் புதுமைப் பெண்
என்ற நூலினை எழுதி மக்களிடத்தில் புரட்சிக்கு வித்திட்டவர்.
ஜீவாவின் மொழிபெயர்ப்புத் திறமையைப் பறைசாற்றும் பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்?
என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம் இன்றுவரை சிறப்பாகப் போற்றப்படுகிறது.
இலக்கியத்தில் உள்ள சோசலிசக் கருத்துக்களை மக்களிடத்தில் இலக்கியச் சுவை
என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார். சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயம் அமைக்க மற்ற பாதையை விட அதாவது (மற்ற மாடல்களை விட) பொதுவுடைமைப் பாதையே சிறந்தது என முழங்கியவர்!
சுதந்திரத்திற்காக இந்தியாவில் பல தலைவர்கள் போராடினாலும் ஜீவா ஒருவர்தான் வாய்ப்பூட்டுச் சட்டம், நாடு கடத்தல், ஊரை விட்டு வெளியில் நடமாடத்தடை போன்ற வெள்ளை அரசின் அடக்குமுறைக்கு ஆளானவர்.
அப்பேர்ப்பட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் இலக்கியப் பேராசான் ப. ஜீவா அவர்கள் எழுதிய நூல்கள் பல பதிப்புகள் வந்திருந்த போதும் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் தற்கால இளைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பெண்ணுரிமைப் போராளிகள் என அனைவரும் கற்றுணர ஜீவாவின் நூல்களே முதன்மையானவை என்ற வகையில் இனி எந்தக் காலத்திலும் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் படிக்கும் வண்ணம் மின்னூலாகவும் ஆடியோ புத்தகமாகவும் அச்சுப் பிரதியாகவும் எது தேவையோ அது எளிதாக தங்கு தடையின்றிக் கிடைக்கும் வண்ணம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான ஓர் அரிய முயற்சியின் முன்னோட்டமே இந்தப் பதிப்பு.
அந்த வகையில் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் எழுதிய நூல்களை மறுபதிப்புச் செய்து மக்களிடத்தில் கொண்டு செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், ஜீவா அவர்களின் இதுவரை கிடைக்கப் பெறாத நூல்கள் கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நூல்கள் தொகுக்க உதவிய கணியம் அறக்கட்டளை மற்றும் ஆர்வமுடன் நூல்களை அனுப்பியும் ஆலோசனைகள் வழங்கியும் பேருதவி செய்த 200க்கும் மேற்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
புதுக்கோட்டை நகரக் கிளை
நூல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய
புதுக்கோட்டை நகரக் கிளை அலைபேசி எண்: 7094000253
மதமும் மனித வாழ்வும்
முன்னுரை
நமது வணக்கத்திற்குரிய தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள மதமும் - மனித வாழ்வும்
என்கிற இந்த நூலுக்கு முன்னுரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
தோழர் ஜீவானந்தம், தமிழகத்தில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் இருவர்களில் ஒருவர். மற்றவர் தோழர் ம. சிங்காரவேலர். கம்யூனிஸத் தத்துவ பிரச்சாரத்தையும், தமிழ் இலக்கியத்தையும் இழையோட்டி தமிழ் மக்களுக்கு வழங்கிய மேதை தோழர் ஜீவா. அவருடைய கருத்து செலுத்தப்பட்டு, தமிழ் இலக்கியமும் சிறப்புப் பெற்றது.
மதம் மக்களை மயக்கும் அபின். இருப்பினும் விஞ்ஞான ரீதியில் மத ஆதிக்கத்தையும், மூடநம்பிக்கைகளையும் எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது மனித சமுதாய மாறுதலின் மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப்பிரச்சினையாகும்.
பொருளாதார அமைப்பிலும், அரசியலிலும் சுரண்டுகிற வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற சமுதாயத்தில், மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆஸ்திகப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்தும். மதமும் கடவுளும், சுரண்டுகிற வர்க்கங்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அபயம் புகும் கடைசி ஆயுதம் ஆகும்.
எனினும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களாகிய தொழிலாளர்கள், விவசாயிகள், படித்த நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பகுதி, மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், தலைவிதியின் பெயரால், புண்ணியம் பாவத்தின் பெயரால், நல்வினை - தீவினையின் பெயரால், மூடநம்பிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க இடமளிக்காதவாறு மதம், கடவுள், மூடநம்பிக்கை போன்றவைகளை எதிர்த்துப் போராடி இருக்கவேண்டும். மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற முறைகள், வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதற்கு உட்பட்டிருக்கவேண்டும்.
முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்புதான் மதம், சமயம், கடவுள், போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு ஆணிவேர். அத்தகைய அமைப்பை எதிர்த்துப் போராட வளர்க்கின்ற ஒற்றுமையின் மூலம்தான், மூடநம்பிக்கைகள், ஜாதி, மத வேற்றுமைகளையும் களைவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஏதுவாகும். அன்றி மதம் - கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளை, எதிர்த்துப் போராடுவதற்கு முதலிடமளிப்பது, முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்க்க வேண்டுமென்கிற வர்க்க உணர்வை திசை திருப்பிவிடும், சீர்திருத்தவாத சாகசமாகிவிடும்.
ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஏற்பட்டுள்ள தாழ்வுகளை எதிர்த்து, சகல பகுதி மக்களுக்கும் சம உரிமைகளுக்காகவும், சம சுதந்திரத்திற்காகவும் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சியாகும். தமிழகத்தில் திராவிடக் கழகமும், தி.மு.கழகமும் பகுத்தறிவு இயக்கத்தை ஓரளவிற்கு நடத்தியுள்ளனர். அவர்களுடைய நடவடிக்கைகள் விஞ்ஞான அடிப்படை கொண்டவையல்ல. எனவேதான் வரட்டு நாத்திக
பிரச்சாரத்திலிருந்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற சர்வ மத சமரச சித்தாந்த நிலைக்கு தி.மு.கழகத்தினர் வந்துள்ளனர்.
திராவிடக்கழகம், தி.மு.க. ஆகிய இயக்கத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் உள்ள ஊனங்களை தோழர் ஜீவா, மார்க்சிய மெய்ஞானத்தின் வெளிச்சத்தில் அலசி ஆராய்கின்றார் இந்தச் சிறு நூலில்.
மதத்தைப்பற்றி மார்க்சிய, லெனினிஸ அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும், மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த நூல், புதுமையைக் கற்றுக்கொள்ளத் துடிக்கும் இளைஞர்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
எம். கல்யாணசுந்தரம்
செயலாளர்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக மாநிலக்குழு.
சென்னை
4-2-1969
நான் ஒரு நாத்திகன்
ஷெல்லி - ஒரு நாத்திகன், ஒரு ஜனநாயகவாதி, ஒரு மனிதன்.
இவ்வாறு, ஆங்கில நல்லிசைக் கவிஞராகிய ஷெல்லி தாம் நேப்பிள்ஸ் என்ற நகரத்தின் படிப்பகம் ஒன்றிற்குச் சென்றிருந்தபொழுது அங்கிருந்த பெயர்ப்பதிவு ஏட்டில் தீட்டினான்.
அதே ஷெல்லி மாணவராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நேர்ந்தது. அவர் ஒரு நாத்திகர் என்று கல்லூரித் தலைமை ஆசிரியருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. உடனே ஒரு உத்தரவு பிறந்தது. இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ஷெல்லி கடவுளைக் கண்டுபிடிக்காவிட்டால் அவனைக் கல்லூரியிலிருந்து கல்த்தா கொடுப்பேன்.
ஷெல்லிக்காவது 24 மணி நேரம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இன்றைய மதக்கிறுக்கர்களும், ஆஸ்திக வெறியர்களுமோ அந்த நேரம்கூட அனுமதிக்கத் தயாராக இல்லை. கம்யூனிஸ்டு விரோதிகளான இந்து, முஸ்லிம், கிறிஸ்துமதப் பிற்போக்காளர்களும், ஏனைய எல்லா பிற்போக்காளர்களும் ஒரு கூட்டணி வகுத்து