Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7
()
About this ebook
பாரதியின் பெருமை, தனிச்சிறப்பு தேசீய இயக்கத்தின் மகத்துவத்தை அல்லது விரிந்து பரந்த தேசீய இயக்கத்தை, அதனுடைய பன்முகங்களிலும் கண்டதிலேயே அடங்கியிருக்கிறது. அரசியல் சுதந்திரத்தைப்பற்றி அருமையாகப் பாடிய கவிஞன் என்றே, பொதுப்படையாக அடிக்கடி பாராட்டப்படுகிறான் பாரதி. அவனுடைய எழுத்துத் திருப்பணியில் ஒரு பகுதிதான் இது. பாரதியைப்பற்றி அறிய வேண்டுமானால், தேசீய இயக்கம் பூராவையும், அதன் எல்லாத் துறைகளையும், சகல அம்சங்களையும் அதன் வலு, வலுவின்மைகளையும் இறுதியாக அது எத்திக்கை நோக்கி முன்னேறி வந்துள்ளதென்பதையும் அறிந்து தீரவேண்டும். ஒரேயடியாக, காலத்தைத் தாண்டி எந்த மனிதனும் வாழமுடியாது. எத்துணை தீர்க்கதரிசியாயினும் கால வரம்புகளை முற்றும் மீறிச் சென்றுவிட முடியாது. கவிஞனும் மனிதன் தானே! இந்த உண்மையை மறந்து விடாமல் பாரதியை ஆராய்ந்தால், பாரதியின் பெருமை இன்னும் அதிகரிக்கும்.
Read more from Thozhar P. Jeevanandham
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7
Related ebooks
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Rating: 0 out of 5 stars0 ratingsMahakavi Bharathiyar - 100 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiye Kanalagi.. Rating: 0 out of 5 stars0 ratingsDalit Ilakkiya Arasiyal… Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Mahakavi Bharathiyar! Rating: 0 out of 5 stars0 ratingsJayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsDeivangal Ezhuga Rating: 0 out of 5 stars0 ratingsNandhanar Theru Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsTiruppur Kumaran Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Oru Payanam… Rating: 0 out of 5 stars0 ratingsVerukku Neer Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsDalit Kalai, Ilakkiyam... Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsBharathi – Sila Paarvaikal Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsPaather Sarathi Bharathi Padaippugal - Oru Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsKokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5
Reviews for Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7
0 ratings0 reviews
Book preview
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7 - Thozhar P. Jeevanandham
https://www.pustaka.co.in
தோழர் ப. ஜீவானந்தம் படைப்புகள் - தொகுதி 7
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7
Author:
தோழர் ப. ஜீவானந்தம்
Thozhar P. Jeevanandham
For more books
https://www.pustaka.co.in/home/author/thozhar-p-jeevanandham
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
பாரதி வழி
கம்பனும் பாரதியும்
கல்வியில் பெரியவன் கம்பன்
கம்பனுக்கே முதலிடம்
எல்லையற்றதை எட்டிப் பிடிப்பவன்
கம்பன் ஓர் மானிடன்
இவ்வுலகிலேயே நல்வாழ்வு
சமதர்ம அமர நிலை
பாரதி காணும் கிருதயுகம்
மகாகவி யார்?
மானுடம் வென்றது
அழியினும் அடைக்கலம் தேடுவர்
தம்மவர் குற்றத்தைத் துடைத்தான்
இன்று போய்ப் போர்க்கு நாளை வா!
பாரதி புகழ் பரப்பியது கம்யூனிஸ்டுகளே!
வரலாற்று உண்மைகள்!
அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கு
பகீரதன் உண்மையை மறைக்கிறார்
பாரதி வழி
&
கம்பனும் பாரதியும்
&
பாரதி புகழ் பரப்பியது கம்யூனிஸ்டுகளே!
முன்னுரை
சுதந்திரப் போராட்ட வீரர், இலக்கியப் பேராசான், தோழர் ப. ஜீவானந்தம் கம்பராமாயணத்தின் மானுடநேயக் கருத்துக்களை மக்களிடம் எளிய தமிழில் கொண்டு சென்றவர்.
எல்லாரும் தேசியக்கவி மட்டுமே என்று குறுக்கிய காலத்தில் பாரதியை உலக மகாகவி
என்று அங்கீகரிக்க விவாதங்கள் மூலமாக வென்று அவரைப் போற்றி பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் ஜீவா. மேலும் பாரதியின் கருத்துக்களை மக்களிடத்தில் பாரதி வழி ஜீவா
என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார்!
பெண்களின் சமூக விடுதலைக்காகவும் பெண்கள் சமூகத்தில் சம ஊதியம் பெறவும் புதுமைப் பெண்
என்ற நூலினை எழுதி மக்களிடத்தில் புரட்சிக்கு வித்திட்டவர்.
ஜீவாவின் மொழிபெயர்ப்புத் திறமையைப் பறைசாற்றும் பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்?
என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம் இன்றுவரை சிறப்பாகப் போற்றப்படுகிறது.
இலக்கியத்தில் உள்ள சோசலிசக் கருத்துக்களை மக்களிடத்தில் இலக்கியச் சுவை
என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார். சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயம் அமைக்க மற்ற பாதையை விட அதாவது (மற்ற மாடல்களை விட) பொதுவுடைமைப் பாதையே சிறந்தது என முழங்கியவர்!
சுதந்திரத்திற்காக இந்தியாவில் பல தலைவர்கள் போராடினாலும் ஜீவா ஒருவர்தான் வாய்ப்பூட்டுச் சட்டம், நாடு கடத்தல், ஊரை விட்டு வெளியில் நடமாடத்தடை போன்ற வெள்ளை அரசின் அடக்குமுறைக்கு ஆளானவர்.
அப்பேர்ப்பட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் இலக்கியப் பேராசான் ப. ஜீவா அவர்கள் எழுதிய நூல்கள் பல பதிப்புகள் வந்திருந்த போதும் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் தற்கால இளைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பெண்ணுரிமைப் போராளிகள் என அனைவரும் கற்றுணர ஜீவாவின் நூல்களே முதன்மையானவை என்ற வகையில் இனி எந்தக் காலத்திலும் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் படிக்கும் வண்ணம் மின்னூலாகவும் ஆடியோ புத்தகமாகவும் அச்சுப் பிரதியாகவும் எது தேவையோ அது எளிதாக தங்கு தடையின்றிக் கிடைக்கும் வண்ணம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான ஓர் அரிய முயற்சியின் முன்னோட்டமே இந்தப் பதிப்பு.
அந்த வகையில் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் எழுதிய நூல்களை மறுபதிப்புச் செய்து மக்களிடத்தில் கொண்டு செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், ஜீவா அவர்களின் இதுவரை கிடைக்கப் பெறாத நூல்கள் கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நூல்கள் தொகுக்க உதவிய கணியம் அறக்கட்டளை மற்றும் ஆர்வமுடன் நூல்களை அனுப்பியும் ஆலோசனைகள் வழங்கியும் பேருதவி செய்த 200க்கும் மேற்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
புதுக்கோட்டை நகரக் கிளை
நூல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய புதுக்கோட்டை நகரக் கிளை அலைபேசி எண்: 7094000253
பாரதி வழி
சுதந்திரம் வந்துவிட்டது, பாரதி கண்ட கனவு நனவாகிவிட்டது என்று எழுதாத பத்திரிகை இல்லை, பேசாத மக்கள் இல்லை இன்று. எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கிறது சுதந்திரப் பள்ளு.
பாரதியை, அவர் வாழ்ந்த காலத்தில் அநேக வைதீக விமர்சகர்கள், தற்கால நல உரிமைகளை குறிக்கோளாகக் கொண்டே கவி புனைந்திருக்கிறார் என்று குறை கூறினர்.
இலக்கணம் அறியாத கவிஞன் என்று நன்னூல் பண்டிதர்கள் அகம்பாவ வெறியில் வாய்க்கொழுப்போடு ஆதாரமின்றி அர்த்தமற்றுப் பேசினர், வெறும் தேசியக் கவி என்று பலர் அவமதிப்போடு பார்த்தனர்.
பெண் விடுதலைப் பித்தன் என்று சிலர் ஆத்திரப்பட்டனர். கஞ்சாப் புலவன் என்று இளக்காரமாக ஏசினவர்களும் உண்டு.
அவர் காலஞ்சென்ற பின், கொஞ்ச காலத்திற்கு முன்கூட, பாரதி மகாகவியா அல்லவா என்ற விவாதம் அமர்க்களப்பட்டது எழுத்தாளர்களிடையில்.
மக்களின் முன்னோடி
பாரதியா, பார்ப்பான் தானே?
என்று பழிக்கக் கூடிய தூய தனித்தமிழ்க் குருதி நரம்புகளில் பீறிட்டுப் பாய்கிற ‘செங்குட்டுவன், வளவன், செழியன்’ வழிவழி வந்தோரும் தமிழகத்தில் இல்லாமலில்லை.
பாரதி தேசீயக் கவியாக இருந்து, மகாகவியாக மாறி, புதுமைக்