Avan Aanathu
()
About this ebook
பத்தொன்பதாவது நாற்றாண்டின் கடைசியில் தமிழில் முதன் முதலாக எழுதப்பட்டதென்றாலும் - இது இருபதாவது நூற்றாண்டில்தான் வேர்ப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். இலக்கிய நோக்கும், ஆழமும், வடிவமும் கூடக் கூட, மொழியில் தனித்தன்மையும் - சொல்லும் பாங்கிலும் - சொல்லாமல் விடு கின்றதில் அக்கறையும் கூடியது. கதை சொல்வது என்பதையும் - கருத்துக்களைச் சொல்வது பிரதானமான இலட்சியம் என்பதையும்கூட இக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் ஒழித்தன.
இலக்கியம் என்பது பற்றி அதுகாறும் முக்கியமென நிலை கொண்டிருந்த இலட்சியம் - இருபதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தகர்ந்தும் இலக்கியம் - படைப்பு - மட்டுமே முக்கியம் என்றும், மனித வாழ்க்கை என்பதைத் தவிர மற்ற சித்தாந்தமெல்லாம் அப்படியொன்றும் பொருட்படுத்தக் கூடிய இலட்சியம் இல்லை என்றும் சமூகத்தில் இடம் பெற்றது மாதிரியே இலக்கியத்திலும் இடம் பெற்றது.
படைப்பு எழுத்தாளனுக்கு புற உலகத்தைவிட அகமனம் முக்கியமானது. அதாவது மனிதன் தன்னை அறிதல் என்பது. தன்னை அறிதல் என்றால் - ஓர் எழுத்தாளன் தன்னைப் பற்றி அறிந்துகொள்வது மாதிரியும் - அறிந்தது மாதிரியும் எழுதுவதில்லை. தன்னை முன் நிறுத்துவது மாதிரி எல்லா மனிதர்களின் சரித்திரத்தை - அனுபவத்தை - சிந்தனை வளத்தை முன் நிறுத்தி ஒரு பொதுத் தன்மையோடு எழுதுவது. அது எந்த நாற்றாண்டை விடவும் இந்த காற்றாண்டில் இன்னும் கூடியது. இதனைக் காலத்தின் கொடை என்று குறிப்பிட வேண்டும்.
காலம் என்பது கற்பிதமே ஆனாலும் அதன் சரித்திரம் மெய்யாகவே இருக்கிறது. இன்னதுதான் என்று தீர்மானித்துச் சொல்ல முடியாத மனிதனின் பங்களிப்புத்தான் பிரதானமாக இருக்கிறது. அதில் இருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதன் அதிகமாக ஒன்றும் அறிந்து தன்னை மாற்றிக்கொண்டு விட வில்லை என்பதும் - அதன் மெய்த் தன்மையின் சரித்திரமாகவும் இருந்தது. புதிர் போன்று மர்மங்கள் நிறைந்த மனித வாழ்க்கையை கவிதையாக ஒரு காலத்தில் சிருஷ்டித்து அதற்கு ஒரு அழகும், இன்சுவையும் ஏற்றி - வாழ்க்கை என்பதற்கே ஓர் அர்த்தமும் கொடுத்தார்கள்.
அதுவே இலக்கிய மரபாகவும் - இலக்கிய இலட்சியமாகவும் வழி வழியாகத் தொடர்ந்து இருந்து வந்தது. இதனை மீறுவதும் - உடைத்து புதுமைக்கு வழி காண்பதும் இன்னொரு மரபாகவும் இருந்து வந்தது. இதுதான் இலக்கியம் என்பதை மட்டுமல்ல - வாழ்க்கை என்பதையே மேலே எடுத்துச் செல்லக் கூடியதாக இருந்து வருகிறது. புதிதாக இருப்பதாலும் - அதை அறிந்து கொள்வதிலும் இனங்கண்டு கொள்வதிலும் சிக்கல் தளர்க்க முடியாமல் போய் விடுகிறது. இந்த மரபின் தொடர்ச்சிதான் அவன் ஆனது. ஒரு தனிப் பட்ட மனிதனின் சொந்த வாழ்க்கை என்று சுலபமாகச் சொல்லி விடலாம், ஆனால், நாவல் என்பது கதை சொல்வது இல்லை என்பதால் - வாழ்க்கையின் விசித்திரங்களே பிரதான மாகிறது. ஒரு சாதாரண மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை போலத் தொடங்கும் அவன் ஆனது விரைவிலேயே- எல்லா மனிதர்களின் வாழ்க்கை போல் ஆகிவிடுகிறது. இது சாகசத்தின் மீது - அதாவது சொல்கின்ற சாகசத்தின் மீதோ - வாழ்கின்ற சாகசத்தின் மீதோ ஆதாரப்பட்டு இல்லாமல் - ஞானத்தின் பாற்பட்டு இருப்பதால் - வாழ்க்கையின் புதிர்த் தன்மையின் சுவாரசியம் மேலும் மேலும் கூடிக்கொண்டு போகிறது.
உலகத்தில் மனிதன் அறிந்து கொண்டதைவிட அதிகம் அறிந்துகொள்ளாமல் இருப்பது - தன்னைப் பற்றித் தான் அறிந்துகொள்ளும்போது மனிதனே - மனிதனுக்கு - இன்னும் அந்நியனாகவும் அறிந்து கொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான் என்பது எதனால் என்கிறபோது - அதற்கான பதில்கள் அறிந்து கொள்வதின் ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது. இங்கு கேள்விக்காக பதில் முக்கியம் இல்லை, கேள்வியே முக்கியமாகிறது. அதுவே அவன் ஆனது. அறிந்ததைவிட அறியாதது அதிகம் என்கிற மனித வர்க்கத்தின் சரித்திரத்தில் ஓர் இழையைப் பிடித்துக்கொண்ட மனிதன், அவன் செயல், அவன் ஆர்வம், ஈடுபாடு, நம்பிக்கை, அவ நம்பிக்கை, பேச்சு, பேசாத பேச்சு... இப்படி... இப்படி..., அவன் ஆனது. ஆகிறது.
சொல்லப்பட்டதற்கு அப்பால் உள்ள சொல்லப்படாத வாழ்க்கையை - அதன் விசித்திர அம்சங்களை, புதிர்களை - சொல்லிப் பார்க்கும் மரபின் வழியாகப் போய்க்கொண்டு இருக்கிறது. அதுவே வாழ்க்கைக்கு அர்த்தமும் சுவாரசியமும் கொடுக்கிறது. அதுதான் அவன் ஆனது.
- சா. கந்தசாமி
Read more from Sa. Kandasamy
Tholainthu Ponavargal Rating: 4 out of 5 stars4/5Saayavanam Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsKaruppin Kural Rating: 0 out of 5 stars0 ratingsRambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Iravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNeelavan Rating: 0 out of 5 stars0 ratingsSolla Padatha Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsPerum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5Badrinath Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Kadal Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5
Related to Avan Aanathu
Related ebooks
Jayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Pakka Balam Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsVerpidi Man Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKop Meyor Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsVanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaarpugal Rating: 0 out of 5 stars0 ratingsElakkia Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Kannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKamban Tamizhum Kanini Tamizhum Rating: 0 out of 5 stars0 ratingsNandhanar Theru Rating: 0 out of 5 stars0 ratingsItharku Munbum Itharku Piragum Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Pulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsParisukkup Po! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Avan Aanathu
0 ratings0 reviews