Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal
Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal
Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal
Ebook123 pages48 minutes

Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு. மதுரகவி இந்த நூலில் தான் படித்து ரசித்த சிறுகதைகளை ஒரு மாறுதலான நடையில், வடிவத்தில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஒரு வானொலி நிகழ்ச்சி போல தொடக்கம் முதல் இறுதி வரை கொண்டு செல்கிறார். அதற்கு ஏற்ப கற்பனையாகவே அறிவிப்பாளர்களைப் படைத்து அவர்கள் வாயிலாக நூலை நகர்த்துகிறார். இடையிடையே வானொலி நிகழ்ச்சியில் வருவது போன்ற விளம்பர இடைவேளை விட்டு சமுதாயத்துக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார்.

தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகைள மட்டும் இல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற சிறுகதைகள் பற்றியும் ஆற்றோட்டமாக எழுதிச் செல்கிறார். இந்த நூலைப் படிப்பவர்களுக்கு தமிழ் சிறுகதை உலகம் பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும். குறிப்பாக சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நண்பனைப் போல துணை நிற்கும்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580147909288
Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal

Read more from S. Madhura Kavy

Related to Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal

Related ebooks

Reviews for Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal - S. Madhura Kavy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள்

    Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    மூத்த இதழாளர் / வளர்தொழில் வணிக இதழ் ஆசிரியர் திரு. க. ஜெயகிருஷ்ணன் அவர்களின்

    அணிந்துரை

    கதைகள் கேட்கும் ஆர்வம் குழந்தைகள் மழலை பேசும் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. கொஞ்சம் நன்றாகப் பேசப் பழகிய உடன் அவர்கள் தங்கள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, தாத்தா, பாட்டியிடமோ கதைகள் சொல்லச் சொல்லி ஆர்வமாகக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். அப்போது தொடங்கும் ஆர்வம் எப்போதும் மறைவது இல்லை. உள் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதுதான் சிறுகதைகள் படிக்கும் ஆர்வமாக, நாவல்கள் படிக்கும் ஆர்வமாக, திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமாக, தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் ஆர்வமாக முகிழ்க்கிறது.

    திரு. மதுரகவி இந்த நூலில் தான் படித்து ரசித்த சிறுகதைகளை ஒரு மாறுதலான நடையில், வடிவத்தில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    ஒரு வானொலி நிகழ்ச்சி போல தொடக்கம் முதல் இறுதி வரை கொண்டு செல்கிறார். அதற்கு ஏற்ப கற்பனையாகவே அறிவிப்பாளர்களைப் படைத்து அவர்கள் வாயிலாக நூலை நகர்த்துகிறார். இடையிடையே வானொலி நிகழ்ச்சியில் வருவது போன்ற விளம்பர இடைவேளை விட்டு சமுதாயத்துக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார்.

    தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகைள மட்டும் இல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற சிறுகதைகள் பற்றியும் ஆற்றோட்டமாக எழுதிச் செல்கிறார்.

    இந்த நூலைப் படிப்பவர்களுக்கு தமிழ் சிறுகதை உலகம் பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும். குறிப்பாக சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நண்பனைப் போல துணை நிற்கும்.

    விளம்பரத்துறையில் ஒரு சொல் சிற்பியாக விளங்கும் நண்பர் மதுரகவி, தனக்கு இருக்கும் பல பணிகளுக்கு நடுவே எழுதுவதற்கு நேரம் ஒதுக்கி செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது. பாராட்டுக்கு உரியது.

    அன்புடன்

    க. ஜெயகிருஷ்ணன்

    ஆசிரியர், வளர்தொழில்

    முன்னுரை

    இலக்கிய வடிவங்களில் ஒன்றான சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த நூல் மலர் மலர்கிறது. இதனை முழுமையான ஆய்வு என்றோ இலக்கணத்திற்கு உட்பட்டதான ஆய்வு நூல் என்றோ கூற முடியாது. இருப்பினும், இன்றைய இளம் தலைமுறையினரிடம் சிறுகதை இலக்கியம் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதாக இந்த நூல் இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு கற்பனையான சூழலில் எனது கற்பனை மாந்தர் சிறுகதை உலகத்திற்குள் செல்கிறார்கள். வாருங்கள் நீங்களும். மிக்க நன்றி.

    இந்த நூலுக்கு அன்புடன் அணிந்துரை வழங்கிய வளர்தொழில் ஆசிரியர் க. ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    எஸ். மதுரகவி

    காணிக்கை

    புதிய தலைமுறையினருக்கு

    அனைவருக்கும் வணக்கம்.

    இளந்தென்றல் பண்பலையின் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சிக்கு நேயர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். நான் உங்கள் RJ திருமகள் இன்றைய மழைச்சாரல் நிகழ்ச்சிக்கு பேராசிரியர் அரங்கநாதன் அவர்கள் வருகை தந்துள்ளார். சிறுகதைகள் பற்றி நம்மிடையே அவர் பேச உள்ளார். நேயர்களின் வினாக்களுக்கும் பதில் அளிப்பார். வாருங்கள். பேராசிரியர் அவர்களே! வணக்கம்.

    அரங்கநாதன்: வணக்கம்மா.

    திருமகள்: சார், இன்று நீங்கள் சிறுகதைகள் பற்றிப் பேச உள்ளீர்கள். உங்கள் அறிமுக உரையைத் தொடங்கலாம்.

    அ.நா. : சிறுகதை என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிற ஓர் இலக்கிய வடிவம். சிறுகதைகளில் காலம், சூழல், பண்பாடு, பழக்கவழக்கங்கள், நையாண்டி, வலிகள், பிரச்சினைகள், வட்டாரவழக்குகள் ஆகியவை வெளிப்படுகின்றன.

    ‘சுற்றும் முற்றும் பார்க்கிறேன். எழுதுகிறேன்’ என்று முது பெரும் எழுத்தாளர் தி. ஜானகிராமன் தம்முடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் கூறகிறார். சுற்றும் முற்றும் பார்க்கும் காட்சிகளையும், சம்பவங்களையும் மனிதர்களையும் எழுத்தாளர்கள் தங்கள் நோக்கில், தங்கள் பாணியில் பதிவு செய்கின்றனர். நடை என்பது கவர்ந்திழுக்கும் அம்சம். தாங்கள் பார்த்தவற்றை சொல்லோவியங்களாக சிறுகதைகளில் வடிக்கும் போது, பாத்திரப் படைப்புகளையும் நம் கண்முன்னே எழுத்தாளர்கள் நிறுத்துகின்றனர். சிலர் வரலாற்றப் பின்னணியைக் களமாகக் கொண்டு சிறுகதைகள் புனைவதுண்டு. ஜெயகாந்தன் அவர்களின் ஒரு பிடி சோறு, வாசிக்கும் போது உங்களை நெஞ்சுருகச் செய்யும் அடித்தட்டு தொழிலாளிப் பெண், வயிற்றில் கருவைச் சுமந்த கர்ப்பிணிப் பெண், ஒரு பிடிச் சோறுக்காக படும்பாடு, கல்நெஞ்சங்களையும் கரைக்கும். ராசாத்தி, மாரியாயி ஆகிய பாத்திரங்கள் உங்கள் நெஞ்சை விட்டு அகலவே மாட்டார்கள். அதுபோலவே, அறிஞர் அண்ணாவின் செவ்வாழை சிறுகதையில் வரும் செங்கோடனை எளிதில் மறந்துவிட முடியுமா?

    இந்திய விடுதலைக்கு முன்பாகவே, மணிக்கொடி, கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி உள்ளிட்ட பல இதழ்களில் தமிழ் சிறுகதைகள் உலா வரத் தொடங்கின. வெகுஜன பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் இலக்கிய ஏடுகளிலும் சிறுகதைகள் வெளியிடப்பட்டன. எல்லாமே தரமான சிறுகதைகளாகத்தான் அந்தக் காலத்தில் படைக்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல சிறுகதை வடிவம் சுருங்கி, ஒரு பக்கக் கதை, 2 நிமிடக் கதை என்றெல்லாம் பரிணாமம் பெற்றுவிட்டாலும் சிறுகதை என்கிற வடிவம் இன்னும் ஜீவித்து வருகிறது.

    திருமகள்: சார். சிறுகதைகள் பற்றிச் சொன்னீங்க. ஜெயகாந்தனின் ஒரு பிடிச் சோறு, அண்ணா அவர்களுடைய செவ்வாழை பற்றி எல்லாம் சொன்னீங்க. இந்த இரண்டு சிறுகதைகளில் செவ்வாழை, எங்களுக்குப் பள்ளிக்கூடத்தில் பாடமாவே வெச்சிருந்தாங்க. இதனால நீங்க சொல்லும் போது செங்கோடன் பாத்திரம் என் மனக்கண்முன்னாலே வந்தது. ஒரு பிடிச் சோறு பத்தி கொஞ்சம் விவரமா கேட்க விரும்பறேன். அதுக்கு முன்னாலே நேயர்களுக்காக ஒரு திரைப்பாடல் ஒலிபரப்புவோம். நேயர்களே இதோ... பஞ்ச வர்ணக்கிளி படத்திலிருந்து புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய தமிழுக்கு அமுது என்று பேர் பாடல். பி. சுசீலா பாடியது. கேட்டு இன்புறுங்கள்.

    ...(பாடல்)...

    திருமகள்: சார், பாடலுக்கு முன்பாக...

    அ.நா. : ஒரு பிடிச்சோறு கதைய விவரிக்கச் சொன்னீங்க.

    திருமகள்: ஆமாம் ஐயா. அதுக்கு முன்னாலே சிறுகதைக்கு என்று இலக்கணம் இருக்கிறதா?

    அ.நா. : சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணங்கள் வகுத்தால் இன்று புதிதாக எழுத வருபவர்கள் பின்பற்றுவார்களா என்பது தெரியாது. முதுபெரும் எழுத்தாளர்கள் அனைவருமே ஓர் இலக்கணம் வகுத்துக்கொண்டு அதன்படியே படைத்து வந்துள்ளனர். நாவல் என்கிற புதினம், தொடர்கதை, நெடுங்கதை ஆகியவற்றிலிருந்து சிறுகதை வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே. மூதறிஞர் ராஜாஜி அவர்கள், சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிக்கும் கட்டுரை ஒன்றை வடித்துள்ளார். அந்தக் கட்டுரையின் தலைப்பு சிறுகதை.

    திருமகள்: ஐயா, குறுக்கீட்டுக்கு மன்னிக்கணும். ராஜாஜி அவர்கள் விடுதலை வீரராக, இந்திய

    Enjoying the preview?
    Page 1 of 1