Sahana
()
About this ebook
விதி ஒவ்வொருவரையும் எங்கு நிறுத்துகிறதோ அங்குதான் ஒவ்வொருவராலும் நிற்க முடியும். அதற்கேற்ப புரிதலுடன் வாழ்க்கையை அணுக வேண்டியது அவசியம் என்பதை இந்த நாடகக் கதை மாந்தர் உணர்த்துகின்றனர்.
Read more from S. Madhura Kavy
Puththaga Poonga Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Pol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsThendral Adukkagam Rating: 0 out of 5 stars0 ratingsPathirigai Ulagam Pattriya Palveru Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsMoon Lighting Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Viduthalai Poril Mahakavi Bharathiyarin Pangalippu Rating: 0 out of 5 stars0 ratingsUnnathamana Uraiyadalgal Rating: 0 out of 5 stars0 ratingsSaval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Irupean Rating: 0 out of 5 stars0 ratingsCoffee Mesaiyil Oru Puththagam Rating: 0 out of 5 stars0 ratingsAmaithi Pura Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sahana
Related ebooks
Sherlack Sharmaji Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maamiyar Rating: 0 out of 5 stars0 ratings(A)Sathya Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Porattam Rating: 0 out of 5 stars0 ratingsKaattula Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVilagu Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsவிலகு, விபரீதம் Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Sarida Saridi Rating: 0 out of 5 stars0 ratingsAagamiya Karma Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Vaasalvarai Vandhaval Rating: 0 out of 5 stars0 ratingsVilagava? Vilagiva..! Rating: 5 out of 5 stars5/5Maayamenna... Ponmaane..! Rating: 4 out of 5 stars4/5January Nilave! Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Unnai Arindhaal... Rating: 0 out of 5 stars0 ratingsIru Veedu Oru Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsThallupadi Dhandapani... Rating: 0 out of 5 stars0 ratingsThodamaley Sudum Thanal Rating: 4 out of 5 stars4/5Mel Maadi Kaali Rating: 0 out of 5 stars0 ratingsஇதயமே விட்டு விலகாதே...! Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsEllamey Thamash Thaan Rating: 0 out of 5 stars0 ratingsDowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsJa(Sa)thagam Rating: 0 out of 5 stars0 ratingsMayakkum Penney...! Manthaara Poovey...!! Rating: 2 out of 5 stars2/5Thiru & Thirumadhi Rating: 4 out of 5 stars4/5Kalavukku Kai Koduppom Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sahana
0 ratings0 reviews
Book preview
Sahana - S. Madhura Kavy
https://www.pustaka.co.in
சஹானா
Sahana
Author:
எஸ். மதுரகவி
S. Madhura Kavy
For more books
https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
முதற்காட்சி
இரண்டாம் காட்சி
மூன்றாம் காட்சி
நான்காம் காட்சி
ஐந்தாம் காட்சி
ஆறாம் காட்சி
ஏழாம் காட்சி
எட்டாம் காட்சி
ஒன்பதாம் காட்சி
பத்தாம் காட்சி
பதினொன்றாம் காட்சி
பன்னிரெண்டாம் காட்சி
பதிமூன்றாம் காட்சி
பதிநான்காம் காட்சி
பதினைந்தாம் காட்சி
பதினாறாம் காட்சி
முன்னுரை
சஹானா என்கிற அடியேனுடைய நாடகத்தை நேயர்களிடம் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறேன்.
இதில் உலா வரும் மனிதர்கள் நமது சமுதாயத்தில் அன்றாடம் நாம் சந்திக்கக் கூடியவர்கள்தாம். விதி ஒவ்வொருவரையும் எங்கு நிறுத்துகிறதோ அங்குதான் ஒவ்வொருவராலும் நிற்க முடியும். அதற்கேற்ப புரிதலுடன் வாழ்க்கையை அணுக வேண்டியது அவசியம் என்பதை இந்த நாடகக் கதை மாந்தர் உணர்த்துகின்றனர். வாசியுங்கள். புரிதல் பற்றி புரிய வரும். மிக்க நன்றி.
- எஸ். மதுரகவி
***
குறிப்பு
இந்த நாடகத்தில் விவரிக்கப்படும் சூழல், கதை மாந்தர் அனைத்தும் முழுக்கமுழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
காணிக்கை
மூன்றாம் தமிழாம் நாடகத் தமிழைக் கட்டிக் காத்துவரும் நாடகக் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்
முதற்காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடைப் பின்னணியில் இளவேனில் தொலைக்காட்சி என்ற பதாகை பெரிதாக உள்ளது. இளவேனில் தொலைக்காட்சி அலுவலகத்தின் வரவேற்புப் பிரிவு என்ற பலகை உள்ளது. நடுத்தர வயது மனிதர் ஒருவர் இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து இளம் மங்கை ஒருத்தி வருகிறாள்.)
இளம் பெண்: குட்மார்னிங் சார். ஜீவா சார் குட்மார்னிங்.
(நடுத்தர வயது மனிதர் நடப்பதை நிறுத்துகிறார்.)
ஜீவா: குட்மார்னிங்... ஹேமா...
ஹேமா: இங்க வரச் சொன்னீங்களாமே...
ஜீவா: ஆமாம். என்ன பரிமளா வரலை? ரிசப்ஷன்ல யாரையாவது உட்கார வைக்க வேணாமா...?
ஹேமா: அது அது...
ஜீவா: அது என் வேலை இல்லேன்னு சொல்வீங்க... அதானே...
ஹேமா: இல்ல... சார். கதிர்கிட்டே சொல்றேன் இங்க வரச் சொல்லி...
ஜீவா: அதை நான் சொல்லித்தான் சொல்வீங்களா...? உங்களை அட்மின்ல உட்கார வைச்சதுக்கு பதிலா புரொகிராமுக்கு அனுப்பி இருக்கணும்.
ஹேமா: சார். பரிமளா வந்துடுவாங்க சார் இப்ப... அதனாலதான்...
ஜீவா: சரி. உங்க ரூம்ல உட்கார வைச்சுருக்கீங்களே... அவரு...
ஹேமா: அவரு எங்க அப்பாவோட பங்காளி. பேரு ராஜமாணிக்கம். எனக்கு சித்தப்பா முறை. உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காரு. ஒங்களத் தெரியும்னாரு.
ஜீவா: அப்பாவுக்குப் பங்காளின்னா உங்களுக்கு சித்தப்பான்னு எனக்குத் தெரியாதா? அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்காரா?
ஹேமா: அவர் உங்க பி.ஏ. கிட்ட பேசி இருக்காரு. நீங்க இன்னிக்கு பதினோரு மணிக்கு வரச் சொன்னீங்களாமே...
ஜீவா: சரியாப் போச்சு... இவர்தான்னு தெரியாம போச்சு... ஹேமா இவன் சாரி இவர் என் கிளாஸ்மேட்...
ஹேமா: பார்த்துருங்க. ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறீங்க... சாவகாசமாப் பார்க்கணும்னா... ஈவினிங்ல வரச் சொல்லவா...?
ஜீவா: மாணிக்கம் எதுக்கு என்னைப் பார்க்க விரும்பறாரு... தெரியுமா...?
ஹேமா: தெரியலையே சார். நான் அதைப் பத்திப் பேசலை. அவரு எங்க வீட்ல தங்கல. வேற யார் வீட்லயோ தங்கி இருக்காரு. என்னைப் பார்த்ததும் விசாரிச்சாரு. நானும் வேறு வழி இல்லாம என் கேபின்ல உட்கார வைச்சேன்.
ஜீவா: அதைத்தான் கண்காணிப்பு கேமரால பார்த்தேனே... ஹேமா அவரு கையோட ஒரு சூட்கேஸ் வைச்சுருக்காரு இல்ல...
ஹேமா: ஆமாம் சார். அதுல அவரோட துணிமணிதான் இருக்கும்.
ஜீவா: இல்ல... கட்டு கட்டா...
ஹேமா: நோட்டு வைச்சுருக்காரா சார்...
ஜீவா: நோட்டா... நோட்டுதான். கரன்சி நோட்டு இல்ல. அவன் கதை எழுதின நோட்டுங்க வைச்சிருப்பான்.
ஹேமா: அப்படீன்னா...
ஜீவா: எழுதறதுக்கு சான்ஸ் கேட்டு வந்திருக்காரு புரியலையா...?
ஹேமா: ஸ்கிட் எழுத வெரைட்டியா எழுத நமக்கு ஆள் வேணும் இல்ல. ஃபிக்ஸ் பண்ணிக்கங்க. நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் வேற. கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகும் சார்.
ஜீவா: கெமிஸ்ட்ரிய விடாதீங்க எல்லாரும். ஏம்மா நான் இருபத்திரண்டு வயசுல சென்னைக்கு வந்தேன். இவர் அம்பத்தோரு வயசுல சென்னைக்கு பேனாவைத் தூக்கிக்கிட்டு வர்றாரு. யார் வாய்ப்பு கொடுப்பாங்க?
ஹேமா: லேட்டர் பார்ட் ஆஃப் தி லைஃப்ல பெரிய ஆளானவங்க நிறைய பேர் இருக்காங்களே சார்.
ஜீவா: உங்களுக்கு என்ன நீங்க பேசுவீங்க... வாய் கிழிய… இவங்கள எல்லாம் வேலை வாங்க முடியுமா? நாம ஒரு ப்ரீஃப் சொன்னா அதை விட்டுட்டு வேற எங்கேயோ போவாங்க...
ஹேமா: சார். நீங்க அவரைத் தவிர்க்க விரும்பறீங்கன்னு தெரியுது. ஒரு வேண்டுகோள்.
ஜீவா: என்ன?
ஹேமா: நீங்க கமிட் ஆகாட்டாலும் சந்திச்சுப் பேசிடுங்க. ரொம்ப வருஷம் கழிச்சு ஒங்களப் பார்க்க வந்திருக்காரு.
ஜீவா: சரி வரச் சொல்லுங்க. சமாளிக்கிறேன்.
ஹேமா: சார்... இப்பத்தான் ஷீலா வாட்ஸ்-அப்ல மெஸேஜ் அனுப்பி இருக்காங்க. ஒங்க ரூம்ல டெகரேட்டிவ் ஒர்க் நடக்கப் போவுதாம். அதனால... என் கேபின்ல சந்திக்கிறீங்களா...
ஜீவா: எப்ப சொன்ன வேலை... இப்பத்தான் செய்யறாங்களா... எல்லாம் எம்.டி. கிட்ட இருக்கோம்ங்கிற...
ஹேமா: சார்...
ஜீவா: என் வாய்க்குப் பூட்டு போடறீங்களா?
ஹேமா: இல்ல சார். நீங்க ஜீ.எம். நீங்களே மத்தவங்கள இப்படிப் பேசறத யாராவது பார்த்தா நல்லா இருக்காதேன்னு...
ஜீவா: சரி. ராஜமாணிக்கத்தை கேண்டீனுக்கு வரச்சொல்லுங்க. நீங்க கூட வர வேணாம். வழிய காமிச்சு அனுப்பிவிடுங்க.
ஹேமா: யெஸ் சார்.
(காட்சி மாற்றம்)
(விளக்குகள் அணைகின்றன. சில நிமிடங்களில் மீண்டும் ஒளிர்கின்றன. இளவேனில் தேநீர் அகம் என்ற பலகை பின்னணியில் இருக்கிறது. வட்ட வடிவ மேசைகள் உள்ளன. ஜீவா ஒரு மேசை அருகே நின்று கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து ராஜமாணிக்கம் வருகிறார்.)
ஜீவா: வாய்யா... சௌக்கியமா...?
(கை குலுக்குகிறார்)
ராஜமாணிக்கம்: வணக்கம்பா. சண்முகத்தோட பையன் கல்யாணத்துல பார்த்தது... எப்படி இருக்கே?
ஜீவா: நல்லா இருக்கேன்யா... காபியா இல்ல டிபன் சாப்பிடறியா...
ரா.மா.: டிபன் சாப்பிட்டுட்டேன் ஜீவா.
(ஜீவா காபி தரும்படி சைகையால் ஆணையிடுகிறார்.)
ஜீவா: சாரிப்பா. அங்க ரூம்ல வேலை நடக்குது. அதனாலதான் இங்க மீட் பண்ணச் சொன்னேன். தப்பா நெனச்சுக்காதே.
ரா.மா.: இதுல என்னப்பா. உன்னோட மும்முரமான வேலைக்கு நடுவுல எனக்குப் பார்க்க நேரம் குடுத்தியே... அதுவே பெரிய விஷயம்பா...
(திரைப்படத் தயாரிப்பாளர் குருமூர்த்தி வருகிறார்.)
ஜீவா: ஃபில்ம் ப்ரொட்யூசர் குருமூர்த்தி வர்றாரு.
கு.மூ.: வணக்கம் ஜி.எம்.
ஜீவா: வணக்கம் சார். காபி குடிக்கிறிங்களா...?
கு.மூ.: இப்பத்தான் குடிச்சிட்டு வந்தேன். எம்.டி. டைம் கொடுத்தாரு. ஆனா... இன்னும் வரலை