Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

(A)Sathya
(A)Sathya
(A)Sathya
Ebook57 pages21 minutes

(A)Sathya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடகங்களை எழுதுவதற்கு கதையும் கதா பாத்திரங்களும் எப்படி உருவாகிறார்கள் என யோசித்துப் பார்த்தால், கதைகள் நம்மை சுற்றியே நிகழ்கின்றன! கதா மாந்தர்களும் நம் அருகிலேயே வளைய வருகிறார்கள்!

அப்படி ஒரு Character தான் இந்த சத்யா! இவனை நான் பம்பாயில் சந்தித்தேன்.

எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் பழக இனியவன், பரோபகாரி.

உயிர் காப்பான் தோழன் என்பதற்கு பல சந்தர்ப்பங்களில் உதாரணமாக இருந்துள்ளான்.

இவனிடம் ஒரு பலவீனம் தன்னால் முடியாது என எதையும் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டான்! ஒப்புக் கொண்டதை முடிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவான்! எதையும் புனைந்து சொல்வான்!

அந்த புனைந்துரைதான் உண்மையென சத்யம் செய்வான்!

பல நேரங்களில் அவனைத் தூண்டும் நண்பர்களின் சுயநலமும் இதில் ஒரு பங்கு பெறும்!!

சங்கிலி தொடர்போல பொய்கள் மாலையாகி நார் முடிச்சாகும் போது சம்மந்த மில்லாதவர்கள் விழி பிதுங்க இவன் வேறு ஒரு கற்பனையில் இருப்பான்.

ஆனால் நான் சத்தியமாக சொல்வேன் அவனது நோக்கத்தில் எந்த தீய எண்ணமும் இருக்காது

இப்படிப்பட்ட சத்யாக்களை I mean அசத்யாக்களை சுற்றி பின்னப்பட்டதுதான் இந்த நாடகம் (அ) சத்யா

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580126507159
(A)Sathya

Read more from Bombay Kannan

Related to (A)Sathya

Related ebooks

Related categories

Reviews for (A)Sathya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    (A)Sathya - Bombay Kannan

    https://www.pustaka.co.in

    (அ)சத்யா

    [நகைச்சுவை நாடகம்]

    (A)Sathya

    [Nagaichuvai Nadagam]

    Author:

    பாம்பே கண்ணன்

    Bombay Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bombay-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி: 1

    காட்சி; 2

    காட்சி; 3

    காட்சி; 4

    காட்சி; 4A

    காட்சி; 5

    காட்சி; 6

    காட்சி; 7.

    காட்சி; 8.

    காட்சி; 9.

    காட்சி; 10.

    காட்சி; 11.

    காட்சி: 1

    இடம்: சத்யாவின் அறை.

    [சத்யாவின் நண்பர்கள் குமாரும், சேகரும், அவனுடன் தங்கியிருக்கிறார்கள். காட்சி ஆரம்பத்தில் குமார் மிகவும் சோகமாக இருக்கிறான்.]

    குமார்: எனக்கு நல்லா வேணும். இவன் பேச்சை நம்பினேன் பாரு, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

    சேகர்: என்னடா குமார், ஏண்டா இப்பிடி குட்டிப்போட்ட பூனை மாதிரி குறுக்கேயும் நெடுக்கேயும் அலையிற..

    குமார்: என்ன சொன்னே? குட்டி போட்ட பூனை மாதிரியா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. அதுக்குள்ள நான் குட்டி போட்ட பூனை மாதிரி அலையிறேனா?டேய் சேகர், அனாவசியமா என் வம்புக்கு வந்தே, பல்லு 32ம் எகிறிடும்.

    சேகர்: [கிண்டலாக] எனகேதுடா 32பல்லு. 30தானே! இன்னும் தான் Wisdom Toothதே முளைகலையே!!

    குமார்: உனக்கு அறிவேயில்லைன்னு உன் பல்லுக்கு கூட தெரியிது பாரு.

    சேகர்: சரிடா, கோவப்படாதே. விஷயத்துக்கு வாடா.

    குமார்: எல்லாம் இந்த சத்யா பய பண்ற வேலை. எனக்கு வேணும் நல்லா வேணும்.

    சேகர்; உனக்கு என்னடா வேணும்? பதட்டப்படாம விஷயத்தை சொல்லு.

    குமார்: ரிலீஸ் ஆன முதல் நாளே அந்த படத்தை பார்க்கனும்னு ஆசைப்பட்டேன் பாரு, நல்லா வேணும். கால் கடுக்க நிக்க வெச்சிட்டான் அந்த பாவி.

    சேகர்; டேய் நீ இப்போ எனக்கு புரியும்படியா உளரப்போறியா இல்லயா.

    குமார்: சேகர், புதுப்படம்டா. முதல் நாளே பார்க்க ஆசையா இருக்குன்னு சொன்னேன்டா. நம்ம சத்யா கிட்ட. அவ்வளவுதானே இது என்ன பெரிய விஷயம் நான் ஏற்பாடு பண்றேன். அந்த தியேட்டர் மேனேஜர் எனக்கு ஃப்ரெண்டுதான். நானும் அவனும் ஒண்ணாத்தான் பள்ளிக்கூட்த்துல படிச்சோம். டேய் கண்ணா ரெண்டு டிக்கெட் எடுத்து வைடான்னு ஒரு போன் பண்ணா போதும்னு சொன்னான்டா.

    சேகர்; அவனை பத்திதான் உனக்கு நல்லா தெரியுமே. அவனை நம்பி போனியாக்கும்.

    குமார்; தெரியும்டா. பொய் சொல்லுவான் நல்லா புளுகுவான்னு நல்லா தெரியும். இருந்தாலும் ஆசை யாரைவிட்டது. ஒரு நப்பாசை. ஒரு வேளை உண்மையா இருக்குமோன்னு போனேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1