Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaattula Mazhai
Kaattula Mazhai
Kaattula Mazhai
Ebook117 pages44 minutes

Kaattula Mazhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரே மாதிரியான மசாலாப்படங்களை நையாண்டி செய்யும் நகைச்சுவை நாடகம், கதாநாயகன் சீனுவின் காதலி விஜியின் அப்பா ஜே.பி. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய, அவரிடம் வேலைக்குச் சேரும் சீனு அவரையே எதிர்த்து பெரிய ஆளாகிக் காட்டுவதாக சவால் விட்டுச் செல்கிறான். சக்தியே இல்லாத ஜீபூம்பா என்ற பூதம் சீனுவுக்கு பாரமாக வந்து தொல்லை கொடுக்கிறது. விஜியை சிகாமணி என்பவனுக்கு கல்யாணம் செய்து வைக்கப்போவதாக ஜீபூம்பா மூலம் அறிந்து சீனு சிகாமணியை ஓட ஓட விரட்டுகிறான்.

அவனது கண்பார்வையில் படாமலிருப்பதற்காக சொந்த மகளையே ஆள் வைத்து கடத்துகிறார் ஜே.பி. விஜியை சந்திக்கச்செல்கிறான் சீனு. பாழடைந்த பங்களாவில் ஜீபூம்பாவின் ஜாடியிலிருந்து வெளிப்படும் அப்பா பூதம் கெட்டவர்களை நல்லவர்களாக்கி அனைவரையும் சேர்த்து வைக்கிறது.

Languageதமிழ்
Release dateJan 19, 2022
ISBN6580148907589
Kaattula Mazhai

Read more from S.Ve. Shekher

Related to Kaattula Mazhai

Related ebooks

Related categories

Reviews for Kaattula Mazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaattula Mazhai - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    காட்டுல மழை

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Kaattula Mazhai

    கதை, வசனம்

    கோபு – பாபு

    நாடகமாக்கம் ஸ்க்ரிப்ட் எடிட்டிங், டைரக்ஷன், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 5A

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    நகைச்சுவையே குறிக்கோள்!

    நம்மளப் பெத்தவங்க பிரபலமானவங்களா இருக்கறது எவ்வளவுக்கெவ்வளவு நமக்கு ப்ளஸ் பாயிண்டோ, அவ்வளவுக் கவ்வளவு மைனஸ் பாயிண்டும் இருக்கு.

    நம்ம ஏதாவது சாதிக்கணும்னு நெனைக்கும்போதே அவங்க அப்பா எங்கே? இவர் எங்கே? அவர் லெவலுக்கெல்லாம் வர முடியுமா என்ன? அவர் பேரை ரிப்பேர் பண்றதுக்குன்னே பொறந்திருக்கான் பாரு. இப்படிப் பேசி நம்மளைக் கூனிக்குறுகி வெட வெடக்க வெச்சிருவாங்க. சேகரோட அப்பா ஒரு சிறந்த டைரக்டர்னு திரு. சோ அவர்களே குறிப்பிட்டுருக்காரு. அப்படிப்பட்ட அப்பா பெயரைக் கெடுக்காம அதையும் தாண்டி ஒரு படி மேல வளர்ந்ததுக்கு முதல்ல சேகருக்கு என்னோட பாராட்டுக்கள்.

    சினிமா மூலமாக நான் மத்தவங்களை சிரிக்க வைக்கிறேன். ஆனா நான் மெய்மறந்து சிரிச்ச சில நாட்கள் எதுன்னு நெனைச்சுப் பார்த்தா... திரு. மௌலி அவர்கள், திரு. ஒய்.ஜி. மகேந்திரன் அவர்கள், திரு. கிரேஸிமோகன் அவர்கள், திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் நாடகங்கள்தான்.

    திரு. சேகரோட நாடகங்களைப் பொறுத்தவரைக்கும் நகைச்சுவை ஒண்ணுதான் அவருடைய குறிக்கோள். அதை அவரே ஓப்பனா ஒத்துக்கிட்டு செய்யறதால ஜனங்களுக்குச் சோதனை இல்லை. இவருடைய நாடகங்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் கலந்துட்ட என்னோட ஸ்கூல் நாடகங்கள் நினைவுக்கு வரும். வெளியே பப்ளிக்ல நான் போட்ட ஒரே ஒரு நாடகம் ஞாபகத்துக்கு வரும். என்னோட நாடகக் காமெடியவிட, நாடகம் நடக்கும்போது நடந்த காமெடிகள்தான் அதிகம். ஒரு நாடகத்துல ஒரு முக்கியமான இன்ஸ்பெக்டர் கேரக்டர். ரன்னிங் ரோல் வேறே. 20 வருஷத்துக்கு முன்னால் போலீஸ் இன்ஸ்பெக்டர்னா கஞ்சிபோட்ட ஆப்டவுசர் போடுவாங்க. நம்ம ஆளும் ஸ்ட்ரிப்பா கஞ்சி போட்ட ஆப்டவுசரோட ஆவேசமா பேசிட்டு முதல் சீன்ல நுழைஞ்சவரு, ஸ்டேஜிக்கு முன்பக்கம் வர - ஸ்டேஜ் கொஞ்சம் உயரமா இருந்ததாலே கீழே பக்கத்துல இருந்த பார்வையாளர் ஒருத்தர் யோவ் ஜட்டி தெரியுது, பின்னால் போன்னு கமண்ட் அடிச்சாரு. அவ்வளவுதான். நம்ம இன்ஸ்பெக்டர் மொத்த வசனத்தையும் மறந்து சொதப்ப, கூட இருந்தவங்க அதுக்கு மேல சொதப்ப சீரியஸ் நாடகம் முழுநீள நகைச்சுவை நாடகமா நடந்து முடிஞ்சது...

    எதுக்கு சொல்லவந்தேன்னா... ஒரு நாடகம் அரங்கேற்றம்கறது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இப்ப நினைச்சாலும் எனக்கு வெடவெடக்கும். ஆனால் நம்ம சேகர் தொடர்ந்து 3500 முறை வெவ்வேறு நாடகங்களை பாராட்டுதலோட அரங்கேற்றம் பண்ணிருக்காரு. அயல்நாடுகளுக்குப் போய் பாராட்டு வாங்கியிருக்காரு. ஒரு சிறந்த கலைஞனை அவரைப் பாராட்டற அதே நேரத்துல, இவ்வளவு சாதிச்சும் காலரைத் தூக்கிவிட்டுக்காத எளிமையை, பெருந்தன்மையை, அடக்கத்தை மதிச்சு மரியாதையும் கொடுக்கத் தோணுது.

    நாடகம், சினிமா எல்லாமே டீம்வொர்க்தான். சேகருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிற அவருடைய நாடகப்பிரியா குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சுட்டு, மேலும் புகழ் பெற ஆண்டவனை வேண்டி வணங்கறேன்.

    -கே. பாக்யராஜ்

    3500-வது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    தமிழ் அமைச்சூர் நாடக மேடைகளில் மிகவும் பிரபலமான ஒரு பெயர் சுந்தா என்று அழைக்கப்படும் சுந்தர்ராமன்.

    இன்று நான் நடிப்பதற்குக் காரணமாக இருந்தவர். நம் நாடகப்பிரியா இந்த அளவுக்கு உயர்வதற்குக் காரணமாயிருந்தவர்.

    ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்றவர். மிகச் சிறந்த குரல் வளம் மிகுந்த நடிகர். நானும் சுந்தாவும் இணைந்து தயாரித்த நாடகங்களில் பெற்ற வெற்றிதான், மற்ற நாடகக் குழுக்கள் எங்களை திரும்பிப் பார்க்க வைத்தது. என்னைவிட சுமார் 10 வயது அதிகமானவறென்றாலும் என் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளித்தார். சாதுசங்கரனாக சொந்த வீடு வாடகை வீடாகிறதிலும், 'சுதர்சனமாக கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கத்திலும், ராமானுஜமாக ஒன்மோர் எக்சார்சிஸ்டிலும், மேடை நடிகர் திலகம் சிவாஜி என்று பேசப்படும் அளவிற்கு ஜே.பி."யாக காட்டுல மழையிலும் இன்றும் அவருடைய குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக காதுல பூவில் எமதர்மனாக அவர் நடித்து பெயர் பெற்றது அந்த எமனுக்கே பொறாமை ஊட்டியதோ என்னமோ தெரியவில்லை. திரு. சுந்தாவை இந்த உலகிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். நடிகர்களுக்கு என்றுமே அழிவில்லை என்பது போல இன்றும் திரு. சுந்தா தன் குரல் மூலமாக வாணி கேசட்ஸ் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

    இந்த காட்டுல மழை நாடகத்தை எங்களின் சுந்தாவிற்கு காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.

    காட்சி - 1

    இடம்: சீனுவின் வீடு

    பாத்திரங்கள்: சீனு, சீனுவின் அப்பா ராமசாமி, நண்பர் ஆர்.கே மற்றும் வாசு

    (சீனு அப்ளிக்கேஷனை சாமி படத்துக்கு முன் வைத்து வேண்டிக் கொண்டிருக்கிறான்)

    நண்பன் வாசு வருகிறான்.

    சீனு: ஆண்டவா எல்லாரையும் நல்லபடியா வையப்பா.

    வாசு: சீனு... சீனு...

    (சீனு திரும்பி பார்க்காமல் கும்பிட்டபடி இருக்க)

    வாசு: சீனு...

    (மறுபடியும்)

    வாசு: சீ... னு... ஏண்டா நான் கரடியா கத்தறேன் காதுல விழலியா...?

    சீனு: வாடா வாசு... பூஜை வேளையில கரடியா? நல்ல சகுனந்தான்.

    வாசு: சீனு,

    Enjoying the preview?
    Page 1 of 1