Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuzhanthai Samy
Kuzhanthai Samy
Kuzhanthai Samy
Ebook106 pages40 minutes

Kuzhanthai Samy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனது புடவை முதல், கணவர் வரை அனைத்தும் ரெடிமேடாக வேண்டும் என நினைக்கும் ரெடிமேட் ராதிகா.

அதற்கு நேர் எதிரான கொள்கையுடைய சிவாவை ஒரு சந்தர்ப்பத்தில் திருமணம் செய்கிறாள். திருமணத்திற்கு பிறகு, ராதிகா குழந்தை பெற்று கொள்ள மறுக்க, 15 வயது குழந்தையை தத்து எடுக்க இருவரும் முடிவு செய்கின்றனர்.

சிவாவின் நண்பன் சூளூர்பேட்டையில் செய்யும் குளறுபடியால் 51 வயது குழந்தைசாமி தத்துபிள்ளையாக வருகிறார். குழந்தைசாமியின் லூட்டியால் ராதிகா எரிச்சல் அடைகிறான். குழந்தைசாமியின் மகள் பிரபாவதியும் வர பிரச்னை அதிகமாகிறது. இறுதியில், இவை அனைத்துமே ராதிகாவை திருத்துவதற்காகதான் செய்த செட்டப் என சிவா சொல்கிறான். ராதிகாவும் மனம் திருத்துகிறாள்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580148907584
Kuzhanthai Samy

Read more from S.Ve. Shekher

Related to Kuzhanthai Samy

Related ebooks

Related categories

Reviews for Kuzhanthai Samy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuzhanthai Samy - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    குழந்தசாமி

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Kuzhanthai Samy

    வசனம்

    கோவி கோவன்

    கதை, நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    காட்சி 16

    காட்சி 17

    வசூல் சக்ரவர்த்தி

    சினிமா அரங்குகளில் வசூல் குறைந்து வருகையில் சேகரின் நாடகங்களுக்கு அதிகரிக்கிறது

    ராணி சீதை ஹால். இன்னும் அரைமணி இருக்கிறது நிகழ்ச்சி ஆரம்பிக்க. காம்பவுண்டுக்குள் கால் வைக்க இடமில்லை. சாரி சாரியாக கியூ வரிசையில் ஒருவர்பின் ஒருவராக டிக்கெட்டைக் காண்பித்தபடி உள்ளே போகிறார்கள். முன் வரிசை ரூ. 750லிருந்து கடைசி வரிசை ரூ. 50 வரை. ஒரு நாளைக்கு கேட் கலெக்‌ஷன் ரூ. 40,000க்குக் குறையாது என்கிறார்கள். ரூ. 100 டிக்கெட் ரூ. 300க்கு பிளாக்கில் விற்கிறது என்கிறார்கள்.

    அரங்கம் கொள்ளாத கூட்டம். நின்றுகொண்டே பார்க்க சித்தமாயிருக்கும் ரசிகர்கள். சிறுவரிலிருந்து தாத்தாக்கள் வரை. மத்ய தர வர்க்கம் - ஜாதி மத வேறுபாடு இல்லாமல். முஸ்லிம் பெண்கள் கூட்டம் கறுப்பு அங்கிகளில்.

    மேடையோ அரதப் பழசான முப்பது வருஷத்துக்குப் பிந்தைய ஸ்டைலில். எளிய ஜோடனை. பின்பலம் முக்கியமேயில்லை என்பதுபோல. கண் உறுத்தும் மூன்று மைக்குகள். மேடைப் பாத்திரங்கள் அதற்கு முன்பு நின்று வசனம் சொல்கிறார்கள். லைட்டிங் சாமான்யம். நவீனத்துவம், அழகியல் என்கிற பக்கமே தலைகாட்டாத அலட்சியம். ஆனால் அலைமோதுகிற கூட்டத்திற்கு அதைப் பற்றின எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. நாடகம் ஆரம்பித்த நிமிஷத்திலிருந்து விழுந்து விழுந்து சிரிக்கிறது. எஸ்.வி. சேகரின் நாடகப் பிரியாவின் 22ஆவது நாடகமாக ‘பெரியப்பா’ மேடையில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் அங்கதம். ரஜினிகாந்தும் மூப்பனாரும் கலைஞரும் சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கப்படுகிறார்கள். கடைசியில் உபதேசங்கள் - ‘எல்லாரும் ஒத்துமையா இருந்தா நாடு பிழைக்கும்’ என்ற முத்தாய்ப்புகள்.

    நாடகம் முடிந்து விலகும் கூட்டத்தின் முகத்தில் மலர்ச்சி மறையவில்லை. கொடுத்த காசுக்குப் பூரண திருப்தி கிடைத்தது போல. வாஸ்தவத்தில் பலர் பல முறை பார்த்திருக்கும் நாடகம்தான் அது. ரிபீட் ஆடியன்ஸ்தான் என் நாடகத்தின் வெற்றியின் அடையாளம் என்கிறார் 26 வருஷங்களாக நாடகப்பிரியாவை நடத்தி வரும் சட்டநாதபுரம் வெங்கடராமன் சேகர் - எஸ்.வி. சேகர். அறிவார்த்த திருப்தியுடன் கலைப் படைப்பாக்கும் முயற்சியுடன் அரங்கேறும் நவீன நாடகங்களைப் பார்க்க எண்ணி இருபது பேர் வருகையில் சினிமா அரங்குகளில் கூட்டம் குறைந்துவிட்டது, சின்னத் திரை பெரிய திரையை விழுங்கிவிட்டது என்று படத் தயாரிப்பாளர்கள் கொடி தூக்குகையில் எஸ்.வி. சேகரின் எளிய நாடகங்களுக்குக் கிடைக்கும் வெற்றியும் வசூலும் பிரமிப்பூட்டுபவை. வெற்றியே வெல்லும். சேகர் விஷயத்தில் இது முழுமையாகப் பொருந்தும் என்கிறார் பிரபல நாடகமேடை நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ராசி அவருக்கு. வெறும் ராசி மட்டும் இல்லை அது. மிக கவனமாக மக்களின் தேவையையுணர்ந்து ஏற்படுத்திக் கொண்ட திட்டம். அதை புத்திசாலித்தனமாகப் பின்பற்றும் கட்டுப்பாடு. அவருடைய இலக்கு மத்திய வர்க்கம். நா வெறும் என்டர்டெய்னர். நான் அதிக புத்திசாலின்னு காண்பிக்கிறதைவிட ஜனங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதைத்தான் போட விரும்பறேன் என்கிறார் சேகர். சினிமாவிலும் சின்னத் திரையிலும் இல்லாத நகைச்சுவையை சேகரின் நாடகங்கள் தருவதாலேயே அன்றாட டென்ஷனிலிருந்து விடுபட மத்திய வர்க்கம் என்ன விலை கொடுத்தும் பார்க்கச் சித்தமாக இருக்கிறது. அது ‘துணுக்குத் தோரணமோ’ ‘மேலெழுந்தவாரியான அங்கதமோ’ ‘கீழ்த்தரமான நகைச்சுவையோ’ அதைப் பற்றிக் கூட்டத்துக்குக் கவலையில்லை. 3500க்கு மேற்பட்ட ஷோக்கள். வசூல் பெட்டி நிரம்புகிறது.

    நகைச்சுவையே தாரக மந்திரமாகிப் போனதற்கு, பிறப்பும் வளர்ப்பும் காரணம், தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் நெடுங்கால மேடை அனுபவம் கொண்ட நடிகர். ‘எந்தப் பிரச்னையையும் சிரித்த முகத்துடன் தீர்ப்பது உசிதம்’ என்பது அவர் கற்றுத் தந்த பாடம். சிறு வயதிலிருந்து நாடகச் சூழலிலேயே வளர்ந்தாலும், படிப்பு அவசியம் என்று அப்பா உறுதியாக இருந்ததால் மெக்கானிகல் என்ஜினியரிங், ஏர்கண்டிஷனிங் என்று டிப்ளோமா வாங்கினார். ஆனால் அடிப்படையில் நடிப்புத் துறையிலேயே நாட்டம் இருந்தது. எல்லாவற்றிலும் ரெக்கார்ட ஏற்படுத்தும் வெறி. அதனால் தொடர்ந்து வந்த விருதுகள் - லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அதிக நேரம் நாடகம் போட்ட நபர் (தொடர்ச்சியாக 8 நாடகங்கள் காலை 7.47லிருந்து மறுநாள் காலை 1.49 வரை) என்ற புகழ் உள்பட. அவரது நாடகக் குழு நாடகப்பிரியா நடுக்கடலில் பிறந்தது - வி. கோபாலகிருஷ்ணனின் நாடகக் குழுவுடன் சிங்கபூர் சென்ற போது, குழுவுக்குள் இருந்த பாரபட்சம் ஏற்படுத்திய மனக் கசப்பினால் பிறந்தது. நாடகப்பிரியாவில் எல்லாரும் சமமான அந்தஸ்து கொண்ட உறுப்பினர்கள். சாராயம், சிகரெட் குடிக்கக் கூடாது. தினமும் பிரார்த்தனை உண்டு, ஈகோ பிரச்னை இல்லாததால் எல்லோரும் சேகரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவர்கள். எல்லாரும் வருஷா வருஷம் ரத்த தானம் செய்கிறார்கள். சேகர் அடியெடுத்து வைத்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட 60 டிராமா ட்ரூப்புகள் இருந்தன. மனோகர்,

    Enjoying the preview?
    Page 1 of 1