Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilagiya Thirai
Vilagiya Thirai
Vilagiya Thirai
Ebook107 pages39 minutes

Vilagiya Thirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசிக்கவும் கவனிக்கவும் இயலாத காலம் தொட்டே இருந்துவரும் கலை நாடகம். தமிழர்களின் வாழ்வில் வெவ்வேறு வடிவங்களில் இன்பியல் கலையாக நாடகம் இடம் பெற்றிருக்கிறது. திரைப்படங்களில் மிக உயரத்தில் மின்னியவர்கள் எல்லாம் நாடகங்கள் வழியாக வந்தவர்கள்தான். காலப்போக்கில் காட்சி ஊடகங்கள் பெருகிய பின்னர் நாடகங்களின் தேவை குறைந்துவிட்டது. இருப்பினும் அரசின் ஒலிபரப்பு ஊடகங்கள் தொடர்ந்து நாடகங்களை ஒளிபரப்புச் செய்து வருகின்றன. இதன் வழியாக நாடகங்களை எழுதுபவர்கள் குரல் வழிக்கலைஞர்கள் தங்கள் கலைத்தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

சேரன் நெடுஞ்சேரலாதன் மற்றும் அரிசில் கிழார் பற்றிய புலவர்களின் புரவலன், என்னும் சரித்திர நாடகம் மற்றும் திறந்த வீட்டில் புகுந்தவன் என்னும் சமூக நகைச்சுவை நாடகம் ஆகியவற்றின் தொகுப்புதான் இந்நூல்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580159009229
Vilagiya Thirai

Read more from Neyveli Bharathikumar

Related to Vilagiya Thirai

Related ebooks

Reviews for Vilagiya Thirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilagiya Thirai - Neyveli Bharathikumar

    http://www.pustaka.co.in

    விலகிய திரை

    Vilagiya Thirai

    Author :

    நெய்வேலி பாரதிக்குமார்

    Neyveli Bharathikumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neyveli-bharathikumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    நூல் சமர்ப்பணம்

    ‘விலகிய திரை’

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி : 7

    காட்சி : 8

    காட்சி : 9

    காட்சி : 10

    காட்சி - 11

    காட்சி: 12

    காட்சி : 13

    காட்சி : 14

    காட்சி : 15

    காட்சி : 16

    காட்சி : 17

    புலவர்களின் புரவலன்

    காட்சி -1

    காட்சி : 2

    காட்சி : 3

    காட்சி : 4

    திறந்த வீட்டில் புகுந்தவன்

    காட்சி : 1

    காட்சி : 2

    காட்சி : 3

    காட்சி : 4

    காட்சி : 5

    காட்சி : 6

    என்னுரை

    வாசிக்கவும் கவனிக்கவும் இயலாத காலம் தொட்டே இருந்துவரும் கலை நாடகம்.. தமிழர்களின் வாழ்வில் வெவ்வேறு வடிவங்களில் இன்பியல் கலையாக நாடகம் இடம் பெற்றிருக்கிறது. திரைப்படங்களில் மிக உயரத்தில் மின்னியவர்கள் எல்லாம் நாடகங்கள் வழியாக வந்தவர்கள்தான். காலப்போக்கில் காட்சி ஊடகங்கள் பெருகிய பின்னர் நாடகங்களின் தேவை குறைந்துவிட்டது. இருப்பினும் அரசின் ஒலிபரப்பு ஊடகங்கள் தொடர்ந்து நாடகங்களை ஒளிபரப்புச் செய்து வருகின்றன. இதன் வழியாக நாடகங்களை எழுதுபவர்கள் குரல் வழிக்கலைஞர்கள் தங்கள் கலைத்தாகத்தை தீர்த்து வருகின்றனர்

    புதுச்சேரி வானொலி நிலையம் தொடர்ந்து நாடகங்களை உருவாக்கி ஒலிபரப்பு செய்து வருகிறது. மதிப்பிற்குரிய திரு குறிஞ்சி ஞான வைத்தியநாதன் அவர்கள் என் மீது கொண்ட பேரன்பினால் சென்னைப் பொதிகைத் தொலைக்காட்சியில் என்னுடைய கதையினை திரைக்கதையாக மாற்றித் தரும்படிக் கேட்டு அதனை நாடகமாக ஒளிபரப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி வானொலி நிலையத்திலும் நாடகங்கள் எழுதித் தரச்சொன்னார் அதன்படி நான் எழுதிய சேரன் நெடுஞ்சேரலாதன் மற்றும் அரிசில் கிழார் பற்றிய புலவர்களின் புரவலன், என்னும் சரித்திர நாடகம் மற்றும் திறந்த வீட்டில் புகுந்தவன் என்னும் சமூக நாடகம் ஒலிபரப்பாயின

    நாடகக்கலைஞர் திரு பார்த்திபன் அவர்கள் வஉசியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதித் தரும்படிக் கேட்டார் அதன்படி நான் எழுதித் தந்த நாடகத்தை புதுச்சேரி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர் திரு தட்சிணாமூர்த்தி அவர்கள் ஒரு மணிநேர சிறப்பு நாடகமாக ஒலிபரப்ப அகில இந்திய வானொலி நிலையத்திடம் அனுமதி பெற்று ஒலிபரப்பச் செய்தார். இந்த மூன்று நாடகங்களும் மிக முக்கியமானவை. மேடையில் அரங்கேற்ற பொருத்தமானவை என்பதால் ஒட்டு மொத்த நூலாக வருவது நல்லது என்று தோன்றியதால் புஷ்தகா நிறுவனத்திடம் அணுகிய போது அதன் நிறுவனர் திரு ராஜேஷ் அவர்களைக் கேட்டபொழுது உடனடியாக சம்மதித்தார் . அவருக்கும் புஷ்தகா நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்த சகோதரி கவிஞர் சுமதி சங்கர் அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புத்தகமாக்க துணை நின்ற புஷ்தகா நிறுவனத்தின் சனா மற்றும் சசிகலா ஆகியோருக்கும் அட்டை வடிவமைப்பு, புத்தக வடிவமைப்பு செய்த கலைஞர்களுக்கும் புதுச்சேரி வானொலி நிலையத்திற்கும், திரு பார்த்திபன் அவர்களுக்கும் என் துணைவியார் ஆதிலட்சுமி, பிள்ளைகள் பிருத்வி மதுமிதா மாப்பிள்ளை அஸ்வின் பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    (புதுச்சேரி வானொலி நிலையம் ஒலிபரப்பிய வ.உ.சி வாழ்க்கை வரலாறு , மற்றும் புலவர்களின் புரவலன் என்னும் சரித்திர நாடகம் , திறந்த வீட்டில் புகுந்தவன் என்னும் சமூக நகைச்சுவை நாடகம் ஆகியவற்றின் தொகுப்பு)

    நான் பணியாற்றும் என்.எல்.சி நிறுவனம் , மற்றும் எனக்கு தமிழூட்டிய தமிழாசிரியர்களுக்கும் என் சுவாசமாக விளங்கும் தமிழுக்கும் என் வணக்கங்கள்

    வாசிக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

    E9, பெருமாள் கோயில் தெரு,

    வட்டம் -27

    நெய்வேலி – 607803

    9442470573

    8825753498

    sbharathikumar@gmail.com

    www.bharathikumar.blogspot.com

    மிக்க அன்புடன்

    நெய்வேலி பாரதிக்குமார்

    அக்டோபர் 19, 2022

    நூல் சமர்ப்பணம்

    மதிப்பிற்குரிய குறிஞ்சி. ஞான. வைத்திய நாதன் அவர்களுக்கு…

    முதன்மைப் பாத்திரங்கள்:

    1. வ.உ.சி,

    2. சுப்பிரமணிய சிவா

    3. மகாகவி பாரதியார்

    4. மீனாட்சி

    5. ஆஷ், விஞ்ச்(வெள்ளைக்காரர்கள்)

    6. வடுக ராமன்

    7. பாண்டித்துரை

    8. மலபார் மாப்பிள்ளை

    9. ஜெயிலர்

    10. சிறுவன் சிதம்பரம்

    ***

    துணைப் பாத்திரங்கள்

    வழக்கறிஞர்,

    சிறுவனின் தந்தை

    கைதிகள்

    கோர்ட் பார்வையாளர்கள்

    ‘விலகிய திரை’

    காட்சி - 1

    பாத்திரங்கள் : தந்தை, ஐந்து வயது மகன்

    அப்பா : தம்பி சிதம்பரம், ஏம்பா இப்படி டல்லா உக்காந்திருக்கே?

    மகன் : எங்க ஸ்கூல் ஃபங்ஷன்ல மாறுவேஷப் போட்டி நடக்கப்போவுது. கலந்துக்கற மத்த எல்லாரையும் அவங்க இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்க சொல்லிட்டாங்க. என்னை மட்டும் எங்க மிஸ்ஸு ‘ஒன் பேருதான் சிதம்பரமாச்சே... நீ வ. உ.

    Enjoying the preview?
    Page 1 of 1