Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Periyappa
Periyappa
Periyappa
Ebook96 pages34 minutes

Periyappa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாடு என்ற வீட்டின் அதிகாரம், சின்னம்மாவிடமிருந்து சூரிய பிரகாச ஐயாவிற்கு சென்று விடுகிறது. சின்னம்மா டில்லியிலிருந்து அழைத்து வந்த தாமரை தன் ஆதரவும் பெரியப்பாவிற்கே என்று கூறிவிடுகிறாள். சைக்கிள் சங்கரலிங்கம் தன் முடிவை 2001ல் தான் சொல்வேன் என்று கூறுகிறார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான், தாமரை காதலிக்கும் அழகப்பாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில், அழகப்பா அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழ்நாடு வீட்டில் அமைதியை நிலை நாட்டுகிறான்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148907549
Periyappa

Read more from S.Ve. Shekher

Related to Periyappa

Related ebooks

Related categories

Reviews for Periyappa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Periyappa - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    பெரியப்பா

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Periyappa

    வசனம்

    வி. கிருஷ்ணகுமார்

    கதை, நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11A

    காட்சி 11B

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    வருங்கால தமிழகத்தின் வைப்பு நிதி!

    இயலும், இசையும் கைகுலுக்கிக் கொள்ளுகிற நளினப் பூங்காவே நாடகம், இரண்டு தமிழை உள்வாங்கிக் கொண்ட மூன்றாம் தமிழ் வளர்ந்தோங்கி வருகிறது. இசைக்கும், இயலுக்கும் இல்லாத செல்வாக்கு நாடகத்திற்கு இருந்தாலும், நாடகம் இன்னும் கூட்டுப்புழுவாகவே இருக்கிறதே தவிர பட்டுப்பூச்சியாக பரிணமிக்கவில்லை.

    உலகத்தை உற்று நோக்கி உணர மறுக்கிற சில தமிழர்கள், தம்மை உலகிற்கு இனம் காட்டவும் தவறி விடுகிறார்கள். நம்மை நமக்குக் காட்டும் தனிப்பெரும் கலைவடிவங்களில் ஒன்றாக நாடகம் இன்றைய தமிழ்நாட்டில் அருமை நண்பர் எஸ்.வி. சேகர் என்ற பெயரோடுதான் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. எவ்வளவு கசந்தாலும் இதுதான் உண்மை.

    அரங்கத்தை முழுக்க உள்வாங்கிக்கொண்டு நாடகம் பார்ப்பவரின் மனங்களைச் சலவைக்குப் போடுகிற சமுதாயக் கடமையைச் சரிவர நிறைவேற்றிய விரல்விட்டு எண்ணத்தக்க பெருமக்களில் கலைவாணருக்குப் பிறகு தலையானவர் திரு. எஸ்.வி. சேகர் அவர்கள். பொழுது போகமாட்டேன் என்று அடம்பிடித்து அழுவது போலவும், அதைப் போக வைக்கிற பெரிதான முயற்சியில் சிலர் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுபோலவும், அரிதார அரங்கேற்றம் நடக்கிற நாட்டில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற சிறந்த நாடகங்களை உலகத்தில் எங்கெல்லாம் தமிழ் அறியப்படுகிறதோ அங்கெல்லாம் தந்தவர் நண்பர் திரு. எஸ்.வி. சேகர் அவர்கள். அவரளவிற்கு உலகம் தழுவிய நடிகர் இல்லை என்றே சொல்லலாம்.

    சாக்கில் அரிசியை அள்ளிக் கொட்டுகிறபோது வாய்வரைக்கும் வந்துவிட்டால், இரண்டு குலுக்குக் குலுக்கினால் தான் மேலு இரண்டு படி அரிசி இடம்பிடிக்க இயலும். கருத்துக்களை மக்களின் மனங்களில் விதைப்பதற்கு அவர்களைக் குலுக்குவது மிக அவசியம்.

    திரு. எஸ்.வி. சேகர் அவர்களின் நாடகங்கள் இதயத்தின் காயங்களைக் குணப்படுத்துகிற காவிய அஞ்சனங்கள். கோலம் முழுவதையும் போட்டுவிடாமல் புள்ளியை மாத்திரமே வைத்துவிட்டுப் போகிற பல இடங்களில், திரு. எஸ்.வி. சேகர் தமது நாடகங்களை உலக இலக்கியத் தரத்திற்கு உயர்த்தி விடுகிறார்.

    இப்படிச் சொல்லுவதற்குக் காரணம், ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வருகிற கோமாளிகள் கூட எஸ்.வி. சேகர் சொன்னதற்கு மேலாக ஒன்றும் சொல்லிவிடவில்லை என்பது எனது அழுத்தமான கருத்து. நமக்கு அற்புதங்கள் ஆறாயிரம் கற்களுக்கு அப்பால் நடக்கவேண்டும். அல்லது பத்து நூற்றாண்டுகளுக்கு முந்தி நடந்திருக்கவேண்டும். விழுந்த பல்லுக்கே விழா நடத்துவோம், அது வெளிநாட்டு பல்லாக இருந்தால்.

    தலை சிறந்த கலைஞரான திரு. எஸ்வி. சேகர் உயர்ந்த உன்னதமான மனிதரும்கூட காற்றுக்கு விசா வழங்க முடியாதது போல, உலாவரும் மழை மேகத்திற்கு முத்திரை குத்த இயலாதது போல, சமயம், மொழி இவற்றின் சுவர்களுக்கு அப்பால் வானம்போல அடர்ந்து விரிந்த அற்புத மனிதர் திரு. எஸ்.வி. சேகர்.

    தங்க சிம்மாசனத்திற்கே தகுதியான திரு. எஸ்.வி. சேகருக்குச் சின்ன நாற்காலிதான் கிடைத்திருப்பது தமிழர்களின் தவக்குறையே ஆகும்.

    தமிழ் மண்ணின் பெருமைகளில் ஒருவரான திரு. எஸ்.வி. சேகர் எதிர்காலத்தில் நாடகத்தமிழ் வாயிலாகத் தமிழை உலக அரங்கில் உயர்த்துவது திண்ணம்.

    வாழ்க திரு. எஸ்.வி. சேகர்

    வளர்க அவர்தம் நாடக நற்பணி!

    கவிஞானி வலம்புரி ஜான்

    சமர்ப்பணம்

    விளம்பரமில்லாத எந்தப் பொருளும் இருட்டு அறைக்குள் இருக்கும் கருப்புப் பூனையை தேடுவதற்கு சமம் என்பார்கள். இன்று நானும் நாடகப்பிரியா நாடகங்களும் இந்த அளவுக்கு பிரபலமாக மக்களைச் சென்று அடைந்ததற்கு முக்கிய காரணம் பத்திரிகைகள். முதன் முறையாக நாடகத்திற்கு S.ve. சேகர் ஸ்டிக்கர் அடித்துள்ளார், ஒரே நாளில் 5 நாடகம் போட்டார், S.Ve. சேகரின் அடுத்த புதுநாடகம் மங்காத்தா. இப்படி பல செய்திகளை மக்களை சென்று அடையவைத்தவர்கள் பத்திரிக்கையாளர்கள்.

    25வது நாடகத்துடன் இரண்டு மாதத்திற்கு பிறகுதான் அடுத்த தேதி கிடைக்கும் என்ற நிலைமை எங்களின் கிரேசி தீவ்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1