Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Crazy Thieves In Palavakkam
Crazy Thieves In Palavakkam
Crazy Thieves In Palavakkam
Ebook121 pages47 minutes

Crazy Thieves In Palavakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாலவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் சுதர்சனத்தின் வீட்டிற்கு மூன்று திருடர்கள் வருகின்றனர். பலமுறை கடத்தப்பட்ட சுதர்சனத்தின் முதலாளி பஞ்சாபகேசனின் மகன் முரளியை கடத்தி வருகின்றனர். கடத்தலைப் பற்றி தெரியாத திருடர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் மச்சான் உப்பிலி அப்பாவிடமே அதிக பணம் கேட்கச் சொல்லும் முரளி. அங்கு நடப்பதை அப்படியே கதையாக எழுதும் எழுத்தாளர் ஏகலைவன், அவர்களுக்கிடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறார் சுதர்சனம், பிள்ளையார் கோவிலிலிருந்து பணப்பெட்டியை எடுக்கப்போகும் சுதர்சனம், முதலாளி பஞ்சாபகேசனிடம் மாட்ட பிள்ளையாரே பணப்பெட்டியுடன் ஓடி விடுகிறார். பிள்ளையார் வேடத்தில் வீடுவரும் உப்பிலியிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு திருடர்கள் வெளியேற மீண்டும் அதே முரளியை கடத்திக் கொண்டு வேறொரு கோஷ்டி உள்ளே நுழைகிறது.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580148907601
Crazy Thieves In Palavakkam

Read more from S.Ve. Shekher

Related to Crazy Thieves In Palavakkam

Related ebooks

Related categories

Reviews for Crazy Thieves In Palavakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Crazy Thieves In Palavakkam - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Crazy Thieves In Palavakkam

    கதை, வசனம்

    கிரேஸி மோகன்

    நாடகமாக்கம், இயக்கம், தாயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி – 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி – 8

    காட்சி - 9

    காட்சி - 10

    எஸ்.வி. சேகர் (என் கணிப்பில்)

    (கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம்)

    Screenshot 2022-01-05 115636

    சிரிக்க சிரிக்கச் சொல்லுவான் அசலான் அழஅழச் சொல்லுவான் நம்மவன் நீ என்றுமே என்னவன். நமது நட்பு ஆலமரம். அதை அரை பிளேடால் அறுக்க முடியாது. 3000 உனக்கு சாதனையே அல்ல ஏனெனில் உன் அதிர்ஷ்டம் நானறிவேன். வாழ்க! வளர்க! வளமே பெறுக!

    - அன்புடன் ‘விசு’

    3000-ஆவது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    நாடகக்குழுவில் நடிப்பதற்கும் சினிமாவில் நடிப்பதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை ஒப்பந்தம் செய்வது சினிமாவில். நடிகர்களுக்காக பாத்திரங்கள் படைக்கப்படுவது நாடகங்களில். நாடக்குழுவில் நடிப்பது என்பதைத் தவிர சிறந்த அங்கத்தினர் என்று பெயரெடுப்பவர்கள்தான் நீண்ட நாட்கள் ஒரு குழுவில் நிலைத்து இருக்க முடியும். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாடகப் பிரியாவில் இருப்பவன் வி.எஸ். ஸ்ரீதர். ஒரு விபத்தில் காலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதையும் மீறி நாடகத்தை விடாதவன் ஸ்ரீதர். திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம், அண்ணாநகர் இப்போது நங்கநல்லூர் என்று வீடுகள் மாறினாலும் தூரம் அதிகமானாலும் நாடகத்திற்கும் ஸ்ரீதருக்கும் உள்ள நெருக்கம் குறையவில்லை.

    சிவா என்று அழைக்கப்படும் சிவசங்கரன் 60 வயதை கடந்தாலும் மனதால் இளமையானவர். எத்தனை வருடம் கழித்து நாடகம் போட்டாலும் வசனம் மறக்காதவர்.

    சொட்டேஷ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீனிவாசன் நாடகப்பிரியாவின் நிரந்தர ஒலி, ஒளி மேற்பார்வையாளர். எண்கணித சோதிடர் மற்றும் எங்கள் குழுவின் ஐயப்ப குருசாமி. 30 ஆண்டு கால நட்பு, இன்று சொந்த வீடு கட்டி தன் மூன்று மகன்களும் அரபு நாடுகளில் வேலை செய்தாலும் தான் உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற உணர்ந்த எண்ணம் கொண்ட உழைப்பாளி.

    ஆரம்பகால காமேஷ் ராஜாமணி இசைக் குழுவில் ஒருவனாக அறிமுகமாகி இன்று எங்கள் நாடகப் பிரியாவின் ஒரே இசைக் கலைஞராக இருந்து கொண்டிருப்பவர் பி.ஜே. முரளி என்ற பூந்தமல்லி மியூசிக் முரளி. எந்தப் பிரச்சனை வந்தாலும் இசையையும் புகையையும் விடாதவர்.

    ராகவன் - நாடக சபாக்களில் வாலண்டியராக இருந்து நம் நாடகக்குழுவிற்குள் வந்தவர். மிக மெதுவாகவும் குறைவாகவும் பேசுபவர். அவ்வப்போது நம் புது நாடகங்களுக்கு ஜோக் உபயம்’ செய்பவர். நாடகப்பிரியாவின் சீனியர் மெம்பர்களில் ஒருவர்.

    பிரிய தர்ஷணி என்ற நாடகக் குழுவை நடத்திக் கொண்டிருந்த நடிகர் பிரன்னாவும், கணேஷும் நாடகம் நடத்துவதை விட்டபோது என்னிடம் ஒப்படைக்கப்பட்டவர் கலாதர் பார்த்தசாரதி. வெற்றிலை பாக்கு, பீடா, ஜர்தா போட்டாலும் நாக்கு குழறாமல் இன்றும் தொடர்ந்து சிறப்பாக பீடா போட்டுக் கொண்டு வருபவர். நாடகப்பிரியாவின் வெற்றிக்குக் காரணமான பலருள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலரில் சிவசங்கரன், வி.எஸ். ஸ்ரீதர், சொட்டேஷ் ஸ்ரீனிவாசன், மியூசிக் முரளி, ராகவன், மற்றும் கலாதர் பார்த்தசாரதி, ராஜேந்திரன், கஜபதி, அஸ்வத் தாமன், பம்பாய் ராஜா, கலை ரவி, ஆனந்தி, குட்டி பத்மினி, கமலா காமேஷ், எஸ்.வி. பாலு, எல். கணபதி, திருமதி. வந்தனா, திருமதி சுஜாதா, செல்வி சௌந்தர்யா, திருமதி. பரிமளா, திருச்சி வானொலி டி.வி.கே. சுதர்சன், நாடகப் பிரியாவின் ஆரம்பகால நண்பர்களான மேனேஜர் சீனா, ஜோசியர் சீனா, அவர்களுக்கும் என் குழுவினருக்கும் இந்த நாடகத்தை காணிக்கையாக்குகின்றேன்.

    காட்சி - 1

    இடம்: குப்புசாமி அய்யங்கார் வீடு

    பாத்திரங்கள்: உப்பிலி, சுதர்சனம், குப்புசாமி அய்யங்கார் ஆப் வைகுண்டம், மைதிலி

    (உப்பிலி பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறான். பார் வைகுண்டம் குப்புசாமி அய்யங்கார் வருகிறார்).

    குப்பு: (விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டு வருகிறார்)

    உப்பிலி, அங்க காலங்கார்த்தால என்னடா பண்ணிண்டிருக்கே!

    உப்பிலி: மகாகவி பாரதியார் சொன்னதை பண்ணிண்டிருக்கேம்ப்பா.

    குப்பு: அப்படின்னா...

    உப்பிலி: காலையில் எழுந்தவுடன் படிப்பு...

    குப்பு: அப்ப நீ இன்னும் பல் தேய்க்கல்லியா மூதேவி... பாரதியார் காலைல எழுந்தவுடன் படிப்புன்னுதான் சொன்னார். பேப்பர் படின்னு சொல்லல்லே!

    உப்பிலி: ஏம்பா, வள்... வள்னு விழறே. இந்த மார்கழி மாசக் குளிருக்கு நல்லா சுடச்சுட நியூஸ் போட்டிருக்கான். - படிக்கிறேன் கேளேன்.

    குப்பு: மார்கழி மாசமும் அதுவுமா விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்றதை விட்டுட்டு பேப்பர் படிக்கிறானாம் - பேப்பர்!

    உப்பிலி: உனக்கு வேணும்னா விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக்கோ. எம் பிராணனை வாங்காதே.

    குப்பு: உப்புலி. நெஜமாகத்தான் கேக்கறேன். சகஸ்ர நாமத்தை ஒரு தடவை கண்ணாலேயாவது பார்த்திருக்கியா?

    உப்பிலி: ஒரு தடவை என்ன? 4-5 தடவை பார்த்திருக்கிறேன்.

    குப்பு: அடப்பாவி! பார்த்ததுதான் பார்த்தே, அப்படியே சகஸ்ரநாமத்தை கைல எடுத்து வச்சுண்டு...

    உப்பிலி: அட! ச்சீ... போப்பா. சகஸ்ரநாமத்தை கைல எடுத்து வச்சுக்கறதாம். அவர் என்ன குழந்தையா...?

    குப்பு: என்னடா சொல்றே நீ...?

    உப்பிலி: எஸ்.வி. சகஸ்ரநாமம்... எவ்வளவு பெரியவர் - அப்பா ரோலெல்லாம் நடிக்கிறவர் - அவரை தூக்கி நான் கைல வச்சுக்கறதாம். எப்படி கனப்பார் அவர் ஒரு கனபாடி.

    குப்பு: ம்... என் ப்ராரப்த கர்மம். - இப்படி ஒரு புள்ளை எனக்கு (விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார் - உப்பிலி பேப்பர் படிக்கிறான்)

    உப்பிலி: அப்பா... அப்பா... இந்த நியூஸ் பார்த்தியா?

    குப்பு: ஸ்லோகம் சொல்லவிடாம உபத்ரவம் பண்றியே... படி... படி.

    உப்பிலி: பெரம்பூரில் காமாட்சி என்ற பெண்ணுக்கு இரண்டு தலைகளுடன் குழந்தை பிறந்திருக்கிறது - ஆச்சர்யமா இல்ல...!

    குப்பு: இது என்னடா ஆச்சர்யம்...உனக்கே ரெட்ட மண்ட தானே!

    உப்பிலி:

    Enjoying the preview?
    Page 1 of 1