Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirippu Nadagangal
Sirippu Nadagangal
Sirippu Nadagangal
Ebook225 pages1 hour

Sirippu Nadagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் துன்பத்தில் உழல்பவர்கள், சோகமான நாட்களைக் கழிப்பார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும், ‘டானிக்’காக இந்தச் சிரிப்பு நாடகங்களை அளித்து மகிழ்கிறோம்.
படிக்கும் போதே சிரிக்கச் செய்யும் நாடகங்களை நீங்களும் படியுங்கள். வாழ்க்கை இன்பமயமானது. சிரித்துக்கொண்டேயிருந்தால் நோய்களும் அணுகாது. அதனால் இந்நாடகங்களைப் படியுங்கள்-சிரித்து மகிழுங்கள்! சிந்தித்து, மறுபடியும் சிரியுங்கள்!
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136906118
Sirippu Nadagangal

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Sirippu Nadagangal

Related ebooks

Related categories

Reviews for Sirippu Nadagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirippu Nadagangal - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    சிரிப்பு நாடகங்கள்

    Sirippu Nadagangal

    Author:

    கலைமாமனி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு மாமனார்... இரண்டு தலைதீபாவளி

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    2. குருவே சரணம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    3. பூசணிக்காய் அல்வா

    காட்சி - 1

    காட்சி-2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    4. சீனு! ஐ லவ் யு!

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி - 19

    காட்சி - 20

    காட்சி - 21

    5. ஆவி வந்த ஆட்டுக்கல்

    காட்சி-1

    காட்சி - 2

    காட்சி - 3

    6. வெங்காய மகிமை

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    மதிப்புரை

    நாடக இலக்கியம் என்பது தற்போது மூன்று வகைப்படுகிறது. புத்தகத்தில் படிக்கும் நாடகம், வானொலியில் கேட்கும் நாடகம், தொலைக்காட்சியில் பார்க்கும் நாடகம். இப்படி மூன்றினுக்கும் மூன்று வகையாக எழுத வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது நண்பர் திரு. கோவை அனுராதா அவர்கள் மிகச் சிறப்பாக இந்தச் சிரிப்பு நாடகங்கள் எனும் தொகுப்பு நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் உள்ள நகைச்சுவை நாடகங்கள் மூன்று கோணங்களிலும் ரசிகர்களைச் சென்றடைந்து பாராட்டு பெற்றவை.

    சிரிக்க வைப்பது எல்லாமே நகைச்சுவைதான் என்றாலும், அந்த நகைச்சுவை நம்மைச் சிறிது சிந்திக்கவும் வைக்குமானால் அதன் மதிப்பு உயரும். அதனால்தான் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் நம்முள் தோன்றி மறைந்தாலும், சிரிக்க வைத்து அதில் சிந்திக்கவும் வைத்த கலைவாணர் அவர்களுக்கு நாம் ‘சிலை’ எடுத்திருக்கிறோம்.

    நண்பர் திரு.கோவை அனுராதாவின் இந்த சிரிப்பு நாடகங்கள் இயல்பானவை. வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை நகைச்சுவையாகக் கூறுபவை. அதனால் இந்தப் புத்தகம் வாசகர்களுக்குச் சிறந்த பொழுது போக்காக அமையும் என்பதில் ஐயமில்லை.

    பிறருக்கு நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்ப வந்தடையும் என்றஆன்மீகக் கருத்தை இன்றைய விஞ்ஞானமும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் பார்க்கும் போது, நல் நடிகரும், நகைச்சுவை எழுத்தாளருமான திரு. கோவை அனுராதா எழுதிய ‘சிரிப்பு நாடகங்களைப் படித்ழு மகிழ்வதன் மூலம், அவரையும் மகிழ்ச்சி அடையச் செய்ய முடியும்.

    வாழ்க அவர் தம் எழுத்துப் பணி...

    வளர்க அவர்தம் நாடகக்கலை எனக் கூறி வாழ்த்துகிறேன்...

    இப்படிக்கு,

    வி. சங்கரசுப்பைய்யன்.

    1. ஒரு மாமனார்... இரண்டு தலைதீபாவளி

    பாத்திரங்கள்

    ஏழுமலை: குடும்பத் தலைவர் - வயது:45

    இளங்கோ: ஏழுமலையின் மகன் - வயது:20

    சுந்தரி: ஏழுமலையின் மனைவி - வயது:40

    தமிழ்பித்தன்: மாப்பிள்ளை - வயது:30

    கந்தசாமி: மாப்பிள்ளை - வயது:25

    ஸ்யாமளா: பெண் - வயது:20

    ***

    காட்சி - 1

    (மரக்கடை ஏழுமலை வீடு. ஹாலில் உள்ள சோபாவில் ஏழுமலையின் மகன் இளங்கோ உட்கார்ந்து, முகத்தை மறைத்துக்கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஏழுமலையின் மனைவி சுந்தரி இரு கடிதங்களுடன் வேகமாக வெளியே இருந்து வருகிறாள்.)

    சுந்தரி: என்னங்க, நான் சொன்ன மாதிரியே நம்ம ரெண்டு மாப்பிள்ளைகளும் கடிதம் போட்டிருக்காங்க. தலை தீபாவளிக்கு வறாங்க போல இருக்கு. பிரிச்சி படியுங்களேன்.

    இள: (பேப்பரில் இருந்து தலையை எடுத்து) நான் அப்பா இல்லேம்மா. இளங்கோ...நீ சொமந்து பெத்த பையன்...ஹி...ஹி...

    சுந்தரி: போருண்டா...பல்லைக் காட்டாதே. பெரிசா நினைப்போ, அப்பனும், பையனும் ஒரே சமயத்துல திருப்பதி போய் மொட்டை தட்டிக்கிட்டு வந்ததும் இல்லாம, இப்படி குழப்பம் வேற பண்றீங்களா?

    ஏழுமலை: (உள்ளேயிருந்து வந்துகொண்டே) இதுல என்ன குழப்பம்? பையன் தலை கொஞ்சம் கருப்பு கூடியிருக்கும். என் தலை வெள்ளை.

    இளங்: இன்னொரு சின்ன வித்தியாசம்ப்பா. என் மண்டைக்குள்ள ஒரு ரெண்டு கிலோ மூளை அதிகமா இருக்கும்.

    ஏழுமலை: இதுல இருந்தே உன் மண்டைக்குள்ளே ஒண்ணும் இல்லேன்னு தெரியுது. கண்ணா, மூளை கிராம் கணக்குலதான் இருக்கும். கிலோ கணக்குல இருக்காது.

    சுந்தரி: போதும்...போதும். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தையெல்லாம் பேசி, வீணா நேரத்தைப் போக்காதீங்க. லட்டரைப் படிச்சி சொல்லுங்க. தீபாவளி சமயத்துல போய் மொட்டை அடிச்சிக்காதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? என்னைப் பார்க்கற உங்க எல்லாம் என்ன சுந்தரி, தலைத் தீபாவளிக்கு மாப்பிள்ளைங்க வந்துட்டு போன பிறகுதான் மாமனார் தலைமொட்டை ஆகும், முன்னாலேயே ஆயிடுச்சேன்னு கேலி பண்றாங்க.

    ஏழுமலை: உள்ளதைச் சொல்றாங்க, உனக்கு ஏன் கோபம் வருது?...

    (கடிதத்தைப் பிரிக்கிறார்.)

    இளங்: ஏம்ப்பா?... இந்த வருஷம் நம்ம வீட்டுல ரெண்டு தலைத் தீபாவளி இல்லே?

    ஏழுமலை: ஆமா...ஆமா..அப்பவே உங்கம்மாகிட்ட சொன்னேன். ஒரே வருஷத்துல ரெண்டு கல்யாணம் பண்ண வேண்டாம். எல்லாத்துக்கும் சிரமப்படும்னு. கேட்டாளா? என்னவோ அவ தம்பி எம்.எல்.ஏ. ஆயிட்டான். இப்பவே கல்யாணத்தை முடிக்கணும். திடீர்னு மந்திரியாயிட்டா அந்தஸ்து பார்த்தாலும் பார்ப்பான்னு பறந்தா. இப்போ தலைத் தீபாவளிக்கு ரெண்டு மாப்பிள்ளைங்களை சமாளிக்கணும்.

    சுந்தரி: என் தம்பி ஒண்ணும் டிமாண்ட் பண்ண மாட்டான். நீங்க பிடிச்ச பேங்க் மாப்பிள்ளைதான் ஏதாவது கேட்டிருப்பாரு...பாருங்க.

    ஏழுமலை: சரி...முதல்...கடிதம்...எம்.எல்.ஏ. மாப்பிள்ளை...படிக்கட்டுமா? "மாண்புமிகு மாமனார், மாமியார் ஆகியோர்க்கு வணக்கம். நான் தலைத் தீபாவளிக்கு உங்கள் அருமை மகளும்,

    Enjoying the preview?
    Page 1 of 1