Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanandha Nilaiyam
Aanandha Nilaiyam
Aanandha Nilaiyam
Ebook98 pages37 minutes

Aanandha Nilaiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கூட்டுக் குடும்பத்தை நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். முதியோர் இல்லம் என்பது ஒரு சாபம் இச்சாபத்தை போக்க நம்பால் முடிந்த உதவிகளை மனமுவந்து செய்தல் வேண்டும். இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மகாதேவன்-பார்வதி தம்பதியரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது இந்நாடகம். ஆனந்த நிலையத்தில் நாமும் ஒருவராய். வாங்க வாசிக்கலாம்…

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580136909090
Aanandha Nilaiyam

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Aanandha Nilaiyam

Related ebooks

Reviews for Aanandha Nilaiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanandha Nilaiyam - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    ஆனந்த நிலையம்

    மேடை நாடகம்

    Aanandha Nilaiyam

    Medai naadagam

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதைச்சுருக்கம்

    நாடகத்தின் கருத்து…

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 14

    காட்சி - 15

    கதாபாத்திரங்கள்

    1. மகாதேவன் – குடும்பத்தலைவர் - வயது 66

    2. பார்வதி - மகாதேவன் மனைவி - வயது 60

    3. ராகவேந்திரன் - ஆனந்த நிலையத் தலைவர் - வயது 70

    4. சிவராமன் - மகாதேவன் மகன் – வயது 40

    5. நிர்மலா – சிவராமனின் மனைவி - வயது 35

    6. சட்டநாதன் - வக்கீல் - வயது 40

    7. கௌசிக் - சிவராமனின் மகன் – வயது 8

    8. கோமளா பாட்டி - ஆனந்த நிலையம், வசிப்பவர் - வயது 75

    9. சாமிநாதன் - பாட்டியின் பேரன் - வயது 50

    10. ஐஜே சுந்தர் - ஆனந்த நிலைய விசிட்டர் வயது 50

    11. பரசுராமன் - நிர்மலாவின் தந்தை - வயது 55

    மற்றும் 3 மிகச்சிறிய கதாபாத்திரங்கள்.

    கதைச்சுருக்கம்

    அது ஒரு முதியோர் இல்லம். ஆனால் அதன் பெயர் ஆனந்த நிலையம், அங்குள்ள ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். காரணம் அதை நடத்தும் ராகவேந்திரராவ் மற்றும் அவரின் மனைவி அனுசுயா பாய். குழந்தைகள் இல்லாத இருவரும் தன் வீட்டையே இல்லமாக மாற்றி ஒத்த வயதுடையவர்களுக்கு குறைந்த கட்டத்தில் தங்கவைக்கிறார்கள்.

    அங்கு தங்கியுள்ள பார்வதி மாமியும், மகாதேவனும் நிலையத்திற்கு ஜீவநாடிகள். இரண்டு வருடங்களுக்கு முன் நிலையத்தின் நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக வந்த பார்வதி மாமி அங்குள்ள அனைவருக்கும் பிரியமாகிறாள். பார்வதியை தவிர்த்து எந்த வேலையும் அங்கு நடக்காது என்ற சூழ்நிலை. ஆனால் எப்படிப்பட்ட வேலைகளையும் மனப்பூர்வமாகச் செய்யும் பார்வதி மாமியை அங்குள்ளவர்கள் தன் குடும்ப உறுப்பினராக நினைக்கிறார்கள்.

    மகாதேவனின் மகன் சிவராமனுக்கு எட்டு வயதில் ஒரு பையன். பெயர் கௌசிக். மனைவி நிர்மலா. நிர்மலாவின் தூண்டுதலாலும், அவன் மாமனார் பரசுராமனின் சதியாலும்தான் மகாதேவன் தம்பதியர் ஆனந்த நிலையத்திற்கு வருகிறார்கள். ஓட்டலில் தோசை மாஸ்ட்டராக இருந்த மகாதேவன் கஷ்டப்பட்டு தன் உழைப்பையெல்லாம் தந்து, மகனை படிக்க வைத்தவர். எந்தவிதமான பொருளும் இல்லாமல் ஆனந்த நிலையத்திற்கு வந்து சேருகிறார்கள்.

    ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 12ந்தேதி நிலையத்திற்கு வரும் சிவராமன் தன் அப்பா அம்பாவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு போவான். அன்று பேரன் கௌசிக்கிற்கு பிறந்தநாள். இந்த தாத்தா பாட்டி வராமல் கௌசிக் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டான். ஆகையால் அன்று மட்டும் அவர்களை கூட்டிக் கொண்டு வந்து அன்றே கொண்டு போய்விட்டு விடுவான். இது இரண்டு வருடங்களாக நடந்து வரும் கூத்து.

    ஆனந்த நிலையம் போன்ற முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்து, வாரிசுகளின் மேல் கேஸ் போடும் வக்கீல் சட்டநாதன் மகாதேவனைச் சந்திக்கிறார். மகாதேவன் ஒரு ஆன்மீகவாதி… கடவுள் நம்பிக்கை உள்ளவர். சட்டநாதன் கடவுள் இல்லை என்று சொல்லுபவர். ஆனால், நல்லவர். மகாதேவனைச் சந்தித்த சட்டநாதன் சீனியர் சிடிசன் வெல்பேஃர் ஏக்டின் கீழ் உங்களுக்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் வாங்கித் தருவதாகவும் கையெழுத்து போடும்படியும் கேட்கிறார். ஆனால் பாசமுள்ள அந்த பெற்றோர்கள் மறுத்து விடுகின்றனர். தன் பையன்தான் அப்படி மனைவி பேச்சைக் கேட்டு நடக்கிறான் என்றார், விவரம் தெரிந்த நாமும் அவன் மனதைப் புண்படுத்தக் கூடாது. அந்த பணம் தங்களுக்கு வேண்டாம். இங்கு ஆனந்த நிலையத்தில் எந்த தேவையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்து விடுகின்றனர்.

    மகாதேவன் ஒரு இசைப் பிரியர். அவர் சங்கீதம் படிக்காவிட்டாலும், சுரம்சுத்தமாக பாடுவார். அவ்வப்போது நிலையத்தில் உள்ள நண்பர்களிடம் பாடிக் காட்டுவார். அவர்களுக்கு சுலோகங்கள் சொல்லிக் கொடுப்பார்.

    பல வருடங்களுக்கு முன் ஒருமுறை கொல்லிமலைக்கு டூரிஸ்ட் சிலருடன் சென்று வந்தவர் அந்த சமயத்தில் அங்கே ஒரு சித்தரைச் சந்தித்திருக்கிறார். அவருக்கு செய்த சிறிய உதவிக்காக ஒரு மந்திரத்தை உபதேசமாகப் பெற்றிருக்கிறார். அடிக்கடி அதை மனதிற்குள் ஜபிப்பார். மகாதேவன் கனவில் அடிக்கடி அந்த சித்தர் வருவதுண்டு. மந்திர உபதேசம்

    Enjoying the preview?
    Page 1 of 1