Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaal Paiyan
Vaal Paiyan
Vaal Paiyan
Ebook105 pages40 minutes

Vaal Paiyan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அப்பா நடிகர் மோகன்குமாரிடம் வேலை பார்க்கும் சிதம்பரம், அவர் பெண் விமலாவை காதலிக்கிறான். ஒரு நெருக்கடியில் மோகன்குமார் சிதம்பரத்தை ஆஞ்சனேயர் வேடம் போடும்படி கூற, மறுத்த சிதம்பரத்தை வேலையை விட்டு துரத்துகிறார். எதிர்பாராத விதமாக சிதம்பரத்திற்கே வால் முளைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு அங்குலம் வளரும் வாலை மறைக்க முடியாமல் தவிக்கிறான். சிதம்பரம் டாக்டர்களின் உதவியும் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. ஸ்ரீராம நவமி நாளில் அவன் அம்மா புடலங்காய் என நினைத்து வாலை வெட்டி விடுகிறாள். வால் போன சிதம்பரத்துக்கு விமலாவையே கல்யாணம் செய்து கொடுக்க முன் வருகிறார் மோகன்குமார். ஆனால் சிதம்பரத்திற்கு வாலுக்கு பதில் கொம்பு முளைக்கிறது.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148907550
Vaal Paiyan

Read more from S.Ve. Shekher

Related to Vaal Paiyan

Related ebooks

Related categories

Reviews for Vaal Paiyan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaal Paiyan - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    வால் பையன்

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Vaal Paiyan

    கதை, வசனம்

    கோபு – பாபு

    நாடகமாக்கம், ஸ்க்ரிப்ட் எடிட்டிங், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 4A

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 10A

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    ஒரு நகைச்சுவை விருந்து

    சேகர் அவர்களை முதலில் சினிமா மூலம்தான் பரிச்சயம். குழந்தைத்தனமான, அப்பாவியான அந்த முகம், வசனங்களை சூப்பர் டைமிங் டெலிவரி பண்ணுவது, சின்னச் சின்ன முகபாவங்களிலேயே பெரிய பெரிய சிரிப்பலைகளை உண்டாக்குவது என்று தனக்கென தனிப்பாணியை வெகுவாக ரசிப்போம். நாளடைவில் அவர் குரலைக் கேட்டாலே எந்த வேலைகளையும் நிறுத்திவிட்டு கவனிக்க ஆரம்பித்துவிடும் அளவுக்கு வசியமாகிப் போனோம். அவருடைய நாடகங்கள், வெறும் துணுக்குத் தோரணமய்யா என்று கடும் விமர்சனம் எழுந்ததுண்டு. அந்த விமர்சனம் பொறாமையால் எழுந்தது. ஒரு துணுக்கால் என்னென்ன விளைவுகளை உண்டாக்க முடியும் என்பதை நன்கு அறிந்தவன் முறையிலே, சேகரின் துணுக்குகள் அருமை என் போன்றோர்க்கு நன்றாகவே தெரியும்.

    சேகரின் நகைச்சுவை சிரிப்பு விருந்து, கவலை வியாதிக்கு அருமருந்து. மனம்விட்டு சிரிக்க இவரது நாடகங்கள் சிறந்த வழி. நானறிந்த சேகர் அவர்கள் நகைச்சுவை நடிகர் என்பதற்கும் அப்பால், நல்ல புகைப்படக் கலைஞர், சிறந்த பத்திரிகையாளர். ஒரு நூறு ரூபாய்க்காக பத்திரிகையின் பொன்னான ஒரு பக்கத்தை விற்றுவிடக் கூடாது என்பார். ஒரு நல்ல பத்திரிகையாளனுக்கான அறிவுரை அது. ஒருவன் சிறு எலும்புத்துண்டுக்காக தன்னை நாயாக மாற்றிக் கொண்டதில்லை.

    சேகர் அவர்களின் சுயகௌரவம் எனக்கு பிடித்தமான ஒன்று. தனித்தன்மை கொண்ட சேகர் சான்ஸுக்காக குழைந்து நின்று பார்த்ததில்லை. சான்ஸ்தான் அவரைத் தேடி வந்திருக்கிறது. கலைஞனுக்கு கொஞ்சம் கர்வமும் கலந்திருப்பதுதான் அழகு. ரொம்ப குழைபவர் எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும், மாற்று குறைந்து போவார்.

    சேகரைப்பற்றி வெளியில் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அறக்கட்டளை வைத்து, அதன் மூலம் ஆபத்தில் இருப்பவர்கள், சிரமத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார். நானும் 4001/- ஒரு (நான்காயிரத்து ஒன்று மட்டும்) உதவி பெற்று பயனடைந்தேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த என்னைப்பற்றி நண்பர் என்.சி. மோகன்தாஸ் மூலம் கேள்விப்பட்டு உடனே வந்து பார்த்தார். இத்தனைக்கும் சேகர் அவர்களை நேரில் எனக்கு ரொம்ப பரிச்சயம் இல்லை. பத்து வருஷங்களுக்குமுன் ஒரே ஒருதரம் நேரில் பார்த்து பேசியிருக்கிறேன் அவ்வளவுதான். என் சிகிச்சை செலவுக்காக சேகரின் நாடகம் ஒன்றை போடலாமா என்று நண்பர்கள் ஆலோசிக்க, அவ்வளவு நாள் வெய்ட் பண்ண வேண்டாம். முதலில் நம்மாலானதை செய்வோம் என்று ஓடோடி வந்திருந்தார். எங்கு யாருக்கு ஆபத்தென்றாலும் கால்கள் அந்த திசைக்கு ஓடுகிறது, உதவிக்கு கைகள் நீள்கிறது எனும்போது, அந்தக் கலைஞனின் கம்பீரம் அதிகரிக்கிறது.

    சேகர் அவர்கள், நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் பெற்று நாட்டுக்கு நல்லதொரு நகைச்சுவை மருத்துவனாய் விளங்க இறையருள் சித்திக்கட்டும்.

    - அன்புடன் படுதலம் சுகுமாரன்

    சமர்ப்பணம்

    இன்று நாடகக்கலை நசிந்துவிட்டது. சபாக்கள் சுருங்கிவிட்டது. ரசிகர்கள் கிழிந்து விட்டார்கள். இப்படி பலர் புலம்பிக் கொண்டு இருந்தாலும் சென்னையில் எந்த ஒரு நாடகம் அரங்கேற்றம் என்றாலும் அதை இன்றுவரை செய்துகொண்டு இருப்பது திரு. ராஜகோபால் தலைமையிலான கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் (உதவி திரு. ஜெயராமன், ராமாநுஜம் மற்றும் நண்பர்கள்). அதன் பிரதி பலன்தான் டைரக்டர் பாலச்சந்தரின் சில படங்களில் சபா என்றால் பின்னணியில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபா என்ற பேனர் இருக்கும். ஒரு அமைச்சூர் நாடகம் போட ஆரம்பித்து, இன்றும் சுமார் 15 நாடகங்கள் போட முடியும் என்றால் அதற்குக் காரணம் லாப நோக்கில்லாமல் செயல்படும், நாரத கான சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், கபாலி ஃபைன் ஆர்ட்ஸ், பிரம்ம கான சபா, ஓம் விக்னேஸ்வரா, சாஸ்திரி பவன் ஃபைன் ஆர்ட்ஸ், கிருஷ்ண சபா, ரசிக ரஞ்சனி சபா போன்ற அமைப்புக்கள்தான். அதற்குக்காரணம் அதற்கென்ற நிரந்தர அங்கத்தினர்களும் குறைந்த சந்தாவும்தான்.

    ஒரு நாடகம் அரங்கேறுவதற்கு முன் ஒத்திகை பார்க்க மிகக் குறைந்த கட்டணத்தில் சில இடங்கள் அப்போது இருந்தது. ஆனால் இப்போது ஒரு சதுர அடி கணக்கில் அனைத்து இடங்களும் வாடகைக்குக் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எந்த நாடகக் குழுவாக இருந்தாலும் நாரத கான சபாவில் இலவசமாக ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள் என்று இடம் அளித்துக் கொண்டு வரும் திரு. ஆர். கிருஷ்ணசாமி அவரின் சகோதரர் சூரி அவர்களுக்கு எத்தனை இருக்கும்வரை நாடகம் அழியாது. அனைத்து நாடக குழுக்களின் சார்பாக இந்நாடகத்தை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ராஜகோபால் அவர்களுக்கும், நாரத கான சபா ஆர். கிருஷ்ணசாமி அவர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.

    காட்சி 1

    Enjoying the preview?
    Page 1 of 1