Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koondu Kuyil
Koondu Kuyil
Koondu Kuyil
Ebook54 pages19 minutes

Koondu Kuyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123904060
Koondu Kuyil

Read more from Indhumathi

Related to Koondu Kuyil

Related ebooks

Reviews for Koondu Kuyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koondu Kuyil - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கூண்டுக் குயில்

    Koondu Kuyil

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    சாயந்திரம் ஆறு மணிக்குக் கச்சேரி. ஆறு என்றால், ஆரம்பிக்க ஆறரையாகும். அல்லது ஏழு கூட ஆகலாம்.

    இவளைப் போன்ற புதுப்பாடகிகள், இப்போதுதான் முன்னுக்கு வருபவர்கள் என்றால் சபாக்காரர்கள் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. என்னதான் ஞானமும், குரல் வளமும் இருந்தாலும், மதிப்புத் தருவதில்லை.

    சற்றே அலட்சியம் தலை தூக்கத்தான் பேசுகிறார்கள். முதல் மூன்று கச்சேரிகளிலும் அப்படி நடந்துகொண்டவர்கள் இவள் வர்ணம் முடித்துக் கீர்த்தனை ஆரம்பித்தவுடனே சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். பரவாயில்லையே என்று புருவங்கள் உயர்த்தினர்.

    தோடி ஆலாபனையில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் சபையைக் கட்டிப்போட்ட பின்னர்,

    அற்புதமான சாரீரம். குரல் என்னமாய்க் குழைகிறது... நம்ம ஜனகத்தின் பெண் இல்லையா...? அதனால்தான் அதே ஞானமும், வித்வத்தும் வந்திருக்கிறது. இந்த மாதிரி தோடியையும், பைரவியையும் இழுக்க அவளுக்கு மட்டும்தான் வரும். புலிக்குப் பிறந்தது பூனையாகாதேப்பா...

    அப்போ அடுத்த டிசம்பரில் ஸ்ரீரஞ்சனியின் கச்சேரி நம்ம சபாவிலே உண்டுன்னு சொல்லுங்க...

    போகிற போக்கைப் பார்த்தால் நம்ம சபா மட்டுமில்லாமல், எல்லா சபாவிலும் அவள் கச்சேரி இருக்கும் போலத் தோணறது...

    அப்படின்னா இப்பவே தேதி புக் பண்ணிடுங்க...

    நீ வேற... இன்னும் அந்த டிமாண்ட் அவளுக்கு ஏற்படலைப்பா. எனக்குத் தெரிஞ்சு இது மூணாவது கச்சேரியோ நாலாவதோதான். அதனால் அவ்வளவு தூக்கி வைக்க வேண்டாம். ஜனகத்துக்கிட்ட சொன்னால் தேதி தானாகக் கிடைக்கிறது.

    ***

    ஜனகலெட்சுமி என்கிற ஜனகம் இத்துறையின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவள். திருவாரூரில் பிறந்து சங்கீதத்திலேயே வளர்ந்தவள். அம்மா, அம்மாவிற்கு அம்மா, அவளுக்கு அம்மா எல்லாருமே கோவிலில் கச்சேரி பண்ணினவர்கள். வீணை வாசித்தவர்கள். சதிராடினவர்கள். பரம்பரை பரம்பரையாய்ப் பொட்டுக்கட்டிக் கொண்டவர்கள்...

    திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ருக்மணியம்மா வீடு எது என்று கேட்பதற்குள்ளாக எட்டு வயதுச் சிறுவன்கூட அடையாளம் காட்டி விடுவான்.

    "அதோ மைனரோட கோச் வண்டி நிக்குது பாருங்க. அதான் ருக்மணியம்மா வீடு... ஆமாம். நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1