Oru Sontha Veedu Vadagai Veedagirathu
()
About this ebook
குடித்தனக்காரர்களிடம் தேவையில்லாத பத்து கட்டளைகள் போட்டு கொடுமைப்படுத்தும் ஆதிகேசவனின் வீட்டிற்கு 100வது ஆளாக அடமண்ட் ஐயாசாமி என்பவரை அழைத்து வருகிறான் அவரது மகன் பத்து. ஐயாசாமி மற்றும் ரத்த சாமுண்டேஸ்வரி அங்களாம்மாவின் பக்தையான அவர் மனைவி ஆகியவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஆதிகேசவன் அந்த வீட்டை விற்று விடுகிறான். ஐயாசாமியே அந்த வீட்டுக்காரராக மாறும் நிலை ஏற்பட தன் வீட்டிலேயே மீண்டும் 10 கட்டளைக்கு உட்பட்டு வாடகைக்கு குடியேறுகிறார் ஆதிகேசவன்.
Read more from S.Ve. Shekher
Naattu Nadappu Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaathula Poo Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Uthai Vaankiya Aboorva Sigamani Rating: 0 out of 5 stars0 ratingsS. Ve. Shekher Bathilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Nadappu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsS.Ve. Shekher Bathilgal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsManaivigal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakaran Rating: 0 out of 5 stars0 ratingsMega Vasool Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Nee Raja Rating: 0 out of 5 stars0 ratingsPeriyappa Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Thambi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Aambalanga Samacharam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Maapley Periya Maapley Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Maathangal Ezhu Naadugal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Samy Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vantha Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsEllamey Thamash Thaan Rating: 0 out of 5 stars0 ratingsKaattula Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Ungal Choice Rating: 0 out of 5 stars0 ratingsOne More Exorcist Rating: 0 out of 5 stars0 ratingsYaamirukka Bayam Yen? Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsThathu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsInimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsEllarum Vaanga Rating: 0 out of 5 stars0 ratingsHalwa Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Sontha Veedu Vadagai Veedagirathu
Related ebooks
Kannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathathil Mangathaa Rating: 0 out of 5 stars0 ratingsOne More Exorcist Rating: 0 out of 5 stars0 ratingsKaattula Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsInimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Nee Raja Rating: 0 out of 5 stars0 ratingsThathu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsEllamey Thamash Thaan Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Crazy Thieves In Palavakkam Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Aambalanga Samacharam Rating: 0 out of 5 stars0 ratingsYaamirukka Bayam Yen? Rating: 0 out of 5 stars0 ratingsPen Paathal Oru Pethal Rating: 0 out of 5 stars0 ratings'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsSaatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsSarithayanam Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakaran Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Periya Thambi Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsReady Joot Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maamiyar Rating: 0 out of 5 stars0 ratingsEllam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oru Sontha Veedu Vadagai Veedagirathu
0 ratings0 reviews
Book preview
Oru Sontha Veedu Vadagai Veedagirathu - S.Ve. Shekher
https://www.pustaka.co.in
நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்
ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
Nadagapriya-Win S.Ve. Shekher-In
Oru Sontha Veedu Vadagai Veedagirathu
(Tenant Commandments)
கதை, வசனம்,
கிரேஸி மோகன்
நாடகமாக்கம், ஸ்க்ரிப்ட் எடிட்டிங் & டைரக்ஷன்
S.Ve. சேகர்
தயாரிப்பு
S.Ve. சேகர், சுந்தா
For more books
http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
காட்சி - 1
காட்சி - 2
காட்சி - 3
காட்சி - 4
காட்சி - 5
காட்சி - 6
காட்சி - 7
காட்சி - 8
காட்சி - 9
காட்சி - 10
காட்சி - 11
காட்சி - 12
சேகரின் பலம் - பொறுப்பின்மை
வருடம் 1957, நான் எழுதி, எங்களுடைய விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் ‘இஃப் ஐ கெட் இட்’ என்ற நாடகத்தை அரங்கேற்றியது. நாடகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை டைரக்ட் செய்தவர்கள் இருவர். ஒருவர் காலம் சென்ற சாம்பு நடராஜன் அவர்கள். அவருடன் சேர்ந்து அந்த நாடகத்தை மிகப்பெரிய வெற்றியாக உருவாக்கித் தந்த மற்றொரு டைரக்டர் எஸ்.வி. வெங்கட்ராமன். சேகரின் தந்தை.
இப்படி சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் தந்தை கையினால் குட்டுப்பட்ட எனக்கு அவருடைய மகனைப் பற்றி எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எஸ்.வி. சேகர் தன்னுடைய 17 வருட நாடக மேடை வாழ்க்கையில், இதுவரை 3000 முறை மேடை ஏறியிருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. அதுவும் இப்போதெல்லாம் மேடை நாடகங்களுக்கு மவுசு குறைந்திருக்கின்றது. ஆனால், முன்பு போலவே இப்போதும் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் மிகச் சிலரில் சேகரும் ஒருவர். அதுவும் 17 வருடங்களாகத் தொடர்ந்து நகைச்சுவை நாடகங்களையே நடத்தி, அதில் வெற்றி கண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.
நகைச்சுவை மிகவும் எளிதில் க்ளிக் ஆகக்கூடியது. ஆனால் அதே சமயத்தில் மிகவும் விரைவில் அலுத்துவிடக் கூடியது. அந்த அலுப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பல நகைச்சுவை நாடகங்களுக்கு இடையே, ஒரு சீரியஸ் நாடகத்தையும் போட வேண்டும். பிறகு மீண்டும் நகைச்சுவை நாடகத்தை போடும்போது, அதற்கு ஒரு விசேஷமான எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிட்டும் என்று ஒரு முறை நான் எஸ்.வி. சேகரிடம் சொன்னேன். நல்லவேளை, சேகர் என்னுடைய யோசனையைக் கேட்கவில்லை. சீரியஸ் நாடகமும் தப்பியது. சேகரும் தப்பித்தார்.
சேகரிடம் ஒரு இயல்பான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சாதாரணமாக பேசும் போது கூட, சேகரிடம் நகைச்சுவை, தன்னையும் அறியாமல் வந்து விழுகிறது. இது ஒரு கிஃப்ட். இதனால்தான் அவருடைய நடிப்பில் அலுப்பு தட்டுவதில்லை. சாதாரணமாக, நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு பலவீனம் உண்டு, எப்படியாவது எல்லாரையும் சிரிக்க வைத்து விட வேண்டும் என்பதற்காக, படாதபாடு படுவார்கள். முகத்தை அஷ்ட கோணல் ஆக்கிக் கொள்வார்கள். அங்க சேஷ்டைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் சேகருக்கு இதெல்லாம் தேவைப்படுவதில்லை. சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சுலபமாக நடிக்கிறார். அது எல்லோரையும் கவருகிறது. இதற்கு அவருடைய இயற்கையான, இயல்பான நகைச்சுவை உணர்வுதான் காரணம்.
மேடையில் இவ்வளவு வெற்றிகளைச் சந்தித்தும் சேகருக்கு சற்றும் தலைகிறுக்கு வரவில்லை. சினிமாவிலும்கூட வேறு யாருடைய ஸ்டைலையும் காப்பியடிக்காமல், தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலமே ஒரு முக்கிய இடத்தை சேகர் பெற்றிருக்கிறார். மேடையாகட்டும், திரையாகட்டும் - அவருடைய அணுகுமுறையில் ஒரு பொறுப்பின்மை தெரிகிறது. என்னைக் கேட்டால், இதுவே அவருடைய பலம் என்று நான் கூறுவேன். ஏதோ தன்னால்தான் கலை உலகமே மறுவாழ்வு பெறப்போகிறது என்ற கற்பனையில் வீழ்ந்து, தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி, நாடகம் என்ற பெயரில் ஒரு சித்ரவதையை மக்கள் மீது திணிப்பதில்லை அவர். சோதனை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நாடக ரசிகர்களை வேதனைப்படுத்துவதில்லை. நான் ஒரு என்டர்டெய்னர் என வெளிப்படையாகச் சொல்லி, மேடைக்கு வருகிறார். அந்தப் பணியில் தொடர்ந்து வெற்றிகளையும் பெறுகிறார்.
இயல்பான நகைச்சுவை நடிகர், கல்மிஷமில்லாத நண்பர், விரும்பத்தக்க மனிதர், எஸ்.வி. சேகர். அவர் ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யப் போவதாகக் கேள்விப்படுகிறேன். அந்த முயற்சியிலும் அவருடைய வெற்றிகள் தொடர் கடவுள் அருள் புரியட்டும்.
-சோ
(3000-ஆவது நாடக விழா மலரிலிருந்து)
சமர்ப்பணம்
ஒரு நாடகம் வெற்றி அடைவதற்கு அதனுடைய கதை, காட்சி அமைப்பு, நடிகர்களின் நடிப்பு இவற்றுடன் மிக முக்கியமானது மேடை நிர்வாகம். ஒவ்வொரு காட்சியின் இடையில் இருட்டில் வீட்டை ரோடாகவும், ரோட்டை கோர்ட்டாகவும் மாற்ற வேண்டும். அதுவும் மிகக்குறைந்த இடைவெளியில். - 10 அல்லது 20 வினாடிகளுக்குள். அந்த சிறப்பான மேடை நிர்வாகத்தை நான் கற்றுக் கொண்டது என்னுடைய சித்தப்பா எஸ்.வி. சங்கரன், அவர்களிடம்தான். திரு. சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பின் மேடை நிர்வாகியாக 40 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தமிழ் நாடக மேடையில் மிகச் சிறந்த (Prompter) பிராம்டர் யார் என்று கேட்டால் திரு. எஸ்.வி. சங்கரன் பெயர்தான் முதலில் வரும். சங்கரன் வந்தாச்சா - நாம டயலாக் படிக்காட்டிக்கூட சைடுலேயிருந்து சொல்ல வேண்டிய டயலாக் எல்லாத்தையும் சரியா எடுத்துக் குடுத்துவான்.
இது சோவின் குழுவில் உள்ள அனைவரும் நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் சொல்லும் வார்த்தைகள். சிறுவயதில் போலியோவினால் ஒரு கால் பாதிக்கப்பட்டாலும், தன்னம்பிக்கையுடன், தன் சுயமுயற்சியால் - வாழ்க்கையில் நல்ல நிலமைக்கு உயர்ந்தவர். என் தாய் தந்தையர் சுமார் 5 வருடங்கள் இலங்கையில் இருந்தபோது நான் ஓரளவிற்காவது நன்றாக படித்தேன் என்றால் அது என் சித்தப்பா எஸ்.வி. சங்கரன் அவர்களின் கண்டிப்பான அணுகுமுறைதான் காரணம். இன்று எங்களின் குடும்பத்தில் தந்தைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் என் சித்தப்பா எஸ்.வி. சங்கரனுக்கும் சித்தி பாலா சங்கரனுக்கும் இந்த நாடகத்தை சமர்ப்பிக்கின்றேன்.
சிரிப்பு
மனிதன் மட்டுமே
அர்த்தப் படுத்திக் கொண்ட
அபூர்வ செய்தி
நீ
(மூ) ஆயிரம் முறை
எங்களை சிரிக்க வைத்த
(வைக்கும்)
அதிசய சிகாமணி
நகைச்சுவையால்
நாட்டுக்கு சேதி சொன்னார்
கலைவாணர் – நீயோ
நகைச்சுவைக்குக் குடும்பத்தில்
பெரியதம்பி – ஆனால்
வால்பையன்
மாவடுக்குப் பதிலாக
மசக்கையிலே
‘நைட் ராக்சைடை’த் தின்றாரோ
பாலூட்டும் பருவத்தில்
சிரிப்பூட்டி வளர்த்தாரோ
உந்தன் தாய்
கடிகாரம் துரத்தும்
காலத்தின் கெடுபிடியில்
பிரச்னைகளின் அழுத்தத்தில்
சிரிக்க மறந்து போயினர்
சமானியர்
இவர்களோடு
நம் பிரதமரையும் சிரிக்க
வைத்தால்
தேசம் உங்களை வாழ்த்தும்
நாடகப்பிரியா மேல்
நம்பிக்கை நிறைய உண்டு
எதிராளி பேசுவதற்கு
முன்பாக
எதையாவது பேசி – நிறுத்தி
எங்களை சிரிக்க வைக்கும்
எஸ்.வி. சேகர்
விதையாகி - மரமாகி -
விருட்சமாக வாழ்த்துக்கள்
நாடகத்தைப் பிரியாத
நாடகப் பிரியாவும்
நகைச்சுவைத் திருடனும்
ஆயிரம் பிறை காண
வேணும் – மேடை
பல்லாயிரம் முறை ஏற
வேணும்.
என்றென்றும் ப்ரியத்துடன்
தாயன்
(தயாளன் - பாலன்)
இந்திய அறிவியல் கூடம், பெங்களூர்.
காட்சி - 1
இடம்: ஆதிகேசவன் வீடு
பாத்திரங்கள்: பரமசிவம், சங்கரன், பத்மனாபன்
(பரமசிவம் உள்ளே வருகிறார்)
பரம: ஆண்டவா எல்லாரையும் நல்லபடியா வைப்பா. யோவ் சங்கரா! உள்ள வாய்யா! (திரும்பி) சங்கரா தைரியமா வா...
(நாய் குரைக்கும் சத்தம்)
(சாது சங்கரன் ஜிப்பா கிழிந்து தலைவிரி கோலமாக உள்ளே வருகிறான்)
சங்க: (உள்ளே வந்து) யோவ் பரமசிவம் – அறிவிருக்கா உனக்கு - நீபாட்டுக்கு விடுவிடுன்னு உள்ளே வந்துட்டே - இந்த வீட்டுல நாய் வளக்கறதை சொல்லாம, பிடுங்கி எடுத்துடுச்சு.
பரம: அடடா... சாரி... நீ அதைப்பார்த்து ஓடியிருப்பே...