Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Periya Thambi
Periya Thambi
Periya Thambi
Ebook107 pages38 minutes

Periya Thambi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரே மாதிரியான கிராமக் கதையுள்ள தமிழ் படங்களின் நையாண்டியே. இந்நாடகம், மாமன் திருகாணியை பெரியதம்பிக்கே கல்யாணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார். பெரியதம்பியின் பெரியதம்பிக்காக அவன் ஊதிக் கொடுத்த பலூனையும், தாலியையும் வைத்துக் கொண்டு காத்திருக்கும் தெருப்புழுதியை விட்டு அவள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறான். அதைக் கண்டிக்க பஞ்சாயத்தை அப்பா பெரிய பண்ணை. திருகாணியை சகோதரியாக நினைக்கும் பெரியதம்பி அப்பான் கூட்டுகிறார்கள். பெரியதம்பி தந்திரமாக கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். பட்டணத்தில் விதை என்ற பெண் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கூற அவளுக்கு பயந்து பெரியதம்பி வாத்தியார் வேடத்தில் கிராமத்துக்கு வருகிறான். அவனைத் தொடர்ந்து வீணா, அவன் வாயாலேயே பெரியதம்பி தான் வேடம் போட்டான் என்று கூற வைத்து அவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.

Languageதமிழ்
Release dateDec 7, 2021
ISBN6580148907551
Periya Thambi

Read more from S.Ve. Shekher

Related to Periya Thambi

Related ebooks

Related categories

Reviews for Periya Thambi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Periya Thambi - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    பெரிய தம்பி

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Periya Thambi

    வசனம்

    வெங்கட்

    கதை, நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    காட்சி 16

    காட்சி 17

    காட்சி 18

    காட்சி 19

    காட்சி 20

    காட்சி 21

    காட்சி 22

    காட்சி 23

    காட்சி 24

    அன்று அவன் என் ரசிகன் இன்று அவருக்கு நான் ரசிகன்

    பள்ளிக்கூடத்தில் என்னுடன் ஒரு பால்காரப் பையன் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியர் தமிழில் பசு, ஆகாயம் அல்லது வெளிநாடு - என ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னார்.

    அந்த பால்காரப் பையன் பசுவிற்கு நான்கு கால்களும், ஒரு வாலும், வாலின் நுனியில் முடியும் இருக்கும், இரண்டு கொம்புகளும், நடுவில் திமிலும் இருக்கும், பசு பால் கொடுக்கும் என்று எழுதி நிறைய மார்க் வாங்கிவிட்டான்.

    அடுத்தமுறை ஆசிரியர் ரயில் நிலையம், தென்னை மரம், நகப்பூச்சு இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்ல அந்தப் பால்காரப் பையன் மறுபடியும் பசுவினைப் பற்றிய விவரங்களையே எழுதிவிட்டு, அப்படிப்பட்ட பசுவை தென்னை மரத்தின் நிழலில் கட்டி வைப்பார்கள் என எழுதி மீண்டும் மதிப்பெண்கள் பெற்றுவிட்டான்.

    அதனால் அந்த ஆசிரியர் பால்காரப் பையனுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை கட்டுரை எழுத வைக்க நினைத்து புஸ்தகம், போஸ்டர் அல்லது வெளிநாட்டு கார் என்ற ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார்.

    பால்காரப் பையனோ மீண்டும் பசுவை பற்றிய விவரங்களையே எழுதிவிட்டு, அப்படிப்பட்ட பசுக்கள் விளம்பரத்துக்காக தெரு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அதில் தடவப்பட்டுள்ள பசைக்காக தின்று விடுகின்றன என்று எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்று விட்டான்.

    இப்படி ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தவனே வெற்றி பெற முடிந்தது என்றால், எல்லா விஷயங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்ற எஸ். வி. சேகர் இந்த அளவு வாழ்க்கையில் வெற்றி பெற்று வளர்ந்திருப்பது ஆச்சரியமான விஷயமில்லை.

    எந்த ஒரு அரங்கமானாலும் சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாக வசனங்களை டயமிங்கில் பேசி, ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவர்களை சிரிப்பலையில் மூழ்க வைப்பது எஸ்.வி, சேகருக்குக் கை வந்த கலை.

    அன்று முதல் இன்று வரை எனது ரசிகனாக இருக்கும் எஸ்.வி. சேகருக்கு, இன்று (என்றும்) நான் ரசிகன்.

    அவர் மேலும், மேலும் பல வெற்றிகளை பெற ஆண்டவனை வேண்டி, பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

    - நாகேஷ்

    சமர்ப்பணம்

    1992-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி என் நண்பர் ஒருவர் என்னை திரு. குமார் என்பவரின் சுகர்நாடி ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

    என் வாழ்க்கையின் திருப்புமுனையான நாள் அது. வேதவியாசரின் மகனும் பிரம்மாவின் வம்சத்தில் உதித்த ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷியின் நாடியின் மூலமாக அவருடைய சீடனானேன். திருப்பதி வெங்கடாஜலபதிக்குத் திருமணம் செய்து வைத்து குபேரனிடமிருந்து பணம் வாங்கிக் கொடுத்தவர் ஸ்ரீ சுகப் பிரம்ம மகரிஷி. பாகவதத்தை அருளியவர். கிளி முகத்தைக் கொண்டவர். சுகர், மார்க்கண்டேயருக்கு அருளியதுதான் ஸ்ரீ சுகர் நாடி ஜோதிடம்.

    நாடியின் மூலமாக ஸ்ரீ சுகரின் தொடர்பு கிடைத்த பின் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏற்றங்களாக மட்டுமே உள்ளது.

    அந்த தெய்வத்திற்கு நான் தமிழ்நாட்டில், சென்னை மத்திய கைலாஷ், சேலம் சுகவனேஸ்வரர் கோயில் மற்றும் மதுரை அழகர் கோயில் செல்லும் பாதையில் உள்ள சூர்யா நகர் முத்தப்பசாமி கோவில் ஆகிய இடங்களில் சந்நிதி கட்டியுள்ளேன். If God be with us, who can be against us, 'கடவுள் நம்மிடம் இருக்கும்வரை நமக்கு எதிரிகள் கிடையாது' என்பதை எனக்கு ஒவ்வொரு வினாடியும் நிரூபித்து வருபவர். ஸ்ரீ சுகருடைய தொடர்புக்குப் பிறகு அவருடைய ஆசியுடன் என் வாழ்வில் ஏற்பட்ட உயர்வுகளை என் நண்பர்கள் அறிவார்கள்.

    மாதா, பிதா, குரு, தெய்வத்திற்கு என் படைப்புக்கள் அனைத்தும் சமர்ப்பணம் என்றாலும் இந்தப் பெரிய தம்பியை ஸ்ரீ சுகர் மார்க்கண்டேயரின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

    காட்சி 1

    இடம்: பெரிய பண்ணை வீடு

    பெ. பண்ணை: ஆத்தா எல்லாரையும் நல்லபடியா வை. ஏ புள்ள கருப்பாயி...

    கருப்பாயி: ஏங்க கூப்பிட்டிங்களா...

    பெ. பண்ணை:

    Enjoying the preview?
    Page 1 of 1