Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pichu Nee Jeichutte
Pichu Nee Jeichutte
Pichu Nee Jeichutte
Ebook107 pages37 minutes

Pichu Nee Jeichutte

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த சிறுகதைத் தொகுதி வெளியிடலாமா என்று பிரசுரமான சிறுகதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கையில் அடுத்தடுத்து நகைச்சுவைச் சிறு கதைகளாகத் தட்டுப்பட 'அட! ஓரு நகைச்சுவை சிறுகதைத் தொகுதியே போட்டுவிடலாம் போலிருக்கிறதே' என்ற எண்ணம் உதயமாயிற்று. இதைப் படிப்பவர்கள் சிரித்து மகிழ்வார்கள் என்ற உத்திரவாதத்தை தன் அணிந்துரையில் மிக 'ஜாலி'யாகத் தருபவர் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நகைச்சுவை எழுத்தாளர் திரு ஜே. எஸ்.ராகவன் அவர்கள்.

மிகக் குறைந்த அவகாசத்தில் ஒரு அணிகலனைப் போல் ஜொலிக்கும் அணிந்துரையை அளித்துள்ள திரு ஜே.எஸ்.ராகவன் அவர்களுக்கும் (வேறு வழியே இல்லாமல்!) இதைப் படித்துச் சிரித்து மகிழப் போகும் உங்கள் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி!

- ரேவதி பாலு.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128704662
Pichu Nee Jeichutte

Read more from Revathy Balu

Related to Pichu Nee Jeichutte

Related ebooks

Related categories

Reviews for Pichu Nee Jeichutte

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pichu Nee Jeichutte - Revathy Balu

    http://www.pustaka.co.in

    பிச்சு நீ ஜெயிச்சுட்டே

    நகைச்சுவை சிறுகதைகள்

    Pichu Nee Jeichutte

    Nagaichuvai Kathaigal

    Author:

    ரேவதி பாலு

    Revathy Balu

    For more books

    http://pustaka.co.in/home/author/revathy-balu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. பிச்சு நீ ஜெயிச்சுட்டே

    காட்சி - 1

    காட்சி -2

    காட்சி - 3

    2. (மன்) மதனைத் துரத்திய கரும்பு

    3. ராசி நல்ல ராசி

    4. புதுக் கதாசிரியரும் பழைய மசாலா படமும்

    5. வீடு வாங்கலையோ வீடு!

    6. 'சோமு! எங்களை மன்னித்துவிடு!’

    7. மாப்பிள்ளையும் மஹாவிஷ்ணுவும்

    8. திரும்பி வராத கதை

    9. விஷுக்கணி கண்டல்லோ கண்டல்லோ

    10. வீட்டு மிருகங்கள்

    11. கஜ தானம்!

    12. அப்பாவின் ஆஸ்தி

    அணிந்துரை

    சீனு உன்னோட தலை வலி எப்படிடா இருக்கு?

    உள்ளே சமையல் பண்ணின்டு இருக்கு!

    காலம் காலமாக மனைவியை இவ்வாறு கிண்டலடித்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு அந்த ‘தலைவலி' இல்லாவிட்டால் ‘திருகுவலி' வந்துவிடும் என்று உள்ளூரத் தெரிந்திருக்கும் இருந்தாலும் பெண்களிடம் நகைச்சுவை உணர்வு குறைவு என்கிற அனுமானத்துடன் அனுமாராகத் தங்களை உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வைத்துக் கொள்வது சில சமயங்களில் ஆபத்தாகிவிடும்.

    நம்ம உஷாவுக்கு அழகா, புத்திசாலியா இருக்கிற பையன் வரட்டும்னு வெயிட் பண்ணின்டு இருக்கேன்டி.

    அடடா! எங்கப்பாக்கு இந்த மாதிரி நல்ல புத்தி வராம போயிடுச்சே! பெண்கள் தொடமுடியாத டிராப் ஷாட்டாகத் திருப்பி அடித்து எதிராளியை ஆடும் களத்தில் திணறடித்து விடுவார்கள். இருப்பினும் நகைச்சுவையாகப் பேசுவது எளிது. தும்மல் போல, ஹை - பவர் அதிர்வேட்டு சத்தத்துடன் வெளிப்பட்டுவிடும். சில ஆண்கள் நகைச்சுவை உணர்வுள்ள பெண்களைத் தேடுவதே மனைவியாவது ஒரு மரியாதைக்குத் தன் ஜோக்குகளுக்காகச் சிரிப்பாளே என்கிற எதிர்ப்பார்ப்புடன் தான். ஆனால் நகைச்சுவையாக எழுதுவது மற்றும் அவ்வாறு எழுதிய எழுத்தால் படிப்பவர்களைத் துயர் விட்டு, வாய்விட்டு கடகடவென்று சிரிக்க வைப்பது - அட வேண்டாமய்யா- குறைந்த பட்சம் ஒரு இரண்டு சென்டி மீட்டர் நீளப் புன்முறுவலாவது பூக்க வைப்பது மிகக் கஷ்டம். தூய கூவம் மணக்கும் சென்னை மொழியில் சொல்ல வேண்டும் என்றால் 'படா பேஜார்பா'!

    'கொட்டைப் பாக்கைப் பிழிந்து பாதாம் கீர் எடுப்பதற்குச் சமம்' என்று கல்கி அவர்களே பெருமூச்சு விட்டுப் பதிவு செய்து இருக்கிறார்.

    காகித நகைச்சுவை என்கிற ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டால் உள்ளே இருக்கும் கவலைகள் எனும் கரிய வௌவால்கள் சிறகடித்துப் பறந்து ஓடிவிடும் (சிக்மன்ட் ஃபிராய்டு), என்னிடம் நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் நான் எப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பேன் (மகாத்மா காந்தி), நகைச்சுவை என்பது ஒருவர் அணிய வேண்டிய கட்டாய உடை (ஜே. எஸ்.ஆர்) என்று மாமலைகளிலிருந்து மணல் மேடுவரை பலர் சொல்லி இருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    இது இவ்வாறு இருக்கையில், முழு நேர அலுவலகர் மற்றும் முழு நேர குடும்பத் தலைவியாகத் திகழும் ஒருவர் எழுத்தில் ஆர்வம் கொண்டு தன்னுடைய எண்ணங்களைப் பதிவு செய்து வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. பாராட்டப் பட வேண்டியது.

    திருமதி ரேவதி பாலுவின் இந்தத் தொகுப்பே ஏறக்குறைய ஓரு விஷக்கணியாக அமைந்து இருக்கிறது. கரும்பு, ராசி, வீடு, யானை என்ற மங்கலான விஷயங்களை மையமாக வைத்து, அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் ஊடே ஒரு விஷக் கண்ணாடியாகக் காட்டி இருக்கிறார்.

    அங்கங்கே பளிச்சிடும் ருசியான நகைச்சுவைக் கணிகளில் சில:

    தினம் அவன் மாலை வீடு திரும்பும்போது கம்பெனி அவன் முதுகில் உப்பு மூட்டை ஏறிக்கொண்டு கூடவே வந்து விடும்.

    காலையில் எழுந்து வாயில் டூத் பிரஷ்ஷுடன் ஹிந்துவை கையில் எடுக்கக் கூட முடியாத சோம்பேறித் தனத்தோடு, நின்ற வாக்கிலேயே உடம்பை வளைத்து, தலைப்புச் செய்திகளைப் படிக்க முயன்று கொண்டிருந்த சின்னண்ணா...

    போஸ்ட் ஆபீஸ் லெட்டர் பாக்ஸில் ஒரு தடவை போட்டு பத்திரிகை ஆபிசுக்குப் போய் அவர்கள் திருப்பியனுப்ப. போஸ்ட்மேன் நம் லெட்டர் பாக்ஸிலே போடறதுக்கு, பேசாம நீயே நேரா நம்ம லெட்டர் பாக்ஸிலே போட்டுலாம்னு தோணறதும்மா.

    கணவர், குழந்தைகள், அண்ணா, மன்னி, தாத்தா, பாட்டி என்று ஓரு குடும்ப சிலந்தி வலைக்குள் நகைச்சுவை நடைச் சித்திரங்களைப் பின்னுவது ஒரு மினி ஜாங்கிரி சுத்துவதைப் போல பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால் அந்த சுழற்சிக்குப் பயிற்சி வேண்டும்.

    திருமதி ரேவதி பாலு இதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

    சிறந்த இலக்கியவாதியான ரஸவாதியின் படைப்பான திருமதி ரேவதி பாலுவின் இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கடைசிக் கட்டுரையின் தலைப்பு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. பக்கங்களைப் புரட்டிப் பாருங்களேன். ‘அப்பாவின் ஆஸ்தி' என்றிருக்கும்.

    ஜே. எஸ். ராகவன்.

    என்னுரை

    அடுத்த சிறுகதைத் தொகுதி வெளியிடலாமா என்று பிரசுரமான சிறுகதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கையில் அடுத்தடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1