Perukku Oru Manaivi!
By Punithan
()
About this ebook
'பேருக்கு ஒரு மனைவி'யில் பாத்திரப் படைப்புகளில் கவனம் செலுத்தினேன். காயப்பட்ட மனங்கள், மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றன! இதிலே இன்ன காரணத்தால் இந்த பாத்திரம் இப்படி வக்கிரித்துப் போயிற்று என்று சந்தர்ப்ப சூழ்நிலையைப் படைத்தபோது மனசுக்கு சந்தோஷமாய் இருந்தது.
படிக்கும்போது, அந்த சந்தோஷம் உங்களையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
Read more from Punithan
Nenjukulley Vai Rating: 0 out of 5 stars0 ratingsAtho! Avan Thaan! Rating: 0 out of 5 stars0 ratingsKollathaan Ninaikirean Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthu Pochey! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pengalin Sneham Rating: 0 out of 5 stars0 ratings27 Adi + Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsAnaikka... Anaikka... Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumanaval Rating: 0 out of 5 stars0 ratingsIvar, Avaralla! Rating: 0 out of 5 stars0 ratingsKai Kotti Siriyaaro! Rating: 0 out of 5 stars0 ratingsKutty Natchathiram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Perukku Oru Manaivi!
Related ebooks
Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsIrappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla...! Rating: 4 out of 5 stars4/5Ayokyan Rating: 4 out of 5 stars4/5Kannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsNilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Kekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsMura Penn Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Madhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Paarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsEn Priya Preethikku Rating: 0 out of 5 stars0 ratingsNizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsOdi Vaa Penne…! Rating: 4 out of 5 stars4/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Pani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsGopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5
Reviews for Perukku Oru Manaivi!
0 ratings0 reviews
Book preview
Perukku Oru Manaivi! - Punithan
https://www.pustaka.co.in
பேருக்கு ஒரு மனைவி!
Perukku Oru Manaivi!
Author:
புனிதன்
Punithan
For more books
https://www.pustaka.co.in/home/author/punithan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
இதபாரு நிவேதாக்கா, நிஜமாத்தான் சொல்றேன். நான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன், கன்னான வரன் கைவசம் ரெடி,
என்றாள் சுசித்ரா. என் செல்லத் தங்கை. ‘எனக்கு வரனை ரொம்பப் பிடிச்சிருக்கு’ அப்போதுதான் ஆபீஸ்விட்டு வந்திருந்தாள் அவள்.
என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ‘அப்ப நீயே கட்டிக்க வேண்டியதுதானே?’ என்றேன்.
"ஊரில் இருக்கிறவங்க என்னை உயிரோட மென்னு துப்பிடுவாங்க. ‘பாத்தியா, அக்கா கன்னி கழியாம இருக்கிறா. தங்கச்சிக்காரி புருஷனுக்கு அலையறாள்’ன்னு என்னைப் பொரட்டிப்பொரட்டி எடுத்துடுவாங்க’ என்று வேடிக்கை மாதிரிச் சொன்னவள், நிஜமாகவே குரலை சீரியஸாக வைத்துக் கொண்டு, ‘அக்கா உனக்கோ எனக்கோ வயசாயிட்டுப் போகுதேன்னு கவலைப்படறதுக்குப் பெத்தவங்களும் இல்லை பொண்ணு கேட்டு வர்றதுக்குச் சொந்தக்காரங்களும் இல்லை. நம்ம எதிர்காலத்தை நாமதானே பார்த்துக்கணும்?’ என்று பேசியவாறே ஹவுஸ் கோட்டுக்கு மாறி, முகத்துக்குச் சோப்பு நுரையேற்றிக் கொண்டிருந்தாள்.
என்ன... என்ன ஆயிற்று இவளுக்கு இன்றைக்கு?
***
நான் டீச்சர் ட்ரெயினிங் முடித்து வருவதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர்களைப் போல் பெற்றவர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். ஆமாம், பாலம் பலத்த மழையால் இற்றுப் போயிருப்பது தெரியாமல் ரெயில் அதைக் கடக்க, முன்னால் நாலு பெட்டி, பின்னால் ஆறு பெட்டி மட்டும் கரையில் ஒட்டிக் கொண்டிருக்க, நடுவிலிருந்து இரண்டு பெட்டிகள் மட்டும் பிட்டுக்கொண்டு நுங்கும் நுரையுமாய்ப் பொங்கியோடும் கிருஷ்ணா ஆற்றுக்குள் இறங்கியதே, உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அந்த விபத்தில் கரையொதுங்கிய சடலங்களில் கணவனும் மனைவியுமாகக் கட்டிப்பிடித்துக்கொண்ட நிலையில் இருந்தவர்கள் என்று பலரது பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொண்டு, என் பொறுப்பில் ஓர் இரண்டுங்கெட்டான் தங்கையை ஒப்படைத்துவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.
அந்த மட்டுக்கும் ‘நாமிருவர். நமக்கு இருவர்’ என்ற அளவோடு நிறுத்திக்கொண்டார்களே, அதைச் சொல்லுங்கள்
என் அப்பா ரொம்பப் பொறுப்பானவர். தனக்கு இப்படியெல்லாம் நேரப் போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருக்குமோ என்னவோ ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ஏ.ஓ.வாக இருந்த அவர், வாலன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்டு, வந்த பணத்தில் ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் வாங்கிப் போட்டது போக, மிச்சமிருந்த பணத்தை வைத்து என்னைக் கரையேற்றப் போவதாய்த் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்தக் கிருஷ்ணா ஆற்றைவிட்டுக் கரையேறாமலே போய்ச் சேர்ந்துவிட்டார்.
அப்பா நல்ல ஆன்மீகவாதி. என்ன அழகான பேராய் வைத்தார் எனக்கு! நிவேதா! இறைவனுக்குப் படையல் நிவேதனம்.
அன்னை நிவேதிதா! அப்படியொரு பெண் துறவிபோல் நான் வாழவேண்டியிருக்கும் என்று அப்பாவுக்கு அப்படியொரு தீர்க்கதரிசனமா?
***
‘ஏய், நிவேதாக்கா, என்ன எங்கியோ முத்துக்குளிக்கப் பூட்டாப்பல கீது?’ என் மூடு மாற்ற இந்த வாய்க்கொழுப்பு சுசித்ரா இப்படி எஸ்டேட் பாஷையில் இறங்கிவிடுவாள்.
‘சரி, சரி. மூஞ்செல்லாம் கழுவியாச்சில்ல? வா, அடை பண்ணி வச்சிருக்கேன், முதல்ல அதை அடைச்சிக்க,’ என்று நானும் அவளைத் திசை மாற்ற முனைந்தேன்.
அவள் டிபன் சாப்பிடும் வேளைதான் ஆபீஸ் கலகலப்புக்களை அள்ளிவிடும் நேரம்.
‘அக்கா, கேளேன், இன்னிக்கு இந்தப் பி.கே. சார் என்ன பண்ணார் தெரியுமா?’ அடை ருசியைச் சுவைத்து உறிஞ்சுவதில் சொல்ல வரும் விஷயத்துக்கும் ருசி ஏற்றினாள்.
பி.கே. என்று அவள் செல்லமாய்க் குறிப்பிடும் சாரின் விரிவாக்கம் பிரேம்குமார். இந்த நபர் இவளுக்கு மேலதிகாரி. எந்த வகையில், எப்படி என்றெல்லாம் துருவுவதில்லை. இவள் பேச்சில் இந்தப் பி.கே. தோயாத நாளே இருக்க முடியாது. இவளுக்குத் தெரியாமல் இந்த நபரைப் பற்றி விசாரிக்கவேண்டும். இவளோடு அவருக்கு ஏதும் ‘இஷ்க்’ இருந்தால்...
‘கேளேன்,’ என்று தொடர்ந்தாள் அவள். இந்து மேட்ரிமோனியலுக்கு ஒரு மேட்டர் டிக்டேட் பண்றேன் எடுத்துக்கோன்னாரு.
‘மேட்ரிமோனியலுக்கும் ஆபீசுக்கும் என்ன சம்பந்தம்?’
‘அப்படி என்னால கேட்க முடியுமா? கேட்டாலும் வாயடைச்சுப் போறாப்ல எதுனா பதில் வச்சிருப்பாரு ரொம்ப இன்டலிஜெண்ட்.’
‘இருக்கட்டும், இருக்கட்டும். நீ விஷயத்தைச் சொல்லு.’
‘இங்கிலீஷ்ல சொன்னா புரிஞ்சுக்கக் கஷ்டப்படுவே தமிழ்லயே சொல்றனே...’
நான் அவள் தலையில் குட்டியதை, ‘அயாங்...’ என்று செல்லச் சிணுங்கலாய் வாங்கிக்கொண்டு, வாசிக்கும் தோரணையில் சொன்னாள், முப்பத்திரண்டு வயதான உறவினர் யாருமற்ற கம்பெனி எக்ஸிக்யூடிவ்வுக்கு மணமகள் தேவை. ஆதரவற்ற, அடக்கமான ஆசிரியை போன்றோர் விண்ணப்பிக்கவும்... எப்படி?
சுசித்ரா என்னை ஏற இறங்கப் பார்த்து பொருட்செறிவுடன் நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள். அப்படியா? இவள் எனக்கு வரன் பார்த்து வைத்திருக்கும் லட்சணம் இதுதானா? இல்லை ‘பக்கத்து இலைக்குப் பாயாஸம்’ என்பது போல் நோட்டம் பார்க்கும் உத்தியா?
‘வருகிற ஞாயிற்றுக்கிழமை அந்த வரி விளம்பரம் வரும் தானே? அந்த மனுஷனுக்கு ஏத்தாமாதிரி ஏதாவது நல்ல கிராக்கி மாட்டும். கவலைப்படாதே!’ என்று இடத்தைக் காலி