Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagiya Pengalin Sneham
Azhagiya Pengalin Sneham
Azhagiya Pengalin Sneham
Ebook144 pages54 minutes

Azhagiya Pengalin Sneham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரத்தினம் ஒரு இளமை தவழும் கல்லூரி பேராசிரியர். அவனின் வலையில் ஆயிரம் ரோஜாக்கள் விழும். அப்படி பூத்த பூவாக மலர்ந்த பெண் வசுமதி. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு ரத்தினத்திற்கு நிச்சயமாகிறாள் அகிலா. அவன் பழகிய பெண்களின் சிநேகத்தில் இவள் ஒரு புது மாதிரி. இத்தகைய சிநேகத்தில் வசுமதியின் நிலை என்ன? அகிலாவிற்கும் ரத்தினத்திற்கும் திருமணம் நடந்ததா? தொடர்ந்து காண்போம்...

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580152008267
Azhagiya Pengalin Sneham

Read more from Punithan

Related authors

Related to Azhagiya Pengalin Sneham

Related ebooks

Reviews for Azhagiya Pengalin Sneham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagiya Pengalin Sneham - Punithan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அழகிய பெண்களின் சினேகம்

    Azhagiya Pengalin Sneham

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    இப்ப எதுக்காக என்னைக் கிட்நாப் பண்ணிட்டுப் போறீங்க?

    காரில் இருந்த மூன்று பெண்களையும் நோக்கிச் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

    ‘இருபத்தெட்டு வயது வாலிபர். லெக்சரர். அதெலெடிக் பாடி, மூன்று கேர்ள் ஃப்ரண்ட்ஸ் சேர்ந்து ராத்திரி வேளையில் தள்ளிட்டுப் போறாங்கன்னா எதுக்காக இருக்கும், மிஸ்டர் ரத்தினம்!’ நளினி என் விலாவில் குத்திக் கண்ணைச் சிமிட்டினாள்.

    அவளுடைய உடம்பின் மேடு பள்ளங்களை, தோலின் மினுமினுப்பை ரசித்து, "நளி, உன் உடம்பு முழுக்க ஐஸ்கிரீமைத் தடவி அப்படியே ருசித்துச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது,’ என்று நான் பாராட்டுவதுண்டு.

    வலப்பக்கம் அவளும் இடப்பக்கம் சரோவுமாய் "என்னைப் பின் ஸீட்டில் ஸாண்ட்விச்சாக்கிக் கொண்டு இருந்தார்கள். இதமாக இருந்தது. ஸ்டெல்லா டிரைவர் ஸீட்டில்.

    வாராந்தரத் தேர்வு விடைத் தாள்கள் அழுக்கு மூட்டையாய்க் குவிந்திருந்தன. இரவு இரண்டு மணியானாலும் அத்தனையும் துவைத்து உலர்த்தித் தொலைத்து விடுவது என்று தீர்மானமாய் இருந்தேன். இரவு சாப்பாட்டுக்காக ஹாஸ்டலில் டைனிங் ஹால் பக்கம் போய்க் கொண்டிருந்த என்னை எதிர்பாராமல் இவர்கள் மடக்கிக் கொண்டுவந்து விட்டார்கள், ரௌடிகள்!

    ‘ஸாருக்கு ஏதோ நைட்கிளப் புரோக்ராம் இருந்திருக்கும் போலிருக்கிறது. கெடுத்துட்டோமா?’ தோளில்கையை ஊன்றிக்கொண்டு சரோ கேட்டாள்.

    புது லைட்ஹவுஸைக் கடக்கும்போது அந்த வெளிச்சத்தில் அவளது முன்னந்தலை முடி நெற்றியில் சுருண்டு ஆடுவது தெரிந்தது.

    கார் முழுக்க இன்ட்டிமேட் வாசனை. மல்லிகைப் பூ ஸாண்டல் டால்க்.

    ‘சரிதான். உங்களுக்குத் தெரியாமல் கிளப்பா? அப்படியே போனாலும் எனக்கு முன்னால் நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்களா?’

    ‘அதுக்கென்ன, போனால் போச்சு. மகாத்மாகாந்தி கூட வேகமாய் அங்கேதான் போயிட்டிருக்கார் போல் இருக்கு?’ என்றாள் நளினி.

    சிரித்துக்கொண்டே சிலையைக் கடந்தோம்.

    ஞாபகம் வந்தாற்போல் ஸ்டெல்லா வண்டியை நிறுத்தி வட்டமடித்து எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் திருப்பினாள்.

    ‘சொல்லப்போனா சாருக்கு நைட் கிளப் அது இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே?’ சரோ புதிர் போடுவதுபோல் பேசினாள்.

    அவள் எதற்காகச் சொல்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது. பேச்சை மாற்ற வேண்டும். கேட்டேன்.

    ‘இப்போ எங்கே போயிட்டிருக்கோம்?’

    அவர்கள் ரூட்டைவிட்டு விலகத் தயாராய் இல்லை. ‘இன்னிக்கு என்ன டேட்?’ சரோ கேட்டாள்.

    கீழ்ப் பித்தானை அழுத்தினேன், டி.ஜிட்டல் கடிகாரம் மின்னியது. ‘அக்டோபர் பத்தொன்பது.’

    ‘சரியாய்ப் பத்து நாளைக்கப்புறம் என்ன நடக்கும்?. ஸ்டெல்லா கேட்டாள்.’

    ஒன்றும் தெரியாதவன் போல், ‘சரியாய்ப் பத்து நாள் கழித்து என்ன நடக்கும்?’ என்றேன்.

    நளினி ஒரு கல்யாணப் பத்திரிகையை உருவிக் கொடுத்தாள். மார்பின் உஷ்ணம் அதில் பொதிந்திருந்தது.

    எனக்கு அப்போதுதான் ஞாபகம் வந்ததுபோல் காட்டிக்கொள்ளப் பார்த்தேன். இனிமேல் தப்ப முடியாது. சமாளித்தேன். ‘ஓ, அதுவா? முன்னாடியே உங்களிடம் சொல்லலாம்னுதான் பார்த்தேன். இன்விடேஷன் கைக்கு வந்ததும் ஒரு சர்ப்ரைஸாக் கொடுக்கலாம்னு...’

    சரோ நளினியைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.

    சரோதான் என்னுடைய நேரடி மாணவி. அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதியிலிருந்து மற்ற இருவரையும் அவள்தான் சினேகம் பிடித்துக் கொடுத்தாள்.

    ‘இப்ப என்ன ஆச்சு? அப்பா அம்மா கட்டாயத்துக்காக இது. அப்புறமும் ரத்தினம் ரத்தினம்தான்.’ மனப்பூர்வமாகச் சொன்னேன்.

    ‘எங்களுக்கு சந்தோஷம் சார், ரொம்ப சந்தோஷம்.’ சொல்லும்போதே நளினிக்குப் பூவிதழாய் உதடுகள் துடித்தன. ‘காலெஜ் மாகஸினுக்காகப் பிரெஸ்ஸுக்குப் போயிருந்தேன். மேசை மேலே இது இருந்தது.’

    பேர் அகிலா போலிருக்கு? என்றாள் சரோ.

    ‘ஆமாம்.’

    ‘என்ன படிச்சிருக்காப்பலே?’ ஸ்டெல்லா கேட்டாள்.

    ‘உங்களுக்கு மேட்ச்சா இருப்பாங்களா?’- நளினி.

    அனுபவப் பட்டவர்களுடனேயே இதுவரை பழகி வந்திருந்த எனக்குச் செடியிலிருக்கும் ரோஜா மலர் போலிருந்த அகிலாவைப் பார்த்ததுமே ஒரு புதுமை தெரிந்தது. அதை ருசிபார்க்கும் வாய்ப்புக்காகத்தான் சம்மதித்தேன். அதைப்பற்றி இவர்களிடம் சொல்லவில்லை.

    இதோ பாருங்க. அவ கிடக்கிறாள். அவளைப் பற்றிப் பேச இதுவா நேரம்? கொஞ்சம் பொறுத்துக்குங்க. அப்புறமா உங்களுக்கு டீடெய்லா எல்லாம் சொல்றேன்...

    கார் சோழாவில் நுழைந்தது.

    இன்னிக்கு உங்களுக்குப் பார்ட்டி கொடுக்கிறோம். ஸெண்ட் ஆஃப் மாதிரி. காரை நிறுத்தினாள் ஸ்டெல்லா. ஒரு விமானக் கம்பெனியில் ரிஸெப்ஷனிஸ்ட் அவள், சொந்த ஊர் கோவா.

    இறங்கினோம்.

    பார்ட்டி முடியும்போது இரவு மணி 11.40 என் பர்ஸைத் தொடவிடவில்லை. எனக்கு மனம் நெகிழ்ந்து போயிற்று.

    வசுமதியின் அப்பா செய்த துரோகத்தை நினைத்து நான் குமுறிக் கொண்டிருந்தேனே, ஒரு வகையில் அவர் செய்ததும் நன்மைக்குத்தான். இல்லாவிட்டால் இத்தனை ஒட்டுதல் உள்ள மூன்று அழகிய பெண்களின் சினேகம் கிடைத்திருக்குமா?

    ***

    வீட்டுவாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கிய போது, டீக்கடை ரேடியோவில் பிற்பகல் தமிழ்ச் செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

    வாசலுக்கு நேர் எதிரில் போட்டிருந்த கட்டிலில் வழக்கம்போல் சாய்ந்து கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து என் கையைப் பார்த்தார். பிறகு கடுகடுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

    சுத்த பத்தாம் பசலி. அவருக்கு எதிரில் சிகரெட் பிடித்தால் அவர் மானம் பறிபோய்விடுமாம். கிங்சைஸ் ஃபில்டர். அப்போதுதான் பற்றவைத்தது. அநியாயமாய்த் தூக்கியெறியும்படி ஆயிற்று.

    அவருக்கு, இருக்கிற பிள்ளையைக் காட்டிலும் இறந்துபோன பிள்ளைகளிடம்தான் பாசம் பீரிடும்.

    ‘எனக்கு ஒரே ஒரு பிள்ளை தான்னு என் தலையிலே எழுதியிருந்தா இவன் தொலைஞ்சிருக்கக் கூடாதா? அந்த மூணிலே ஒண்ணு தங்கியிருக்குமே?’ என்று அம்மாவிடம் அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். நான் கேட்க வேண்டும் என்பதற்காகவேகூட அவர் சொல்லியிருப்பார்.

    சமையல்கட்டுக்குள் நுழைந்து, ‘அம்மா! அம்மா!’ என்றேன். பதில் இல்லை.

    என்னமோ குடி முழுகிப் போய்விட்ட மாதிரி உடனே வரச்சொல்லி போன் பண்ணுகிறது. ஓடிவந்தால் இருக்கிறதில்லை. முணுமுணுத்தேன்.

    ‘ஒவ்வொருத்தரைப்போல அவ ஒண்ணும் ஊர் சுற்றப் போகவில்லை.’ அப்பா சீறினார். ‘இந்தத் தத்தாரித்தறுதலைங்க உருப்படணுமேன்னுதான், பெரம்பூர் எங்கே, வில்லிவாக்கம் எங்கேன்னு அலைஞ்சிட்டிருக்கா.’

    ‘நானா அலையச் சொன்னேன்? ‘பேப்பரிலே விளம்பரம் வந்திருக்கு, எழுதிப் போடுவோம்.’ என்கிறது பெண்ணைப் பார் என்கிறது. நிம்மதியா நான் படுசுதந்திரமா இருந்தேன், அதையும் கெடுத்து... பேசினால் வளரும். நான் போகிறேன்.’ திரும்பினேன்.

    அவர் அதட்டினார். ‘கல்யாணத்துக்கு நாலைஞ்சு நாள்தான் இருக்கு. சம்பந்தி வீட்டிலே அது இதுன்னு விவரம்கேட்டு அடிக்கடி வர்றாங்க. ஒவ்வொருவாட்டியும் துரைக்கு வெத்திலை பாக்குவச்சி அழைச்சிட்டிருக்கணுமோ?’

    சே! இவர் ஒரு பக்கம்...

    ‘ரத்தினம், வந்து ரொம்ப நேரமாச்சா? உட்கார் ஏதாவது சாப்பிட்டாயா?’ அம்மா வந்துவிட்டாள்.

    தோளில் தொங்கிய பிளாஸ்டிக் ஓயர் பை அவளே போட்டது புடைப்பாய்த் தெரிந்தது. முகத்தில் வேர்வை. ரொம்பத் தூரம் நடந்து வந்திருக்கலாம். என்னிடம் ஒப்புக்குக் கேட்டுவிட்டு அப்பாவிடம் போனாள்.

    அவருடைய காலுக்கு அணைப்பாய்த் தலையணையைக் கொடுத்தாள். ‘சம்பந்தி வீட்டிலே ரொம்ப நல்ல மாதிரி. கூட்டிப்போய்க் கல்யாண மண்டபத்தைக் காட்டினாங்க. பெரிசாவே இருக்கு. வெளியே வந்தப்ப ஒரு கூடைக்காரி வித்திட்டிருந்தா வாங்கிட்டு வந்தேன்.’

    ஒடு கறுத்த விளாம்பழம் ஒன்றைக் காதண்டை ஆட்டிப் பார்த்துவிட்டு உடைத்தாள். நாட்டுச் சர்க்க போட்டு ஒரு பாத்திரத்தில் பிசைந்தாள்.

    ‘ஏம்மா, நீ உன் கையாலாகாத வீட்டுக்காரருக்கு விளாம்பழம் பிசைந்து கொடுக்கிறதை வேடிக்கை பார்க்கத்தான் என்னை அவசரம் அவசரமாய் வரச் சொன்னாயா?’ என்றேன்.

    அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1