Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inimai Ninaivugal Thodarattume!
Inimai Ninaivugal Thodarattume!
Inimai Ninaivugal Thodarattume!
Ebook55 pages21 minutes

Inimai Ninaivugal Thodarattume!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நளினியை ஒரு கல்யாண ரிசப்ஷனில் முதன் முதல் சந்திக்கிறான் சுந்தர். மேடையில் அவள் பாடிய பாடலைப் பாராட்டுகிறான். நளினிக்கும் அவனைப் பிடிக்கும் போலிருந்தது. நடுவில் தேவகி என்ற பெண் போட்டியாக வருகிறாள். யார் இதில் வென்றார்கள். நாவலில் தெரிந்துவிடும்...

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580115208600
Inimai Ninaivugal Thodarattume!

Read more from Ananthasairam Rangarajan

Related to Inimai Ninaivugal Thodarattume!

Related ebooks

Reviews for Inimai Ninaivugal Thodarattume!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inimai Ninaivugal Thodarattume! - Ananthasairam Rangarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

    Inimai Ninaivugal Thodarattume!

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1.

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 1.

    இந்த ஆளை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டாள் பெங்களூர் ஜேபி நகர் முத்துராஜ் ஹாஸ்பிடல் நர்ஸ்.

    இல்ல சிஸ்டர்.. இவர் டாக்ஸியில் நான் போய்க்கொண்டிருந்தேன். அவ்வளவுதான் தெரியும். அவரையே பெயரைக் கேட்கலாம் என்றாள் நளினி. கொஞ்சம் பூசினபடி இருந்தாள். மஞ்சள் சுடிதாரில் பாந்தமாகத் தெரிந்தாள். கவலை தோய்ந்த முகத்தில் கொஞ்சம் படபடப்பு வந்தது. அடிக்கடி செல்போனில் நேரம் பார்த்தாள்.

    ஹாஸ்பிடல் உதவியாள் டிரைவரின் சட்டைப் பையில் இருந்த டிரைவிங் லைசன்சை எடுத்துப் பார்த்தான். அதை வாங்கிப் படித்தாள் நளினி.

    ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்த டிரைவர் தன் பெயர் நட்ராஜ் என்றான். தன் மனைவியின் செல்போன் நம்பரை முணுமுணுத்தான். அவன் மனைவியிடம் விவரம் சொன்னாள் நளினி. அவன் வீடு கோரமங்களாவில் இருந்தது. உடனே ஜேபி நகர் முத்துராஜ் மருத்துவமனைக்கு வரச்சொன்னாள்.

    உங்க பேரு அட்ரஸ் எல்லாம் குடுங்க. இந்த அப்ளிகேஷன்ல பூர்த்தி செய்து குடுங்க என நளினியிடம் ரிஸப்ஷனிஸ்ட் கேட்டாள்.

    நளினி அந்த அப்ளிகேஷனில் தன்னுடைய பதிவை எழுதினாள். நட்ராஜ்  டிரைவிங் லைசன்சை பார்த்து அவன் முகவரியை எழுதினாள்.

    முப்பதுகளின் இருந்தான் நட்ராஜ். அவன் தூங்கிப் பல நாட்கள் ஆகியிருக்கும். அந்தக் களைப்பு அவனிடம் இருந்தது. எப்போதும் ராத்திரி நேரச் சேவையைச் செய்தான். ஒரு பிரபல டாக்சி நிறுவனத்துடன் தன் காரை இணைத்துக் கொண்டிருந்தான்.

    ஒரு சக்கர நாற்காலியில் அவனைத் தள்ளிக்கொண்டு சிகிச்சை அறைக்கு விரைவாகப் போனார்கள்.

    நளினி ஆஸ்பத்திரிக்கு எப்படி வந்தாள்…

    நட்ராஜின் டாக்சியில் பெங்களூர் ஸிடி ரயில்வே ஸ்டேஷனுக்கு ஜேபி நகரிலிருந்து நளினி போய்க்கொண்டிருந்தாள். அப்போது இரவு மணி எட்டரை. ஏசி இல்லாமல் இருந்தும் சில்லிட்ட காற்று ஜன்னல் வழியாக வந்து அவள் கேசத்தை வருடியது. நட்ராஜ் மெதுவாகவே ஓட்டினான். டிராபிக் குறைந்திருந்தாலும் அவன் கார் இடவலமாகவும், குறுக்கும் நெடுக்குமாயும் சென்றதைக் கவனித்தாள் நளினி. அவன் குடித்துவிட்டு இருக்கிறானா என்ற கூட சந்தேகித்தாள். அவனுடன் பேச்சுக் கொடுத்தாள். அவன் சரியாகப் பதில் அளிக்காமல் கொஞ்ச தூரம்தான் ஓட்டினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1