Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam
Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam
Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam
Ebook87 pages29 minutes

Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ணர் ஒரு யாதவ அரசர். அர்ஜுனனும் ஓர் சத்திரியன். அதனால் கீதை ஏதோ ஒரு மன்னன் இன்னொரு மன்னனுக்குக் கொலை செய் என்று சொல்லுகிற மேலோட்டமாக பார்க்கும் நூல் அல்ல. நால்வகை வருணத்தவர்க்கும் அவர்களின் தர்மப்படி இயங்க அறிவுறுத்தும் அறிவுரையை அது தாங்கி நிற்கிறது. இந்த தர்மம் கீதை பிறந்த காலத்தில் ஜாதி வித்தியாசம் என்று கொள்ளப்படவில்லை. தலை முதல் பாதம் வரையில் எல்லா பாகங்களும் சமம் என்ற அடிப்படையில்தான் அவரவர் பிறப்பைச் சொன்னார்கள். பகவான் கிருஷ்ணர் படுத்துக்கொண்டிருக்கிறார். உதவி கேட்கப் போனபோது அர்ஜுனன் கிருஷ்ணரின் காலடியில்தான் நின்றிருந்தான். நமது பாரம்பர்யத்தில் பாதார விந்தம்தான் பெருமைமிக்கது. துரியோதனன் அவருடைய தலைமாட்டில் கர்வமாக உட்கார்ந்தான். எழுந்த கிருஷ்ணர் காலருகே இருந்த அர்ஜுனனைத்தான் முதலில் பார்க்கிறார். “நான் வேண்டுமா, என் படைகள் வேண்டுமா?’ எனக் கேட்கிறார். “நீ மட்டும் என் பக்கம் இரு” என்கிறான் பார்த்தன். அதனால்தான் அவர் பார்த்தசாரதி ஆனார். துரியோதனன் அவர் படைகளைப் பெற்றான்.

ஒருவன் நரன். இன்னொருவன் நாராயணன். இந்த இரண்டு பேரும் குருசேத்ர யுத்தகளத்தில் ஒருசேர இருந்தபோது…….பிறந்ததுதான் இந்த கீதை. அது சாதாரண மானிடருக்கு எவ்வாறு ஞானம் ஊட்டுகிறது எனப் பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580115207460
Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam

Read more from Ananthasairam Rangarajan

Related to Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam

Related ebooks

Reviews for Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    பகவத்கீதை அருளும் ஞான ரகஸ்யம்

    Bhagavadh Geethai Arulum Gnana Ragasyam

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. போர் மறுத்தல்

    2. சிறந்த அறிவு முக்கியம்

    3. பணிசெய்து கிடத்தல்

    4. ஞான நெருப்பு

    5. அர்ப்பணிக்கும் செயல்

    6. உண்மையான யோகி

    7. நானே எல்லாம்

    8. மறு உலகம்

    9. ஞானமும் விக்ஞானமும்

    10. பகவானின் வைபவங்கள்

    11. விஸ்வரூப தரிசனம்

    12. பக்தியே பிரதானம்

    13. பரமாத்மாவும் ப்ரக்ருதியும்

    14. மூன்று குணங்கள்

    15. புருஷோத்தமன் யார்

    16. ஆத்திகனும் நாத்திகனும்

    17. நம்பிக்கை கொள்

    18. சரணாகதி தத்துவம்

    முன்னுரை

    முதலில் மனித வடிவில் வந்த தெய்வமாம் எல்லாம் வல்ல பகவான் கிருஷ்ணர் திருவடி சரணம் என்று அவரைத் தொழுகிறேன். சரணாகதி தத்துவத்தைக் கூறுவதுதான் பகவத் கீதை. எல்லாம் பகவான் கிருஷ்ணரே என்பதுதான் அதன் சாராம்சம். மானுடக் கடமைகள் பற்றி சொல்லும் வேதம் என கீதையைச் சொல்லலாம்.

    பிரம்மா முதலிய தேவர்கள் வேதங்கள் முதலிய நூல்களையும், வியாச பகவான் அருளிய பாரதம் என்கிற நூலையும் அலசியபோது, பாரதம்தான் எல்லாவற்றையும் விட சிறப்பு மிகுந்தது என அறிந்தனர், அதனால்தான் அதற்கு மஹாபாரதம் என பெயரிடப்பட்டது. ஸ்ரீமான் மத்வாசாரியார் இந்நூலை ஐந்தாவது வேதம் எனப் போற்றுகிறார். இந்நூலில் விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை இருப்பதால்தான் மற்ற வேதங்களை விடவும் இது சிறப்பு வாய்ந்ததாகிறது.

    பகவத் கீதை எப்படி உயர்ந்த இடத்தைப். பிடித்தது? உலக மக்களின் எல்லா தேவைகளையும், அவர்களின் நன்மை-தீமைகளையும், கடமைகளையும் அது முன்னிறுத்துவதால்தான்.

    கிருஷ்ணர் ஒரு யாதவ அரசர். அர்ஜுனனும் ஓர் சத்திரியன். அதனால் கீதை ஏதோ ஒரு மன்னன் இன்னொரு மன்னனுக்குக் கொலை செய் என்று சொல்லுகிற மேலோட்டமாக பார்க்கும் நூல் அல்ல. நால்வகை வருணத்தவர்க்கும் அவர்களின் தர்மப்படி இயங்க அறிவுறுத்தும் அறிவுரையை அது தாங்கி நிற்கிறது. இந்த தர்மம் கீதை பிறந்த காலத்தில் ஜாதி வித்தியாசம் என்று கொள்ளப்படவில்லை. தலை முதல் பாதம் வரையில் எல்லா பாகங்களும் சமம் என்ற அடிப்படையில்தான் அவரவர் பிறப்பைச் சொன்னார்கள். பகவான் கிருஷ்ணர் படுத்துக்கொண்டிருக்கிறார். உதவி கேட்கப் போனபோது அர்ஜுனன் கிருஷ்ணரின் காலடியில்தான் நின்றிருந்தான். நமது பாரம்பர்யத்தில் பாதார விந்தம்தான் பெருமைமிக்கது. துரியோதனன் அவருடைய தலைமாட்டில் கர்வமாக உட்கார்ந்தான். எழுந்த கிருஷ்ணர் காலருகே இருந்த அர்ஜுனனைத்தான் முதலில் பார்க்கிறார். நான் வேண்டுமா, என் படைகள் வேண்டுமா?’ எனக் கேட்கிறார். நீ மட்டும் என் பக்கம் இரு" என்கிறான் பார்த்தன். அதனால்தான் அவர் பார்த்தசாரதி ஆனார். துரியோதனன் அவர் படைகளைப் பெற்றான்.

    ஒருவன் நரன். இன்னொருவன் நாராயணன். இந்த இரண்டு பேரும் குருசேத்ர யுத்தகளத்தில் ஒருசேர இருந்தபோது…….பிறந்ததுதான் இந்த கீதை. அது சாதாரண மானிடருக்கு எவ்வாறு ஞானம் ஊட்டுகிறது எனப் பார்ப்போம்.

    1. போர் மறுத்தல்

    போர்க்களத்தை நேரில் பார்க்கும் சக்தியை வியாசரால் அருளப்பட்ட சஞ்சயன் உட்கார்ந்திருக்கிறான்.. அவன் எதிரே மன்னர் திருதராஷ்டிரன் கைகளைப் பிசைந்தபடி அமர்ந்துள்ளார். அவருக்கு பலத்த சந்தேகம். தமது மகன் வெற்றி பெறுவானா என்று கலங்குகிறார். பாண்டவர்களுடன் போர் செய்ய வேண்டுமென்னும் நிலையை துரியோதனன் எடுத்தபோது பகவான் கிருஷ்ணரும் திருதராஷ்டிரனும் தடுக்க முனைந்து தோற்றுத்தான் போனார்கள். அவன் செய்யும் காரியங்களில் அவர் மனது ஒப்பவில்லையாயினும், மகன் பாசம் மனதில் எழுகிறது. சஞ்சயனிடம் அவன் கண்டதைக் கூறுமாறு சொல்கிறார்.

    சஞ்சயன் ஒரு காட்சியை நேரடியாகச் சொல்கிறவன். நம் காலத்திய ஊடக நெறியாளர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1