Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna Arjunan
Krishna Arjunan
Krishna Arjunan
Ebook101 pages37 minutes

Krishna Arjunan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ண அர்ஜுனன் பாலகுமாரன் கிருஷ்ணருக்கும், அர்ஜுனருக்கும் இடையே உள்ள நட்பின் உண்மையை, உன்னதத்தை ஆழத்தை உணர்த்தும் கதையே இது.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580156808780
Krishna Arjunan

Read more from Balakumaran

Related to Krishna Arjunan

Related ebooks

Reviews for Krishna Arjunan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna Arjunan - Balakumaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கிருஷ்ண அர்ஜுனன்

    Krishna Arjunan

    Author:

    பாலகுமாரன்

    Balakumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balakumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    மரியாதைக்குரிய

    பாலா அவர்களுக்கு அன்புடன் வேணு எழுதுவது. நலமறிந்தேன். நலமே. இம்முறை நாவல் டைம் தாமதமாய் தான் இங்கு (23ஆம் தேதி கிடைத்தது) ஒரு சிறு விஷயத்தை மிகசிறப்பாய் சொல்லி இருக்கிறீர்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. ஒரு சின்ன சந்தேகம் எனக்கு. "அர்ஜுனன் காமுகன். ஆனால் கிருஷ்ணர், அர்ஜுனரை ஒழுக்கத்தில் குறைவில்லாதவன் என்கிறாரே. இது சரியா?

    அந்த கரணம், மெல்ல ஒரு அம்பெடுத்து இவை இரண்டையும் போல் இந்நாவலும் அற்புதமாய் அமைந்திருக்கிறது.

    வெள்ளிக்கிழமை (அமாவாசை) அன்று நானும் ராஜ்குமாரும் தியான வகுப்பில் சேர்ந்துவிட்டோம். நானும் ராஜ்குமாரும் தியான வகுப்பில் சேர்ந்திருப்பதாய் சுவாமிஜிடம் சொன்னேன். எங்கே என்று கேட்டார். விபரம் சொன்னேன். வெரிகுட் என்றார். ராஜ்குமார் யார் என்று கேட்டார். எனது நண்பன் என்று சொன்னேன். எனக்கடுத்து ராஜ்குமார் உள்ளே போனபோது ‘ஆர் யூ ராஜ்குமார்?’ என்று கேட்டு மை ஃபாதர் ப்ளசஸ் சொன்னார். ராஜ்குமாருக்கு மிகுந்த சந்தோஷம்.

    தியானத்தின்போது ஒரு அமைதி ஏற்படுவதை அனுபவபூர்வமாய் உணர்கிறேன். அதற்குக் காரணமான உங்களுக்கு என் நன்றி. வேறு எதுவும் இங்கு சொல்லிக் கொள்ளும்படியான விசேஷம் இல்லை. அக்காக்கள், பாட்டியம்மா, கௌரி, சூரியா ஜெகன் அனைவருக்கும் என் அன்பு.

    மிக்க அன்புடன்

    வேணுகோபால்

    திருவண்ணாமலை

    என் இனிய பாலா!

    பலமுறை உங்களை நான் சுவைத்து...

    ஒரு சந்தேகம். மனதோர யுத்தம். நீங்கள் யார்?

    என் நிழலா! அண்டை வீட்டு அன்பரா.

    என் வாழ்வின் பல சம்பவங்கள், சம்பாஷணைகள் வார்த்தை மாறாமல் அப்படியே...

    உங்கள் எழுத்தில் ஓ... இதுதான் உங்கள் சூத்திரமா? ‘கிருஷ்ண அர்ஜுனன்’

    சமீபத்திய நாவல் மன்னிக்கவும், இதிகாசம் தன்னுள் ஒரு பகுதியை, அன்று கம்பனிடம் ‘மின்னியது’ போல் உங்களிடம் ஒளிர்கின்றது.

    அகம் புறம் கண்ணதாசன் பாட்டில் எளிமையாகி பாமரர்களையும் பாட வைத்தது.

    இன்று தாயுமானவர், சித்தர், அடியார்கள் வரிசையில் இதிகாசமும் இனிமை எளிமையாகிறது உங்கள் கைகளில்.

    ஒவ்வொருவனும் அர்ஜுனன் தன்னளவில்.

    ஒவ்வொருவனும் கிருஷ்ணன் பிறரளவில்

    நானும் அர்ஜுனனாய் பலமுறை, இதோ எழுதும் வரை, ஏன் நாளையும் தவிக்கிறேன், தவிப்பேன். என் தாய் – தந்கையர் தவிப்பில் தரப்பட்டவன் நான். விராட்டி என் உடலை மூடும் வரை விரக்தியும் வேதனையும் தவிப்பும்...

    எனக்கும் ஒரு கிருஷ்ணர் நட்பாய் நடமாடும் தெய்வமாய்... மாறுபட்ட அன்பாய்... மாலை நேரத்து மயக்கம் அல்ல. காலை நேரத்துக் கலக்கம்தான்.

    பாண்டவர்கள் குழப்பம் எனக்கும்...

    என் கிருஷ்ணர் எனக்கு யார்?

    உங்கள் பேனாவின் உரையாடலை நானும் என் கிருஷ்ணரும் பலமுறை...

    நான் அர்ஜுனனாய். அவர் கிருஷ்ணராய்...

    எனக்கு என் டைரியை மீண்டும் படிப்பது போல் இருந்தது.

    எஸ்.குமார்

    நகரவை ஆரம்பப்பள்ளி

    காளியம்மன் சன்னதி, நாகப்பட்டினம் 611001

    1

    உப்பரிகை விளிம்பில் வந்து நின்றதும் இருட்டில் ஒளிந்திருந்த குளிர்க்காற்று சட்டென்று அவனைத்தாக்கியது; அவன் மேலாடையைக் கலைத்தது. முகமும், மார்பும், புஜங்களும் கை விரல்களும், வயிறும், இடுப்பும் ஒருமுறை நடுங்கி அடங்கின. உடம்பின் அவஸ்தை தாங்காமல் மனசு அவனை உப்பிரிகையினின்று பின்னடையச் சொல்லிற்று. பெரிய மரக்கதவுகளை அழுந்தச் சாத்தி ஒட்டகக் கம்பளியையோ, மான் தோலையோ போர்த்திக்கொள்ளத் தூண்டியது. உடம்பு மனசாலும், மனசு உடம்பாலும் இழுக்கப்படும் விதத்தை அவன் உற்று கவனித்தான். அப்படித்தான் குளிரும். இது குளிர்காலம். குளிரை நொந்துகொள்ளாதே. எதிர்த்து நில், தாங்கு, இம்சைக்குப் பழகு, வேதனையை உள்வாங்கி அனுபவி. ‘இந்தக் குளிருக்கு அஞ்சமாட்டேன்’ என்று உரக்கப் பலமுறை சொல். இதில் உபத்திரவம் இல்லை. முதல் அம்புதான் வலிக்கும். அடுத்த அம்பு தைக்கும்போது முதல் அம்பின் வலி மறந்துவிடும். ‘இரண்டு, மூன்று’ என்று தொடர்ந்து அடிவாங்கும் போது எல்லா வலியும் மறந்து, அழித்தவனை அழிக்கும் ஆவேசம் புறப்படும். வலி இல்லாது போகும்.

    எதிரியின் அம்பும் இந்தக் குளிரும் ஒன்றே. இந்தக் குளிரைத் தாங்கு. அவன், மேலாடையை வீசி எறிந்துவிட்டு, குளிரை முரட்டுத்தனமாக ஏற்றான். உடம்பு நடுங்கியது. உஷ்ணத்திற்கு ஆவேசப்பட்டது. குளிர் அவனைத் தாக்கத்தாக்க அவனுக்குக் கோபம் வந்தது. இருட்டிலிருந்து ஒளிந்திருந்து தாக்கும் குளிரை எதிரியாய் நினைத்து ‘எங்கே?’ என்று தேடினான். அந்தத் தேடலுக்கு உடனே சிரித்தான்.

    கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொண்டு உஷ்ணப்படுத்தி கன்னக் கதுப்புகளில் வைத்துக்கொண்டான். நாண் இழுத்து, இழுத்துத் தழும்பேறிய கைகளிலிருந்து பிறக்க, உஷ்ணம் அவன் கன்னத்தில் சுகமாக இறங்கியது. உள்ளங்கைகளை வேகமாகத் தேய்த்துக்கொண்ட அசைவினால் உடம்பிலும் உஷ்ணம் பிறந்தது. குளிர் குறைந்தது. அதற்குள் உடம்பும் குளிருக்குப் பழக்கப்பட்டுவிட்டது. அவன், விறைப்புக்கு தோற்றுப்போனதால் இருட்டிலுள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1