Indira Soundarajan Sirukathaigal
5/5
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Vairam Vairam Vairam Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5
Related to Indira Soundarajan Sirukathaigal
Related ebooks
Nan Ramaseshan Vanthirukkiren Rating: 5 out of 5 stars5/5Maayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsPon Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsJenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsAbaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Kaadu Rating: 5 out of 5 stars5/5Enge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Gnaniyarin Kutti Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsCrime Sooravali Rating: 5 out of 5 stars5/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsKathaigal Vithaigal Rating: 0 out of 5 stars0 ratingsDevi Sridevi Rating: 0 out of 5 stars0 ratingsThanga Trisoolam Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsAaram Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Naan Santhithen Rating: 0 out of 5 stars0 ratingsOomai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kaattum Vazhkai Neri Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Aaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Maayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsBalakumaran Sirukathaigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Thupparikirar Rating: 0 out of 5 stars0 ratingsAshok Thupparigiran Rating: 0 out of 5 stars0 ratingsKaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Indira Soundarajan Sirukathaigal
1 rating0 reviews
Book preview
Indira Soundarajan Sirukathaigal - Indira Soundarajan
http://www.pustaka.co.in
இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள்
Indira Soundarajan Sirukathaigal
Author:
இந்திரா சௌந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பொய்களும், மெய்களும்!
2. மாப்பிள்ளை சார்
3. திசைகள்
4. 'மை'யில் கொஞ்சம் கறை!
5. ஸ்வப்னப்ரியா
6. ஆயிரம் அர்த்தங்கள்
7. சாயாத மனிதர்கள்!
8. சின்ன பாண்டி, பெரிய பாண்டி!
9. தாம்பத்தியம் என்பது
10. செலவில்லாத சந்தோஷங்கள்
11. தீபாவளி விடியல்
12.பொசசிவ் பூதம்
13. பாகீரதி... பாகீரதி.
14. அமானுஷ்யம்
15. நல்லதொரு குடும்பம்
16. பொங்கப் பிரசாதம்!
17. யாழினி
18. ரசவாதம்
19. கலவர நகரம்
20. மழையே... மழையே வா, வா!
21. காதல் கயிறு
22. ஒரு தந்திரக் கொலை
23. வினைகள்
24. காதல் நதி – 1
25. காதல் நதி -2
1. பொய்களும், மெய்களும்!
பசுமையான அந்தக் கிராமத்துக் கோயில் முன்னால் அந்தப் படகுக் கார் தேங்கி நின்றது. உள்ளேயிருந்து முட்டாக்கு போட்டபடி ஒரு இளம்பெண்ணும், கூடவே இன்னொரு பெண்ணும் இறங்கினார்கள். கார் டிரைவர் வெள்ளை யூனிஃபார்ம் வெள்ளைத் தொப்பி என்று அமர்க்களமாக இருந்தான்.
முட்டாக்கு போட்ட அந்தப் பொண்ணும் உடன் வந்த பெண்ணும் அந்தக் கோயிலுக்குள் நடந்தார்கள். அது ஒரு பழமையான சோழர்காலத்து சிவன் கோயில்...! ஏராளமான கல்தூண்கள் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அதில் பல தூண்கள் இடுப்பொடிந்த மாதிரி சாய்ந்து கிடந்தன. குறுக்கும் நெடுக்குமாய் குரங்குகளும் உலாவிக் கொண்டிருந்தன.
கோயிலில் கூட்டமில்லை.
முட்டாக்கு போட்ட அந்தப் பெண்ணும், உடன்வந்த பெண்ணும் நோட்டமிட்டபடியே சன்னதிக்குள் நுழைந்தார்கள். வௌவாய் கழிவு வாசம் தூக்கலாகவே இருந்தது. அப்பின மாதிரி இருட்டு வேறு. அதனாலேயே உள்ளே சன்னதியில் லிங்கம், தீபச்சுடர் ஒளியில் கொஞ்சம் பார்க்கும்படியாகத் தெரிந்தது.
தீப்தா. அங்க பார் சுவாமியை...
என்று உடன் வந்த பெண் அந்த முட்டாக்கு போட்ட பெண்ணுக்கு சுட்டிக்காட்டினாள். அவளும் கவனித்தாள். இருளில் கொஞ்சம் மெல்லத்தான் நடக்க முடிந்தது.
உள்ளே சன்னதியில் பெரிய குருக்கள் இல்லை. அவருக்குப் பதிலாக அவர் மகன் சங்கரன்தான் இருந்தான். அவருக்குப் பின் அவன்தான் கோயில் குருக்கள் பொறுப்பை ஏற்றாக வேண்டும். அந்த முட்டாக்குப் பெண் அவன் எதிரில் முட்டாக்கை விலக்கவும் லேசாக விக்கித்தான் அவன்.
நீங்க நடிகை தீப்தப்ரியா தானே?
என்று அவன் கேட்கவும் அவளும் ஆமோதித்தாள். அவனிடம் நம்பமுடியாத ஒரு படபடப்பு உருவாகத் தொடங்கிற்று.
இன்று பெரிதாக கோயில் ஊழியம் பார்க்க இளையவர்கள் விரும்புவதில்லை. இந்த சங்கரனும் ஐடி கம்பெனி வேலைக்கு காத்திருக்கும் ஒருவன்தான்! வேலை வரும் வரை உடல் நலமில்லாத அப்பா குருக்களுக்குப் பதிலாக பரம்பரை உரிமையோடு சன்னதிக்கு வந்திருக்கிறான்.
சங்கரனும் படபடப்பு குறையாமல் அர்ச்சனை எல்லாம் செய்து முடித்த நிலையில் அவளோடு மாமியின் உதவியுடன் போட்டோ எல்லாம் பிடித்துக்கொண்டான்.இதை இப்பவே ஃபேஸ்புக்ல போட்ருவேன்
என்று வழிந்தான்.
தீப்தா அதை எல்லாம் பெரிதாக ரசிக்கவில்லை.
ஜோசியர் ஒருவர்தான் அவளை இந்தக் கோயிலுக்குப் போய் 9 முறை பிரதட்சணம் செய்தால் உன் மனக்குறை தீரும் என்று கூறியிருந்தார்.
அதனாலேயே தீப்தாவும் வந்திருக்கிறாள்! இவளை ஒரு அரசியல்வாதி இரவு பகல் போன் செய்து மிரட்டிக்கொண்டே இருக்கிறான். தீப்தா ஒரு படத்தை வேறு எடுத்துத் தொலைத்துவிட்டாள். ஆகையால் அந்த அரசியல்வாதியை பகைக்கவும் முடியவில்லை. அவனை நெருங்கவும் முடியவில்லை. இருபத்திநாலு மணி நேரமும் ஒரு மனிதன் வெற்றிலையை மெல்லுவதோடு விஸ்கியை குடித்தபடியே இருந்தால் பன்றி கூட கிட்ட நெருங்க முகம் சுளிக்கும்.
தீப்தாவோ வண்ணமயில்!
அந்த அரசியல்வாதியிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டி ஜோசியர் சொன்னதுபோல சன்னதிக்கு முன்னால் உள்ள நந்தியின் காதில் கண்ணீரோடு முறையிட்டாள். வெளியே சொல்லி அழத் தைரியமில்லை.
அந்தக் கோயில் நந்தி சாதாரண நந்தி இல்லம்மா... நந்தி பகவானே அங்க வந்து பிரத்யட்சமாயிட்டார். அந்த நந்திக்கு உயிர்வரும். சுவாமி ரிஷபக் காளையர் கம்பீரமா எழுந்து ஊரைச் சுத்தி ஒரு வலம் வருவார். அப்புறமா போய் திரும்ப உக்காந்துக்குவார்
என்று அவர் சொன்னதெல்லாம் தீப்தாவின் காதில் ஒலித்தபடியே இருந்தது.
எல்லாம் முடிந்து தீப்தா காரில் ஏறிச் சென்றபின் சங்கரன் போனில் அழைப்பு! அழைத்தது அவன் உறவினரான ஜோசியர் மாத்ருபூதம்.
என்ன சங்கரா... நடிகை தீப்தப்ரியா வந்துட்டுப் போறாளா?
என்று ஆரம்பித்தார் அவர்.
ஆமாம் மாமா... உங்களுக்கு எப்படித் தெரியும்?
நான்தான் அனுப்பி வெச்சேன்...
நீங்களா...?
என்ன நீங்களா? நான் டிவில டைம்ஸ்லாட் எடுத்து பரிகாரம்லாம் சொல்ற ஜோஸியன்கறது உனக்கு தெரியும்தானே?
அதனால்?
என்ன அதனால... அவளும் என் புரொக்ராம் பாத்துட்டு போன் பண்ணிட்டு ஒருநாள் அவ வீட்டுக்கே என்னை கூப்ட்டு ஜாதகத்தை காட்டினா அப்படியே சிக்கல்னும் அவ சிக்கலைச் சொன்னா...
என்ன சிக்கல்?
நடிகைன்னாலே வர்ற சிக்கல்தான். ஒரு அரசியல்வாதி இவளை வெச்சுக்க ஆசைப்படறான். அதிகாரம் வேற அவன் கைல இருக்கு. பாடா படுத்தறான். வேறென்ன...? அதான் நம்ம கோயில்ல நந்தி காதுல குறையைச் சொல்லச் சொல்லியிருந்தேன். சொன்னாளா?
சொன்னா... சொன்னா...
நீ வேணா பாரு. நம்ம கோயில் கூடிய சீக்கிரம் ரொம்பவே பிரபலமாயிடும். என்கிட்ட வர்றவாளை எல்லாம் கூட நான் நம்ம கோயிலுக்கு டைவர்ட் பண்ணிவிடப் போறேன். பத்துப்பேர்ல நாலு பேருக்கு பலிச்சா போதுமேடா.
என்ன மாமா திடீர்னு இப்படி ஒரு ஊர்ப்பாசம்?
பாசம் தாண்டா. பாசம்தான். அங்கதானே எனக்குன்னு நிலபுலன்கள் இருக்கு...?
அதனால?
அதை எல்லாம் பிளாட் போட்டு விக்கணும்னா ஊர் பிரபலமாகணும்! ஊர் பிரபலமாகணும்னா கோயில் பிரபலமாகணும்...
ஜோசியர் மாத்ருபூதம் சுற்றாமல் வளைக்காமல் நேராக பாய்ண்ட்டுக்கு வந்துவிட்டார்.
அப்ப உங்க சுயநலத்துக்காக இப்படி ஒரு திட்டமா?
இதுல உனக்கும்தானே வரும்படி? எந்தக் குருக்கள் பி.எஃப், கிராஜிவிட்டி, போனஸ், இன்சென்டிவ்னு வாங்கறா? காணிக்கை ஜீவனம்தானே?
அதுக்காக சுவாமியையா கூட்டுச் சேர்த்துக்கறது?
பைத்தியக்காரா... அவரை நான் தூக்கித்தானே பிடிக்கிறேன்? என் புத்திசாலித்தனத்தை நினைச்சு சுவாமி சந்தோஷம்தான் படுவார்...
ஜோசியர் கருத்தை சங்கரனும் மௌனமாக ஏற்றுக்கொண்டான்.
அடுத்த வாரமே தீப்தப்ரியா திரும்ப கோயிலுக்கு வந்தாள்! அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி!! அவள் பிரார்த்தனை பலித்துவிட்டிருந்தது. அந்த அரசியல்வாதி ஒரு கார் ஆக்சிடெண்ட்டில் இறந்துவிட்டிருந்தான். சிலிர்த்துப் போய் விட்டிருந்தாள்.
நந்தீஸ்வரர்தான் தன்னை ரட்சித்ததாக அவள் நம்பினாள் கோயிலை புனருத்தாரணம் செய்ய பத்துலட்ச ரூபாயை டொனேஷனாக வேறு தந்தாள். கூடவே வந்த பத்திரிகைக்காரர்கள் அதை எவ்வளவு பெரிது படுத்த வேண்டுமோ அவ்வளவு பெரிதுபடுத்திவிட்டனர். அவள் படமும் ரிலீஸாகி நன்றாக ஓடவும் நந்தீஸ்வரர் மேல் சினிமா உலகப் பார்வையும் பெரிய அளவில் திரும்பிவிட்டது.
ஜோசியர் மாமா ஒருநாள் சங்கரனுக்கு போன் செய்து பெருமைப்பட்டுக் கொண்டார்.
சங்கரா... எப்படிடா என் ஜோசியம்?
மாமா... சினிமாக்காரா அவ்வளவு பேருமே வர ஆரம்பிச்சுட்டா மாமா... அதே மாதிரி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்னு நந்திகிட்ட தினசரி ஒரு கூட்டமே நிக்கறதுன்னா பார்த்துக்குங்களேன்.
நானும் நம்ம நிலத்தை பிளாட் போட்டு விக்க ஏற்பாடு பண்ணப் போறேன். கோயிலை ஒட்டி இருக்கற இடத்துல ஒரு லாட்ஜும் கட்டப்போறேன்.
லாட்ஜா...? ஊருக்கு வர்றவா தங்கறதுன்னாதானே லாட்ஜில் போணியாகும்.
இனிமே ஆள் பார்த்து தங்கணும்னும் சொல்லப் போறேன்.'ஒரு வாரம் தங்கி கும்புடு போட்டாதான் உனக்கு விமோசனம்'னா தங்கிட்டுப் போறாங்க...
இது டூ மச்சா இல்லை...?
"போடா போ... இன்னிக்கு இந்த நாட்டுல பணத்தை வெச்சுண்டு என்ன செய்யறதுன்னு தெரியாம ஒரு கூட்டம் இருக்கு. அந்தக் கூட்டத்துக்குதான் நான் ரொம்ப தேவைப்படறேன். இவங்க நான் சொல்றதை வேதவாக்காவே எடுத்துக்கிறவுங்க.
பக்தி உள்ளவாளவிட புத்தி உள்ளவாளுக்குத்தாண்டா இது உலகம். பாரேன் நம்ம கோயிலுக்கே என் புத்திசாலித்தனத்தால தானே விமோசனம் ஏற்பட்டிருக்கு...?"
ஜோசியர் பேச்சில் செருக்கு நன்றாகவே தென்பட்டது. அது சங்கரனுக்கும் புரிந்தது! இருந்தும் கோயில்'ஜேஜே'என்று இருப்பதை எதையாவது பேசி கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.
ஒரு மூன்றுமாதம் போயிருக்கும்.
சங்கரனுக்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் இருந்து ஆர்டர் வந்தது. அந்த வேலைக்குப் போவதே உத்தமம் என அவன் நினைக்க, அவன் அப்பா பரமேஸ்வரனோகோயிலைப் பார்த்துக்கோ. நம்ம கடமை அது... அப்புறம் கோயில் நம்ம கையைவிட்டுப் போயிடும்
என்றார்.
கோயில்ல இருக்கறவரை பிறத்தியாரை குறிப்பா பக்தாளை நம்பியேதான் இருக்க வேண்டியிருக்கு. சுவாமியும் பெருசா கைதூக்கி விடறாரான்னா அதுவுமில்லை. அவரையே நம்ம ஜோசியர் மாமாதான் தூக்கிவிட்ருக்கார்
என்று சங்கரன் கூறவும் பரமேஸ்வரன் முகத்தில் ஈயாடவில்லை.
சங்கரா...
என்றார் ஈனசுரத்தில்!
புரிஞ்சிக்கோங்கப்பா. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதேள். நாமதான் சுவாமி, கடமை அது இதுன்னு நினைச்சிக்கிறோம். ஆனா எப்பவும் புத்தி உள்ளவன்தான்ப்பா எதுலயும் சாதிக்கறவனா இருக்கான். நம்ம ஜோசியரையே எடுத்துக்குங்கோ. நம்ம கோயில் கிட்டத்தட்ட பூலோக கைலாசம்னே சொல்லிட்டார். சொல்லி அவர் நல்ல கல்லா கட்டிட்டார். கோயிலும் முன்னமாதிரி இல்லை. முன்னேறியிருக்கு. இப்படிக் கோயிலை வெச்சுப் பிழைக்கலாம். நம்பிப் பிழைக்க நிஜமா என்னப்பா இருக்கு? தினசரி ஜனங்க நம்ம கோயில் நந்தி காதுல குறை சொல்றது கேக்கச்சே எனக்கு சிரிப்பா வரும். எனக்குத்தானே உண்மை தெரியும்.
பரமேஸ்வரனால் பதிலுக்கு பதில் பேச முடியவில்லை.
கோயிலை வைத்துப் பிழைக்கலாம்... நம்பி பிழைக்க நிஜமா என்னப்பா இருக்கு?
என்று அவன் கேட்ட கேள்வி அவர் பொட்டில் சுட்டது. அதோடு கோயிலுக்குப் புறப்பட்டார். அதுநாள் வரையில் பரம்பரை பரம்பரையாக கடமை ஆற்றி வந்ததெல்லாம் அர்த்தமற்ற ஒரு விஷயம் போல அவருக்குள்ளும் தோன்றியது.
கோயிலை நெருங்கியவர் அனிச்சையாக இயங்கினார். கோயில் கதவு முன் நல்ல கூட்டம். கதவு திறக்கவும் திபுதிபு என நந்தியை நோக்கித்தான் எல்லாரும் ஓடினார்கள்!
கோயிலில் இப்பொழுது சுவாமி கூட இரண்டாம் பட்சம்தான்! குறைகேட்கும் நந்திக்குத் தான் முதல் இடம்.
அதைப் பார்த்த பரமேஸ்வர குருக்களுக்குள் சிரிப்பும் வருத்தமும் கலந்து வந்தது. சன்னதிக்குள் நுழைந்து விளக்கைத் தூண்டிவிட்டு தீபத்தைத் தட்டி எழுப்புவதும் லிங்கம்மேல் கிடந்த பூக்களை எடுத்துப் போடுவதும் என்று அனிச்சையாக இயங்கினார்.
அப்படியே சன்னதிக்கு வெளியே வந்தவர் எதிரில் ஒரு சன்யாசி! அவரைப் பார்க்கவும் கொஞ்சம் சுருக்கென்றது. அவர் ஒரு கோடீஸ்வரர்.
நீங்களா... இது என்ன கோலம்?
என்று ஆரம்பித்தார் குருக்கள்.
சன்யாசம் வாங்கிட்டேன் குருக்களே... பணம்லாம் ஒரு அளவு வரைக்கும்தான்
என்று சிரித்தார்.
என்ன அப்படி சொல்லிட்டேள்...
எனவும் தொடர்ந்தார்.
"என் கார் டிரைவருக்கு ஒரு நாள் 2000 ரூபாய் சம்பள உயர்வுன்னேன். பூரிச்சுப் போய்ட்டான். நெருக்கடியில்லாம வாரம் ஒருநாள் நான் - வெஜ் சாப்பிட்டு சந்தோஷமா இருப்பேன்னான். அதே நாள் எனக்கு வியாபாரத்துல ஒரு அஞ்சரைக் கோடி ரூபா லாபம் வந்தது. ஆனா நான் ஏழு கோடி வரும்னு எதிர்பார்த்தேன். ஒண்ணரைக் கோடி குறையவும் அஞ்சரைக் கோடி லாபம் எனக்கு பெருசா தெரியலை. ரொம்பவே வருத்தப்பட்டேன். அப்ப என் பி.ஏ. ஒருத்தர்கிட்ட போன்ல பேசினது காதுல விழுந்தது.
ஒரே இடத்துல எனக்கு இரண்டு காட்சி... இங்க என் பாஸோட கார் டிரைவர் 2000 ரூபாய் சம்பள உயர்வுக்கு பூரிச்சுப் போயிட்டான். என் பாஸோ ஐந்தரைக் கோடி லாபம் கிடைச்சும் வருத்தத்துல இருக்கார். உண்மைல சந்தோஷம்கறது பணம் தீர்மானிக்கலை - பார்வைதான் தீர்மானிக்கிறத புரிஞ்சுகிட்டேன்'னு என் பி.ஏ. பேசினார். எனக்கும் சுருக்குன்னுது...! அது ஒரு பெரிய உண்மை இல்லையா? அதான் ஆரம்பம்...! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து பல தெளிவுக்குப் பிறகு எல்லாத்தையும் புள்ளகுட்டிகள்கிட்ட விட்டுட்டு சுவாமி கிருஷ்ணானந்தா ஆஸ்ரமத்துல சேர்ந்துட்டேன். சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணும்மாங்கற இடைச்சிறுவன் கேள்வில அவ்வைக்கு ஷாக் அடிச்சமாதிரி. என் பி.ஏ. பேச்சால எனக்குள்ளேயும் ஷாக். உண்மையில இப்பதான் மனுஷனா வாழ ஆரம்பிச்சிருக்கேன்..."
அவர் பேசிய பேச்சில் பரமேஸ்வரனுக்கும் ஒரு பதில் ஒளிந்திருந்தது. அவரே தொடர்ந்தார்.
நீங்க கொடுத்து வெச்சவங்க சாமி... சாமிகிட்டவே இருக்கீங்க... பொல்லாத ஆசாபாசங்க கிட்ட உங்கள சிக்கவிடாம தன் கிட்டயே சாமி உங்கள பாதுகாப்பா வெச்சிருக்கார். நான்லாம் அந்த வகைல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன் சாமி
என்றார்.
இது அடுத்த பதில்! பரமேஸ்வரனுக்கு சுளீர் என்று முதுகில் பிரம்படி விழுந்ததுபோல் இருந்தது.
உச்சபட்சமாய் ஜோசியர் மாத்ருபூதத்தின் வலதுகை எனப்படும் மணிகண்டன் என்பவன் அவரை நோக்கி வந்து நின்றான்.
நமஸ்காரம் மாமா.
வாப்பா... என்ன தனியா வந்துருக்கே... ஜோசியர் வரலை...?
இல்ல மாமா. அவரால இனி வரவும் முடியாது
என்றவனை அதிர்வோடு பார்த்தார்.
ஏன் அப்படி சொல்றே... பாரு அவனால எவ்வளவு கூட்டம்?
"இருக்கலாம் மாமா... ஆனா அவர் சுவாமியை கல்லாவா மட்டுமே நினைச்சு சொன்ன பொய் அவரையே இப்ப பொய்யாக்கிடிச்சு. ஒரு காரியமா கடைத்தெரு பக்கம் போனவரை கோயில் மாடு ஒண்ணு எதிர்பாராம முட்டினதுல தடுமாறி சாக்கடைல விழுந்துட்டார். அதுல முதுகுத் தண்டுவடத்துல பலமான அடி. அதனால மூளைக்குப் போற ஒரு நரம்பு பாதிக்கப்பட்டு அவரால பேசமுடியல. நிக்கவோ, உட்காரவோ முடியல. படுத்த படுக்கையா இருக்கார். எப்பவும்