Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatha Marmam! Part - 2
Mahabharatha Marmam! Part - 2
Mahabharatha Marmam! Part - 2
Ebook114 pages38 minutes

Mahabharatha Marmam! Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

மஹாபாரத மர்மம் நூலின் முதல் பாகத்தில் அதில் உள்ள மொத்த ஸ்லோகங்களின் விவரம், புதிர் ஸ்லோகங்கள், போர் பற்றிய அதிசய செய்திகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம். அதைத் தொடர்ந்து இந்த பாகத்தில் 24 அத்தியாயங்களில் விஞ்ஞானிகள் வியக்கும் மஹாபாரத அஸ்திரங்கள் பற்றியும் வில்லி பாரதத்தில் வில்லிபுத்தூரார் தரும் பல சுவையான செய்திகள், மஹாபாரதம் தரும் ஜோதிடக் குறிப்புகள், விதுரர் கூறும் நீதிகள் உள்ளிட்டவற்றைப் படித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580151008972
Mahabharatha Marmam! Part - 2

Read more from S. Nagarajan

Related to Mahabharatha Marmam! Part - 2

Related ebooks

Reviews for Mahabharatha Marmam! Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatha Marmam! Part - 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மஹாபாரத மர்மம்! பாகம் – 2

    Mahabharatha Marmam! Part – 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. நாரத மஹரிஷியும் மஹாபாரதப் போரும்!

    2. போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

    3. மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?

    4. ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

    5. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்!

    6. மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி!

    7. மெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை!

    8. பாவச் செயல்களைப் பரப்பாதே!

    9. பேர் படைத்த விஜயனுக்கும் பார் படைத்த துரியோதனனுக்கும் போர்! போரை நிறுத்த தூது சென்ற கண்ணன்!!

    10.  சிவ பக்தன் அர்ஜுனன்!

    11.மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!

    12.  வில்லி பாரதத்தில் விராட பர்வத்தில் கடவுள் வாழ்த்துக்கள்!

    13.  3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!

    14. மஹாபாரதத்தில் ஜோதிடம்!

    15. ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?

    16.  விதுரர் கூறும் விதுர நீதி - 1

    17.  விதுரர் கூறும் விதுர நீதி - 2

    18.  விதுரர் கூறும் விதுர நீதி - 3

    19.  விதுரர் கூறும் விதுர நீதி - 4

    20.  விதுரர் கூறும் விதுர நீதி - 5

    21.  விதுரர் கூறும் விதுர நீதி - 6

    22. கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

    23.  கண்ணன் இதழ் குழலே, காட்டும் வெற்றி ஒளியே!

    24.  கண்ணன் எத்தனை கண்ணனடி!

    என்னுரை

    உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

    இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

    இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.

    இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.

    இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.

    விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.

    அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.

    வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.

    அது மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் தனது திருவுள்ளத்தினால் அருளிய பகவத் கீதையும் இதில் தான் அமைந்துள்ளது.

    இன்னும் ஏராளமான பகுதிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

    விஷ்ணு சஹஸ்ர நாமம், யக்ஷ ப்ரஸ்னம், விதுர நீதி, சத ருத்ரீயம் போன்ற பல அபூர்வமான பகுதிகள் இதில் உள்ளன.

    புராண விளக்கங்களை இதில் காணலாம். ரிஷிகளின் சரித்திரங்களும் இதில் உண்டு.

    அஸ்திரங்களைப் பற்றிய விவரணம் இதில் உண்டு.

    தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சம்பந்தமான எந்தக் கேள்விக்கும் இதில் பதில் உண்டு.

    ஆன்மீக பூமியான பாரத தேசம் பற்றிய பிரமிக்க வைக்கும் செய்திகள் இதில் உண்டு.

    ஆங்காங்கே உள்ள சம்வாதங்கள் என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் மனித குலத்திற்கு என்றும் துணை நிற்கும் வழிகாட்டும் நெறிகளைத் தருபவை.

    இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.

    இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.

    சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.

    முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.

    இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.

    அவ்வப்பொழுது ஞான ஆலயம் குழும பத்திரிகைகள், www.tamilandvedas.com ப்ளாக் ஆகியவற்றில் மஹாபாரத மர்மங்களை விளக்கி அவ்வப்பொழுது எழுதி வந்தேன்.

    முதல் பாகம் வெளிவந்ததைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் வெளி வருகிறது..

    இந்த பாகத்தில் போர் பற்றிய அதிசய விவரங்கள், விஞ்ஞானிகளும் வியக்கும் மஹாபாரதப் போரின் அஸ்திரங்கள், மஹாபாரதம் தரும் ஜோதிட உண்மைகள், வில்லிபுத்தூராரின் பாரதத்தில் அவர் அழகிய தமிழில் வழங்கும் அற்புதச் செய்திகள், கண்ணனைப் பற்றிய சுவையான செய்திகள் ஆகியவை கட்டுரைகளின் வாயிலாகத் தரப்படுகின்றன.

    இந்தக் கட்டுரைகளை அவ்வப்பொழுது வெளியிட்ட ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோஸியம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றி உரித்தாகுக.

    கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி என்னை ஊக்குவித்த வாசக அன்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக!

    இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ்

    Enjoying the preview?
    Page 1 of 1