Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmaiyana Katralai Nokki
Unmaiyana Katralai Nokki
Unmaiyana Katralai Nokki
Ebook64 pages23 minutes

Unmaiyana Katralai Nokki

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முப்பத்தைந்து ஆண்டுக்காலம் நான் ஆசிரியப் பணியில் பெற்ற அனுபவங்களை இங்கு கல்விச் சிந்தனைகளாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஆசிரியர் பட்டயக் கல்வி வகுப்புகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.. தலைமை ஆசிரியர், DIET நிறுவன முதல்வர் பதவி ஆகிய பொறுப்புகளில் நான் நிலைமைக்கேற்ப கல்வி நிறுவனங்களில் பல மாறுதல்களைச் செய்தது வரவேற்பைப் பெற்றது.. பல்வேறு வகுப்பு புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் மேற்பார்வையாளரகவும் இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.. இந்த அனுபவங்கள் என்னை இந்த நூலை எழுத வைத்தன.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580115207427
Unmaiyana Katralai Nokki

Read more from Ananthasairam Rangarajan

Related to Unmaiyana Katralai Nokki

Related ebooks

Reviews for Unmaiyana Katralai Nokki

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmaiyana Katralai Nokki - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    உண்மையான கற்றலை நோக்கி

    ஓர் ஆசிரியரின் அனுபவங்கள்

    Unmaiyana Katralai Nokki

    Or Aasiriyarin Anubavangal

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அறிவு என்பது தகவல் அறிதல்

    2. புளூம் கூறும் படிகள்

    3. வகுப்பில் என் அனுபவம்

    4. நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்களா?

    5. நீங்கள் எப்படி...வலதுசாரியா, இடதுசாரியா?

    6. கற்பனையாய் கற்றல்

    7. உள்ளூர் கல்வி

    8. ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்பு வேண்டும்

    9. ஒழுக்கமான கல்வி

    10. படிப்பில் ஆர்வம் வேண்டும்

    11. ஃபின்லாந்தின் தேர்வுகளில்லா கல்வி முறை

    12. கல்வித் தரம் எப்போது உயரும்?

    13. ஒரு சீர்மிகு பள்ளியின் மரணம்....

    முன்னுரை

    முப்பத்தைந்து ஆண்டுக்காலம் நான் ஆசிரியப் பணியில் பெற்ற அனுபவங்களை இங்கு கல்விச் சிந்தனைகளாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஆசிரியர் பட்டயக் கல்வி வகுப்புகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.. தலைமை ஆசிரியர், DIET நிறுவன முதல்வர் பதவி ஆகிய பொறுப்புகளில் நான் நிலைமைக்கேற்ப கல்வி நிறுவனங்களில் பல மாறுதல்களைச் செய்தது வரவேற்பைப் பெற்றது.. பல்வேறு வகுப்பு புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் மேற்பார்வையாளரகவும் இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.. இந்த அனுபவங்கள் என்னை இந்த நூலை எழுத வைத்தன.

    1. அறிவு என்பது தகவல் அறிதல்

    நீங்கள் இந்தக் கதையைக் கேட்டிருப்பீர்கள். இரண்டு விறகு வெட்டிகள் அன்று யார் அதிக மரங்களை வெட்டுகிறார்கள் என்று போட்டி போட்டார்கள். ஒருவன் தொடர்ந்து வெட்டினான். இன்னொருவன் பலமுறை வெட்டுவதை நிறுத்தினான். முடிவில் பார்த்தபோது இரண்டாமவன்தான் அதிக மரங்களை வெட்டினான். அதற்கு காரணம் அவன் அடிக்கடி கோடாரியைக் கூர் தீட்டினான் என்பதுதான். எனவே விடுமுறைகளில் மனதுக்கினிய செயல்கள் செய்வது அடுத்த ஆண்டுப் படிப்பை மேம்படுத்தும். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகளை ஏதேனும் படி, படி என்று அனுப்பி அவர்களைச் சோர்வடைய வைத்துவிடுகிறார்கள். இந்த மனோபாவம் மாற வேண்டும்.

    தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்ட பின்னால் ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கிவைத்த மனோபாவம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தது. பறந்து திரியும் பறவைகளைபோல் மனம் இலேசாகி, நண்பர்களுடன் சேர்ந்து, விடுமுறைக்கான திட்டங்கள் வகுத்து பெரிய ஆராய்ச்சி செய்த நாள்கள் இருந்தன.

    விடுமுறை கழிந்ததும் பள்ளிகளில் வழக்கம்போல் படிக்கவேண்டும். ப்ளஸ் டூ முடித்த மாணவர்கள் என்றால் மருத்துவ, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரவேண்டும். அவர்கள் எப்படிப் படிக்கவேண்டும்? சரியாகத்தான் படிக்கிறார்களா என்பது கேள்விக்குறி.

    பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருந்தேன். என்னிடம் படிக்கும் மாணவன் ஒருவன்

    Enjoying the preview?
    Page 1 of 1