Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudhal Mathipen Eduka Vendam Magale!
Mudhal Mathipen Eduka Vendam Magale!
Mudhal Mathipen Eduka Vendam Magale!
Ebook212 pages1 hour

Mudhal Mathipen Eduka Vendam Magale!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Poet. Naa.Muthunilavan whose real name is Muthu Baskaran is a retired Vice Principal & Senior Tamil Teacher with 35 years of experience in TN Govt.School, Pudukottai.

As an orator, he has attended more than 5000 meetings across all over Tamil Nadu. He has also visited various countries like Singapore, Malaysia, Srilanka, UAE, Muscat, Quatar, Kuwait, Jambia, and Seachells. He is known to Tamil Diaspora through various TV Programs as Dindukkal I.Leoni’s Team-Leader  more than 20 years, and separate Interviews in channels like Pothikai, Kalaingnar, Vijay, Sun, Polymer, Raj, and Local channels also. 

He has written 6 books across various genres and many of his books won various awards.

He has also written various articles, in magazines like Dinamani, Semmalar, Kanaiyazhi including Tamil web e-zines too. And in his own Tamil Blog - http://valarumkavithai.blogspot.com/  His Poems and Stories were inserted in PG, UG class Text books in Madurai and Tirunelveli universities.

One of His Literacy Prog. ‘Cycle song’  is translated in various Indian Languages. He has also many prestigious awards like ‘Barathi Dhasan’ award, ‘Best Poem Collection Award’ Kalki (weekly) Short story award, Tirupur Tamil sangam Award and so on.

He is very active in ‘Tamil Nadu Progressive Writers’ Assn’ from the beginning, and ‘Kanini Tamil Sangam’ conducted various workshops  on Tamil writings.

Currently living in Pudukkottai with wife and children.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115901981
Mudhal Mathipen Eduka Vendam Magale!

Read more from Naa. Muthunilavan

Related to Mudhal Mathipen Eduka Vendam Magale!

Related ebooks

Reviews for Mudhal Mathipen Eduka Vendam Magale!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudhal Mathipen Eduka Vendam Magale! - Naa. Muthunilavan

    http://www.pustaka.co.in

    முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

    Mudhal Mathipen Eduka Vendam Magale!

    Author:

    நா. முத்துநிலவன்

    Naa. Muthunilavan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/naa-muthunilavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

    (கல்விச் சிந்தனைகள்- கட்டுரைத் தொகுப்பு)
    நா.முத்துநிலவன்
    சமர்ப்பணம்…

    குழந்தைகளை உண்மையாக நேசிக்கின்ற,

    மாணவரின் பன்முக ஆற்றலை வெளிக்கொண்டுவரப்

    பாடுபட்டு வரும்

    அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்

    நல்ல ஆசிரியர்களை உற்சாகப்படுத்தி வரும்

    அரசுக் கல்வித்துறை அலுவலர்களுக்கும்,

    அரசுப் பள்ளியிலேயே

    தம்பிள்ளைகளைப் படிக்கவைக்கும்

    பெற்றோர்களுக்கும்

    தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவராயினும்

    நல்ல கல்விக்காகப் போராடி வரும்

    புதுக்கோட்டை தங்கம் மூர்த்தி,

    சென்னை பிரின்ஸ் கஜேந்திரபாபு,

    திருச்சி துளசிதாசன் போலும்

    நாட்டுப் பற்று மிகுந்த நல்ல கல்வியாளர்

    அனைவர்க்கும்

    இந்த நூல் சமர்ப்பணம்

    மதிப்புரை

    முனைவர் எஸ்.எஸ்.இராசகோபாலன்,

    கல்வியாளார்,

    சென்னை.

    எளிமை கண்டு இரங்குவாய்!

    சிறுமை கண்டு பொங்குவாய்!

    பல தளங்களில் தான் செய்த பதிவுகளில் சிலவற்றைத் தொகுத்து நூல் வடிவமாக திரு. நா.முத்துநிலவன் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இன்றையத் தமிழகக் கல்வி எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும் அச்சமின்றி தன் சிந்தனையில் விளைந்த கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

    ஆசிரியர்கள் - கல்விப் பிரச்சினைகள் - குறிப்பாக வகுப்பறை அனுபவங்கள் பற்றி அமைதி காப்பது நன்றன்று பல நாட்டு ஆசிரியர் இயக்கங்களோடு எனக்குத் தொடர்பு உண்டு. அவர்களிடம் நான் பெரிதும் வியப்பது ஆசிரியர்கள் அரசின் கொள்கைகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்வதும், வகுப்பறைப் பிரச்சினைகளைத் தீர அலசுவதும் தான். ஆனால் தமிழ்நாட்டில் தலைமுறைகளைப் பாதிக்கும் முடிவுகளைப் பற்றிக் கவலையுறாமல் இயக்கங்கள் மெளனம் சாதிப்பது புதிராக இருக்கின்றது. மாறாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கியுள்ள தவறான செயல்பாட்டினை வரவேற்றும் ஒரு இயக்கத் தலைவர் அறிக்கை விட்டிருக்கின்றார்.

    பயிற்சி மட்டும் இருந்தால் ஒருவர் ஆசிரியர் ஆகமாட்டார். அவர்க்கென கல்வி பற்றி ஒரு தெளிவான சித்தாந்தம் தோன்றுவதை எடுத்துரைக்கின்றார். இவ்வரிய பண்பிற்காக அவரை நான் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

    சமச்சீர்க் கல்வி பற்றி ஆழமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இருவகைப் பயிற்று மொழிகள் பள்ளிகளில் இருக்கும்வரை சமச்சீரின்மை தொடரும். அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்விக்கு இடம் கொடுப்பது தீர்வாகாது. வேற்று மொழியில் கற்பிக்கும் ஆசிரியர் திறனே வினாவிற்குரியது. மாணவர் கற்காது மனனமுறைக்குத் தள்ளப்படுவார்கள்.

    தனியார் பள்ளிகள் கடைபிடிக்கும் தவறான நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ள பாங்கு மெச்சத்தகுந்தது. கல்வி, வணிகமயமாதலின் தீங்கினை நன்கு விளக்கியுள்ளார்.

    தமிழ்ப் பாடத்தில் அதிக மாணவர் தோல்வி பெறுவது பற்றிய பதிவு மேலும் தீவிரமாக ஆயப்பட வேண்டும். 1960கள் வரை பள்ளி இறுதித் தேர்விற்கு சென்னைப் பல்கலைக்கழகம் பாடநூல் வெளியிட்ட காலத்தில் இருந்த தரம் இன்றில்லை. மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் நிர்பந்தத்தால் தமிழ்ப் பாடநூலின் தரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழறிஞர்களின் உரைநடைகள் இன்று காணப்படுவதில்லை. மாணவர் பல்வேறு மொழிநடைகளை அறியும் வாய்ப்பில்லை.

    விருதுகள் கேட்டுப் பெறும் அவலத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பெறுவதைவிட வாங்குவது என்று விருதுகள் தரம் தாழ்ந்து போயின. மாணவர் பெற்றோர், சக ஆசிரியர் ஆகியோரது பாராட்டுகளைவிட, பெரிய விருது உண்டோ? அதனைப் பெற்றிடுவதே பெருமை என ஆசிரியர்கள் உணர வேண்டும்.

    இந்நூல் பரவலாகப் படிக்கப் பெற்று தீவிர விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    அன்புடன்,

    ச.சீ.இரா

    சென்னை-93

    27.07.2014

    அணிந்துரை

    - கவிஞர். தங்கம் மூர்த்தி

    கல்விக் களமிறங்கிக் கண்டுபிடித்த

    அறிவார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்!

    பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்புகிற நேரம். எனது பள்ளியின் முதல்மாடியில் நின்று கொண்டு குழந்தைகள் பாதுகாப்போடு வெளியேறுவதைப் பார்ப்பது என் வழக்கம். குழந்தைகள் ஒரு குதூகல மனதோடு வீடு திரும்புவதைப் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கும்.

    அன்றைக்கும் அப்படி நின்று கவனித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தக் காட்சியைக் கவனித்தேன். பள்ளிக்கூட வாசலில் ஒரு பஞ்சுமிட்டாய்க்காரர் ஒரு குச்சி நிறைய பஞ்சுமிட்டாய்ப் பொட்டலங்களைத் தொங்கவிட்டபடி நின்றுகொண்டிருந்தார். மற்றவர் கவனத்தைக் கவரும் நோக்கில் கையில் ஒரு மணியை ஆட்டியபடி ஒசை எழுப்பிக் கொண்டிருந்தார்.

    குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் காத்துக்கொண்டிருந்தார்கள். புத்தகப்பையோடு தங்கள் பெற்றோரை நோக்கி ஒடிச்சென்ற குழந்தைகள் பெற்றோர்களிடம் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கேட்டு அடம்பிடித்தார்கள். பெற்றோர்களும் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்கள். பஞ்சுமிட்டாயைக் கையில் பிடித்தபடி மகிழ்ச்சி தாங்க முடியாமல் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இறுகக் கட்டிக் கொண்டு முத்தமிட்டார்கள். அவர்களது எல்லையில்லா மகிழ்ச்சியில் நானும் கலந்ததை உணர்ந்தபடி ஒரு உண்மையை யோசித்தேன். அந்த பஞ்சுமிட்டாய்க்காரர் வழங்குகிற மகிழ்ச்சியைக் கூட நம் பாடத்திட்டம் வழங்கவில்லையோ…!

    பள்ளிக்கூடம் முடிந்து பட்டாம்பூச்சிகளைப் போல சிறகுகள் முளைத்துப் பறந்தோடுகிற குழந்தைகள் மறுநாள் காலை பள்ளி உள்ளேநுழைகிற போது சில கலக்கங்களுடன் உள்ளேநுழைவதற்கு என்ன காரணம்? நேற்றெழுதிய மாதிரித் தேர்வின் விடைத்தாளை இன்று கொடுத்து அர்ச்சிப்பார்களோ…! எழுதாத வீட்டுப்பாடத்தை கண்டுபிடித்துவிடுவார்களோ…! மறதியாக வீட்டிலேயே வைத்துவிட்டு வந்து புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொல்வார்களோ...! இப்படியான கலக்கங்கள் அவர்கள் கண்களுக்குள் உலவுவதை உற்றுநோக்கினால் கவனிக்க முடியும்.

    வகுப்புகள் துவக்கத்திலிருந்து முடியும்வரை, வீட்டுப்பாட சோதனை, பாடம், பயிற்சி, தேர்வு, அறிவுரை என ஒருவித கட்டுப்பாட்டுக்கயிறு அவர்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும். கயிறு இறுக இறுக மன இறுக்கமும் அதிகமாகும். இதைத் தளர்த்தும் நடவடிக்கையாகத்தான் நான் எனது பள்ளியில் மாதம் ஒருநாளை புத்தகம் இல்லா நாள் (No Book Day) என அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

    அன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பையை சுமந்துவர வேண்டியதில்லை. வெறுங்கையை வீசிக்கொண்டு பள்ளி வந்தால் போதும். அன்றைய நாளில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள், குறும்படங்கள், கதைகள், நகைச்சுவை அரங்குகள், ஆடல் பாடல்கள் என சிரிப்பும் கும்மாளமுமாக வகுப்பறைகளில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடும். அன்று முழுவதும் குழந்தைகள் முகங்களில் ஒரு புதிய வெளிச்சம் பரவியிருப்பதைப் பார்க்க முடியும். திகட்டாத தித்திப்பாய் அந்நாளின் நினைவுகள் அவர்களிடையே அடிக்கடி உலா வரும்.

    மலர்ந்த பூக்களாய் மணம் வீசுகிற இந்த குழந்தைகள் பாடப்புத்தகங்களைக் கண்டதும் வாடிப் போவது ஏன்? இந்தக் கல்வித் திட்டம் ஏன் கசக்கிறது? இது ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் என்னென்ன? கல்வி பயணிக்கும் பாதை சரியானதுதானா? இத்தகைய கேள்விகளுக்காகவும், எதிர்காலத் தலைமுறை கேட்கப் போகிற கேள்விகளுக்காகவும் விடை காண புதிய களமிறங்கி கண்டுபிடிக்கப்பட்ட அறிவார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்தான் கவிஞர். நா.முத்துநிலவன் அவர்களின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! தலைப்பில் ஒலிக்கும் குரலில் எண்ணற்ற முற்போக்காளர்களின் குரலும் அடங்கியிருப்பதைப் போல என் குரலும் அடங்கியிருக்கிறது.

    ஆனாலும் மதிப்பெண்களைத்தான் துரத்துகிறது கல்வி. ஒடிப்போய் பிடித்தவர்கள் படித்தவர்களாகிறார்கள். தவறவிட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். மனப்பாடங்களில் ஞாபகம்கொண்டு மனதின் பாடங்களை மறந்து போகிறார்கள். புத்தகப் புதைகுழியில் புதைந்துபோய் மாணவனாகும் பயிற்சியில் வென்றுவிடுகிறார்கள். மனிதனாகும் முயற்சியில் தோற்றுவிடுகிறார்கள்.

    ஒரு மாணவனை நல்ல மனிதனாக்குவது தானே கல்வியின் நோக்கம். மனங்களைப் பாழ்படுத்தாமல் பக்குவப்படுத்துவதுதானே கல்வியின் லட்சியம். தன் சிந்தனைகளை கூராக்கிக் கொண்டேயிருக்கும் கவிஞர். நா.முத்துநிலவன் தன் ஆசிரியப்பணியின் அனுபவங்களோடு அச்சம் தவிர்த்து அர்த்தம் சேர்த்து பல கட்டுரைகளாகப் படைத்திருக்கிறார்.

    கவிஞர். நா. முத்துநிலவன் மரபில் புதுமை கண்டு, புதுமையில் மரபு கலக்கும் ஈரம் காயாத கவிஞர். தேர்ந்த வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட கட்டுரைகளை சுடச்சுட சுவைபட எழுதும் எழுத்தாளர். 'தெளிவுறவே அறிந்திருந்து, தெளிவுதர மொழிந்திடும்’ சொக்கவைக்கும் சொற்பொழிவாளர், கணிரென்ற குரலெடுத்துப் பாடும் பாடகர், அறிவொளி இயக்கத்தின் ஆணிவேர், ஆசிரியர் போராட்டங்களில் முதல் வரிசைப் போராளி, நவீன யுகத்தில் கால் பதித்து இணையத்தில் எழுதிக் குவித்து உலகெங்கும் வாசகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் முற்போக்காளர், எவ்விடத்திலும் தன் கொள்கைக்காக அழுத்தமாய் வாதிடும் அறிவின் செருக்கு மிகுந்தவர். தமுஎகச இயக்கத்தை எண்பதுகளில் ஒர் அஞ்சல் அட்டையில் தன் அழகான கையெழுத்தால் அழைப்பெழுதி கூட்டம் கூட்டி என் போன்ற பல இளைஞர்களை இயக்கத்திற்கு உள்ளிழுத்து உயரச் செய்தவர்.

    வீட்டில் பாதியை நூலகமாக்கிப் பராமரிப்பதில், குழந்தைகளுக்குப் பெயரிடுவதில், புதியன சிந்திப்பதில், உரத்தகுரலில் முழங்கும் உரைவீச்சில் பலருக்கும் முன்னோடியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

    என் எழுத்திலும் பேச்சிலும் கவிஞர் பாலாவின் சாயலிருப்பதைப் போல இவரது சாயலுமிருப்பதை ஆழ்ந்து நோக்கினால் அறிந்து கொள்ளலாம்.

    உடனிந்து, ஒய்வின்றி உரையாடி, பேசும் போதும், எழுதும் போதும், பாடும் போதும், விவாதிக்கும் போதும், விமர்சிக்கும் போதும் வியந்து வியந்து பார்த்த ஒருவரின் சாயல் ஒட்டிக் கொண்டிருப்பது இயல்புதானே!

    அப்படியான கவிஞர். நா.முத்துநிலவன் அவர்களின் கல்விச் சிந்தனைகள் ஒளிரும் இந்நூல் இருள் விலக்கி வெளிச்சக் கீற்றாய் ஒளி பரப்பி, பளிச்சென பவனி வருகிறது.

    - தாங்கம் மூர்த்தி

    822, பெரியர் நகர்,

    புதுக்கோட்டை - 622 004

    செல் பேசி : 94431 26025.

    என்னுரை

    என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்…?

    உழைப்பும் கல்வியும்தான் உலகை மாற்றும் காரணிகள். உழைப்பைக் குறைத்து, பயனைப் பெருக்கக் கல்வி உதவுகிறது. அதுவே உழைப்பைச் சுரண்டவும் உதவுவதுதான் முரண்பாடு! அது கல்வியின் குற்றமல்ல, மனித முன்னேற்றத்திற்கான அறிவியல், மனித குல அழிவுக்கும் பயன்படுவதுபோல… அது யார் கையில் இருக்கிறது என்பதே முக்கியம்.

    ஒடுக்கப்பட்ட மக்கள், சகலவிதமான சுரண்டலில் இருந்தும் விடுதலைபெறக் கல்வியே கை ஆயுதம் என்பதை உணர்ந்தார் மாமேதை அம்பேத்கர். அதனால்தான் ‘கற்பி, போராடு, புரட்சிசெய்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது கை ஆயுதமும் கல்விதான்! அவரும் ‘கல்வியிற் பெரியராக இருந்ததால்தான், இன்றும் கூட அவரைப் புறந்தள்ள நினைப்போரையும் வென்று, நின்று வருகிறார்!

    ஆனால், ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்க்கு மறுக்கப்பட்ட கல்வி, பரந்த ஜனநாயக விழிப்புணர்வால், எல்லார்க்கும் கிடைக்கும் நிலைவரவே, விழித்துக்கொண்ட சுயநலமிகள், அந்தக் கல்வியைக் கற்றாலும் சுயசிந்தனை வந்துவிடாதவாறு கல்வியை அமைத்தனர். அதுவே மெக்காலே கல்வி. படிப்பு கிடைக்கும் ஆனால், அறிவு கிடைக்காது! பட்டம் கிடைக்கும், சிந்தனை இருக்காது. இதுவே இன்றைய கல்வி.

    ஆங்கிலக் கல்வி ஆங்கிலேயரின் ஆதிக்கம் தொடரவும், கிளிப்பிள்ளைகளை உருவாக்கவுமே மெக்காலே பிரபுவால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. அதன் வீச்சு, அடிமை இந்தியாவில் தொடங்கி, விடுதலை இந்தியாவிலும் - 68 ஆண்டுகளுக்கும் மேலாக - இன்றும் தொடர்கிறது! ஆளும் வர்க்கக் கல்விமுறை அதுதானே? அரசு மாறியதே தவிர ஆளும் வர்க்கத்தின் தேவை தொடர்வதால் மெக்காலே பிரபுவும் தொடர்ந்து வாழ்கிறார்! வளர்கிறார்!

    இன்றைய பொருளாதார மேதைகள், மெக்காலேயின் வளர்ப்புப் பிள்ளைகள் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்.களும் ஐ.ஐ.ட்டி, ஏ.ஐ.எம்.எஸ் களும் அவரது செல்லப் பிள்ளைகள்! பிராய்லர் பள்ளிகள் அவரது பேரப்பிள்ளைகள்! அதனால்தான் இவற்றில் படித்தால், சாதாரண மக்களின் பிள்ளைகள் கூட, ஆளும்வர்க்க விசுவாசிகளாக மாறிப்போவது தவிர்க்க முடியாமல் தொடர்கிறது. பிள்ளை குட்டிகள் - பேரன் - பேத்திகள் என்று இருநூறாண்டுகளாக மெக்காலே சொகுசாகவே வாழும் போது, நம்வீட்டுப் பிள்ளைகள் தெருவில் திரிவதுதான் நமக்கான கல்விக் கவலையின் மையம்.

    தாய்மொழியைத் தவிர்த்த - ஆங்கிலவழிக் கல்வி என்பதே மக்களை அந்நியப் படுத்துவதன்

    Enjoying the preview?
    Page 1 of 1