Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanava Manasu
Maanava Manasu
Maanava Manasu
Ebook102 pages33 minutes

Maanava Manasu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூல் பள்ளியை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழையும் பருவத்தில் உள்ள மாணவர்களை மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. +1, +2 தொடங்கி கல்லூரியின் தொடக்க காலம்வரை மாணவர்களுக்கு ஏற்படும் மனோபாவம் சார்ந்த பிரச்சினைகளை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. ஆசிரியர்கள் தொடங்கி, பெற்றோர்கள், சுற்றத்தார் என ஒவ்வொருவரைப் பற்றிய மாணவ எண்ணங்களையும் பக்குவப்படுத்துவதுதான் இந்த ‘மாணவ மனசு’ நூலின் நோக்கம்.

இந்த நூல் மாணவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் இது அவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய விஷயம் அல்ல. ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். சொல்லப்போனால்,அனைவருமே படிக்க வேண்டிய நூல். காரணம், எந்தவொரு சமுதாய மாற்றமுமே தனியாக நடப்பதில்லை. மாணவர்கள் மனசில் நடக்க வேண்டிய அத்தனை மாற்றங்களிலுமே மற்றவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் இது அனைத்து தரப்பினருக்குமே பயனளிக்கும் நூலாகவே இருக்கும். எனவே, கண்டிப்பாக படியுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580149707663
Maanava Manasu

Read more from Dr. Ramesh Prabha

Related to Maanava Manasu

Related ebooks

Reviews for Maanava Manasu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanava Manasu - Dr. Ramesh Prabha

    https://www.pustaka.co.in

    மாணவ மனசு

    Maanava Manasu

    Author:

    ரமேஷ் பிரபா

    Dr. Ramesh Prabbha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-ramesh-prabbha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே...

    1. பள்ளிப் பருவம்

    2. தேர்தலும் தேர்வும்

    3. தற்காலிக தோல்வி

    4. கல்லூரி கனவுகள்

    5. நாகரீகக் கிண்டல்

    6. கேம்பஸ் கலாச்சாரம்

    7. பணத்தின் அருமை

    8. பொது அறிவு

    9. புதிய தலைமுறை

    10. எனக்கு தெரியாததா?

    11. வெற்றியின் விலை

    என்னுரை

    ஓராண்டுக்கு முன்பு ‘நமது நம்பிக்கை’ என்கிற பெயரில் ஒரு புதிய இதழை வெளியிட இருக்கும் செய்தியை நண்பர் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு சொன்னபோது கூடவே, முதல் இதழிலேயே தொடர் ஒன்றையும் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார். மாணவர்களுக்காக எழுதுவது, மாணவர்கள் மத்தியில் பேசுவது எனக்கு பிடித்த விஷயம் என்பதை அறிந்த முத்தையா அதேபோல் எனது தொடரும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதாக, நம்பிக்கையூட்டுவதாக இருக்கட்டும் என்று சொன்னதோடு தொடருக்கு அவரே ‘மாணவ மனசு’ என்கிற கவித்துவமான தலைப்பையும் வைத்துக் கொடுத்துவிட்டார். சுமார் ஓராண்டு காலம் நான் எழுதிய அந்த தொடரின் தொகுப்புதான் ‘மாணவ மனசு’ என்கிற இந்த நூல்.

    இந்த நூல் பள்ளியை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழையும் பருவத்தில் உள்ள மாணவர்களை மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. +1, +2 தொடங்கி கல்லூரியின் தொடக்க காலம்வரை மாணவர்களுக்கு ஏற்படும் மனோபாவம் சார்ந்த பிரச்சினைகளை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. ஆசிரியர்கள் தொடங்கி, பெற்றோர்கள், சுற்றத்தார் என ஒவ்வொருவரைப் பற்றிய மாணவ எண்ணங்களையும் பக்குவப்படுத்துவதுதான் இந்த ‘மாணவ மனசு’ நூலின் நோக்கம். மாணவர்களின் மனசை பக்குவப்படுத்துவது அவ்வளவு சுலபமா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் நான் சொல்லுவேன். காரணம், இதுவரை மாணவர்களுக்காக நான் எழுதிய பல்வேறு நூல்களின் நல்ல விளைவுகளை என்னால் அனுபவப்பூர்வமாக உணர முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று லட்சக்கணக்கான 10, +1, +2 மாணவர்களை நேரடியாகச் சந்தித்து கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடத்தியபோதும் சரி, தமிழகத்தின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக மாணவர்களிடம் கலந்துரையாடியபோதும் சரி. அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ரோட்டரி, லயன்ஸ், ஜேசீஸ் போன்ற சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்யும் மாணவர்களுக்கான கல்வி ஆலோசனை கூட்டங்களில் மாணவர்களை நேரடியாக சந்திக்கும்போதும் சரி ஒரு விஷயத்தை என்னால் அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது. இன்றைய தலைமுறை மாணவர்கள் தனக்கு தெரியாத தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதிலும், படித்த பக்குவப்பட்ட உயர்நிலையில் உள்ள அனுபவஸ்தர்களின் அறிவுரைகளை ஆர்வமாக கேட்பதிலும் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்கள் என்பதுதான் அது. அதிலும் குறிப்பாக மாணவிகள் அளவுக்கு அதிகமான சிரத்தையோடும் எந்த கவனச்சிதறல் இல்லாமலும் இந்த கூட்டங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அதே அசையாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய இந்த நூலையும் நான் எழுதியிருக்கிறேன்.

    இந்த நூல் மாணவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் இது அவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய விஷயம் அல்ல. ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். சொல்லப்போனால், அனைவருமே படிக்க வேண்டிய நூல். காரணம், எந்தவொரு சமுதாய மாற்றமுமே தனியாக நடப்பதில்லை. மாணவர்கள் மனசில் நடக்க வேண்டிய அத்தனை மாற்றங்களிலுமே மற்றவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் இது அனைத்து தரப்பினருக்குமே பயனளிக்கும் நூலாகவே இருக்கும். எனவே, கண்டிப்பாக படியுங்கள்.

    அன்புடன்

    1. பள்ளிப் பருவம்

    மாணவப் பருவம் என்று எடுத்துக் கொண்டாலே அதில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வது பள்ளிப் பருவம்தான். பொதுவாகவே, கல்லூரிப் பருவம் என்பது சில வருடங்கள்தான் இருக்க முடியும். அதிலும் பலபேருக்கு கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும் உண்டு. ஒருவர் கல்லூரிக்குப் போக முடியுமா என்பதையே முடிவு செய்யக் கூடியதாக பள்ளிப் பருவம் அமைந்திருப்பதால் பள்ளிப் பருவத்தில் ஒவ்வொரு காலகட்டமுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பள்ளியானாலும், கல்லூரியானாலும் மாணவப் பருவத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும். சந்திக்கும் பல்வேறு மனிதர்களின் நடவடிக்கைகளும் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய பலம் வாய்ந்தவையாக அமைகின்றன என்பதே உண்மை.

    வகுப்பு நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், குடும்ப நண்பர்கள், புத்தகங்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1