Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum
Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum
Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum
Ebook126 pages33 minutes

Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்’ என்கிற இந்தச் சிறு நூல், சாகித்ய அகாதெமியும், ஆரோவில் தமிழ் மரபு மையமும் இணைந்து, “தமிழில் சிறுவர் இலக்கியம்: இன்றும் நாளையும்” எனும் தலைப்பில் புதுவையில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் அவரால் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் முழுமையான படிவம். சிறுவர் இலக்கியம் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு, அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தித் தங்களது ஆய்வை முன்னெடுத்துச் செல்ல வழிகோலும் என்கிற அளவுக்கு, சிறுவர் இலக்கியம் குறித்த தீர்க்கமான பார்வையை இடைமருதூர் கி. மஞ்சுளா இந்தச் சிறு நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580156008620
Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum

Related ebooks

Reviews for Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum - Edaimaruthour Ki Manjula

    http://www.pustaka.co.in

    சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்

    Siruvargalukkana Ithazhgalum Illakkiyamum

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காணிக்கை

    வாழ்த்துரை

    அணிந்துரை

    முன்னுரை

    அளப்பரிய பங்களிப்பு

    சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்

    அடிக்குறிப்புகள்:

    கொண்டாட்டம்

    காணிக்கை

    வாழ்த்துரை

    கே. வைத்தியநாதன்

    ஆசிரியர்

    கதை சொல்வது என்கிற வழக்கமோ, சிறுவர்களுக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் நல்லொழுக்கத்தையும், வாழ்க்கைக்கு இன்றியமையாத நற்கருத்துக்களையும் எடுத்தியம்புவதற்காகத்தான். அதனால்தான், எல்லா சமய நூல்களும் சொல்ல வந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் குட்டிக் கதைகளாக்கிக் கேட்பவர்கள் மனதில் பதிய வைத்தன. கதை சொல்லும் வழக்கத்துக்கே முன்னோடி சிறுவர் கதைகள்தான்.

    கதை சொல்வது என்கிற வழக்கம் தொன்று தொட்டு இந்தியாவில் மட்டுமல்ல நாகரிகம் மேம்பட்ட உலக நாடுகள் அனைத்திலுமே இருந்து வந்திருக்கிறது. ஜென் கதைகள், பைபிள் கதைகள், முல்லா கதைகள், பரமார்த்த குரு கதைகள்,

    தெனாலிராமன் கதைகள் என்று மிகப்பெரிய தத்துவங்கள் எல்லாம் குட்டிக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டு, அவை சிறுவர்களுக்கு போதிக்கப்பட்டு வந்தன.

    தமிழகத்தில் நீதி நூல்கள் எல்லாமே ஒருவகையில் சிறுவர் இலக்கியங்கள்தான். அது திருக்குறளானாலும், ஆத்திசூடியானாலும், அவை பிஞ்சு உள்ளங்களில் பதியமிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட உன்னத நீதி நூல்கள். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள அத்தனை இலக்கியங்களும் சிறுவர்களையும், வருங்காலச் சந்ததியினரையும் நல்லொழுக்கமும், நல்லறமும், நன்னெறியும் கொண்ட மாந்தர்களாக மாற்றுவதற்காக எழுதப்பட்டவை.

    இன்றைய காலகட்டத்தில், சிறுவர் இலக்கியத்தின் முன்னோடி யார் என்று ஆராய்ந்தால், அந்த ஆய்வு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரில்தான் தொடங்கும். நவீன தமிழ் இலக்கியத்தில் முன்னோடி சிறுவர் இலக்கியங்களைப் படைத்த பெருமை அவரைத்தான் சாரும். அவரது பாப்பா பாட்டுக்கு இணையாகவும், அதைவிடச் சிறப்பாகவும் அவருக்குப் பிறகு வந்த ஆயிரக்கணக்கான கவிஞர்களுள் ஒருவர்கூட சிறுவர் இலக்கியம் படைக்கவில்லை என்று கூறினால், அது அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல, மகாகவி பாரதியாரின் படைப்பின் பெருமையை எடுத்துரைப்பதற்காக.

    ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரித்து, ஆங்கிலவழிக் கல்வி என்பது பரவலாகிவிட்ட நிலையில், தமிழிலும் ஆங்கிலத்தை ஒட்டிய மழலைகளுக்கான கவிதைகளும், கதைகளும் எழுதப்பட்டு வருகின்றன. அழ. வள்ளியப்பா தொடங்கி கவிஞர்கள் பலரும், ஆங்கில நர்சரி ரைம்ஸ்களை ஒட்டிக் கவிதைகள் படைக்கத் தொடங்கினார்கள். அம்புலிமாமா, கண்ணன், கோகுலம் போன்ற சிறுவருக்கான இதழ்கள் பல தொடங்கப்பட்டன.

    வெகுஜன ஊடகங்களான நாளிதழ்களும், வார இதழ்களும் சிறுவர்களுக்கான இணைப்புகள் கொண்டு வருவது என்பது இன்றியமையாததாகிவிட்டது. பிரபல எழுத்தாளர்கள் பலரும் தங்களது எழுத்துலக வாழ்க்கையை சிறுவர் இலக்கியம் படைத்துத்தான் தொடங்கி இருக்கக்கூடும். மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த சிறுவர் இலக்கியங்களுக்கான வரவேற்பு. தொலைக்காட்சி வந்த பிறகு கணிசமாகக் குறையத் தொடங்கி விட்டது வரலாற்றுச் சோகம். மனித இனம் எதிர்கொள்ளும் பின்னடைவு.

    சிறுவர் இலக்கியங்கள் காட்சி ஊடகங்களின் மூலம் இப்போது கார்ட்டூன் தொடர்களாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றையும் சிறுவர் இலக்கியத்தின் நீட்சி என்றுதான் நாம் கருத வேண்டுமே தவிர, அச்சு ஊடகத்துக்கு ஆபத்தாகவோ, சிறுவர் இலக்கியத்துக்கு எதிரானதாகவோ கருதுவது தவறு.

    சிறுவர் இலக்கியங்கள் குறித்து மிகவும் ஆழமான பல ஆய்வுகளைச் செய்திருக்கும் ‘தினமணி’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி. மஞ்சுளா, சிறுவர்களுக்காகப் பல இலக்கியங்கள் படைத்தவர். தொடர்ந்து ‘சிறுவர்மணி’ இணைப்பில் கதைகள் எழுதி வருபவர். வாசகர்கள் மத்தியில் சிறுவர் கதைகளுக்காகப் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

    ‘சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்’ என்கிற இந்தச் சிறு நூல், சாகித்ய அகாதெமியும், ஆரோவில் தமிழ் மரபு மையமும் இணைந்து, தமிழில் சிறுவர் இலக்கியம்: இன்றும் நாளையும் எனும் தலைப்பில் புதுவையில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் அவரால் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் முழுமையான படிவம்.

    சிறுவர் இலக்கியம் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு, அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தித் தங்களது ஆய்வை முன்னெடுத்துச் செல்ல வழிகோலும் என்கிற அளவுக்கு, சிறுவர் இலக்கியம் குறித்த தீர்க்கமான பார்வையை இடைமருதூர் கி. மஞ்சுளா இந்தச் சிறு நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இலக்கியம் என்பதே சமுதாயத்தை வழிநடத்துவதற்கான அறிவு சார்ந்த கருவி. அதிலும் குறிப்பாக,

    Enjoying the preview?
    Page 1 of 1