Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aimperum Kappiyangal
Aimperum Kappiyangal
Aimperum Kappiyangal
Ebook97 pages30 minutes

Aimperum Kappiyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழந்தமிழர் வாழ்வியல் முறைகள், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறிய நமக்கு சரியான தரவுகளை வழங்குவதில் மிகப் பெரும் இடத்தைப் பெறுவது ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும். ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள கருத்துக்களை மிகவும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அத்தனை காப்பிய நூல்களையும் படித்து அறிய வேண்டி உள்ளது. எனவே அத்தனை நூல்களையும் படித்து அறிந்து அதனுடைய முழுமையான கதையை, செய்திகளை, நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நீண்ட காலம் பிடிக்கும், அத்தனை நூல்களையும் நாம் தேடிப்பிடித்து படிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டி அந்த நூல்களில் உள்ள செய்திகளை, செய்திச் சுருக்கத்தை, கதையை, கதையின் மையக் கருத்தை, கதை மாந்தர்களை, நிகழ்வுகளின் தொகுப்பை நாம் சுருக்கமாக அறிந்து கொள்வதற்கு பயன்படும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் இந்த ஐம்பெரும் காப்பியங்கள் வினா – விடை - விளக்கம் என்ற நூலாகும்.

இந்நூல் குறிப்பாக மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல் என்றால் மிகை ஆகாது. இந்நூலில் தமிழ் இலக்கியத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வெறும் வினா-விடை என்பதில் இருந்து மாறுபட்டு குறிப்பிட்ட வினா-விடை தொடர்புடைய விளக்கமும் இடம் பெறுகிறது. இந்நூலை முழுமையாக படிக்கும் ஒருவர் ஐம்பெரும் காப்பியங்களின் கதைச் சுருக்கத்தை படித்த பயனை அடைவார் என்பதில் ஐயம் இல்லை.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580159809308
Aimperum Kappiyangal

Read more from Kavi. Senguttuvan

Related to Aimperum Kappiyangal

Related ebooks

Reviews for Aimperum Kappiyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aimperum Kappiyangal - Kavi. Senguttuvan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஐம்பெரும் காப்பியங்கள்

    (வினா – விடை விளக்கம்)

    Aimperum Kappiyangal

    Author:

    கவி. செங்குட்டுவன்

    Kavi. Senguttuvan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavi-senguttuvan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    E:\Priya\Book Generation\Ayperumkappiyangal\5-min.gif

    இந்நூல் உருவாகி வெளி வரக் காரணமாக அமைந்த ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்திற்கும், இதற்கு வித்திட்ட மனவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றத்திற்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

    பொருளடக்கம்

    சிலப்பதிகாரம்

    மணிமேகலை

    சீவக சிந்தாமணி

    குண்டலகேசி

    வளையாபதி

    வாழ்த்துரை

    திசையெல்லாம் புகழ் மணக்கும் திருக்குறளை மணிமகுடமாக் கொண்ட தமிழன்னைக்குச் சூட்டப் பெற்ற வேறு பல ஆபரணங்களாக ஐம்பெருங் காப்பியங்களைக் குறிப்பிடலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்றைழைக்கப்படும் இவ்வைந்து ஒப்பற்ற காப்பியங்களும் தமிழின் பெருமையைப் பறை சாற்றுபவை.

    தமிழன்னையின் ஆபரணங்கள் என்று குறிப்பிட்டது ஒப்புக்காக அல்ல . உண்மையிலேயே காப்பியங்கள் அற்புதமான அணிகலன்களை தமது பெயரில் கொண்டுள்ளன .சிலப்பதிகாரத்தில் சிணுங்குகின்ற கால்சிலம்பும், மணிமேகலையில் இடுப்பை அலங்கரிக்கும் ஆரமும், குண்டலகேசியில் காதுகளில் மினுங்கும் குண்டலமும், வளையாபதியில் கரங்களுக்கு அழகூட்டும் வளையலும், சீவக சிந்தாமணியில் அரசனின் முடியில் ஆரோகணித்திருக்கும் சிந்தாமணியும் அழகிய ஆபரணங்களாகப் பிரகாசிக்கின்றன.

    காலங்கள் பல கடந்தும் கவினுற வாழ்ந்திருக்கும் காப்பியங்களைத் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் ஆழ்ந்து கற்க வேண்டியது அவசியமே. ஆயினும் இந்த அவசர யுகத்தில் நாளுக்கு நாள் வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே போவது கண்கூடு . இச்சூழலில் தமிழ்க் காப்பியங்களின் சுவையை நுகரும் வாய்ப்பை இளைய தலைமுறையினர் இழந்து விடுவார்களோ என்கிற கவலை மேலிடுகிறது

    இதனைக் கருத்தில் கொண்டுதான் ஐம்பெருங்காப்பியங்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் முகத்தான் திருமிகு கவி. செங்குட்டுவன் அவர்கள் ஐம்பெரும் காப்பியங்கள் வினா-விடை-விளக்கம் என்ற இந்த அருமையான நூலைச் சமைத்துள்ளார். தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்காகக் காலமெல்லாம் உழைத்த அறிவியல் தமிழின் தந்தை மணவை முஸ்தபா அவர்களின் புதல்வரான மருத்துவர் செம்மல் மணவை முஸ்தபா அவர்களின் சீரிய முயற்சியால் துவங்கப் பெற்ற ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம், மாணாக்கரின் தமிழ் இலக்கிய அறிவை வளர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வாரமும் வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

    அத்தகைய நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி வரும் நூலாசிரியர் வினாக்களுக்கான விடைகளை மட்டும் தராமல் அவை தொடர்பான விளக்கங்களையும் சேர்த்தே இந்நூலில் தொகுத்து வழங்கி இருப்பது சிறப்பாகும் . `பொன் மலர் நாற்றம் உடைத்து’ என்பதற்கு ஒப்பாகும் இது. காப்பியங்கள் என்று சொன்னாலே `நமக்குத் தொடர்பு இல்லாதது’ என்று இளைய தலைமுறையினர் அஞ்சி ஓடி விடாமல் அவர்களும் விரும்பிப் படிக்கும் வண்ணம் நூலின் வடிவமைப்பு அமைந்துள்ளது.

    வினாக்களுக்கு ஏற்ற விடைகளையும் விளக்கங்களையும் பிற்சேர்க்கையாக அளித்திருப்பது சிறப்பாகும். காப்பியங்களைப் பற்றி அறியாதோரும் விடையை ஊகிப்பதற்கான பயிற்சியை இத்தகைய வடிவமைப்பு வழங்குகிறது. உதாரணமாக `கண்ணகி விழாவிற்குச் சென்ற இலங்கை மன்னன் யார்? ‘என்ற வினாவிற்கு (அ) நரகாசுரன் (ஆ) ராவணன் (இ) கயபாகு (ஈ) விபீஷணன் ஆகிய நான்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. நரகாசுரன் என்ற விடையை எவரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியும். இலங்கை மன்னன் என்பதால் ராவணனா அல்லது விபீஷணனா என்ற தடுமாற்றம் மட்டுமே சிந்தையில் எழும். ஆனால் சரியான விடையாக கயபாகு என்றுரைத்த ஆசிரியர், கயபாகு வாழ்ந்த காலம் பற்றிய குறிப்பையும் வழங்குகின்றார்.

    இம்மாதிரியான வினாக்களும், விடைகளும், விளக்கங்களும் நூலை ஒரு சுவாரசியம் மிக்க படைப்பாகத் திகழச் செய்கின்றன. ஐம்பெரும் காப்பியங்களுக்கான குறிப்புகளை 100 வினாக்களுக்குள் அடக்குவது எளிதன்று. இன்னும் ஏராளமான இலக்கியங்களுக்கான வினா-விடை விளக்கங்களுடன் கூடிய நூல்களை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. இரண்டரை மணி நேரத் திரைப்பத்தைக் காண்பதற்கான

    Enjoying the preview?
    Page 1 of 1