Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abdul Kalamin Ariya Karuthugal
Abdul Kalamin Ariya Karuthugal
Abdul Kalamin Ariya Karuthugal
Ebook103 pages41 minutes

Abdul Kalamin Ariya Karuthugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.

He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.

His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122802585
Abdul Kalamin Ariya Karuthugal

Read more from Sabitha Joseph

Related to Abdul Kalamin Ariya Karuthugal

Related ebooks

Reviews for Abdul Kalamin Ariya Karuthugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abdul Kalamin Ariya Karuthugal - Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    அப்துல்கலாமின் அரிய கருத்துக்கள்

    Abdul Kalamin Ariya Karuthugal

    Author:

    சபீதா ஜோசப்

    Sabitha Joseph

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மாணவர்களின் மனங்கவர்ந்தவர்

    சில மனிதர்களை பார்க்கும்போது எழுந்து நின்று மரியாதைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றும்.

    சில மனிதர்களிடம் பேசும்போது தன்னம்பிக்கை ஏற்படும். நம்மாலும் ஜெயிக்க முடியும் என்கிற உணர்வு உண்டாகும்.

    அப்படிப்பட்ட தொரு சிறப்பியல்புகளைக் கொண்ட மனிதர்தான் முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்.

    "அறிவைப் பெற்று அதைப் பரப்புகிறவனே

    மக்களில் சிறந்தவன்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதற்கு ஏற்ப தாம் பெற்ற நல்லறிவை அனைவருக்கும் பரப்பி கொண்டிருப்பவர்தான் அப்துல்கலாம்.

    அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதற்கு முன் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர்கள் எல்லாம் வெறும் ஜனாதிபதிகளாகவே இருந்திருக்கின்றனர்,

    மக்களோடு அவர்களுக்கு நேரடி தொடர்பு இருந்ததில்லை, அவர்களும் மக்களை சந்தித்து பேசியது என்பது மிக மிக அரிது.

    அதேபோன்று குடியரசு தலைவர் மாளிகை என்பது எப்படியிருக்கும் என்பதும், குறிப்பிட்ட வெகு சிலரை தவிர யாருக்கும் தெரியாது. அறிஞர்கள், மாணவர்கள், கவிஞர்கள் யாரும் அதன் அருகில் சென்றதோடு சரி, அதன் உள்ளே செல்ல அனுமதிக்கபட்டதில்லை. எளிமையான மாமனிதர் அப்துல்கலாம் காலத்தில் தான் இவை எல்லாம் மாறியது என்று சொல்லலாம்.

    அப்துல்கலாம் மக்களோடு மக்களாக படித்தவர். பாமரர், ஆசிரியர், மாணவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் பேசினார்- பழகினார்- மக்களில் ஒருவராக இருந்தார். அதனால் தான் அவரை 'மக்கள் ஜனாதிபதி' என்றனர்.

    அவர் காலத்தில் தான் ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் பலரும் சென்று சுற்றி பார்த்து விட்டு வர முடிந்தது.

    விஞ்ஞானியாக இருந்து இந்தியாவின் தலைநிமர பல சாதனைகளை படைத்ததுபோல குடியரசு தலைவராக இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்து அவர் பல சாதனைகளை செய்து இந்தியாவின் பெருமையை உலக நாடுகளில் உயர்த்தியவர்,

    அவர் ஆசிரியராக இருந்த காலத்திலும் சரி, விஞ்ஞானியாக இருந்த காலத்திலும் சரி, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் சரி, பல பல்கலைக் கழகங்களுக்கு பேராசிரியராக இருக்கும் இப்போதும் சரி அவர் மாணவர்களை சந்தித்து பேசுவதை நிறுத்தவில்லை. மாணவர்கள் இளைஞர்களை சந்தித்து பேசும் போதெல்லாம் நிறைய தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை தேன் மாரியாய் பொழிந்திருக்கிறார்.

    அப்படி பல நேரங்களில், பல நேர்காணல்களில் பல பள்ளி, கல்லுாரி நிகழ்வுகளில் டாக்டர் கலாம் மனம் திறந்து பேசிய வெற்றிக்கான அழகிய வார்த்தைகளின் தொகுப்புதான் இந்த நூல், -

    "அறிவைத் தேடுங்கள்! அது நம்மை

    ஆற்றலுடையவனாக ஆக்குகிறது.

    அறிவுரைகள் எங்குக் கிடைப்பினும் இழந்த சொத்து என நினைத்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

    கற்றோரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள்! நூல்களிலிருந்து பெற்ற நல்லறிவை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்" என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    எனவே நான் சேகரித்த அறிவு புதையலை உங்கள் முன் வைத்திருக்கிறேன். வருங்கால இளைஞர் சமுதாயத்துக்கு அதிலும் குறிப்பாக மாணவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இப்புத்தகம் அமையும் என்று நம்புகிறேன்.

    இந்நூல் உருவாக ஆலோசனையும் ஆதரவும் வழங்கிய அன்பிற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி!

    என்றும் நட்புடன்,

    சபீதா ஜோசப்

    என்னவாக விரும்புகிறீர்கள்?

    மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் முதன் முதலாக ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார்.

    மாணவர்களை நோக்கி…

    மேடையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மாணவர்கள் மேடையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். எனவே ஜனாதிபதி உள்ளே நுழைந்ததும் மேடைக்கு செல்லாமல் நேராக மாணவர்கள் அருகிலேயே சென்று, அவர்களுடன் அன்பாக பெயர் விசாரிக்கக் தொடங்கினார். உடனே எல்லா மாணவர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

    திருக்குறளுக்கு பொருள்

    பிறகு ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில் பேசினார். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்; மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்ற திருக்குறளை முதலில் சொல்லி மாணவர்களிடம் திரும்பச் சொல்லச் சொன்னார். அவர்களும் குழுவாக சேர்ந்து திரும்பச் சொன்னார்கள். ‘யாராவது ஒருவர் அதற்கு பொருள் சொல்லுங்கள்' என்று கலாம் கேட்க,

    ஒரு மாணவர் எழுந்து, 'உயர்வான எண்ணம் இருக்க வேண்டும்’ என்று பதில் கூறினார்.

    பிறகு ஜனாதிபதி விளக்கிக்கூறினார்.

    "நமக்கு உயர்வான எண்ணம் இருக்க வேண்டும். நம்முடைய லட்சியத்தில் வெற்றிபெற உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியும் அதிகம் கிடைக்கும்.

    நீங்கள் எல்லாம் பத்தாம் வகுப்பு வரை இங்கு படிக்கிறீர்கள், படித்து முடித்த பிறகு என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?" - என்று கேட்டார்.

    என்னவாக விருப்பம்

    விஜயகுமார் என்ற மாணவர் எழுந்து, "நான் படித்து, முடித்ததும் நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன்’ என்றார். ‘நான் ஏழைகளுக்கு தொண்டு செய்வேன்’ என்றார். மதுசூதனன் என்ற மாணவர், 'நான் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவேன்’ என்றார். மகேந்திரன், 'நான் ஆட்டோ மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவேன்’ என்றார். இன்னொரு துடிப்பான மாணவர் எழுந்து, 'நான் உங்களைப் போல விஞ்ஞானி ஆவேன்’ என்றார்,

    அப்போது தான் கலாமுக்கு உற்சாகம் ஏற்பட்டது. ‘அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?' என்று ஆர்வத்துடன் கேட்க, மாணவர்கள் ‘ஹார்டு ஓர் க்

    Enjoying the preview?
    Page 1 of 1