Nee Unnai Arindhaal...
By G. Meenakshi
()
About this ebook
'புதிய தலைமுறை கல்வி'யில் நான் அசிஸ்டென்ட் எடிட்டராகப் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்த வேளை. ஒரு நாள் ஆசிரியர் மாலன் என்னை அழைத்து, 'உங்களுக்குக் கதை எழுதத் தெரியுமா?' என்று கேட்டார். அதற்காகவே காத்திருந்தது போல, "தினமணி கதிர்ல நிறைய கதைகள் எழுதியிருக்கேன், சார்” என்றேன் குழந்தையின் குதூகலத்தோடு.
“நம்முடைய கல்வி இதழ்ல மாணவர்களுக்காக ஒரு தொடர் கொண்டு வரலாம்னு நினைக்கிறேன். அது அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள் பற்றியதா இருக்கணும். அவர்களோட சாதனைகளை ஒரு கதை போல எழுதணும். இதோ, இந்தப் புத்தகத்தைப் போல இருக்கணும்” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் ஆசிரியர்.
குறிப்பிடத்தக்க சாதனை படைத்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டுக் கொண்டு வரும்படியும் பணித்தார். என் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்? விறுவிறுவென்று சாதனையாளர்களைப் பற்றிய ஒரு பெரிய லிஸ்ட்டை தயாரித்து அவரிடம் நீட்டினேன். அந்தப் பட்டியலிலிருந்து 12 முத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் ஆசிரியர்.
பத்திரிக்கைத் துறைக்கு நான் வந்ததிலிருந்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ஆனாலும் ஒரு தொடர் எழுதுவது என்பது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். என்னைவிட என்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் என் அன்பிற்குரிய ஆசிரியர் திரு. மாலன், இந்த அரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
கொஞ்சம் பதற்றத்துடனும், நிறைய அக்கறையுடனும் புதிய தொடரை எழுதுவதற்கான பணிகளில் இறங்கினேன். இதற்காக ஏராளமான புத்தகங்களைப் படிக்க வேண்டி இருந்தது. சொந்த செலவில் சில புத்தகங்களை வாங்கினேன். நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்தேன். தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'இஸ்ரோ'வில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டேன். இப்படி... ஒரு தேர்வுக்குத் தயாராகும் மாணவியைப்போல, பல விஷயங்களைத் தொகுத்து ஒரு கதை வடிவில், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுவாரஸ்யமான கட்டுரைகளாக எழுதி அமெரிக்காவில் இருந்த மாலன் சாருக்கு இ-மெயிலில் அனுப்பிவிட்டு பதிலுக்காக நெஞ்சம் 'திக்... திக்...'கிட காத்திருந்தேன்.
“வெல்டன்! விரைவில் தொடரைத் தொடங்கலாம்!" என்று அவரிடமிருந்து பதில் வந்ததும், உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான்!
ஆசிரியர் இந்தியா திரும்பியதும், தொடருக்கான தலைப்புகளாக பத்து தலைப்புகளை எழுதி எடுத்துப்போய் அவரிடம் நீட்டினேன். இறுதியில் அவர் ஒரு தலைப்பைக் கொடுத்தார். அதுதான் ‘நீ உன்னை அறிந்தால்...!'
தலைப்பு தயாரானவுடன், ‘புதிய தலைமுறை கல்வி' இதழில் 'நீ உன்னை அறிந்தால்...' தொடர் வருவது குறித்து விளம்பரம் என் பெயருடன் வெளியானது. எனக்குப் பெருமை தாளவில்லை. பத்திரிகைத் துறையில் இருப்பவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம், மாலன் சார்!
இந்தத் தொடரில் விக்ரம் சாராபாய், ஜகதீஷ் சந்திர போஸ், சதீஷ் தவான் போன்ற விஞ்ஞானிகளின் வரலாறுகளும், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களின் சரித்திரங்களும் இடம்பெற்றன. வாராவாரம் தொடர் வெளிவந்து கொண்டிருந்தபோதே, வாசகர்களின் பாராட்டுக் கடிதங்களும் வந்து குவிந்தன. குறிப்பாக, மாணவர்கள் இத்தொடரைப் பெரிதும் ரசித்தனர். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் இத்தொடரைப் படித்துவிட்டு, அறிவியல் அறிஞர்களைப் பற்றி இதுவரை அறியாத தகவல்களையும் தான் அறிந்து கொண்டதாகப் பாராட்டியது மறக்க முடியாத ஒன்று. 'குழந்தைகளுக்கான ஒரு தொடர் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தத் தொடர்' என்று அந்தப் பேரறிஞர் வாழ்த்தியதுடன், இது ஒரு புத்தகமாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இதோ - ‘நீ உன்னை அறிந்தால்...’ தொடர், இப்போது புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது!
- ஜி. மீனாட்சி
Read more from G. Meenakshi
Vaanathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMallikavin Veedu Rating: 5 out of 5 stars5/5Poo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Mella Thiranthathu Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsPeru Mazhai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsParisalil Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsPrabalamanavargalin Vetri Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Raatinam Rating: 0 out of 5 stars0 ratings360° Kaadhal Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Niraintha Vettridam Rating: 0 out of 5 stars0 ratingsPesum Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Avatharam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nee Unnai Arindhaal...
Related ebooks
Aindhu Naadugalil Arubathu Naal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsUllangai Ariviyal Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPullikal... Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsPyramidgalum Avai Patriya Athisayangalum Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Vellum Naal Rating: 0 out of 5 stars0 ratingsUnnaipol Oruvar Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsArivukkum Appaal! Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsPaadi, Aadu Papa Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Pudhuyuga Puratchi - Narayanamurthy-in Vazhkkai Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsMuyalukku Kidaitha Pokkisham Rating: 0 out of 5 stars0 ratingsPoochiyathin Arasan Rating: 5 out of 5 stars5/5Irumbu Thottam Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsMu. Varatharasanar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsProject AK Rating: 0 out of 5 stars0 ratingsKarna Parambarai Rating: 5 out of 5 stars5/5Oppanaikalin Koothu Rating: 0 out of 5 stars0 ratingsAppa Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 8 Rating: 0 out of 5 stars0 ratingsSathanai Semmal Sa.Ve.Su. Rating: 0 out of 5 stars0 ratingsAbarnavin Nagalkal Rating: 0 out of 5 stars0 ratingsAthvaidham Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsPappa Magizha 10 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Unnai Arindhaal...
0 ratings0 reviews
Book preview
Nee Unnai Arindhaal... - G. Meenakshi
http://www.pustaka.co.in
நீ உன்னை அறிந்தால்...
Nee Unnai Arindhaal...
Author:
ஜி.மீனாட்சி
G. Meenakshi
For more books
https://www.pustaka.co.in/home/author/g-meenakshi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அணுவினுள் ஆற்றல் கண்டார்
2. தவறு என்னுடையது; சாதனை அவர்களுடையது
3. விண்ணைத் தாண்டி வென்றவர்
4. வானில் ஒரு விடிவெள்ளி
5. பசியில்லாத பாரதம் அதுவே என் வேதம்!
6. விண்வெளி என் வீடாகும்!
7. எண்(ங்)களின் தோழன்
8. சரித்திரம் படைத்த சாதனைத் தமிழர்!
9. ஸாரே ஜஹான் ஸே அச்சா!
ஹிந்துஸ்தான் ஹமாரா!
10. படிக்காத விஞ்ஞானி!
11. தாவரங்களின் நண்பன்!
12. மாணவர் போற்றிய மாமேதை!
என்னுரை
'புதிய தலைமுறை கல்வி'யில் நான் அசிஸ்டென்ட் எடிட்டராகப் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்த வேளை. ஒரு நாள் ஆசிரியர் மாலன் என்னை அழைத்து, 'உங்களுக்குக் கதை எழுதத் தெரியுமா?' என்று கேட்டார். அதற்காகவே காத்திருந்தது போல, தினமணி கதிர்ல நிறைய கதைகள் எழுதியிருக்கேன், சார்
என்றேன் குழந்தையின் குதூகலத்தோடு.
நம்முடைய கல்வி இதழ்ல மாணவர்களுக்காக ஒரு தொடர் கொண்டு வரலாம்னு நினைக்கிறேன். அது அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள் பற்றியதா இருக்கணும். அவர்களோட சாதனைகளை ஒரு கதை போல எழுதணும். இதோ, இந்தப் புத்தகத்தைப் போல இருக்கணும்
என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் ஆசிரியர்.
குறிப்பிடத்தக்க சாதனை படைத்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டுக் கொண்டு வரும்படியும் பணித்தார். என் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்? விறுவிறுவென்று சாதனையாளர்களைப் பற்றிய ஒரு பெரிய லிஸ்ட்டை தயாரித்து அவரிடம் நீட்டினேன். அந்தப் பட்டியலிலிருந்து 12 முத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் ஆசிரியர்.
பத்திரிக்கைத் துறைக்கு நான் வந்ததிலிருந்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ஆனாலும் ஒரு தொடர் எழுதுவது என்பது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். என்னைவிட என்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் என் அன்பிற்குரிய ஆசிரியர் திரு. மாலன், இந்த அரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
கொஞ்சம் பதற்றத்துடனும், நிறைய அக்கறையுடனும் புதிய தொடரை எழுதுவதற்கான பணிகளில் இறங்கினேன். இதற்காக ஏராளமான புத்தகங்களைப் படிக்க வேண்டி இருந்தது. சொந்த செலவில் சில புத்தகங்களை வாங்கினேன். நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்தேன். தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'இஸ்ரோ'வில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டேன். இப்படி... ஒரு தேர்வுக்குத் தயாராகும் மாணவியைப்போல, பல விஷயங்களைத் தொகுத்து ஒரு கதை வடிவில், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுவாரஸ்யமான கட்டுரைகளாக எழுதி அமெரிக்காவில் இருந்த மாலன் சாருக்கு இ-மெயிலில் அனுப்பிவிட்டு பதிலுக்காக நெஞ்சம் 'திக்... திக்...'கிட காத்திருந்தேன்.
வெல்டன்! விரைவில் தொடரைத் தொடங்கலாம்!
என்று அவரிடமிருந்து பதில் வந்ததும், உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான்!
ஆசிரியர் இந்தியா திரும்பியதும், தொடருக்கான தலைப்புகளாக பத்து தலைப்புகளை எழுதி எடுத்துப்போய் அவரிடம் நீட்டினேன். இறுதியில் அவர் ஒரு தலைப்பைக் கொடுத்தார். அதுதான் ‘நீ உன்னை அறிந்தால்...!'
தலைப்பு தயாரானவுடன், ‘புதிய தலைமுறை கல்வி' இதழில் 'நீ உன்னை அறிந்தால்...' தொடர் வருவது குறித்து விளம்பரம் என் பெயருடன் வெளியானது. எனக்குப் பெருமை தாளவில்லை. பத்திரிகைத் துறையில் இருப்பவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம், மாலன் சார்!
இந்தத் தொடரில் விக்ரம் சாராபாய், ஜகதீஷ் சந்திர போஸ், சதீஷ் தவான் போன்ற விஞ்ஞானிகளின் வரலாறுகளும், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களின் சரித்திரங்களும் இடம்பெற்றன. வாராவாரம் தொடர் வெளிவந்து கொண்டிருந்தபோதே, வாசகர்களின் பாராட்டுக் கடிதங்களும் வந்து குவிந்தன. குறிப்பாக, மாணவர்கள் இத்தொடரைப் பெரிதும் ரசித்தனர். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் இத்தொடரைப் படித்துவிட்டு, அறிவியல் அறிஞர்களைப் பற்றி இதுவரை அறியாத தகவல்களையும் தான் அறிந்து கொண்டதாகப் பாராட்டியது மறக்க முடியாத ஒன்று. 'குழந்தைகளுக்கான ஒரு தொடர் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தத் தொடர்' என்று அந்தப் பேரறிஞர் வாழ்த்தியதுடன், இது ஒரு புத்தகமாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இதோ - ‘நீ உன்னை அறிந்தால்...’ தொடர், இப்போது புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது!
எழுதுவதற்கு சுதந்திரமும், களமும் அமைத்துக் கொடுத்த ‘புதிய தலைமுறை' இதழின் நிறுவன ஆசிரியர் திரு. ஆர்.பி.சத்தியநாராயணனுக்கும், ‘புதிய தலைமுறை' ஆசிரியர் திரு. மாலனுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.
அன்புடன்
ஜி. மீனாட்சி
*****
1. அணுவினுள் ஆற்றல் கண்டார்
பள்ளியில் நாளை ரிவிஷன் டெஸ்ட். வித்யா விழுந்து, விழுந்து படித்துக் கொண்டிருந்தாள். அவளது தம்பி ராகுலின் கையிலும் புத்தகம் இருந்தது. ஆனால் அவன் தூங்கித் தூங்கி விழுந்து கொண்டிருந்தான்.
பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வந்த அப்பா, ராகுலைப் பார்த்து அவன் முதுகில் ஒரு தட்டு தட்டினார். திடுக்கிட்டுக் கண் விழித்தான் ராகுல்.
தூக்கம் வர்றதா இருந்தா, போய் முகம் கழுவிட்டு வந்து படி
என்றார்.
ராகுல் எழுந்து சென்று முகம் கழுவிவிட்டு வந்தான்.
ராகுல், நாளைக்கு டெஸ்ட்டை வச்சுக்கிட்டு, இப்படித் தூங்கி வழியறயே... ஒரு குழந்தை மூணு வயசு வரைக்கும் அதிகமாத் தூங்காம இருந்ததுங்கிற விஷயம் உனக்குத் தெரியுமா?
என்று கேட்க, ராகுலின் உறக்கம் முழுவதுமாக விலகியது.
ஆச்சரியமா இருக்கேப்பா! அப்படித் தூங்காம இருக்க முடியுமா?
என்றான்.
அந்தக் குழந்தையோட பெற்றோர் பெரிய பணக்காரங்க. நல்லா படிச்சவங்க. சாதாரணக் குழந்தைகளைப்போல, தங்களோட குழந்தை சரியாத் தூங்கறதில்லைன்னு ரொம்பவும் கவலைப்பட்டாங்க. மும்பையில் இருந்த ஒரு டாக்டர்கிட்ட குழந்தையைக் கொண்டுபோய் காட்டினாங்க. குழந்தையைப் பரிசோதிச்ச டாக்டர், 'இந்தக் குழந்தையோட மூளைத் திறன் அபார ஆற்றல் கொண்டதா இருக்குது. மனசுக்கு அதிக வேலை கொடுக்கிறதாலதான் இவனால் அதிக நேரம் தூங்க முடியறதில்லை. இதனால், இந்தக் குழந்தை பிற்காலத்துல பல சாதனைகள் புரிய வாய்ப்பிருக்கு'னு ஆறுதல் சொன்னார்.
டாக்டர் சொன்னது பலிச்சிதா அப்பா? அந்தக் குழந்தை சாதனை படைச்சதா?
- ஆர்வத்துடன் கேட்டாள் வித்யா.
சின்னப் பையனா இருந்தப்பவே படிப்பு, இசை, ஓவியம்னு எல்லாத் திறமைகளும் நிறைஞ்சவனா இருந்தான் அந்தப் பையன். பெற்றோர், அந்தக் குழந்தையை மும்பையிலிருந்த மிகச் சிறந்த ஸ்கூல்ல சேர்த்தாங்க. ஸ்கூல்ல டீச்சர்களும், மற்ற மாணவர்களும் ஆச்சரியப்படறபடி அறிவாளியா இருந்தான். படிக்கிற நேரம் போக மத்த நேரத்துல ஓவியம், விளையாட்டு, லேப்ல ஆராய்ச்சினு நேரத்தைச் செலவிட்டான். அவனோட அம்மா, அப்பாவும் அவனுக்கு நிறையப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்குவிச்சாங்க...
அவர் எந்த சப்ஜெக்ட்ல பிர்லியண்ட்டா இருந்தார்ப்பா...?
"கணக்கும் சயின்ஸும், அவனுக்கு ரொம்பவும் பிடிச்ச சப்ஜெக்ட்டுகள். அவனை ஓர் என்ஜினீயராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார் அவனோட அப்பா ஜஹாங்கீர். அப்பாவோட பேச்சுக்குக் கட்டுப்பட்டு, இங்கிலாந்துல இருக்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துல என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து பட்டம் வாங்கினார். ஐரோப்பாவுல கணக்குப் படிக்கவும் அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சது. அங்கே பாலி, ஃபெர்மிங்கிற புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களோட கலந்து பழகற வாய்ப்பும் கிடைச்சது. அவங்களோட சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார்.