Annavin Arasiyal Kathaigal - 100
1/5
()
About this ebook
Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.
He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.
His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.
Read more from Sabitha Joseph
Kirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Vivekanandar 100 Rating: 0 out of 5 stars0 ratingsM.G.R 100 Rating: 0 out of 5 stars0 ratingsAbdul Kalamin Ariya Karuthugal Rating: 0 out of 5 stars0 ratingsD. G. S. Dinakaranin Arul Neri Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Sindhikka 100 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPrabhakaran - 100 Rating: 0 out of 5 stars0 ratings100 Thalaivargal 100 Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsMahakavi Bharathiyar - 100 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Annavin Arasiyal Kathaigal - 100
Related ebooks
Neethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsPennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsThapithey Theeruven Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsCharacter Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Vaanampadikal Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Appusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Vizhiye Kathai Ezhuthu Rating: 0 out of 5 stars0 ratingsAah Aah! Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsKuberasamy Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsUnmaigal Urangattum Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Nila Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsNavarathinam Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaiyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsIrul Thee Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Oru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Aasai 60 Varusham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Annavin Arasiyal Kathaigal - 100
1 rating0 reviews
Book preview
Annavin Arasiyal Kathaigal - 100 - Sabitha Joseph
http://www.pustaka.co.in
அண்ணாவின் அரசியல் கதைகள் – 100
Annavin Arasiyal Kathaigal -100
Author:
சபீதா ஜோசப்
Sabitha Joseph
For more books
http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முன்னுரை
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழுக்கும், தமிழ்மொழிக்கும், தமிழக மக்களுக்கும் செய்த தொண்டு கணக்கிலடங்காதவை என்றால் அது மிகையாகாது!
நாணயமான - நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியவர். அரசியலில் தூய்மை, மக்களுக்கான நல்லாட்சி செய்தவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சீடர்.
அரசியல் நாகரிகம், சபை நாகரிகம், மேடை நாகரிகம் என தமிழர்களுக்குத் தமது சொல் ஆற்றலால் பகுத்தறிவு வகுப்பெடுத்தவர் அறிஞர் அண்ணா. அவரது நூற்றாண்டு 2009-ல் வருகிறது. இன்னும் பல நூற்றாண்டுகளை கடந்தும் அவர் புகழ் பேசப்படும்.
மேடைகள்தோறும் செந்தமிழ் தேன்மாரி பொழிந்த அண்ணா தம் அரசியல் எதிரணிக்காரர்களுக்கும், தமது கொள்கைக்கு எதிரானவர்களுக்கும், வாழைப்பழத்தில் ஊசியைப்போல நறுக் சுறுக் என்று சின்னச் சின்னக் கதைகளைத் தனது பேச்சின் இடையே சொல்வதுண்டு.
அண்ணா அப்படி பல மேடைகளில் உதாரணமாய் சொன்ன அரசியல் கதைகள் பலவுண்டு. அவற்றில் 100 கதைகளைத் தேர்ந்தெடுத்து அவரது நூற்றாண்டையொட்டி தொகுத்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அறிஞர் அண்ணா சொன்ன 100 அரசியல் கதைகளை வெளியிடுகின்ற எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி!
என்றும் அன்புடன்,
சபீதா ஜோசப்
***
1. அரசனுக்கு வந்த கோபம்…!
அவன் அரசன்! சித்திரக்காரனின் சிறப்புப்பற்றி கேள்விப்பட்டான், அவன் தீட்டிய சித்திரங்களையும் கண்டான், களித்தான், சபைக்கு அழைத்து உபசரித்தான், தன் உருவத்தைத் தீட்டித்தரச் சொன்னான், ஓவியன் தீட்டித்தந்தான். அதனைக் கண்ட மன்னனோ கடுங்கோபம் கொண்டான்.
ஏ! சைத்ரீகா! இது என்ன கோரமான படம்! முகத்திலே இவ்வளவு அவலட்சணமா இருப்பது? கண் ஒன்று பழுதுற்றுக் காணப்படுகிறதே? கன்னத்திலே குழி, தலை வழுக்கை, முன்வரிசைப் பற்களிலே மூன்றைக் காணோம்! இது என்ன ஆபாசமான படம்!
உன்னை பெரிய சித்திரக்காரன் என்று ஊரெங்கும்
புகழ்ந்தார்களே! உன் யோக்கியதை இதுதானா? இராஜ சபைக்கு ரசாபாசமான படமா தயாரிப்பது? என்று ஏசினான், வாளை வீசினான், சித்திரக்காரன் சிரித்தான்.
அரசே எனக்கு சில சமயங்களில் சந்தேகம் தோன்றுவதுண்டு, உண்மையிலேயே நாம் உள்ளதை அப்படியே தீட்டும் அளவு திறமை பெற்றிருக்கிறோமா இல்லையா என்று, அச்சந்தேகம் அறவே நீங்கிவிட்டது இன்று. நான் அடைய வேண்டும் என்று எண்ணிய திருப்தி ஏற்பட்டு விட்டது, ஆகவே மரணதண்டனையை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் என்னுடைய கடைசி வேண்டுகோள் ஒன்று, தயவு செய்து என்னை வாளால் வெட்டும் முன் தங்கள் உருவத்தை நிலைக்கண்ணாடியில் ஒரு முறை பார்த்துவிட்டு வாரும் என்றான்,
மன்னன் கண்ணாடி முன் நின்றான், ஒரு கணம் தலைகுனிந்தான், கூப்பிடு காவலரை என்றான், ஓவியனை மன்னித்துவிட்டோம்! போகச்சொல் என்றான், படுக்கை அறைக்குச் சென்றான் – படுத்தான் - புரண்டான்! தன் உருவம் ஓவியனின் தீட்டுக்கோலுக்கு இலாயக்கற்றது என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
1909 - ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் பிறந்தார், அவரது தந்தை பெயர் நடராஜன், தாயார் பங்காரு அம்மாள், அண்ணா உடன் பிறப்பு நாகரத்தினம் அம்மாள் (தமக்கை) அவரது வளர்ப்புத் தாய், ராஜாமணி அம்மாள்(சிற்றன்னை)
***
2. காளியின் கண்களில் நீர் ஏன் வந்தது...?
இசை வல்லுனன் ஒருவன் இருந்தான், அவன் யாராலும் அசைக்க முடியாத ஆற்றல் பெற்றவன், தான் என்ற அகம்பாவம் கொண்டானாம், தான் பாடினால் கல்லும் கசிந்துருகும் என்று கூறிவந்தான்.
ஒரு நாள் அரசன் அவன் இசையினைக்கேட்க பந்தயம் வைக்க, காளி கோயிலின் உள்ளே வல்லுனன் பாடினான், பாடிய உடனே கல்சிலையான காளியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று, உடனே அரசன் அவனை ஆரத்தழுவி, பூரிப்பு கொண்டு, இது அல்லவா விந்தை என்று ஆச்சரியப்பட்டான், காளி கண்களிலே கண்ணீர் எப்படி வந்தது? பக்தனின் பாட்டினாலா? அல்லது பாடகன் பாட ஆரம்பித்ததும் அவன் பழகிவித்த சீடன் சிலைக்குப் பின்னே சென்று காளிசிலை கண்களுக்கும், தண்ணீர் தொட்டிக்கும் ஒரு பொறியால் தொடர்பு ஏற்படுத்துவான்! இதுதான் கண்ணீர் வந்த மாயம். ஆகவே அவன் வென்றது பாட்டால் அல்ல... தந்திரத்தால் இப்படி ஏமாந்து அரசன் புகழ்ந்து கொண்டிருக்க...
அப்போது அந்தப்போட்டியில் ஈடுபடாத ஓர் இளைஞன் எழுந்து, இந்த இசை வல்லுனரால் கல் உருகத்தான் பாட முடியும், ஆனால் மனிதரின் உள்ளமே உருகும்படி நான் பாடுவேன் என்று கூற, போட்டியில் கலந்து அவன் பாட, அந்த அரசனும் இசை வல்லுனரும் அழுதார்கள்.
1914 - ஆம் ஆண்டு ஐந்து வயதில் பச்சையப்பன் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கேயே படித்து தேர்வு பெற்றார்.
***
3. பாட்டை நிறுத்து
அந்த அம்மையார் ஆனந்தமாக ஆலாபனத்துடன் அபிஷேகித்துக் கொண்டிருந்தார்! அபஸ்வரத்துடன் கூட உமிழ் நீரும் கலந்து வீசியதால் சபையிலே சங்கடம்தான் என்றாலும், இசை விருந்தூட்டுவதாக எண்ணிக்கொண்டு அம்மையார் பாடியபடி இருக்கவே, பட வேண்டியதை பட்டாக வேண்டும் என்ற வேதாந்தத்தை துணைக்கொண்டு மன்றிலே பலர் இருந்தனர்.
அம்மையாருக்குத் தெரியாது தமது ஆலாபனம் நள்ளிரவு நாராசமாக இருப்பது, கச்சேரியின் இறுதிக் கட்டத்திலே கனிவுடன் இசைவாணர்கள் கேட்பதுண்டு. சபையினரை என்ன தேவை என்று அம்மையும் கேட்டார், அங்கொருவர் ஆண்டிப் பண்டாரம் கேட்டார், மற்றொருவர் மாங்காய்ப் பாட்டு கேட்டார், அம்மை இல்லை எனாது, ஈயும் இயற்கையராகி விட்டார், அல்லற்பட்டுக் கிடந்தார் முதல் வரிசைக்காரர் ஒருவர், அவரை அன்புடன் நோக்கி அம்மை என்ன வேண்டும் என்று கேட்டார் அவர் சொன்னார்? அவர் நிதானமாக ஆனால் தீர்மானமாக நிறுத்தவேண்டும் என்றார்.
அவர் விடுதலை பெற அந்த வீர உரை தவிர வேறு வழியில்லை! எவ்வளவு தொல்லையைப் பொறுத்துக் கொள்வார். சுரஸ்தானத்தைத் துச்சமாகக் கருதி தாளத்தை துறந்து, இயற்கைக் கருவி வாய் என்பதை மறந்து நாசி நாதம் கிளப்பி நள்ளிரவிலே அந்த அம்மை அவதியூட்டினார்கள், எப்படி சகிப்பது? என்று ஏங்கினார், துணிந்து கூறினார் பாடுவதை நிறுத்த வேண்டும் என்று.
1927 - ல் பள்ளிப் படிப்புக்குப் பின்னர் சிறிது காலம் காஞ்சிபுரம்