Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Prabhakaran - 100
Prabhakaran - 100
Prabhakaran - 100
Ebook97 pages1 hour

Prabhakaran - 100

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.

He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.

His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122802863
Prabhakaran - 100

Read more from Sabitha Joseph

Related to Prabhakaran - 100

Related ebooks

Reviews for Prabhakaran - 100

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Prabhakaran - 100 - Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    பிரபாகரன் - 100

    Prabhakaran - 100

    Author:

    சபீதா ஜோசப்

    Sabitha Joseph

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    1. நேதாஜி மீண்டும் பிறந்தார்

    நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்கவேண்டும் என்று நேதாஜியே கூறியிருக்கிறார் என்பது தேவர் திருமகனின் வாக்குமூலம்.

    தாய்நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த அந்த தன்னலமில்லாத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான், மறுபடியும் 1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் பிரபாகரனாகப் பிறந்தாரோ… என்னவோ…

    வீரமும், தியாகமும் நிறைந்த நேதாஜியின் வாழ்வும், அவரது இந்திய தேசிய இராணுவத்தின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டமும் தமிழீழ இளைஞர்களைக் கவர்ந்தன. உந்து சக்தியாகத் திகழ்ந்து அவர்களுக்கு வழிகாட்டின. நேதாஜியை எவ்வளவு உயர்வாக தம்பி பிரபாகரன் மதித்தார்.

    இப்படி நேதாஜியைப் பின்பற்றி பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கி தனது தாயகத்தை மீட்கப் போராடி வருகிறார். என்று தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ் என்ற நூலிலின் முன்னுரையில் முன்மொழிகிறார், இந்த வார்த்தைகளிலிலிருந்து இன்னொன்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

    சுபாஷ் சந்திரபோஸ் என்னும் உண்மை வீரனின் பாதையில் தான் தம்பி பிரபாகரன் பயணிக்கிறார் என்பது.

    ***

    2. தம்பி குடும்பம்

    வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை-பார்வதி அம்மாள் தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் பிரபாகரன் பிறந்தார்.

    அப்பா வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறையிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் தர்மகர்த்தாவாகவும், அரசாங்க வேலையான மாவட்ட நில அளவை அதிகாரியாகவும் இருந்தார். அம்மா வள்ளிபுரம் பார்வதி, குடும்பத்தலைவி.

    பிரபாகரன் பிறந்த போது எனக்கு இரண்டு வயது. நாங்கள் தம்பியை செல்லமாக பிரபா என்றுதான் கூப்பிடுவோம்.

    குண்டு கன்னங்கள், கொழுகொழு உடம்பு, ஆளை அசரடிக்கும் சிரிப்புடன் பிரபா தவழ்ந்து வருவதைப் பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். தம்பிக்கு என் மேல் பாசம் அதிகம். அக்கா, அக்கா என்று என் கூடவே ஒட்டிக் கொண்டே வருவான்.

    நானும், தம்பியும் வல்வெட்டித்துறை பூங்காவில் ஓடிப்பிடித்து விளையாடியது எனக்கு இப்போது நினைவில் இருக்கும் பசுமைக் காட்சி அது என்கிறார்.

    ***

    3. பிரபாவின் படிப்பு

    கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மட்டக்களப்பு நகரில் ஆரம்பக் கல்வி கற்றார், அப்போது அவருடைய தந்தை அங்கு பணியாற்றினார். பிறகு சொந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஆலடி சிவகுரு வித்யாலயத்தில் துவக்கக் கல்வி பயின்றார் பிரபாகரன். அங்கிருந்து வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு சிதம்பரம் வித்யாலயம் பள்ளிக்கூடத்தில் பிரபாகரன் படித்தார். அங்கு அவர் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தார். (ஆனால் பொதுத் தேர்வு எழுதவில்லை) படிப்பில் அவர் படுசுட்டி என்றாலும் அப்போது ரகசிய இயக்கத்தில் தொடர்பு கொண்டதால் மேற்கொண்டு படிப்பை தொடர இயலவில்லை.

    "சின்ன வயதில் இருந்தே பிரபாவுக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதில் அலாதி ஆர்வம் இருந்தது. எங்கள் அம்மாவிடம் இருந்து வந்த பாதிப்பு அது என்று நினைக்கிறேன்.

    அதிலும் மகாபாரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் போர் வியூக அணுகு முறைகள், சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதப் போராட்டங்கள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிப்பான், இதுமாதிரிக் கதைகள்தான் என் தம்பி பிரபாகரன் போராட்ட வழியில் ஈர்த்திருக்கிறது" என்று நினைக்கிறேன். இப்படி தம்பியின் படிப்பைப் பற்றி அவரது சகோதரி வினோதினி சொல்கிறார்.

    ***

    4. அத்தையின் கோலம்

    நேதாஜி சின்ன வயது முதலே சுதந்திர தாகம் கொண்டு வெள்ளையரை எதிரியாக பார்க்கத் தொடங்கியதுபோல, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனும் சின்ன வயது முதலே சிங்களர் மீது வெறுப்பு கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

    1958, கலவரத்தின்போது கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்களின் வீடுகள், சொத்துக்கள், சிங்களர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

    இந்த கலவரத்தால் வீடு, வாசல் சொத்துக்களை இழந்தவர்களில் பிரபாகரனின் அத்தையும் ஒருவர். அவர் தன் கணவருடன் கொழும்பு நகரில் வசித்து வந்தார். அவரது கண் முன்பாக அவரின் கணவரை அடித்துக் கொன்று வீட்டுக்குத் தீவைத்து விட்டார்கள்.

    தீக்காயம் அடைந்த அத்தை இருந்த கோலத்தைப் பார்த்து அந்த சின்ன வயதில் அதிர்ச்சி அடைந்தார், பிரபாகரன், தனக்கு நேர்ந்த கொடுமையை அத்தை சொல்லக்கேட்டு பிரபாகரனின் ரத்தம் கொதித்தது. சின்ன வயதிலேயே சிங்களர்களின் மீதுதம்பிக்கு வெறுப்பு ஏற்பட்டது.

    ***

    5. தம்பி கேட்ட கேள்வி

    "பிரபாவுக்கு நாலு வயதாக இருக்கும்போது அப்பாவுடன் ஒரு தடவை கப்பலில் சென்று வந்தான், அப்போது கொழும்புவில் நடந்த கலவரத்தில் எண்ணற்ற தமிழர்கள் பலியான தருணம் அது.

    அன்று இரவு தம்பி பிரபா சாப்பிடவே இல்லை, அந்தக் கொடுமை அவனை மிகவும் பாதித்திருந்தது."

    சிங்களர்கள் ஏனக்கா தமிழர்களை இப்படி கொத்தடிமைப் போல நடத்துகிறார்கள்? அப்போது தம்பி கேட்டான், அவனின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1