100 Thalaivargal 100 Thagavalgal
()
About this ebook
Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more.
He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals.
His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.
Read more from Sabitha Joseph
Prabhakaran - 100 Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Vivekanandar 100 Rating: 0 out of 5 stars0 ratingsM.G.R 100 Rating: 0 out of 5 stars0 ratingsAbdul Kalamin Ariya Karuthugal Rating: 0 out of 5 stars0 ratingsD. G. S. Dinakaranin Arul Neri Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Sindhikka 100 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMahakavi Bharathiyar - 100 Rating: 0 out of 5 stars0 ratingsAnnavin Arasiyal Kathaigal - 100 Rating: 1 out of 5 stars1/5
Related to 100 Thalaivargal 100 Thagavalgal
Related ebooks
Tamizhaga Medai Aalumaikal Rating: 0 out of 5 stars0 ratingsAaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Mahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Ezhuthin Kotpadu : Sujatha Rating: 5 out of 5 stars5/5ஐ.எஸ்.ஐ Rating: 5 out of 5 stars5/5Appusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPurananootru Sirukadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanam - Ayodhya Kandam Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 3 out of 5 stars3/5Pathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Endrum Sakthiyudan Irukka Vazhikal Rating: 1 out of 5 stars1/5Illathavargal Rating: 5 out of 5 stars5/5Thagappan Kodi Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsManalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Pon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Viral Rating: 0 out of 5 stars0 ratingsKai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsஎன் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsPathinettavathu Padi Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for 100 Thalaivargal 100 Thagavalgal
0 ratings0 reviews
Book preview
100 Thalaivargal 100 Thagavalgal - Sabitha Joseph
http://www.pustaka.co.in
100 தலைவர்கள் 100 தகவல்கள்
100 Thalaivargal 100 Thagavalgal
Author:
சபீதா ஜோசப்
Sabitha Joseph
For more books
http://www.pustaka.co.in/home/author/sabitha-joseph
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1 மன்னித்து அனுப்பினார்
2. அந்த நாயக்கன் நான் தான்
3. ஜின்னா பார்த்த அண்ணா
4. அரசியல் நேர்மை சர்.ஏ.ராமசாமி
5. அந்த கருணாநிதி இவர்தானா?
6. காந்தியடிகள் செய்து வைத்த சமரசம்
7. சாஸ்திரியின் தந்திரம்!
8. வ.உ.சி. சொன்ன வாய்
9. அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு வைத்த தீ
10. உங்கள் கட்சி உருப்படாது
11. ஏன் விளையாட வரவில்லை
12. அந்த மரியாதை ஏற்க மறுத்த முத்துராமலிங்கத் தேவர்
13. போக்குவரத்தைக் கவனித்த முதல்வர் காமராஜர்!
14. புரட்சி வீரர் லெனின் சாகசம்!
15. ஜார்ஜ் வாஷிங்டனின் கட்டளை
16. கடவுளுக்குத் துணை இருப்போம்
17. எது சுகாதாரம்? ராதாகிருஷ்ணன் கேட்டார்!
18. சர்ச்சில் சொன்ன சமாதானம்
19. நான் சொல்வது பொய்யா?
20. அக்பர் புன்னகை
21. திரு.வி.க. ஆதரித்தது ஏன்?
22. கோவை அய்யாமுத்து கொடுத்த அதிர்ச்சி
23. ம.பொ.சி.எழுந்து போனது ஏன்?
24. ஆதித்தனார் கொடுத்த பதிலடி
25. முரசொலி மாறன் எழுத்தாளரானது எப்போது?
26. சி.சுப்ரமணியத்தின் சந்தேகம்
27. ஆசிரியரும் மாணவரும்
28. சூடான பதில்
29. ரூஸ்வெல்ட் வியந்து பாராட்டினார்
30. அரசனும் கொள்ளைக்காரனும்
31. நீதியின் முன் யாவரும் சமமே
32. கடமையில் கருத்து
33. ராஜீவ்காந்தியை யாரும் கொஞ்சவில்லையா?
34. இந்திராவின் மகள் சோனியா
35. விடுதலை வீரர் மோதிலால் நேரு
36. ஓமந்தூர் ரெட்டியாரின் நேர்மை
37. சிவாஜிக்கு என்ன தொழில்
38. தொகுதிக்குப் போகலையே அந்த காயிதே மில்லத்
39. இந்திரா காந்தியின் எட்டுமாத சிறைவாசம்
40. தீ கொள்கையை விடாத தோழர் ஜீவா
41.நடந்து சென்று படித்த கக்கன்
42. பழசை மறக்காத நெப்போலியன்
43. ரஜினியின் பாதுகாவலர்
44. மாவீரன் பகத்சிங் இறுதி நிமிடம்
45. வவுனியா காட்டில் வைகோ
46. ராணுவத்திற்குப் போன கவியரசு கண்ணதாசன்
47. அஞ்சாத ஜூலியஸ் சீசர்
48. ‘அங்கேயும்’ லாயிட்ஸ் ஜார்ஜ்
49. பகத்சிங் மனைவியாக நடித்த துர்கா தேவி
50. ஒளரங்கசிப் அரண்மனையில் வளர்ந்த வீரசிவாஜியின் பேரன்
51. தாய்சொல் தட்டாத அமெரிக்க அதிபர்
52. வெற்றி வாய்ப்பை இழந்தேன்
53. எதிர்நீச்சல் போட்ட மூப்பனார்
54. குதிரைக்காக இரக்கப்பட்டவர்
55. மிசாவில் மொரார்ஜி தேசாய்
56. ஜான்சிராணியின் இரக்க உள்ளம்
57. பைலட் ஆக விரும்பிய பெனாசிர்
58. உன்னத தலைவர் வி.பி.சிங்
59. ஆயிரம் தடவை உயிர் தப்பிய சரித்திர நாயகன் காஸ்ட்ரோ
60. இவர்தான் கென்னடி
61. ரூஸ்வெல்ட் மூக்குடைப்பு
62. ஹிட்லரின் கனவும் நினைவும்
63. தலைமை ஏற்ற போராளி மணியம்மையார்
64. பசுமை நேசர் ராமதாஸ்
65. வெள்ளையரை விரட்டிய குஞ்சாலி மரைக்காயர்கள்
66. மரியாதைக்குரிய இரண்டாம் பகதூர்ஷா
67. வீரத்தாயின் புதல்வர்கள் அலி சகோதரர்கள்
68. நீச்சலே யோகா போல் செய்த தோழர் பகதூர்சிங்
69. கொரில்லா படைத்தலைவர் தோழர் ஹோ-சி-மின்
70. சத்துணவின் முன்னோடி
71. தோல்வியில் முடிந்த புரட்சி
72. சே என்ற தோழன்
73. அன்று பகுதி நேர பேராசிரியர் இன்று பாரத பிரதமர்
74. எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தி
75. கோபப்படாத நல்லகண்ணு
76. திப்பு சுல்தானின் சேனைத் தளபதி தீரன் சின்னமலை
77. புத்தர் துறவறம் நிகழக் காரணம்?
78. ஏழைகளின் வாழ்வு மலர ஏழ்மையை அனுபவித்த மார்க்ஸ்
79. நேதாஜியும் தமிழர்களும்
80. கண்ணதாசன் பாராட்டிய நெடுமாறன்
81. ஸ்டாலினின் போராட்ட யுக்தி
82. நெல்சன் மண்டேலா ஏற்படுத்திய புரட்சி
83. அமெரிக்கா அடாவடி
84. பூர்வத் தமிழருக்காக குரல் கொடுத்த அயோத்தி தாசர்
85. நடந்துசென்ற கலாம்
86. தீண்டாமையை உணர்த்திய இரட்டை மலை சீனிவாசன்
87. தலைவன் பண்பு பற்றி விவேகானந்தர்
88. வாலிபர்களுக்கு அழைப்பு விடுத்த செளந்தர பாண்டியனார்
89. வினோபாவே வைத்த சோதனை
90. வீரசிவாஜியின் குருபக்தி
91. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவர்
92. அகிம்சை அரசன் ஆங்சான் சூசீ
93. புத்தகம் பரிசு பெற்ற ஜெயலலிதா
94. தொழிலாளர்களின் தோழர்
95. வட்டியில்லா வங்கிகள்
96. குலவழிபாடு ஏன்? தொல்.திருமா விளக்கம்
97. பிரபாகரன் ரசித்து உண்ட கிழங்கு
98. மன்னனின் பெருந்தன்மை
99. சிறையிலிருந்து தப்பிய ஜெயப்பிரகாஷ் நாராயணன்
100. நான் ஒபாமா பேசுகிறேன்
1 மன்னித்து அனுப்பினார்
யுத்த களத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், இவர்களை கொலை செய்தல், விளைநிலங்களைப் பாழாக்கல், பழ (தரும்) மரங்களை வெட்டல், மிருகங்களை கொல்லல், வீடுகளுக்கு நெருப்பிடல் முதலியவற்றைச் செய்யக்கூடாது. என்று நபி பெருமானார் கூறியுள்ளார்.
போரில் தோல்வியடைந்தோரிடமும் போர்க் கைதிகளிடமும் நபிகள் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார். அக்கால அரேபியர் போர்க் கைதிகளைக் கொன்று விடுவார்கள். ஆனால் நபிகள் காலத்தில் போர்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைவர் என்பவர் தமது சாதாரண சிப்பாய்களுடைய இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும். அகழ் போரின் போதும் அகழ் தோண்டும் போதும் நபி பெருமானார் ஒரு சாதாரண சிப்பாய் போல மண் தோண்டினார். மண் சுமந்தார். எப்போதும் போர்க்களத்தில் முன்னேறிச் செல்வார் நபிகள் நாயகம். ஹஸ்ரத் அலி போன்ற பெரு வீரர்கள் பின்னால் நிற்பார்கள்.
அரேபியாவின் அரசராக அவர் இருந்தபொழுது எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். எல்லா வேலைகளையும் தமது கையாலேயே செய்வது வழக்கம். தாம் செய்யக் கூடிய வேலையைப் பிறர் செய்யும்படி அனுமதிப்பதே கிடையாது.
ஒரு நாள் ஒரு யூதர் விருந்தாளியாக வந்திருந்தார். நபிகள் பெருமான் அவருக்கு வயிறு நிறைய ஆகாரம் கொடுத்ததோடு அல்லாமல் அவர் தங்கி களைப்பாறும் பொட்டு தமது அறையையும் படுக்கை விரிப்பையும் கொடுத்து உதவினார்.
ஆனால் அந்த யூதன் அந்த இரவில் அந்த அறையில் மலம் கழித்து அசுத்தப்படுத்தி விட்டு அங்கிருந்து அதிகாலை ஓடிப்போனான். ஆனால் அவன் மறதியாக தனது வாளை அறையில் வைத்து விட்டான். எனவே அதை எடுப்பதற்காக மறுபடியும் வந்தான்.
அங்கே அவன் மலம் கழித்த அறையை, நபி பெருமானார் சுத்தம் செய்து கொண்டிருப்பதை கண்டு, தம் தவறுக்கு வருந்தினான். நபிகளிடம் மன்னிப்புக் கோரினான். நபி பெருமானார் அவனை மன்னித்து அனுப்பினார்.
***
2. அந்த நாயக்கன் நான் தான்
திராவிடத் தந்தையாகிய ஈ.வே.ராமசாமி பெரியார் பேசுவதை எத்தனை நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மேடைப் பேச்சைவிட தனியாக சம்பாஷித்துக் கொண்டு இருக்கும்போது அதிகச் சுவை தட்டும்.
அவர் ஒருதடவை விருதுநகரிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தோழர் ஒருவர் அதே ரயிலில் இரண்டாம் வகுப்பில் (இப்போது அது முதல் வகுப்பு) சென்னைக்குப் போய்கொண்டிருந்தார். இரண்டாவது வகுப்பில் இருந்த அவர் தூங்கும் முன் பெரியாருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க விரும்பினார். ஆகையால் அவர் பிரயாணமும் கொஞ்ச தூரம் மூன்றாவது வகுப்பில் தொடர்ந்தது.
மதுரையில் ஒரு பிராமண வக்கீல் அந்த வண்டியில் ஏறினார். அது எப்படி ஏற்பட்டது என்று பெரியார் கவனிக்க வில்லை, ஆனால் வெகு சீக்கிரத்திலேயே தம் தோழரும் வக்கீலும் பெரிய வாக்குவாதத்தில் இறங்கியிருப்பதைக் கண்டார். பலமான சத்தம் வேறு. இருவருமே ஒரே சமயத்தில் கடுமையான வசை புராணத்தில் இறங்கி விட்டார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள கீழ்த்தரமான வார்த்தைகள் சரவெடியாய் முழங்கின. சில நிமிஷங்கள் வரை வண்டியிலுள்ள மற்ற பிரயாணிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு இந்த சொல் சண்டையை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் பேச்சு சண்டையின் வேகம் குறைந்தது. இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். இந்த இடைப் பட்ட நேரத்தில் பெரியார் தம் தோழரைக் கண்டித்தார், அவர் என்ன சொல்கிறார் என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நீங்களும் பேசுவதில் என்ன பயன்
என்று கேட்டார்.
தமக்கு ஆதரவாக ஒரு பெரியவர் கிடைத்ததை நினைத்து பிராமண வக்கீல் சந்தோஷப்பட்டார். அவர் ராமசாமி நாயக்கன் ஆளு சார்! அவருடன் பேச்சுக் கொடுத்தாலே இப்படித் தான்!
என்றார்.
அதுதானே நானும் சொல்லுகிறேன்? அதுதெரியாமல் நன்றாகப் படித்த நீங்கள் கூட இப்படி வீண் வாதத்தில் இறங்கி விட்டீர்களே!" என்றார் பெரியவர். வக்கீலுடன் அன்பாக பேச ஆரம்பித்தார்.
திண்டுக்கல்