Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

2045 l Oru Kathai
2045 l Oru Kathai
2045 l Oru Kathai
Ebook76 pages28 minutes

2045 l Oru Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1990 லிருந்து இந்த 31 வருடத்தில் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வாழும் முறையே எல்லாருக்கும் மாறிவிட்டது. இன்னும் 20 வருடம் போனால் உலகம் எப்படியிருக்கும்? இது 2045 ல் நடக்கும் கதை. இந்தியா முழுவதும் ஏகப்பட்ட மாற்றங்களை அடைந்த காலம். எங்கும் கணினி மயம். எலெக்ட்ரானிக் யுகத்தின் தாக்கம் பல இடங்களில் வியாபித்திருக்கின்றன. ஆனால் மனிதர்களின் மனங்கள் கூட மாறிவிட்டிட்டிருக்கும். ஆனாலும் சில அடிப்படை மரபுகள் மாறாமல் அப்படியே வழி வழியாய் பின்பற்றப்பட்டும் வருகின்றன. அப்படித்தான் இந்தக் கதையில் வரும் மாந்தர்கள் நடந்துகொள்கிறார்கள். ஒரு பெட்டி கூட இதில் கதை முழுதும் ஒரு பாத்திரமாக வருகிறது.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580115207505
2045 l Oru Kathai

Read more from Ananthasairam Rangarajan

Related to 2045 l Oru Kathai

Related ebooks

Reviews for 2045 l Oru Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    2045 l Oru Kathai - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    2045 ல் ஒரு கதை

    2045 l Oru Kathai

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    1990 லிருந்து இந்த 31 வருடத்தில் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வாழும் முறையே எல்லாருக்கும் மாறிவிட்டது. இன்னும் 20 வருடம் போனால் உலகம் எப்படியிருக்கும்? இது 2045 ல் நடக்கும் கதை. இந்தியா முழுவதும் ஏகப்பட்ட மாற்றங்களை அடைந்த காலம். எங்கும் கணினி மயம். எலெக்ட்ரானிக் யுகத்தின் தாக்கம் பல இடங்களில் வியாபித்திருக்கின்றன. ஆனால் மனிதர்களின் மனங்கள் கூட மாறிவிட்டிட்டிருக்கும். ஆனாலும் சில அடிப்படை மரபுகள் மாறாமல் அப்படியே வழி வழியாய் பின்பற்றப்பட்டும் வருகின்றன. அப்படித்தான் இந்தக் கதையில் வரும் மாந்தர்கள் நடந்துகொள்கிறார்கள். ஒரு பெட்டி கூட இதில் கதை முழுதும் ஒரு பாத்திரமாக வருகிறது.

    அத்தியாயம் 1

    "உங்க தாத்தா பெட்டியில அப்படி என்னதான் இருக்கு? என்று தன் கணவன் கோகுலிடம் கேட்டாள் புவனா,

    தாத்தாவின் பெட்டியை தன்னுடைய கார் டிக்கியியில் வைக்கச் சொல்லி கோகுல் கொடுத்தபோதுதான் புவனா இப்படி கேட்டாள்.

    ஒரு பேக்கர்ஸ் அண் மூவர்ஸ் நிறுவன லாரி தெருவில் நின்றிருந்தது. சாமான்களை ஆட்கள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

    ஒவ்வொன்றாய் புவனா அவர்களிடம் காட்டி எடுக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    தாத்தாவின் பெட்டியில் ஒரு பூட்டு தொங்கியது. அதன் சாவி தொலைந்துவிட்டிருந்தது.

    எனக்கே அதில் என்ன இருக்குனு தெரியாது என்றான் கோகுல், ஓர் ஆள் வந்து அந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போனபோது உள்ளே லொடக் லொடக் என்று ஆடியது.

    பெட்டியின் மேல் 2045 என்று பெயிண்டால் எழுதியிருந்தது. பெட்டி கறுப்பு நிறத்தில், கைப்பிடியுடன் கெட்டியான பிளாஸ்டிக்கால் ஆகியிருந்தது. ஏதோ ஒரு டிரான்ஸ்ஃபரின்போது லாரிக்காரன் ஒரு அயர்ன் பாக்ஸ் பெட்டியைத் திருடிவிட்டான். சாமான்களை எண்ணும்போது அதைக் காணவில்லை. கேட்கவும் முடியவில்லை. கோகுல் லாரி ஆபீசுக்குப் போன் போட்டு திட்டினான். பார்க்கிறோம் என்றார்கள். கிடைக்கவேயில்லை. அதனால் இந்தப் பெட்டியை லாரியில் போடாமல் தன் கார் டிக்கியில் வைக்கச் சொன்னான்.

    பெரிய பீரோவையெல்லாம் டிஸ்போஸ் பண்ணினே. இதுக்கு மனசு வரலை. ஏன்? ஆச்சரியப்பட்டாள் புவனா

    அப்பா செத்து பத்து வருஷம் ஆச்சி. சாகறப்பறப்ப அவர் என்னைக் கூப்பிட்டு ‘தாத்தாவின் பெட்டி பரண்ல இருக்கு. அதை 2045 ல் திறந்து பார். சாவி என் வார்ட்ரோப்பில இருக்கு’ னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டார் அம்மாவைக் கேட்டால் அவளுக்கும் தெரியவில்லை. 2045 வரை காத்திருப்போம் என்கிறாள். அவளுக்கும் அதுல என்ன இருக்குனு தெரியாது. என்று பெருமூச்சுவிட்டான் கோகுல்.

    2045 வர இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. அன்று டிசம்பர் 25. கிறிஸ்துமஸுக்கு லீவ் விட்டிருந்தார்கள். அதானால்தான் அன்றைக்கு வீட்டை மாற்ற உத்தேசித்திருந்தார்கள்.

    ஜனவரி 1ம் தேதி திறந்து பார்த்துடலாம் என்றாள் புவனா. இது மூன்றாவது டிரான்ஸ்ஃபர். கம்பெனி உன்னை ஒரு பிராஞ்ச்சில கூட ரெண்டு வருஷம் ப்ராஜெக்டில் வச்சுகிறதில்ல அலுத்துகொண்டாள் புவனா.

    அவள் தன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டிருந்தாள்.. ஒரு மகப்பேறு நிபுணரிடம் டிரீட்மெண்டில் இருந்தாள்.

    கோகுல் மானேஜர் பதவியை வெறுத்தான். அவனுடைய சீனியாரிடிக்கு

    எப்போதோ ஆகியிருப்பான். ஆர்.எம்.ஜி யிடம் தனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1