Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sollathathaiyum Sei
Sollathathaiyum Sei
Sollathathaiyum Sei
Ebook140 pages44 minutes

Sollathathaiyum Sei

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. Known for his erudite writing style, his articles and columns are widely published in leading Tamil newspapers and periodicals regularly. His book on Stock investing, titled Alla Alla Panam, released in 2004 by Kizhakku Publishers (New Horizon Media), has been a phenomenal success and has sold over 1,25,000 copies. Valliyappan is regularly invited by many Tamil Television channels for his opinions on stock market and economic events.

He is a Graduate in Economics from Madras University and Post Graduate in Business Administration with human resource and Marketing specializations. Valliyappan has undergone a comprehensive educational program on Emotional intelligence at XLRI , a premier Business Management Institute Jamshedpur, India.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580110104691
Sollathathaiyum Sei

Read more from Soma Valliappan

Related to Sollathathaiyum Sei

Related ebooks

Reviews for Sollathathaiyum Sei

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sollathathaiyum Sei - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    சொல்லாததையும் செய்

    Sollathathaiyum Sei

    Author:

    சோம வள்ளியப்பன்

    Soma Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. புதிய பார்வை

    2. எல்லைகள் இல்லை

    3. நாம் என்ன சராசரியா?

    4. இன்று என்ன செய்தாய்?

    5. வேகம் மட்டுமல்ல முக்கியம்

    6. கடைசியாய் எப்போது...?

    7. சந்தர்ப்பம் வரும்முன் ஆயத்தமாகு

    8. கதவுகளைத் திறக்கலாம்...

    9. எழுப்பியது யார்?

    10. வளர்ச்சி கட்டாயம்

    11. தொடர்ந்து வளர வேண்டும்

    12. திறனுக்கு மதிப்பு

    13. கோளாறுகளும் விளைவுகளும்

    14. நிகழ் காலம் வருங்காலம்

    15. பிரச்னைகளே வாய்ப்புகள்

    16. பயங்களை வெல்வது

    17. நிறைய அல்ல நிறைவாக

    18. நடந்தவை நடப்பவை

    19. தெரிந்ததும் தெரியாததும்

    20. கற்றல் சிரமமல்ல...

    21. பயன்படுத்த வேண்டும்

    22. யார் சரி? யார் தவறு?

    23. என் குற்றம் உன் குற்றம்

    24. பழக்கத்தில் நாலு கட்டங்கள்

    25. மனக் குப்பைகள்

    26. வார்த்தை டென்னிஸ்

    27. நம் உலகம்

    28. வாய்ப்பு வரும் முன் தயாராக இருக்க வேண்டும்

    29. மனம் விரும்பிச் செய்தால்...

    30. ஒன்றின் மீது முழு கவனம்

    31. சொந்தமாகவும் எழுது

    32. சொல்லாததையும் செய்

    ஆசிரியர் குறிப்பு

    அறிவுரைகள் அல்ல தேளில் கைபோட்டு தோழமையுடன் வழி காட்டும் செய்முறைகள்

    45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்று பல்வேறு துறைசார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனரான இவர் எழுதிய 'பணம் பண்ணலாம், பணம் பணம்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களைச் சுண்டி இழுத்து வரலாறு படைத்தது!

    அள்ள அள்ளப் பணம் என்ற நூல் வெளிவந்த வேகத்திலேயே 10,000 பிரதிகள் விற்றதோடு, தமிழில் 1,25,000 பிரதிகளுக்கு மேலும் விற்று சரித்திரம் படைத்தது!

    இவருடைய எழுத்துகளின் தலைப்புகள் எல்லாமே இப்படித்தான் வித்தியாசமாக புதிய பாணியில் இருக்கும். இட்லியாக இருங்கள், டீன் தரிகிட, உஷார்! உள்ளே பார்!, இந்த முறை நீதான், உலகம் உன் வசம், யார் நீ, காலம் உங்கள் காலடியில், சின்ன தூண்டில் பெரிய மீன், சிறு துளி பெரும் பணம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்! தலைப்பு மட்டுமன்று; அதன் பொருளடக்கமும், எழுத்தும், கருத்தும் புதிய அணுகுமுறையுடன் அமைந்திருக்கும்.

    பன்முகம் கொண்ட பல்துறை வித்தகர். பெரிய விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தரும் கல்வியாளர்; பளிச்சென்று மனதில் பதிய வைக்கும் பயிற்றுநர்; சாதனைகள் பல படைக்க வழிகாட்டும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர், உற்சாகத்தோடு உரமும் ஊட்டும் பேச்சாளர், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தச் சொல்லித்தரும் வல்லுனர்; நேர மேலாண்மை வித்தகர்; மேன்மை மைய ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர்.

    பெப்சி, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், பி.எச். ஈ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றி மனிதவள மேம்பாட்டை மேம்படுத்தியவர். பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்களுக்கும் நவீன மேலாண்மைத் துறைகளில் பயிற்சி அளிப்பவர். தொலைக்காட்சிகளில் பொருளாதாரம் பற்றிய கருத்துக் கணிப்பாளர்.

    பல பல்கலைக்கழகங்களின் தேர்வு மற்றும் கல்விக் குழுவிலும், கல்லூரிகளின் பாடத் திட்டக் குழுவிலும், சென்னை நிதி நிர்வாக (ஆராய்ச்சி) பயிற்சி நிறுவனத்திலும் பங்கேற்றிருப்பவர்.

    *****

    தொப்பிகளை கழற்றிவிட்டு...

    சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை என்னுடைய நிறுவனத்தில் இருந்து மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி ஒன்றுக்கு அனுப்பியிருந்தார்கள். சென்னையில் இருந்து அதற்காக நான் பெங்களூர் போனேன். Managing & Leading the Changes என்ற அந்த பயிற்சிப்பட்டறை இரண்டு நாட்கள் நடந்தது.

    பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் வந்திருந்த மேலதிகாரிகள் மேலாளர்கள் பொறியாளர்கள் பலர் அதில் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட நாங்கள் அனைவரும் ஐந்து ஐந்து நபர்களாகத் தனித் தனி வட்ட வடிவ மேசைகளில் அமர வைக்கப்பட்டோம்.

    பயிற்சி கொடுத்தவர், எங்களை முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள வைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டார். அவற்றில் ஒன்று, அவ்வப்போது சில கேள்விகள் கேட்பது. அந்தக் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்களுக்குச் சிறு பரிசுகள் கொடுப்பது.

    நானும் ஒரு பயிற்சியாளன் என்பதால் என்னால் சுலபமாக முதலில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிந்தது. உடனே பரிசுகளும் கிடைத்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தொடர்ந்து எனக்கே பரிசுகள் கிடைக்க என்னுள் என்னை அறியாமல் ஒரு எண்ணம். 'அட! எனக்குத்தான் எவ்வளவு தெரிந்திருக்கிறது!'

    அதன்பின் முன் மதிய தேநீர் இடைவேளை. சொல்லி வைத்தார்போல, ஓரிருவர், ‘டக் டக் கென்று பதில் சொல்லுகிறீர்களே!' என்று என்னிடம் கேட்கவும் செய்தார்கள். என் எண்ணம் இன்னும் கொஞ்சம் மாறியது. வலுவானது. 'எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்'

    அதன் பின் அன்றைய தினம் முழுமையும் உதயகுமார் அவர்கள் பலவற்றையும் சொன்னார்கள். செய்தும் காட்டினார்கள். அது எல்லாம் மற்றவர்களுக்காகத்தான் என்று நான் இறுமாந்திருந்தேன். நான் வெறும் சாட்சியாக அங்கே உட்கார்ந்திருப்பதாக உணர்ந்தேன். தொடர்ந்து மனதிற்குள் எனக்கு இவர்களைவிட எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    இரண்டாம் நாள், பயிற்சி முடிந்தது. எல்லோரும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். வருகிற வழியில் திடீரென எனக்குள் ஒரு எண்ணம். மின்னல் போல ஒரு கணம் அது சட்டெனத் தோன்றி மறைந்தது. வித்தியாசமாக இருந்ததால், வலியத் தேடி அந்த எண்ணத்தினை வெளியே இழுத்தேன். அதை உற்றுக் கவனித்தேன்.

    'என்ன வள்ளியப்பா, எதற்காக இந்த இரண்டு நாள் பயிற்சி? ஏன் இந்தப் பயணம்? விடுதியில் தங்கல், பயிற்சிக் கட்டணம், இரண்டு பகல் நாள் முழுநேரச் செலவழிப்பு? உனக்கு என்ன தெரியும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவா? அதற்கா இவ்வளவு பாடும், செலவழிப்பும்!’

    கேள்வி கேட்ட அதே மனதே அதற்குப் பதிலும் சொல்லியது.

    'இல்லை. புதிதாகத் தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்தேன்'

    ‘தெரிந்து கொண்டாயா?'

    'இல்லை'

    'ஏன்?'

    ...

    'உண்மையாகவே அந்தப் பயிற்சிப்பட்டறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1