Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naattu Kanakku
Naattu Kanakku
Naattu Kanakku
Ebook329 pages3 hours

Naattu Kanakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. Known for his erudite writing style, his articles and columns are widely published in leading Tamil newspapers and periodicals regularly. His book on Stock investing, titled Alla Alla Panam, released in 2004 by Kizhakku Publishers (New Horizon Media), has been a phenomenal success and has sold over 1,25,000 copies. Valliyappan is regularly invited by many Tamil Television channels for his opinions on stock market and economic events.

He is a Graduate in Economics from Madras University and Post Graduate in Business Administration with human resource and Marketing specializations. Valliyappan has undergone a comprehensive educational program on Emotional intelligence at XLRI , a premier Business Management Institute Jamshedpur, India.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110104181
Naattu Kanakku

Read more from Soma Valliappan

Related to Naattu Kanakku

Related ebooks

Reviews for Naattu Kanakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naattu Kanakku - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    நாட்டுக் கணக்கு

    Naattu Kanakku

    Author:

    டாக்டர் சோம வள்ளியப்பன்

    Dr. Soma Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. என் கேள்விக்கு என்ன பதில்?

    2. வரிகளில் இத்தனை விதங்களா?

    3. இப்படித்தான் போடுகிறார்களா பட்ஜெட்!

    4. அதென்ன மானியம்?

    5. ஜி.டி.பி. என்றால்?

    6. தேவை வெளிநாட்டுப் பணம்!

    7. பணம் - வங்கிகள் - கடன்

    8. ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களும்

    9. உரிமைகள் உள்ள நாம்...

    10. பின் இணைப்புகள்

    சொந்தக் கணக்கையே பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் கொஞ்சம் நாட்டுக் கணக்கையும் தெரிந்தகொள்ள...

    ஜி. எஸ்.டி உட்பட பல புதிய தகவல்கள் சேர்க்கப்பட்ட புதிய பதிப்பு

    *****

    முன்னுரை

    நாட்டுக் கணக்கு புத்தகம் நான் எழுதி முதல் பதிப்பு வெளிவந்தது 2013ம் ஆண்டில் அதற்கு நல்ல விமர்சனங்கள் வந்தன. பல்வேறு தரப்பினரும் அந்தப் புத்தகத்தை விரும்பிப் படிக்கிறார்கள் என்ற தகவல் மகிழ்ச்சி அளித்தது.

    நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு, தற்செயலாக 2017ம் ஆண்டு அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது, இடையில் நாட்டின் பொருளாதார விடயங்களில் பல மாறுதல்கள் வந்துவிட்டன என்பதை உணர்ந்தேன். நடுவண் அரசில் UPA-II (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2) போய், பாரதிய ஜனதா வந்துவிட்டது. மன்மோகன்சிங், சிதம்பரம் போய், மோடி மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் வந்து பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய மாறுதல்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

    குறிப்பாக மறைமுக வரிகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் வரி விதிப்பில் அடிப்படையில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்றன. அதனால் உடனடியாக புத்தகத்தில் அந்த மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்து சிக்ஸ்த்சென்ஸ் திரு. கார்த்திகேயனிடம் தெரிவித்தேன். புதிதாக வரும் பதிப்பு கண்டிப்பாக அந்த மாற்றங்களுடன்தான் வரவேண்டும்; அதுவரை சந்தையில் புத்தகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றேன்.

    சொல்லிவிட்டேனே தவிர, நாட்டுக்கணக்கு திருத்த வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கவில்லை. புதிய புத்தகம் எழுதக் கிடைக்கும் உள்உந்தல், எழுதிய புத்தகத்தையே மாற்றி எழுத முனையும்போது கிடைப்பதில்லை. அதிலும் நடைமாறாமல், மாறுதல்கள் செய்வது, பொருளாதாரம் போன்ற குறிப்பான பொருளில் மாற்றங்கள் செய்வது அவ்வளவு சுலபமாக இல்லை. அதனால் வேலை மிகவும் மெதுவாகத்தான் நடந்தது. இடையில் நான் எழுதிய ரசவாதம் போன்ற புத்தகங்கள் வெளிவந்தன.

    அதன்பின் ஒருசில புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து நாட்டுக்கணக்கு எப்போது வரும் என்று கேட்டு நேரடியாக எனக்குப் பல செல்பேசி அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. அவர்கள் சொன்ன மேல்தகவல், தமிழ்நாட்டில் 'பப்ளிக் சர்விஸ் கமிஷன்' மற்றும் ஏனைய போட்டித் தேர்வுகள் எழுதும் இளையவர்கள் நாட்டுக்கணக்குப் புத்தகத்தை தேடி வாங்குகிறார்கள். இப்போதுகூட கேட்டுவிட்டுப் போகிறார்கள் என்பதுதான்.

    இதே போன்ற தகவல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து வர, நாட்டுக்கணக்கை எழுதி முடித்துவிட்டுதான் அடுத்த வேலை என்று அமர்ந்தேன். வேலை முடிந்தது.

    மாற்றங்கள் செய்யும்போது மற்றொரு எண்ணம் ஏற்பட்டது, 'அட! பொருளாதாரம் தொடர்பாக எழுத இன்னும் நிறைய இருக்கிறதே' என்பதுதான் அந்த எண்ணம். சூட்டோடு சூடாக மற்றொரு புத்தகமும் எழுதிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அந்த வேலையை ஆரம்பித்திருக்கிறேன்.

    ஆக, நாட்டுக்கணக்கு II என்ற வடிவில் அந்தப் புத்தகமும் விரைவில் வரவிருக்கிறது.

    சோம வள்ளியப்பன்

    30.9.2018

    அபிராமபுரம்

    *****

    புத்தக விமர்சனங்கள்

    ஆழி பத்திரிகை - மார்ச் 2013

    நாட்டுக்கணக்கையும் தெரிந்துகொள்ள...

    தமிழ்நாட்டின் பிரபலமான துறைசார்ந்த எழுத்தாளர்களில் வணிகம், தொழில், சுயமுன்னேற்றம் ஆகியவை தொடர்பாக எழுதும் சோம. வள்ளியப்பன் மிக முக்கியமானவர். இவரது அள்ள அள்ள பணம் என்கிற நூலை வெளியிட்ட ஒரு பதிப்பகம் அதன் மூலம் அள்ள அள்ள குறையாத வருமானத்தை ஈட்டியது பலரும் அறிந்ததுதான். கிட்டத்தட்ட நாற்பது நூல்களை எழுதியிருக்கும் சோம வள்ளியப்பனின் புதிய நூல் நாட்டுக்கணக்கு.

    வீட்டுக்கணக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை சற்று நாட்டுக்கணக்கைப் பார்க்கும்படி தூண்டியிருக்கிறார் நூலாசிரியர். பொருளாதாரத்தை மிக எளிமையாக விளக்குகிற இந்த நூலின் முக்கியமான சிறப்பே குழப்பமான பல கோட்பாடுகளை சுலபமாக புரிய வைப்பதுதான். நாட்டுக்கான பட்ஜெட் போடுதல், வரி, மானியம், ஜி.டி.பி. போன்ற அடிப்படை விஷயங்கள் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளன. நாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று நம்பும் பணம், வங்கிகள் போன்ற விஷயங்களை இவர் எழுதிப் படிக்கும்போதுதான் நாம் நிறைய தெரிந்து வைத்துக் கொண்டிருக்கவில்லை என்கிற உண்மை நமக்கே தெரிய வருகிறது. ரிசர்வ் வங்கி, வெளிநாட்டிலிருந்து பொருளீட்டுதல் என பிற முக்கிய அம்சங்களையும் இந்த நூல் விவரிக்கிறது.

    இது பட்ஜெட் நேரம். அதைப்பற்றி இவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதில் தொடங்குகிறார். நாட்டின் திட்டக் கமிஷன் இதில் வகிக்கும் பங்கு விளக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பும், நடைமுறையும் அரசியல் ரீதியில் எவ்வாறு இயங்குகின்றன என்பதை சூப்பராக சித்திரம் வரைந்து காட்டியிருக்கிறார். தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளன. திட்டம் சார்ந்த செலவுகள், திட்டம் சாராத செலவுகள் என பிரித்து விளக்கப்படுகிறது. அப்புறம் அந்த அதிமுக்கியமான கேள்வி: அரசு ஏன் கடன் வாங்குகிறது? பிறகு ஜிடிபிக்கும், பட்ஜெட்டுக்கும் இடையிலான உறவு.

    இவ்வாறாக எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அலசுவதில் சோம. வள்ளியப்பனுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் சில இடங்களில் ரொம்பவும் எளிமைப்படுத்தாமல், விவரிப்பாக இருக்கிறதென்றால்... இருந்திருக்கும். குட்டி குட்டியா நிறைய அத்தியாயங்களில் இந்நூல்... புத்தகத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள பல அட்டவணைகளும், படங்களும் முக்கியமானவைதான் என்றாலும், விளக்கங்களோடு அந்தந்த அத்தியாயங்களுடன் இருந்தால் மேலும் பயனுடையதாக இருந்திருக்கும். ஆனால் சோம. வள்ளியப்பனின் நாட்டுக்கணக்கு மிக முக்கியமானது. அதுவும் இந்த பட்ஜெட் நேரத்தில் அதை நீங்கள் வாங்கிப் படிப்பது பயன்தரவல்ல முதலீடு.

    பத்திரிகைகளிலும் தோன்றி மறையும் பரபரப்பான செய்தியாகி, பின்பு மீண்டும் அடுத்த ஆண்டு மட்டுமே நினைவு வரும் நிலையை முன் வைத்து அதில் நமக்கு எழும் கேள்விகள், எழவேண்டிய கேள்விகள் என அனைத்தையும் பட்டியலிட்டு அதற்கான சுவாரஸ்ய விடைகளாக மலர்ந்திருக்கிறது புத்தகம்.

    நாட்டின் பிரஜைகளான நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் முக்கியமானது. இது என்ன மானியம்? அத்தியாயம். (சப்சிடி) மானியம் என்றழைக்கப்படுகிற இந்தப் பெரும் செலவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இந்தியப் பொருளாதாரத்தை தெரிந்துகொள்ள முடியாது. சுவாரஸ்யமான தகவலுடன் இவர் துவங்குகிறபோதே நம் புருவம் விரிகிறது.

    அந்த அத்தியாயத்தில், தபால் நிலையங்களில் ஏன் விலை குறைவாக போஸ்ட் கார்டுகள் கிடைக்கின்றன? பின்னாளில் போஸ்ட் கார்ட் பயன்பாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து அவர் தரும் செய்திகள் நம்மை வியக்கச் செய்கின்றன.

    டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த வாசகத்தை அரைமணி நேர செய்தி ஒளிபரப்பின் இடையே மட்டும் கேட்பவர்கள் பலர். ஆனால் உண்மையில் என்னதான் நிகழ்கிறது? டாலருக்கு நிகராக நம் மதிப்பு கூடவும், குறையவும் காரணம் என்ன? நம் ரூபாய்க்கு இந்த நிலை என்றால் அண்டை நாடான சீனா போன்றவற்றின் நிலை என்ன? எனப் பல தளங்களிலும் அலசி முதன் முறை இத்தலைப்புகளைப் படிக்கத் துவங்குகிற வாசகர்களுக்கு எழுகிற அனைத்துக் கேள்விகளுக்கும் துல்லியமான பதில்களை எளிமையாக பதிவு செய்திருக்கிறார்.

    புத்தகத்தின் மற்றொரு முக்கியமான அம்சம். நகைச்சுவை, நாட்டுக்கணக்கில் என்ன நகைச்சுவை? என்ற கேள்வி எழலாம். அங்கதம் நாட்டுக்கணக்கில் அல்ல, சோம வள்ளியப்பன் அவர்களின் எழுத்து நடையில் மக்களக்கு விதிக்கப்படும் வரிகளை குறித்து விளக்குவதற்கு தான் அந்த தலைப்புடன் நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? என்ற கட்டபொம்மன் வசனம். கனமான தலைப்புகளை நமக்கு அறிமுகம் செய்யும் வேளையில் ஆங்காங்கே இருக்கும் அடைப்புக்குறியினுள் இருந்து தெறித்து வருகிற நகைச்சுவை நம்முடைய வாசிப்பு அனுபவத்திற்கு சுவை கூட்டுகிறது. மேலும் புத்தகத்தோடு நம்மை நெருக்கமாக உணரச் செய்யும் இந்த யுக்தி பாராட்டுக்குரியது.

    பணத்தின் அருமை தெரியும், மதிப்பு தெரியும். அதை ஈட்டும் வழியையும் தெரிந்தே வைத்திருக்கிறோம். ஆனால் பணத்தின் வேலை என்ன என்று தெரியுமா? இதை Unlocking the value என்றும் குறிப்பிடுவார்களாம். ஆக, பணத்தின் வேலை என்ன என்பதைச் சொல்லும் சுருக்கமான கதை ஒன்று இப்புத்தகத்தில் உண்டு. அதைப் படித்தபின் வெறும் வரவை மட்டுமே கணக்கில் கொண்டிருந்த கண்களுக்கு செலவுக்குப் பின் நிகழும் பணத்தின் சுழற்சி, வியப்பை அளிக்கிறது.

    இருக்கும் வாசலை தாண்டி புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாவைப்போல், சொந்தக்கணக்கையே பார்த்து கொண்டிருக்கும் நீங்கள் நாட்டின் கணக்கையும் கொஞ்சம் தெரிந்துகொள்ள என் பரிந்துரையுடன் வெளிவந்திருக்கும் இந்நூல் நம்மைப் பல புதிய களங்களுக்கு அழைத்துச் செல்கிறது. வெல்லத் துடிக்கும் அனைவரின் வாழ்விலும் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அதன் பின்புலம் புரிந்தாலே அதன் பலமும் நமக்குப் புரியும். ஈட்டும் வழியிலும் தெளிவு வரும். அந்த அனைத்து உயரங்களுக்கும் எளிய வார்த்தையில் விறுவிறுப்பான நடையில் புன்னகையோடு நம்மை அழைத்துச் செல்கிற சோம. வள்ளியப்பன் அவர்களின் எழுத்து. நம்மை அறியாமலேயே நம்மை சூழ்ந்திருக்கும் அறியாமையிலிருந்து நம்மை மீட்டு வருகிறது நாட்டுக் கணக்கு.

    *****

    1. என் கேள்விக்கு என்ன பதில்?

    28.02.18 அன்று 'நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதைத் தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். அவர் பேச்சில் வரிக்கு வரி என்ன என்ன வரிகள் என்று விளக்கினார். பின்பு சில பைட்ஸ் காட்டினார்கள். அதில் கடைத் தெருக்களில் வாகனங்களில் போய்க் கொண்டிருந்தவர்களை நிறுத்தி, 'பட்ஜெட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவர்கள் எரிச்சலோடு ஏற்கெனவே விலைவாசி உயர்ந்துவிட்டது. (இந்த அழகில்) இந்த பட்ஜெட்டில் மேலும் வரிகள் போட்டிருக்கிறார்கள்! தாங்காது என்றார்கள். பேட்டி கொடுத்த குடும்பத் தலைவிகள் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தார்கள். பிறகு! அவர்கள்தானே குடும்ப பட்ஜெட்டை சமாளித்தாக வேண்டும்.

    வழக்கம்போல எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்திய அரசு செய்திருப்பது அநியாயம். 'ஆம் ஆத்மி' (பொதுமக்கள்) இதனால் மேலும் பாதிக்கப்படுவார் என்றார்கள்.

    பிரதமரும் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும் வழக்கம்போல, இது நல்ல பட்ஜெட். பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்கள். மாதச் சம்பளக்காரர்கள், சரியில்லை. இந்த முறை கொஞ்சமாவது வருமான வரியைக் குறைத்திருக்கலாம் என்றார்கள். பொருளாதார வல்லுனர்களோ வரவுக்கும், செலவுக்குமான இடைவெளியான 'பிஸ்கெல் டெபிசிட்' 3.3 % என்பது குறைவு. வளர்ச்சியை அதிகரித்து, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய நல்ல பட்ஜெட் இது என்று கருத்துச் சொன்னார்கள்.

    அடுத்த நாள் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியுடன் முதல் பக்கத்தையும் மேலும் சில பக்கங்களையும் பட்ஜெட்டே எடுத்துக் கொண்டது. சில அலசல்கள். எவற்றின் விலைகள் எவ்வளவு உயரும். எவற்றின் விலைகள் எவ்வளவு குறையும் என்றும், பட்ஜெட் அறிவிப்புகள் காரணமாக எந்த நிறுவனப் பங்குகளை வாங்கலாம், எவற்றை விற்றுவிட வேண்டும் என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். அவ்வளவுதான். அடுத்தடுத்த நாட்களில் வேறு செய்திகள் தமிழ்

    முக்கியத்துவம் பெற, பட்ஜெட்டும் அதன் தாக்கமும் வழக்கம்போல சுலபமாக மறக்கப்பட்டுவிட்டன.

    பிறகு? வேறென்ன! அடுத்த ஆண்டுதான் இனி பட்ஜெட் பற்றி பேசுவோம் என்பது போலாகிவிட்டது நிலை.

    பட்ஜெட் என்றால், வருமான வரியில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? என்று மாதச் சம்பளக்காரர்கள் கவனிக்கிறார்கள், அதுபற்றி சில நாட்களுக்குப் பேசுகிறார்கள். மற்றவர்கள், அவர்கள் வாங்க நினைத்திருக்கும் கார், வண்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றின் மீது ஏதாவது வரி போடப்பட்டிருக்கிறதா? உயர்த்தப்பட்டிருக்கிறதா? என்று பார்க்கிறார்கள். அது பற்றிப் பேசுகிறார்கள். அவ்வளவுதான். பெரும்பாலும் அதற்குமேல் பார்க்கிற வழக்கம் இல்லை.

    பட்ஜெட் தன்னை நேரடியாக எப்படிப் பாதிக்கிறது? அதன் உடனடித் தாக்கம் என்ன? என்பதைப் பற்றி ஒருசிலர் அந்த நேரத்திற்குக் கவலைப்படுவதோடு சரி. அதற்குமேல் அது குறித்து உன்னிப்பாகக் கவனிப்பவர்கள், அதைப்பற்றிப் புரிந்துகொள்ள மெனக்கெடுபவர்கள், கவலைப்படுபவர்கள் மிகவும் குறைவு.

    சாதாரண மக்கள், 'விலைவாசி ஏறிவிட்டது. இதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்! நம் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது தான். வேறு வழியில்லை' என்பது போல ஆயாசப்பட்டுவிட்டுப் பின் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் இதற்கெல்லாம் காரணம் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிதான் என்பதுபோல அவர்களைக் குற்றம் சொல்லிவிட்டுப் பின் வேறு பிரச்சனைகளைக் கவனிக்க நகர்ந்து விடுகிறார்கள். வேறு சிலர், என்ன என்னவோ சொல்கிறார்களப்பா. இதெல்லாம் நமக்குப் புரியாது. அப்படியிருக்கையில் ஏன் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு என்பதுபோல அந்தப் பேச்சை அத்தோடு விட்டுவிடுகிறார்கள்.

    ஏனோ பட்ஜெட் பற்றிய சிந்தனை பலருக்கு இந்த அளவிற்கு மேல் போவதில்லை. ஏன் விலைவாசி உயர்கிறது? எதனால் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன? அவர்கள் எடுக்கிற முடிவுகள் சரியானவைதானா? தற்சமயம் நடக்கும் விதங்களைத் தவிர வேறு வழிகளில் வரி விதிப்பதற்குச் சாத்தியமில்லையா? என்பவை பற்றிய விவரங்கள் நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. பட்ஜெட் வருவதற்குமுன் பலரும் பேசும் அளவிற்கு கூட பட்ஜெட் வெளியான பின் அது தொடர்பான பொருளாதார விஷயங்கள் குறித்துப் பேசுவதில்லை

    பட்ஜெட்டுக்கு முன் பொதுமக்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லாவிட்டாலும், நிதி ஆலோசகர்கள், பொருளாதார வல்லுனர்களை, பல தொலைக்காட்சி சேனல்கள் பேட்டி கண்டும், விவாதங்களில் கலந்து கொள்ள வைத்தும், மக்களிடம் அதுபற்றிய ஆர்வத்தையும் கூடவே பயத்தையும் உண்டு பண்ணுகின்றன.

    பட்ஜெட் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? எதற்கு வரி போடுவார்கள்? எதற்குப் போட வேண்டும்? எதற்குக் குறைக்க வேண்டும் என்று ஊடகங்களில் அலசல்கள் நடத்துவார்கள். இவற்றால் பட்ஜெட் மீது கவன ஈர்ப்பு உருவாகும்.

    பெரிய தொழிலதிபர்கள், CII, FICCI, SICCI போன்ற தொழில் கூட்டமைப்புகளின் பொறுப்பாளர்கள் என்று பலருடைய கருத்துகளைக் கேட்டறிவார்கள். கோடிக்கணக்கானவர்கள் வாழ்கிற நம் நாட்டில் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். சில ஆயிரங்களைக் கூடத் தாண்டாது. இந்தத் தகவல்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்ப்பவர்கள் வேண்டுமானால் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம். அவர்களிலும் பங்குச் சந்தையில் பட்ஜெட்டால் என்ன தாக்கம் இருக்கும் என்பதற்காகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், 2018-19 பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பேசியவர்களில் சிலர், 2019ல் நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் வரும். அதனால் 2018 பிப்ரவரியில் போடப்படும் பட்ஜெட்டில் அரசால் அதிக வரிகள் போட முடியாது. தேர்தல் ஆண்டில் போடப்படும் பட்ஜெட் என்பது மக்களைக் கவரும், சலுகைகளை அள்ளித் தரும் 'பாபுலிஸ்ட் பட்ஜெட்' ஆகத்தான் இருக்க முடியும். அதனால் (வரிகள் போட்டு) அரசின் வரவு செலவு நிதி நிலையைச் சரிசெய்து கொள்ள நிதியமைச்சருக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இந்த ஆண்டு பட்ஜெட்தான் என்றார்களே பார்க்கவேண்டும்.

    இது பொதுவாக எல்லோருடைய மனதிலும் தோன்றும் ஒரு கருத்துதானே! இதிலென்ன வேடிக்கை இருக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது. அப்படிக் கேட்டால் அது, அதைவிட வேடிக்கையான விஷயமாகிவிடும். தேர்தல் வருகிற ஆண்டு, அதிகம் வரிபோடாவிட்டால்தான், ஆளுங்கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். மாறாக, அந்த ஆண்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், ஆளும் கட்சிக்கு ஓட்டுபோட மாட்டார்கள் என்பதுதான் அவர்கள் சொல்வதில் பொதிந்துள்ள பொருள்!

    தேர்தல் நேரத்தில் அரசில் உள்ளவர்கள் நடந்து கொள்வதை வைத்துத்தான், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆள வேண்டியவர்கள் யார் என்ற விஷயத்தில் மக்கள் முடிவெடுக்கிறார்கள் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். எல்லா நேரங்களிலும் அப்படியில்லை என்றாலும், அவர்கள் சொல்வது போலவும் நடக்கத்தானே செய்கிறது.

    இது வேடிக்கையான விஷயமாக இல்லாவிட்டாலும் வேதனையான நிலைதானே? இது வேடிக்கையா? இல்லையா? என்பதைப் பிறகு பார்ப்போம். அதற்குமுன்,

    இதென்ன நிதியமைச்சருக்கு இருக்கும் வாய்ப்பு? அவர் யார்? அவர்தான் இந்த நாட்டின் நிதிநிலை பற்றிய எல்லா விஷயங்களையும் பற்றி முடிவு செய்கிறாரா? அவருக்கு அவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தது யார்?

    அதுபோக, நாட்டின் நிதி நிலையை சரி செய்ய இது சரியான வாய்ப்பு என்றால், நாட்டின் நிதி நிலை தற்போது சரியாக இல்லையா? நிதிநிலை சரியில்லை என்றால் என்ன? அதில் எது சரியில்லை?

    அப்படியே இருந்தாலும் அது, மைய அரசின் பிரச்னைதானே! அது என்னையும் பாதிக்குமா என்ன?

    அப்படி அது மக்கள் அனைவரையும் பாதிக்கக்கூடிய முக்கிய விஷயமாக இருந்தால், அதைச் சரி செய்ய வேண்டியதுதானே அரசின் வேலை! அதைச் செய்வதை விட்டுவிட்டு, இது தேர்தல் நடைபெற உள்ள ஆண்டா? அல்லது தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய ஆண்டா என்றெல்லாம் ஏன் நேரம், காலம் பார்க்கிறார்கள்?

    இதனால் நாட்டுக்கும் அதன் மூலம் எனக்கும் ஏதாவது பாதிப்பு இருக்குமா?

    இப்படித்தான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்களா? அப்படியென்றால் நாட்டின் தற்போதைய நிதி நிலைதான் என்ன?

    தலைக்கு இவ்வளவு கடன் இருக்கிறது என்று கணக்குப் போட்டுச் சொல்கிறார்களே! அதெல்லாம் உண்மைதானா? என் கணக்கிலும் அரசு சார்பாகக் கடன் இருக்கிறதோ?

    அரசு வரி போட்டால் எனக்குப் பிடிக்கவில்லைதான். வரியை உயர்த்தினால் வருத்தமாக இருக்கிறது. சமயத்தில் கோபம் கூட வருகிறது. வரி குறைந்தால் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உணர்வுகள் சரியானவைதானா? இல்லை, தவறானவையா?

    வரிப்பணம், வரிப்பணம் என்கிறார்களே, நாட்டில் எல்லோருமே வரி கட்டுகிறார்களா?

    வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது? எவ்வளவு ரூபாய் வரியாக வசூலாகிறது? அந்தப் பணத்தை வைத்து என்ன செய்கிறார்கள்?

    தவிர, பல இலவசங்கள் தரப்படுகிறதே! இதற்கெல்லாம் எங்கிருந்து காசு வருகிறது? அதன் மொத்த பண மதிப்பு என்ன? இவற்றையெல்லாம் யார் முடிவு செய்கிறார்கள்? இதன் பயனாளிகள் யார்? அந்த உதவித்தொகைகள் சரியாக அவர்களைச் சென்று அடைகிறதா?

    கார்ப்பரேட்களுக்கும் உதவிப்பணம் போகிறதாமே! அவர்களுக்கு ஏன் அரசு உதவி செய்யவேண்டும்?

    இதெல்லாம் போக மாநில அரசும் பட்ஜெட் போடுகிறது. பல இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. சிலர் அதைப் பாராட்டுகிறார்கள், சிலர் குறை சொல்லுகிறார்கள். இதில் எது சரி?

    மாநில அரசு ஏன் தனியாக பட்ஜெட் போடுகிறது? அது என்ன விதமான பட்ஜெட்? அது வேறுவிதமாக இருக்குமா; மத்திய அரசின் பட்ஜெட் என்பது வேறா? அதற்கு வரி கட்டுபவர்கள், இதற்குக் கட்ட வேண்டாமா?

    பால் விலை அதிகரிப்பு, மின்கட்டணம், பேருந்துக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கெல்லாம் இதுபோன்ற வரி உயர்வுகள்தான் காரணமா? இல்லை அதற்கெல்லாம் காரணங்கள் வேவ்வேறா?

    இதெல்லாம் போதாதென்று, ரிசர்வ் வங்கியின் கவர்னர், தன் பங்கிற்கு அவ்வப்போது வட்டி விகிதத்தைக் குறைக்கிறேன் அல்லது

    Enjoying the preview?
    Page 1 of 1