Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sambarikka Theriyum, Semikka Theriyuma?
Sambarikka Theriyum, Semikka Theriyuma?
Sambarikka Theriyum, Semikka Theriyuma?
Ebook154 pages1 hour

Sambarikka Theriyum, Semikka Theriyuma?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. Known for his erudite writing style, his articles and columns are widely published in leading Tamil newspapers and periodicals regularly. His book on Stock investing, titled Alla Alla Panam, released in 2004 by Kizhakku Publishers (New Horizon Media), has been a phenomenal success and has sold over 1,25,000 copies. Valliyappan is regularly invited by many Tamil Television channels for his opinions on stock market and economic events.

He is a Graduate in Economics from Madras University and Post Graduate in Business Administration with human resource and Marketing specializations. Valliyappan has undergone a comprehensive educational program on Emotional intelligence at XLRI , a premier Business Management Institute Jamshedpur, India.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580110104540
Sambarikka Theriyum, Semikka Theriyuma?

Read more from Soma Valliappan

Related to Sambarikka Theriyum, Semikka Theriyuma?

Related ebooks

Reviews for Sambarikka Theriyum, Semikka Theriyuma?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sambarikka Theriyum, Semikka Theriyuma? - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    சம்பாரிக்கத் தெரியும், சேமிக்கத் தெரியுமா?

    Sambarikka Theriyum, Semikka Theriyuma?

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.மழை வரும் நேரம்

    2. தொடர் மழை

    3. சீட்டுக் கட்டலாமா?

    4. பணத்தின் மதிப்பு போகப் போக குறையுமா?

    5. ஷேரில் இறங்கி ஒரு கை பார்த்துவிடலாமா?

    6. எல்லாம் ஒன்றல்ல

    7. பிரித்துப் போடும்- பேலன்ஸ்டு அப்ரோச்

    8. பரஸ்பர நிதிகள்- மியூட்சுவல் பண்ட்ஸ் தரும் பலன்

    9. சிஸ்டெமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்

    10. ஒரே தடவையிலா? தொடர்ந்து சிறிது சிறிதாகவா? -எப்படிச் செய்யலாம் முதலீடு?

    11. ஜனவரி, பிப்ரவரி மார்ச்…

    12. ஒரே கல்லில் இரண்டு மூன்று மாங்காய்- ELSS

    13. தங்கத்தில் முதலீடு - சரியா? தவறா?

    14. செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

    15. தங்கத்தை நாணயமாகச் சேமிக்க்லாமா!

    16. சவரனில் சேமிப்பு- ஒரு அலசல்

    17. தங்கம் என்ற தாதா- சில தங்கமான தகவல்கள்

    18. கோல்ட் ETF -தங்கத்தில் முதலீடு செய்ய மற்றொரு வழி

    19. இன்சூரன்ஸ் தெரியுமா இன்சூரன்ஸ்?

    20. சின்ன செலவு- பெரிய பாதுகாப்பு

    21. எந்த ரிஸ்க்கையும் சந்திக்கலாம்

    22. இன்சூரன்ஸ்: ஜாக்கிரதை!

    23. பேரம் பேசிக் குறைக்க முடியும்!

    1.மழை வரும் நேரம்

    அது பொருளாதாரத்தில் நடுத்தர நிலைக்கும் சற்றுக் கீழே உள்ளவர்கள் வசிக்கும் இடம். பகல் பதினோரு மணி. மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து இருந்த இரண்டு சிறிய குடித்தனங்கள்.

    முதல் வீட்டில் இருந்த சுசீலா அம்மாள், மழை பெய்யத் துவங்கியதும், வீட்டில் காலியாக இருந்த வாளி, பிளாஸ்டிக் குடம், அலுமினிய குண்டான் ஆகியவற்றை வேகவேகமாக மழைத்தண்ணீர் விழும் இடங்களில் வைக்கிறார்...

    அடுத்த வீட்டில் இருந்த கண்ணம்மா வீட்டில் தொலைக் காட்சிப் பார்த்துக்கொண்டிருந்ததால், மழை வந்ததை கவனிக்கவில்லை. மழையின் காரணமாகவோ என்னவோ, அப்போது கரண்டு போனது. கண்ணம்மாவுக்கு கடும் எரிச்சல். வாசலைப் பார்த்துதான் மழை பெய்வதை தெரிந்துகொண்டார்கள்.

    இராத்திரியில பேயக் கூடாது! பட்டப்பகல்ல பெஞ்சுக்கிட்டு... கரண்டு கட் ஆகி...ஒரு நல்ல சீரியல் பார்க்க வுடுதா? சலித்துக்கொண்டார்கள்.

    ஒரு மணிநேரம் விடாமல் பெய்த மழையில் சுசிலா அம்மாள் வைத்த பாத்திரங்கள் நிறைந்துவிட்டன. சுத்தமான ஜில்லென்றிருந்த தண்ணீர்.

    மழைவிட்டதும் மீண்டும் சீரியலைத் தொடர்ந்து பார்க்கத் தொடங்கிய கண்ணம்மா, திடீரென நினைவு வந்தவராக தன் மகனை, டேய் மணி பன்னிரண்டு அடிச்சிடுச்சு. தண்ணி லாரி வந்திடுச்சா பார் என்று விரட்டினார்கள். வேண்டாவெறுப்பாக வெளியே போக முயன்றவனை நிறுத்தி கையில் இரண்டு குடங்களைக் கொடுத்தார்கள்.

    போனவன் போன வேகத்திலேயே திரும்பி வந்தான். இன்னும் இரண்டுநாளைக்கு லாரி வராதாம். வெட்டிப்போட்டிருக்கும் பள்ளத்தை மூடுனாத்தான் லாரி உள்ள வருமாம்". குடங்களை போட்டுவிட்டு அவன் போய்விட்டான். இனி கண்ணம்மா தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடவேண்டும். தேவைப்பட்டால் அன்றைய தினம் காசு கொடுத்துக்கூட வாங்கவேண்டி வரலாம்.

    ஆனால் சுசிலா நிலைமை வேறு. அவர்தான் மழைத் தண்ணீரைப் பிடித்து வைத்திருக்கிறாரே!

    தண்ணீர் வீடு தேடி வந்தது. பேதமின்றி இருவர் வீட்டிலுமே கொட்டியது. ஒருவர் பிடித்து வைத்துக்கொண்டார். மற்றுருவர், வந்த சமயம் விட்டுவிட்டு பின்னால் தேடுகிறார்!

    இவர்களைப் பற்றி நாம் எதற்காகத் தெரிந்துகொள்ளவேண்டும்? நம் நிலைமை என்ன மழைத் தண்ணீரைப் பிடித்து பயன்படுத்தும் அளவா சுமாராக இருக்கிறது! என்று சிலருக்குத் தோன்றலாம். மழைத்தண்ணீர் ஒரு ஒப்பீடு. எதற்கு ஒப்பீடு? கிடைக்கிற வருமானத்திற்கு ஒப்பீடு.

    சுசீலா கண்ணம்மா ஆகியோர் கற்பனைப் பாத்திரங்கள்தான். அவர்களுடைய பொருளாதார நிலைமைகளை விட பத்துப் பதினைந்து மடங்கு சிறப்பாக இருக்கிற நிஜமான வேறு இரண்டு மனிதர்கள் பற்றிச் சொல்கிறேன்.

    முதலாமவர் பெயர் சுந்தர். வயது 50. தனியார் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். சென்னை தி நகரில் அவர் வசிக்கும் பிளாட் வாங்க, 15 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மாத ஈ.எம்.ஐ. ரூ 17,000. அவருடைய மாத சம்பளம் 90 ஆயிரம். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், 2008ம் ஆண்டு பொருளாதார சுணக்கம் ஏற்பட்டது. மற்ற பல நிறுவனங்களைப் போல அவர் வேலை செய்த நிறுவனத்தின் வியாபாரமும் படுத்துவிட்டது.

    உயர் பதவியில் இருந்ததால் அவருக்கு நிறுவனத்தின் நிலைமை புரிந்தது. உஷாராகி வேறு வேலை வேலை தேட ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் அதுதான் நிலைமை என்று புரிந்தது. வேலை போய்விடும் என்ற நிலையில், மற்ற எல்லாவற்றையும்விட, வீட்டுக்கடன் பாக்கி 10 லட்சம் அவரை அதிகம் பயமூர்த்தியது.

    அதன் பிறகு சம்பளத்தில் இருந்து மாதம் 50 ஆயிரம் வீதம் வீட்டுக்கடனை அடைக்க எடுத்து வைக்க ஆரம்பித்தார். மூன்று மாதங்கள் போனதும், அவர் பயந்தது போலவே, முதலாளி சுந்தரை அழைத்துப் பேசினார். அதற்கது மூன்று மாதங்களில் அவர் வேலையை விட்டுவிட்டுப் போய்விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு சுந்தர் அவருடைய மாத சம்பளத்தில் மாதம் 60 ஆயிரம் வீதம் வீட்டுக்கடனுக்காக எடுத்து வைத்தார். இப்படியாக ஆறுமாதங்களில் அவரால் மூன்று லட்சத்துப் பாத்தாயிரம் ரூபாய் சேர்த்துவிட முடிந்தது.

    கிராஜிவிட்டி, பி.எப் போன்ற மற்ற தொகைகளையும், ஆறுமாதங்களில் எடுத்து வைத்திருந்த 3.10 லட்ச ரூபாயுடன் சேர்த்து வீட்டுக்கடனை திருப்பிக் கட்டிவிட்டார். அதன் பிறகு அவர் மனதில் ஒரு சிந்தனை ஓடியது. அந்த சிந்தனை,

    ‘அட ஆறே மாதத்தில் இவ்வளவு சேர்க்க முடிந்ததே! இதே போல நான் முன்பே முயற்சித்திருந்தால், மொத்த கடனையும் முப்பதே மாதங்களில் கட்டியிருக்கலாம் போலிருக்கிறதே. விட்டுவிட்டேனே!! அப்படிக் கட்டியிருந்தால், அதன் பிறகு செய்த சேமிப்புகளை பணமாக வைத்திருந்திருக்கலாமே அல்லது வேறு சொத்துக்கள் வாங்கியிருக்கலாமே! வருமானம் இல்லாமல் போய்விட்ட இந்நேரம் அவை தேவைக்கு உதவியிருக்குமே!’

    சுந்தர் சிந்தனை சரியானதுதான். ஆனால் அவர் ஏன் முன்பே அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டார்? அந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக சுசிலா மற்றும் கண்ணம்மாவைவிட பணவசதி அதிகம் இருக்கும் மற்றொருவரையும் பார்த்துவிடலாம்.

    அவர் பெயர் கணேசன். அடிக்கடி வேலை மாறும் அளவிற்கு திறமையுள்ளவர். ஒவ்வொரு வேலையிலும் முந்தைய வேலைகளைவிட அதிக சம்பளம் கேட்டுப்பெறுவார். ஆறுமாதங்களுக்கு முன்புதான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மாதம் இரண்டரை லட்சம் சம்பளத்திற்கு வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாவினார்.

    மிகப்பெரிய சம்பளம், அதுவும் பன்னாட்டு நிறுவனத்தில். கையில் இருந்த முப்பது லட்ச ரூபாய் சேமிப்பைக் கொடுத்து, மேலும் எண்பது லட்ச ரூபாய் கடன் வாங்கி ஒரு சென்னைக்கு மிக அருகில் ஒரு தனிவீட்டை, வில்லாவை புக் செய்தார். மாதம் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் ஈ.எம்.ஐ. இரண்டு மாதங்கள் கட்டியாயிற்று.

    அவருக்கு அவரது மேலதிகாரிக்கும் ஒத்துவரவில்லை. வேலையில் பயங்கர நெருக்கடி. சமாளிக்கவே முடியவில்லை. வீட்டுக்கடனை நினைத்து, எல்லா அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு நாட்களை ஓட்டினார். ஆனாலும் முடியவில்லை... அவராக ராஜினாமா செய்வதைத்தான் அவரால் தவிர்க்கமுடிந்தது. ஆனால் நிறுவனம் அவரை, ’போதும் கிளம்புங்கள்’ என்று மூன்று மாத சம்பளத்தைக் கையில் கொடுத்து போகச் சொல்லுவார்கள் என்று அவர் நினைக்கவில்லை.

    கையில் இருந்த சேமிப்பு அனைத்தும் துடைத்து எடுத்து புது வீட்டுக்காக கொடுத்தாயிற்று. வேறு வேலை உடனே கிடைக்கமாட்டேன் என்கிறது. அவரது படிப்பிற்கும் அனுபவத்திற்கும் கடைசியாக வாங்கிக்கொண்டிருந்ததைவிட லட்ச ரூபாய்க்கும் மேல் குறைவாகத்தான் வேலைகள் கிடைக்கின்றன. கீழிறங்க மனம் இல்லை. மனிதர் தவிப்புடன் தேடிக்கொண்டிருக்கிறார்.

    அரசாங்க வேலைகள் தவிர வேறு எதற்கும் உத்திரவாதம் இல்லை என்பதுதான் நிலைமை. எந்த வருமானமும் சாசுவதம் இல்லை. காரணம், உலகம் அப்படி ஒரு போக்கில் போய்க்கொண்டிருக்கிறது.

    2008ம் ஆண்டு நிலைமை இன்னமும் சரியான பாடில்லை. இன்னமும் எவ்வளவோ நிறுவனங்கள் போதிய வியாபாரம் இல்லாமல் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    இருப்பது நல்ல வேலையா?; சம்பளம் சரியாக வருகிறதா? நல்லது. இந்த வாக்கியமும் அறிவுரையும் சுசிலா

    Enjoying the preview?
    Page 1 of 1