Viraivil Vidiyum
()
About this ebook
கமலம் தன் மூத்த மகள் ரேணுவின் திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பொழுது ரேணுவின் வாழ்க்கையில் வருகிறான் செந்தில். ரேணுவின் மனதை மட்டுமல்லாமல் கமலத்தின் குடும்பத்தினர் அனைவர் மனதையும் கவரும் செந்திலுக்கு குழந்தைப்பேறு தாமதமாகிறது. ரேணு கருவுறுகிறாள். அப்போது நடக்கிறது அந்த விபத்து.
நேர்மறை எண்ணங்களும் தூய்மையான காதலும் பாசமும் நிறைந்திருக்கும் விரைவில் விடியும் நிச்சயம் கவரும் படிப்போர் இதயம்.
Read more from Gavudham Karunanidhi
Konjam Kaadhal Konjam Kaamam Rating: 5 out of 5 stars5/5Daniel Rating: 4 out of 5 stars4/5Ayokyan Rating: 4 out of 5 stars4/5Psyco 2 Rating: 5 out of 5 stars5/5Yaamam Rating: 4 out of 5 stars4/53 Rating: 4 out of 5 stars4/5Nimmi 2 Rating: 5 out of 5 stars5/5Bathran Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Konja Vaa Rating: 5 out of 5 stars5/5Adai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Nimmi Rating: 5 out of 5 stars5/5Manadhil Meendum Mazhaikalam Rating: 0 out of 5 stars0 ratingsPournami Rating: 0 out of 5 stars0 ratingsArugil Rating: 0 out of 5 stars0 ratingsPaasarai Rating: 0 out of 5 stars0 ratingsJannal Rating: 0 out of 5 stars0 ratingsUyirindri Uyireduppen Rating: 5 out of 5 stars5/5Thottuvidavaa Rating: 0 out of 5 stars0 ratingsKalam Rating: 0 out of 5 stars0 ratingsJaanu Rating: 0 out of 5 stars0 ratingsPsycho Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanmanikku Rating: 0 out of 5 stars0 ratingsNadamaattam Rating: 0 out of 5 stars0 ratingsDevil Score Rating: 0 out of 5 stars0 ratingsThendral Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Mattum Rating: 0 out of 5 stars0 ratingsSuper Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Viraivil Vidiyum
Related ebooks
Manathodu Veesum Thendral Rating: 5 out of 5 stars5/5Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Pozhuthu Rating: 2 out of 5 stars2/5Ullam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Iraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Varum Neram Rating: 5 out of 5 stars5/5Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Payanangal Mudivathillai Rating: 3 out of 5 stars3/5Anbaana Anuvirkku Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Neeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsஇனியெல்லாம் சுகமே..! Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsSuper Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSolla Padatha Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Anbe Azhaikkirean Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratingsThean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsManjal Roja Rating: 0 out of 5 stars0 ratingsEnaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsKaividuveno Kanmaniye! Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Viraivil Vidiyum
0 ratings0 reviews
Book preview
Viraivil Vidiyum - Gavudham Karunanidhi
https://www.pustaka.co.in
விரைவில் விடியும்
Viraivil Vidiyum
Author:
கவுதம் கருணாநிதி
Gavudham Karunanidhi
For more books
http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
அம்மா போயிட்டு வர்றேன்
ரேணுகா சொல்ல
டிஃபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டியாடி?
கேட்ட கமலம் டேபிளில் டிஃபன் பாக்ஸைப் பார்த்து எடுத்துப் போய் நீட்டினாள்.
எத்தனை முறை சொன்னாலும் மறந்துடு
சொன்ன கமலத்தைப் புன்னகையுடன் பார்த்த ரேணுகா வாங்கித் தன் பேக்கின் ஜிப்பைத் திறந்து உள்ளே வைத்தாள்.
என்ன பண்ணிருக்கே?
தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும்.
ஆஹா மிஸ் பண்ணத் தெரிஞ்சேன்
சிரித்தபடி கிளம்பினாள்.
நடந்து செல்லும் ரேணுகாவைப் பெருமூச்சுடன் பார்த்தபடி வாசலில் நின்றாள் கமலம்.
கணவன் சங்கரன் மறைந்து பத்தாண்டுகளில் கமலம் அப்பா இல்லாத குறை தெரியக்கூடாது என்று எல்லாப் பொறுப்புக்களையும் தன் தோளில் சுமந்து பிள்ளைகள் மூவரையும் நல்லபடியாகவே வளர்த்திருந்தாள். இதோ. மூத்தவள் ரேணு இப்போது வேலைக்குப் போனதிலிருந்து கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது. அடுத்தவள் சங்கரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இருக்கிறாள். கடைசியாய் கண்ணன். பதினோராம் வகுப்பு. விளையாட்டுத்தனம் ஜாஸ்தி. இன்னும் எதையும் புரிந்து கொள்ள மறுக்கும் சுபாவம். அடம் பிடித்துத் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான்.
கமலத்திற்கு ரேணுகாவை நினைத்து எப்போதும் பெருமைதான். பிறக்கும்போதே புன்னகைத்தவள்.
அம்மா தான் அவளுக்கு எல்லாம். கமலம் எது சொன்னாலும் புன்னகை முகத்துடன் சரிம்மா என்பாள். கமலத்தின் நெஞ்சம் நெகிழும்.
இவ வயசிலிருக்கும் எல்லோருக்கும் கல்யாணம் ஆகி குழந்தையிருக்கு. ரேணுவுக்கு எப்ப? நினைச்சாவே மலைப்பாயிருக்கு. கடவுளே. என் பொண்ணுக்கு சீக்கிரமா விடியணும். நீ தான் பார்த்து அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்.
அடிக்கடி கமலம் கடவுளிடம் வேண்டிக் கொள்வாள்.
ரேணு எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத சுபாவம். யாரும் அவளை வெறுக்க மாட்டார்கள்.
படிக்கும்போது ஒருவன் காதலைச் சொல்ல அவன் மனம் புண்படாதபடி நாகரிகமாக மறுத்தாள்.
நீங்க பார்க்கிறதுக்கு நல்லா இருக்கீங்க. உங்களைக் கல்யாணம் பண்ண பொண்ணுங்க போட்டி போடுவாங்க. நாம காதலிச்சுட்டு நாளைக்கு உங்க வீட்ல பார்க்கிற பொண்ண நீங்க கல்யாணம் பண்ணிட்டு நான் நீங்க உங்களுக்கு வரப் போற மனைவி மூணுபேரும் நிம்மதியில்லாம இருக்கிறது வேண்டாம். எனக்கு உங்களைப் பிடிக்கும். காதலிக்கிறதை தைரியமா நேர்மையா வெளிப்படுத்தற உங்க குணம் பிடிச்சிருக்கு. ஆனா உங்களை என்னால் ஏத்துக்க முடியாது. என்னால் யாரையும் காதலிக்க முடியாது. எனக்கு எங்கம்மா தான் உலகம். அவங்களை நிம்மதியா எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்க வைக்கணும்கிறதுக்குத் தான் நான் ஓடிட்டிருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க.
அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவள் மீதான மதிப்பு கூடியிருந்தது.
ரேணு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தாள்.
14 ஏ வழக்கம் போல் கூட்டமாய் வர ஏறிக்கொண்டாள்.
சைட் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ரேணுவை ஸ்நேகமாய் பார்த்தபடி கொஞ்சம் தள்ளி அமர ரேணு அமர்ந்தாள்.
வழக்கமாகச் செல்வதால் கண்டக்டர் சவிதா மருத்துவமனை ஸ்டாப்பிற்கு டிக்கெட் கொடுத்தான்.
'எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சம் உன்னைத் தேடும்'
பேருந்தில் பாட்டு ஒலிக்க கல்லூரி மாணவிகள் லயித்துப் போய் கேட்டனர்.
ரேணு மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டாள். எல்லோருக்கும் கனவுகள் இருக்கின்றன. எங்கிருந்தாவது தனக்கான துணை வர வேண்டும். தன்னையே எப்போதும் தாங்க வேண்டும். தன்னைத் தேட வேண்டும். தனக்காகவே வாழ வேண்டும் என்று.
அப்படி எவர் அமைவார்?
மனிதனின் இயல்பே தவறு செய்வது தான். இயல்பான எவரையும் எவரும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.
நடந்து செல்லும் வழியில் ஒரு மனைவி கணவனை
சனியனே வேலைக்குப் போறேன். மதியம் சாப்பிட்டுடு. செஞ்சு வச்சிருக்கேன்
என்று சொன்னதைப் பார்த்த ரேணுவிற்கு காதல் அங்கு வாழ்கிறது என்பது புரிந்தது.
அவன் மேல் கொண்ட அக்கறையை அவள் வேறுவிதமாய் வெளிப்படுத்திப் போகிறாள். வார்த்தைப் பிரயோகம் முக்கியமே அல்ல. உணர்வும் அக்கறையும் அங்கே கவனத்தில் கொள்ள வேண்டியவை.
சவிதா கேட்டதெல்லாம் இறங்கு
கண்டக்டர் குரல் கேட்டு தன்னிலைக்கு வந்த ரேணுகா இறங்கிக் கொண்டாள்.
நடந்தாள்.
ஐந்து நிமிட நடையில் தான் வேலை பார்க்கும் அலுவலகம் வர உள்ளே நுழைந்தாள்.
பயோமெட்ரிக் சிஸ்டத்தில் தன் வருகையைப் பதிவு செய்தாள்.
தன் இருக்கையில் போய் அமர்ந்து கணினிக்கு உயிர்ப்பித்தாள்.
குட்மார்னிங் ரேணு
நிமிர்ந்து பார்த்தாள்.
வருண் நின்றிருந்தான். அழகாய் புன்னகைத்தான்.
குட் மார்னிங் வருண்
இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
வருண் சொல்ல
நன்றி
என்றவள் தன் முன்னே இருந்த ஃபைலை ஓபன் செய்தாள் அவன் அங்கிருந்து போவான் என்று எண்ணி. ஆனால் அவன் போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
சாப்டீங்களா? கேண்டீன்க்குப் போலாமா?
வருண் கேட்க ஸாரி
என்றவள் வேறு ஒன்றும் சொல்லாமல் இருக்க
வருண் நகர்ந்தான்.
எத்தகைய சூழலில் இருந்து வேலைக்கு வருகிறார்கள் என்று எவரும் மற்றவர்களை குறித்து அறிவதில்லை. தன்னைப்போலவே எல்லாரையும் நினைப்பது முதிர்ச்சியற்ற நிலை.
ரேணு வேலையில் மூழ்கினாள். அலுவலகத்தில் அவளுக்கு ஒரே ஒரு தோழி மட்டுமே உண்டு. திவ்யா. ரேணுவைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவள். ரேணுவிற்கு மனது சரியில்லை என்றால் திவ்யாவிடம் பேசினால் போதும் சட்டென்று இயல்பாக்கி விடுவாள்.
கமலத்தின் சாப்பாட்டிற்கு திவ்யா ரசிகை. பெரும்பாலான நாட்களில் ரேணு கொண்டுவரும் டிஃபன் பாக்ஸ் திவ்யா காலிசெய்துவிட்டு ரேணுவை கேண்டீனில் சாப்பிட வைப்பாள்.
ஹலோ
குரல் கேட்டு நிமிர்ந்த ரேணு தன் முன்னே திவ்யா நிற்பதைப் பார்த்து மலர்ந்தாள்.
என்ன மேடம்? லன்ச் அவர்ல கூட வேலை பார்க்கறீங்க?
திவ்யா கேட்க மணி பார்த்த ரேணு சிரித்தாள்.
ஸாரி டி மணி பார்க்கலை
எழுந்து வா எல்லாரும் உன்னை மாதிரி வேலை செய்யணும்னு சொல்லிடப் போறாங்க. எங்க நிலைமையும் நினைச்சுப் பாரு தாயே
திவ்யா சொல்ல ரேணு புன்னகைத்தாள். எழுந்தாள்.
இருவரும் கேண்டீன் நோக்கி நடந்தனர்.
என்ன சாப்பாடு இன்னைக்கு?
திவ்யா கேட்க
தக்காளி சாப்பாடு உருளைக்கிழங்கு வருவல்
ரேணு சொல்ல திவ்யாவின் முகம் மலர்ந்தது
வாவ் அப்ப எனக்கு வேணும்.
எடுத்துக்கோ
இரு உனக்கு டோக்கன் வாங்கிட்டு வரேன்.
வேண்டாம் திவ்யா ஷேர் பண்ணி சாப்பிடலாம்.
கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டா வீட்டுக்குப் போறவரைக்கும் தாங்காது. நாம நல்லா சாப்பிட்டாத்தான் நாளைக்கு நமக்குப் பிறக்கிற பிள்ளைங்க ஸ்ட்ராங்கா இருக்கும்
புன்னகையுடன் சொன்னபடியே திவ்யா