Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral
Thendral
Thendral
Ebook80 pages27 minutes

Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் ஆசிரியை கொல்லப்பட கொன்றவர்களை தேடி வருகிறது தென்றலின் ஆவி. ஆசிரியை எதற்காக கொல்லப்பட்டார்? அவரைக் கொன்றவர்களை தென்றல் கொன்றதா? தென்றல்- ஹாரர் ஸ்க்ரீம்

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507223
Thendral

Read more from Gavudham Karunanidhi

Related to Thendral

Related ebooks

Related categories

Reviews for Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    தென்றல்

    Thendral

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஜான் மணி பார்த்தான். மாலை ஆறு மணி. ஆக்சிலேட்டரை மிதித்தான். அருகில் அமர்ந்திருந்த அவன் எட்டு வயது மகள் ஏஞ்சல் அவனைப் புன்னகையுடன் பார்த்தாள்.

    டாடி.. சூப்பர்... கிளம்பும்போதே சீட் பெல்ட் போட்டு விட்டிருந்தான். பின் சீட்டில் அமர்ந்திருந்த நிர்மலா மகளின் மீதே கண் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

    பாப்பா... அப்பாவை தொந்தரவு செய்யக்கூடாது… நிர்மலா சொல்ல ஏஞ்சல் சிரித்தாள்.

    இன்னும் எவ்வளவு நேரம்பா போகணும்? தாத்தா வீட்டுக்கு?

    ஏஞ்சல் கேட்க ஜான் புன்னகைத்தான்.

    இன்னும் அரை மணி நேரத்தில் போயிடலாம் சொன்னவன் காரை விரட்டினான்.

    ஜான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் குளச்சல் கிராமத்தில். நாகர்கோவில் மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கும் மார்த்தாண்டத்திற்கும் இடையில். இருக்கும் கடற்கரை கிராமம்.

    வேலை பெங்களூரில். இருப்பது வொயிட்ஃ பீல்ட்.

    மனைவி நிர்மலா பணிக்குச் சென்று கொண்டிருந்தாள். மகள் ஏஞ்சல் பிறந்தபின் அவளைப் பார்த்துக்கொள்ள என்று வேலையை விட்டாள். ஏஞ்சல் வளர்ந்த பிறகும் மீண்டும் வேலைக்குச் செல்ல நிர்மலா விரும்பவில்லை.

    ஜான் குடும்பம் மிகப் பெரியது.

    கூந்தக் குழிவிளையில் ஜானின் அப்பா ஜார்ஜைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாதாரண மீனவனாக வாழ்க்கை யை ஆரம்பித்து தன் கடுமையான உழைப்பால் மீன் ஏற்றுமதியில் தவிர்க்க முடியாத ஆளாக வளர்ந்தவர்.

    அவரின் ஆஜானுவாகுவான உடம்பும் அடர்த்தியான மீசையும் எல்லோரையும் பார்த்தவுடன் பயமுறுத்தும்.

    அவருக்கு மூன்று மகன்கள். இரு மகள்கள். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி மூத்தவள் விக்டோரியா நாகர்கோவிலிலும் இளையவள் பிரின்சி கோவையிலும் இருக்கின்றனர். விக்டோரியாவின் கணவர் டேவிட் சப்-இன்ஸ்பெக்டர். அவர்களின் ஒரே வாரிசு கிறிஸ்டி. ஏழு வயது பெண் குழந்தை.

    இளையவள் பிரின்சிக்கு ஆறு மாதங்கள் முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது.

    மகன்கள் மூவரில். ஜானுக்கு மட்டும் திருமணம் ஆகியிருக்க அவன் தம்பிகள் பீட்டர், தாமஸ் இருவரும் இன்னும் எவரிடமும் மாட்டாமல் வாழ்க்கையின் இனிய பக்கங்களை மட்டுமே இன்னும் புரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

    ஜான் சற்று முன் அவன் அம்மா ரோசியை அழைத்துப் பேச எல்லோரும் வந்துவிட்டனர். அவன் வரவிற்கு காத்திருக்கின்றனர் என்பது தெரிய வரவே காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

    சேவிளையில் மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பினான்.

    வலது புறம் இருந்த பள்ளி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெருநாளுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருந்தன. ஒவ்வொரு பெருநாளுக்கும் குடும்பத்தினர் அனைவரும் ஜார்ஜின் வீட்டில் ஆஜராகிவிடுவர். கூந்தக்குழிவிளை மொத்தமும் உற்சாகமாய் மாறும்.

    ஜார்ஜின் வீட்டில் பேத்திகள் ஏஞ்சல், கிறிஸ்டி இருவரும் காலில் சக்கரம் கட்டியது போல் சுற்றிக்கொண்டே இருப்பர்.

    ஜானுக்கு பெங்களூரில் அபார்ட்மெண்ட்டில் முழு வசதிகளுடன் இருந்தாலும் பணி நிமித்தமாக எந்த வெளிநாடு சென்றாலும் கூந்தகுழிவிளைக்கு வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறெங்கும் கிடைப்பதில்லை.

    பள்ளியைத் தாண்டி வந்த முதல் திருப்பத்தில் வலது புறம் திரும்பினான் ஜான். அந்த பெரிய பங்களாவின் முன் கார் போய் நிற்க,

    மாமா வந்துட்டார் கிறிஸ்டி சந்தோஷக் கூச்சலிட்டபடி ஓடி வந்தாள்.

    ஏஞ்சல் உற்சாகமானாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1