Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjiniley Ninaivu Mugam
Nenjiniley Ninaivu Mugam
Nenjiniley Ninaivu Mugam
Ebook139 pages50 minutes

Nenjiniley Ninaivu Mugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோதி, விதுரன் இவர்களின் ஒரே மகள் வானதி. தன் மகள் வானதி தாயாகிவிட்டாள் என்ற செய்தி கேட்டு, சந்தோஷம் கொள்வதற்கு பதிலாக தன்னுடைய மகளின் முகத்தில் காறி உமிழ்கிறாள். தன் மாமியாரின் இந்த செய்கையால், தன் ஆண்மையைக் கொச்சைப் படுத்தியதாக எண்ணுகிறான் வானதியின் கணவன் ஸ்ரீதர். தன்னுடைய அம்மாவின் இந்த செயல் எதனால் என்ற குழப்பத்தில் வானதி. ஜோதியின் கோபத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580137109351
Nenjiniley Ninaivu Mugam

Read more from R. Sumathi

Related to Nenjiniley Ninaivu Mugam

Related ebooks

Reviews for Nenjiniley Ninaivu Mugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjiniley Ninaivu Mugam - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நெஞ்சினிலே நினைவு முகம்

    Nenjiniley Ninaivu Mugam

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    சங்க இலக்கிய பாடலை சத்தமில்லாமல் பாடுவதைப் போலிருந்தது அந்த தோட்டம்.

    ‘அவிழ்ந்தன தோன்றி(மருதோன்றி மலர்கள்) அலர்ந்தன காயா

    நெகிழ்ந்தன நேர்முகை முல்லை—மகிழ்ந்திதழ்

    விண்டன கொன்றை விரிந்த கருவிளை

    கொண்டன காந்தள் குலை.’

    அப்படி பூத்துக் குலுங்கிய தோட்டத்தில்….

    விண் கிழித்து விழுந்த மழையில் மண்கிழித்து முளைத்திருந்த புதிய பூச்செடிகளுக்கு கண்விழித்து சேயை காக்கும் தாயாய் களை எடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தாள் ஜோதி.

    இளைப்பாற தோட்டத்தில் இட்டிருந்த இருக்கையில் இருந்த அலைபேசியை திரும்பிப் பார்த்தாள்.

    அது ஒளிர்ந்து அதிர்ந்து அழைத்துக் கொண்டிருந்தது.

    ‘யார்’ என்ற யோசனையோடு மண்வாசனை மணத்த கைகளை கழுவி முந்தானையில் துடைத்தபடியே அலைபேசியை நோக்கி வந்தாள்.

    ‘ஸ்ரீதர்’ வானதியின் கணவன். ஜோதியின் மருமகன்.

    எடுத்து காதிற்கு கொடுத்து ‘ஹலோ’ என்றாள்.

    ஆன்டி.. ஸ்ரீதரின் குரலில் உற்சாகம் குறைந்திருந்ததை உணர்ந்தாள்.

    தவிர… இப்பொழுது பகல் பதினொரு மணி. அலுவலகப் பரபரப்பில் அத்தனையையும் மறந்திருக்கும் நேரம்.

    பேசுவதென்றால் பெரும்பாலும் வானதியும், ஸ்ரீதரும் மாலையில்தான் அழைப்பார்கள்.

    அதுவும் வானதிதான் வளவளவென ஃபோனை வைக்க மனமில்லாமல் பேசிக் கொண்டேயிருப்பாள். ஸ்ரீதர் பெரும்பாலும் அழைக்க மாட்டான். அப்படியே அழைத்தாலும் ஏதாவது முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே அழைப்பான். ஓரிரு வார்த்தைகளில் தன் பேச்சை முடித்துக் கொள்வான். நிறுத்து பேசும் நிலையுடையவன்.

    அலுவலக வேளையில் அழைக்கிறான். ஏதாவது முக்கிய விஷயமாகத்தான் இருக்கும் .

    சொல்லுப்பா என்ன விஷயம்? ஆபிஸ் நேரத்துல கூப்பிடறே?

    ஆன்டி… இன்னைக்கு வானதி ஆபிஸ் வரலை.

    ஏன் உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா? தாய்மை சட்டென்று படபடப்பானது.

    "ஆமாம் ஆன்டி காலையில எழுந்ததிலேர்ந்து மயக்கமாயிருக்குன்னு சொன்னா. அதனால ஆபிஸ் போக வேண்டாம்னு சொன்னேன். ரெஸ்ட் எடுக்க சொன்னேன். நான் மட்டும் ஆபிஸ் வந்தேன். இப்ப ஃபோன் பண்ணி மயக்கம் ரொம்ப அதிகமாயிருக்குன்னு சொல்றா. அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போகனும். இன்னைக்குன்னு பார்த்து ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் கண்டிப்பா இருந்தேயாகனும். இங்க அங்க நகர முடியாது. எனக்கு டென்ஷனாயிருக்கு. அதனாலதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வர்றீங்களா?’

    என்ன இப்படி கேட்டுட்டீங்க? நான் அவளோட அம்மா. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறிங்களான்னு கேட்கறிங்க? அவளுக்கு ஒண்ணுன்னா நான்தானே வரணும். ஆமா…எதனால மயக்கம்?

    தெரியலை ஆன்டி. ராத்திரி நல்லாத்தான் இருந்தா

    என்ன சாப்பிட்டா?

    வழக்கம் போல் சப்பாத்தி சப்ஜிதான்

    ஹோட்டல்ல வாங்கிக் கொடுத்தீங்களா?

    இல்ல. வீட்லதான் செய்தா

    சரி… நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நான் இப்பவே கிளம்பறேன்

    ஓகே ஆன்டி அவன் தொடர்பைத் துண்டித்ததும் தொடர்ச்சியாக வானதியைப் பற்றிய கவலை வந்து உட்கார்ந்துக் கொண்டது.

    வானதி மிகவும் திடகாத்திரமானவள். இதுவரை ஒரு காய்ச்சல் கூட வந்து படுத்ததில்லை. முறையான உடற்பயிற்சியால் உறுதியான உடல்வாகு கொண்டவள்.

    திடீரென மயக்கம் எதனால்?

    அவசரமாக உள்ளே ஓடினாள். உடனடியாக வேறு உடைக்கு மாறினாள்.

    வீட்டை பூட்டி கொண்டு வாசலுக்கு வந்த போது வாசலில் மருமகன் அனுப்பிய கார் நின்றிருந்தது.

    ஏறி அமர்ந்து ஓட்டுனரிடம் வேகமாக செலுத்த சொன்னாள்.

    அடுத்த இருபது நிமிடத்தில் கார் மகள் வீட்டு வாசலில் நின்றது. இறங்கி உள்ளே ஓடினாள்.

    மகளின் படுக்கையறைக்குள் நுழைந்தபோது வானதி படுக்கையில் மிகவும் சோர்வாகப் படுத்திருந்தாள்.

    வாடிய மலராய் தோற்றம். பாடிப் பறந்த குயில் படுக்கையில் சரிந்த நிலை.

    அம்மாடி…

    அம்மாவின் குரல் கேட்டு சோர்வாக கண்களைத் திறந்தாள்.

    அருகே சென்று அவளுடைய முகத்தை கைகளில் ஏந்தினாள்.

    அம்மாடி வானதி…என்னடா என்னடா செய்யுது?

    அம்மாவின் முகம் பார்த்த வானதி மெல்ல சிரித்தாள்.

    அம்மாவின் கண்கள் லேசாக நீர் படலமிட்டிருந்தன.

    ஒண்ணுமில்லைம்மா. சும்மா லேசா தலை சுத்தற மாதிரியிருக்கு. அதான். ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்னுதான் நான் ஆபிஸ் போகலை. நீ எதுக்கு வந்தே?

    என்னடி இப்படி அலட்சியமா சொல்றே? தம்பி எவ்வளவு பயந்துட்டுத் தெரியுமா? பாவம் அதால உன்னை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போக முடியலையாம். அதான்…எனக்கு ஃபோன் பண்ணி என்னை கூட்டிக்கிட்டுப் போக சொல்லுச்சு. அதான் நான் பதறியடிச்சுக்கிட்டு ஓடிவந்தேன்.

    ஆமா…நீ ஒண்ணு. ஸ்ரீதருக்குத்தான் வேற வேலை இல்லை. அவர் பேச்சைக்கேட்டுக்கிட்டு நீயும் ஓடிவந்திருக்கே. நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். அம்மாவுக்குஃபோன் பண்ணி சொல்லாதிங்க. அம்மா பயப்படுவாங்கன்னு. கேட்காம சொல்லியிருக்கார். இந்த ஸ்ரீதர் எப்பவும் இப்படித்தான்.

    அலுத்துக் கொண்டவளாய் எழுந்தமர்ந்தாள் வானதி.

    சரி…சரி..டிரஸ்ஸை மாத்திக்கிட்டுக் கிளம்பு

    எங்க?

    எங்கய்யா? ஹாஸ்பிடலுக்குத்தான்.

    அம்மா என்ன நீ ஸ்ரீதருக்கு மேல இருக்கே? எனக்கொண்ணும் இல்லை. நேத்து சாப்பிட்டது என்னமோ வயித்துக்கு ஒத்துக்கலை. வாந்தி எடுத்தேன். அப்படியே தலை சுத்தற மாதிரியிருந்தது. இப்ப நான் நல்லாத்தான் இருக்கேன். காபி போட்டு எடுத்துட்டு வர்றேன் இரு என எழ முயன்றவளை பிடித்து அமர்த்தினாள்.

    என்ன விளையாடுறியா? அங்க உன் புருஷன் ரொம்ப டென்ஷனாயிருக்கார். நான் பதறியடிச்சுக்கிட்டு ஓடிவந்திருக்கேன். காபி போடப் போறாளாம். முதல்ல கிளம்பு ஹாஸ்பிடலுக்கு. வாசல்ல கார் நிக்குது. டிரைவர் வெயிட் பண்றார். ஜோதி மகளை துரிதப்படுத்தினாள்.

    அம்மாவின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக கிளம்பினாள் வானதி.

    அடுத்த இருபது நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்து மருத்துவரை சந்தித்து பெட்டில் அனுமதிக்கப்பட்டு அவசர அவசரமாக பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.

    ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு உறங்கிக் கொண்டிருந்தாள் வானதி. மகளின் தலைமாட்டிலேயே அமர்ந்து கூந்தலை நீவிக் கொண்டிருந்த ஜோதியை மருத்துவர் அழைப்பதாக நர்ஸ் வந்து சொல்லிவிட்டுப் போனாள்.

    மருத்துவரின் அறைக்குள் வந்த ஜோதியை ஏறிட்ட மருத்துவர் சொன்ன செய்தியைக் கேட்டு தூக்கிவாரிப் போட அதிர்ந்தாள் ஜோதி.

    2

    சிஸ்டர்…

    வானதி கண்விழித்ததும் ட்ரிப்ஸை சரிப்பார்த்துக் கொண்டிருந்த நர்ஸை அழைத்தாள்.

    அருகே வந்த நர்ஸ் ஆதரவாக இப்ப எப்படியிருக்கு? தலை சுத்தல் இருக்கா? என்றாள்.

    ம்…பரவாயில்லை. எங்கம்மா எங்க? என்றாள்.

    டாக்டரோட ரூம்ல இருக்காங்க. டாக்டர் உங்க ரிப்போர்ட்டை பார்த்துக்கிட்டிருக்கார் சொல்லிவிட்டு அவளுக்கு தர வேண்டிய மாத்திரைகளை கொடுத்துவிட்டு வெளியே வந்த நர்ஸ் வராண்டாவில் டக்டக்கென நடக்கும்போது கவனித்தாள். வராண்டாவின்

    Enjoying the preview?
    Page 1 of 1