Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanda Varasollunga
Kanda Varasollunga
Kanda Varasollunga
Ebook115 pages40 minutes

Kanda Varasollunga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தினகரன்-முகிலரசி தம்பதியர். கணவனை இழந்து தன் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறாள் குமுதா. தினகரன்-முகிலரசி தம்பதியருக்கும், குமுதாவிற்கும் என்ன தொடர்பு. குமுதாவின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? மேலும் இவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வினை வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580137109347
Kanda Varasollunga

Read more from R. Sumathi

Related authors

Related to Kanda Varasollunga

Related ebooks

Reviews for Kanda Varasollunga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanda Varasollunga - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்டா வரச்சொல்லுங்க

    Kanda Varasollunga

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    கடற்கன்னி வெண்ணிற அலை மாலைகளை ஓடிவந்து கரை காதலனுக்கு சூடி சென்றுக் கொண்டிருந்தாள்.

    அந்த அழகை ரசித்தபடியே தினகரனும் முகிலரசியும் மணலில் அமர்ந்திருந்தனர். கடற்கரைக்கு வந்ததிலிருந்து இப்படி அலைகளையும் அதன் துள்ளல்களையும் ரசித்துக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

    முகிலரசி தான் ரசித்தது போதும் என்பதைப்போல் பேசத் தொடங்கினாள்.

    என்னங்க...

    சொல்லு முகில்

    ஃபாதர்க்கிட்டயிருந்து ஃபோன் ஏதாவது வந்ததா?

    இல்லை...

    நாம அங்கப் போய்ட்டு வந்து மூணுமாசம் இருக்கும்ல.

    ம்... இருக்கும்.

    மூணுமாசம் ஆகுது. அவர் ஒரு ஃபோன்கூடப் பண்ணலையே. நாம சொல்லிட்டு வந்த விசயத்தை மறந்துட்டாரா?

    முகிலரசியின் குரலில் கவலைத் தெரிந்தது.

    எப்படி மறப்பார்? நாம ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கறதா சொன்னதுமே அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார்.

    சந்தோசப்பட்டா மட்டும் போதுமா? எந்த ஸ்டெப்பும் எடுத்த மாதிரி தெரியலையே

    நாம கேட்டமாதிரி கை குழந்தைக் கிடைக்க வேண்டாமா? அவருக்குத் தெரிஞ்ச மற்ற இல்லங்கள்லேயும் சர்ச் மூலமா சொல்லி வச்சிருப்பார். கிடைச்சதும் சொல்லுவார். தவிர தத்து எடுக்கறதுன்னா... சாதாரண விஷயம் இல்லை. ஏதோ... கடையில இருக்கற பொருளை காசுக் கொடுத்து வாங்கிட்டு வர்ற மாதிரி இல்லை. அதுக்கு நிறை ரூல்ஸ் இருக்கு. சட்டப்படி நாம எல்லாத்தையும் முடிச்சு வீட்டுக்குக் கொண்டுவர எப்படியும் ரெண்டு வருசம் கூட ஆகும்.

    ம் பெருமூச்சு விட்டாள் முகிலரசி.

    என்ன பெருமூச்சு விடறே?

    முகிலரசி எதுவும் பேசவில்லை. அமைதியானாள். மாலை சூட ஓடி வருவதாக கற்பனை செய்த அலைகள் இப்பொழுது அப்படித் தோன்றவில்லை. தன் ஆசைகளைப்போலவே தோன்றித்தோன்றி அழிவதைப் போலிருந்தது. அந்த அழிவை வெறித்தாள்.

    அவளுடைய உணர்வுகள் புரிந்ததைப்போல் என்ன அமைதியாயிட்டே? என்றான். எல்லாம் என்னால்தான்தான்

    என்ன உன்னலால்தான்?

    பேசாம நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க

    அடடா... ஜாலியா... டயம் பாஸ் பண்ண பீச்சுக்கு வந்தா... எதையாவது பேசி மூடை கெடுத்துடுவே என்றவன், அவளுடைய கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான்.

    குழந்தை தத்து எடுக்கறதா முடிவு பண்ணியாச்சு. ஆனா... என்ன பேர் வைக்கறதுன்னு முடிவுப் பண்ணலையே. சொல்லு என்ன பேர் வைக்கலாம்?

    அவளும் சட்டென்று கலகலப்பிற்கு மாறினாள்.

    நமக்குக் கிடைக்கப் போறது ஆண் குழந்தையா? பெண் குழந்தையான்னே தெரியலை. எப்படி பேர் செலக்ட் பண்றது?

    இதான்... பெரிய கஷ்டமா? ரெண்டு குழந்தைக்கும் பேர் செலக்ட் பண்ணுவோம். எந்தக் குழந்தைக் கிடைக்குதோ அதுக்கு தகுந்த மாதிரி பேர் வச்சிடுவோம்.

    ம்... அப்ப சரி.

    பெண் குழந்தை பிறந்தா உன் பேரோட தொடர்பு இருக்கற மாதிரியும், ஆண் குழந்தைப் பிறந்தா என் பேரோட தொடர்பு இருக்கறமாதிரியும் பேர் செலக்ட் பண்ணுவோம்.

    ஓகே... இப்ப பெண் குழந்தைக்கு பேர் செலக்ட் பண்ணுங்க உற்சாகமானாள் முகிலரசி.

    உன் பேர் முகிலரசி. அவ பேர்...ம் என்றபடி தவழ்ந்து வந்த அலைகளைப் பார்த்தவன், அலையரசி! எப்படியிருக்கு?

    ம்... சூப்பர்.

    இப்ப நீ சொல்லு. ஆண் குழந்தைக்கு பேர்.

    ம் உங்க பேர். தினகரன். அவன் பேர் மனோகரன்னு வச்சிடலாம்.

    நைஸ்... நைஸ்... அவன் சந்தோசமாய் தலையாட்டிய அதே நிமிடம் திடீரென முகிலரசி பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.

    ஐய்யோ... அங்க பாருங்க... அங்கப் பாருங்க... அலைகளை நோக்கி கைநீட்டிக் கத்தியவாறே... எழுந்து ஓடினாள்.

    ஒன்றும் புரியாமல் மணலில் கால் புதைய ஓடும் அவளைப் பார்த்தவன் அதிர்ந்தான். ஒரு குழந்தை தனியாக அலைகளில் தத்தி தத்தி இறங்கிக் கொண்டிருந்தது. ‘ஐய்யோ’ நிமிடத்தில் விபரீதம் புரிய அவனும் எழுந்து ஓடினான்.

    அவன் அவளருகே வருவதற்குள் அந்த குழந்தையை அலைகளில் சிக்காமல் அலேக்காகத் தூக்கினாள் முகிலரசி.

    அந்தக் குழந்தையோ விபரீதம் புரியாமல் தன்னை தண்ணீரில் விடுமாறு கை கால்களை உதைத்துக் கொண்டு அழுதது.

    தூக்கிக்கொண்டு அலைகளைவிட்டு மேலே வந்தவள் அதன் தாயைத் தேடினாள். அந்தக் குழந்தை கைகளை நீட்டி ம்மா... ம்மா... என தாவியப் பக்கம் திரும்பினாள். அங்கே ஒரு பெண் அலைகளையே வெறித்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

    முகிலரசிக்கு ஆத்திரமாக வந்தது. ‘ச்சீ... என்ன பெண் இவள்? குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். நான்... மட்டும் பார்க்கவில்லையென்றால் இந்நேரம் இந்தக் குழந்தைப் போயிருக்கும். இவளுக்கெல்லாம் போய் ஆண்டவன் குழந்தையைக் கொடுக்கிறானே!’

    ஆத்திரத்துடன் வேக வேகமாக அவளருகே சென்று அவளுடைய தோளைப்பற்றி ‘ஹலோ’ என அசைத்தாள். அடுத்த நொடி அந்தப் பெண் உட்கார்ந்த நிலையிலேயே அப்படியே மணலில் சரிந்தாள்.

    2

    தன் மடியில் உறங்கும் அந்தக் குழந்தையின் கேசத்தை மெல்ல வருடினாள் முகிலரசி.

    அவர்கள் இருந்தது கடற்கரையை சாலையை ஒட்டியிருந்த ஒரு க்ளினிக்கில். அந்த குழந்தையின் தாயை உள்ளே மருத்துவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

    வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் முகிலரசி அந்த குழந்தையை மடியில் படுக்க வைத்துக்கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1