Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagarsamiyin Neechal
Azhagarsamiyin Neechal
Azhagarsamiyin Neechal
Ebook69 pages22 minutes

Azhagarsamiyin Neechal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தத்தித் தவழும் குழந்தைப் பருவத்தில் தாத்தா பாட்டியின் கதைகள் மனதை ஈர்க்கும். நிறைய கேட்க சொல்லி மனம் துடிக்கும். அந்த கதைகளைக் கேட்க நாமும் குழந்தை பருவம் சென்று குட்டிக்கதைகளை வாசிப்போமா? 'அன்னமகத்துவக் கதைகள்' போன்ற மெய்சிலிர்க்கும் கதையை வாசிக்கலாம் வாருங்கள்... மனதை மகிழ்ச்சியில் தெரிக்கவிடலாமா...

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580141907042
Azhagarsamiyin Neechal

Read more from M. Kamalavelan

Related to Azhagarsamiyin Neechal

Related ebooks

Reviews for Azhagarsamiyin Neechal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagarsamiyin Neechal - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    அழகர்சாமியின் நீச்சல்

    Azhagarsamiyin Neechal

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பழைய சோறு ஊட்டும் போது பழம் பெரும் கதைகளை ஏற்ற இறக்கத்துடன் சொல்ல, குழந்தைகளிடையே பழம் பண்பாடுகளைப் பதியச் செய்தவர்கள் தாத்தா பாட்டிகளே.

    தாத்தா பாட்டிகள் சொன்ன வாய்மொழிக் கதைகளே சிறப்பான சிறுவர் இலக்கியக்கதைகள் என்றால் அது மிகையாகாது. கதையும் உண்டு; பாட்டும் உண்டு. கதைப் பாட்டும் உண்டு.

    வாய்மொழி இலக்கியம்

    தாய்மொழி இலக்கியமாகத் தழைக்கிறது.

    பின்னர் அச்சு வடிவத்தில் அழகழகாய் வண்ண ஓவியங்களுடன் சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் குழந்தை இலக்கியம் வளரத் தொடங்கியது.

    பெரிய எழுத்துகளில் சிறுவர்க்கான நூல்கள் அச்சிடப் பெற்றன.

    ஒரே நாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. பல்வேறு தடங்கல்களைத் தாண்டிப் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிக் குழந்தை இலக்கியம் வளரத்தலைப்பட்டது.

    கட்டுக்கோப்பாகக் குழந்தை இலக்கியத்தை வளர்த்தெடுத்த பெருமை குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களையே சாரும்.

    சிறுவர் இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை நூலாக வெளியிடப் பல பதிப்பகங்கள் அந்நாளில் முன் வந்தன. இன்றும் லாப நோக்கம் கருதாது சிறுவர் நூல்களை வெளியிட்டு வருகின்றனர் இலட்சிய நோக்குக் கொண்ட பதிப்பாளர்கள்.

    அந்த வரிசையில் வெற்றிமொழி வெளியீட்டகம், சிறுவர் நூல்களை வெளியிடுவதில் சிறந்த கவனம் செலுத்தி வருகின்றது.

    அழகர்சாமியின் நீச்சல் என்ற இந்தச் சிறுவர் சிறுகதை நூல், வெற்றிமொழி வெளியீட்டகத்தின் பதினைந்தாம் ஆண்டு விழா வெளியீடாக வருகிறது.

    வணிக நோக்கம் இல்லாத வள்ளல் மனம் கொண்டவர், பதிப்பக உரிமையாளர் அன்பு இளவல் திரு. தமிழ்தாசன் அவர்கள். நூலை வெளியிட இசைந்தமைக்கு மனம் கனிந்த நன்றி.

    இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் சுட்டவிகடன், பொம்மி ஆகிய இதழ்களில் பிரசுரமானவை. மேலும் அறிவொளி இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிவந்த குறிஞ்சி மாத இதழில் பிரசுரமான கதைகளும் இடம் பெற்றுள்ளன.

    எந்த இதழிலும் வெளிவராத ஒரு கதை, அன்னமகத்துவக்கதை. அந்தக்கதை எங்கள் ஆச்சி எங்களுக்குச் சொன்ன கதை.

    கதைகளைப் படித்துப் பார்த்து இதில் பிழை திருத்தம் செய்தவர் பெரியகுளம் புலவர் திரு து. இராசகோபால் (அருளாளர்) ஆவார். அவ்வப்போது என்னை உற்சாகப்படுத்தி எழுத வைப்பவர் அருளாளர். அவருடைய அன்பிற்கு நான் ஆட்பட்டவன். அவருக்கு என் இனிய நன்றி.

    பத்திரிகை நண்பர், என் எழுத்துகளை என்றும் நேசிப்பவர் திரு கே. யுவராஜன் அவர்களுக்கு என் கனிவான நன்றி.

    தம்பி தங்கைகளே, அழகர்சாமியின் நீச்சல் என்ற இச்சிறுகதைத் தொகுப்பினைப் படியுங்கள். உங்கள் அப்பா அம்மாவையும் படிக்கச் சொல்லுங்கள். பரிவு, பாசம் இவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    திண்டுக்கல்

    02.09,2019

    இப்படிக்கு,

    மா. கமலவேலன்

    உள்ளடக்கம்

    1. நேசம்

    2. நிரைந்த மனசு!

    Enjoying the preview?
    Page 1 of 1