Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Namba Mudiyatha Nalla Kathaigal
Namba Mudiyatha Nalla Kathaigal
Namba Mudiyatha Nalla Kathaigal
Ebook92 pages29 minutes

Namba Mudiyatha Nalla Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தக் காலத்தில் எல்லோரது வீட்டிலும் பாட்டிகள் இருந்தார்கள். அந்தப் பாட்டிகள் முற்றத்தில் கால் நீட்டி அமர்ந்திருப்பார்கள். இரவு நேரத்தில், நிலவு

ஒளியில் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவார்கள். அப்படியே சுவையான கதைகள் சொல்வார்கள்.

அப்படிக் கதை சொல்லும் பாட்டிகள் இன்று இல்லை.எனவே தம்பி, தங்கைகளே இந்தக் கதைகளைப் படியுங்கள். படித்துவிட்டு உங்கள் பாட்டிகளுக்கு நீங்கள் கதை சொல்லவேண்டும்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580141907046
Namba Mudiyatha Nalla Kathaigal

Read more from M. Kamalavelan

Related to Namba Mudiyatha Nalla Kathaigal

Related ebooks

Reviews for Namba Mudiyatha Nalla Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Namba Mudiyatha Nalla Kathaigal - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    நம்ப முடியாத நல்ல கதைகள்

    Namba Mudiyatha Nalla Kathaigal

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    அந்தக் காலத்தில் எல்லோரது வீட்டிலும் பாட்டிகள் இருந்தார்கள். அந்தப் பாட்டிகள் முற்றத்தில் கால் நீட்டி அமர்ந்திருப்பார்கள். இரவு நேரத்தில் - நிலவு ஒளியில் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவார்கள். அப்படியே சுவையான கதைகள் சொல்வார்கள்.

    சோற்று உருண்டையைவிட அவர்கள் சொல்லும் கதைகள் சுவையாக இருக்கும். இத்தனைக்கும் பாட்டி பள்ளி சென்று படித்ததில்லை.

    ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் அங்கு ஒரு தங்க மாமரம் இருக்கும். அந்தத் தங்க மாமரத்தில் ஒரு பொந்து இருக்கும். அந்தப் பொந்தில் ஒரு செப்பு இருக்கும். செப்பினுள் பொன்வண்டு ஒன்று இருக்கும். அந்தப் பொன்வண்டின் உயிரை எடுத்துவிட்டால் நாட்டில் கொடுமை புரிந்துவரும் மந்திரவாதியின் உயிரைக் கொன்றுவிடலாம். இப்படிப் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பாட்டியின் கதைகள் செல்லும். குழந்தைகள் வாய் பிளந்து ஆர்வத்துடன் கதைகளைக் கேட்டு மகிழ்வார்கள். கூட ஒரு உருண்டைச் சோறும் உள்ளே செல்லும். அப்படிக் கதை சொல்லும் பாட்டிகள் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. இராதாகிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைத்தார்கள். அவர் சோவியத் மக்களது நாட்டுக் கதைகளை நமது தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எழுதித் தரப் பணித்தார்கள்.

    நம்ப முடியாத நல்ல கதைகள் என்ற இந்த நூல் அப்படித்தான் உருவானது. இதில் ஒன்பது கதைகள் உள்ளன. ஒன்பது கதைகளுமே உழைப்பின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.

    மந்திரத்தில் மாங்காய் வந்துவிடாது என்பதை மனதில் பதியும் வண்ணம் உணர்த்துகின்றன.

    தம்பி, தங்கைகளே இந்தக் கதைகளைப் படியுங்கள். படித்துவிட்டு உங்கள் பாட்டிகளுக்கு நீங்கள் கூறுங்கள், அவர்களும் மகிழ்வார்கள்.

    திண்டுக்கல்,

    10-9-2005

    அன்புடன்,

    மா. கமலவேலன்

    பொருளடக்கம்

    1. தந்திரம் தலைதூக்கியது கோடரி கூழானது

    2. குதிரைக்கு வால் போனது தம்பிக்கு வாழ்வு வந்தது

    3. பண்ணையாரின் கொடுமை பசியின் அருமை

    4. பந்தியில் சாப்பாடு பந்தயத்தில் வெற்றி

    5. ஏழைப் பெண்ணுக்குப் புதுத் துணி பணக்காரிக்குத் தும்மல்

    6. மலை மேலே வைரம் மனத்தினுள்ளே வஞ்சம்

    7. பிசாசுகள் பேசின போன கண்கள் வந்தன

    8. கொழுத்த பணக்காரன் நடுங்கினான் ஏழைக் குடியானவன் அதட்டினான்

    9. கதையும் கேட்டோம் கனியும் பெற்றோம்

    1

    தந்திரம் தலைதூக்கியது கோடரி கூழானது

    இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் இருதயசாமி. அவர் விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து பத்துக் கிலோமீட்டர் காட்டுப்பாதையில் செல்லவேண்டும்.

    அடர்ந்த காடு; அதிகம் வீடுகள் கிடையாது. இரவு நேரம். சுற்றிலும் இருட்டு. கரடுமுரடான பாதை.

    இருதயசாமி இராணுவத்தில் வேலைபார்ப்பவர். எனவே அவர் இருட்டைப்பற்றிக் கவலைப்படவில்லை.

    காட்டுக்குள் நடந்து சென்றார். காலையில் சாப்பிட்டது, பசி வந்துவிட்டது. இரவு தங்குவதற்கும் ஓர் இடம் வேண்டும்.

    செல்லும் வழியில் சிறிய குடிசை வீடு ஒன்று தென்பட்டது. இருதயசாமி, வீட்டின் கதவைத் தட்டினார். வயதான பாட்டி ஒருத்தி வந்து கதவைத் திறந்தார்.

    பாட்டி எனக்குப் பசிக்கிறது. சாப்பிட எதாவது தாருங்கள் என்றார் இருதயசாமி.

    பாட்டி ‘பக்பக்’ என்று சிரித்தாள்.

    ஏன் பாட்டி சிரிக்கிறீங்க?

    காட்டுக்குள்ள இருக்கிறேன். ராத்திரி தூங்கப்போற நேரம். சாப்பிடறதுக்கு இப்ப எதுவும் இல்லை. அதுதான் சிரித்தேன். பாட்டி கூறினாள்.

    சரி பாட்டி. பசியைத் தாங்கிக்கிறேன். இன்று இரவு மட்டும் இங்கு தங்கிப்போக இடம் கொடுங்கள் இருதயசாமி கேட்டார்.

    "அதற்கென்ன தாராளமா

    Enjoying the preview?
    Page 1 of 1