Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anthonyin Aattu Kutty
Anthonyin Aattu Kutty
Anthonyin Aattu Kutty
Ebook66 pages23 minutes

Anthonyin Aattu Kutty

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தோணி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஆடுகளை மேய்கிறான். இவ்வாறு ஆடுகளை மேய்க்கும் போது, ஒரு ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்கிறான். கோயில் திருவிழாவிற்கு அந்த ஆட்டுக்குட்டியை வரிவசூலிப்பவர் வந்து நன்கொடையாக எடுத்துக்கொண்டார்.

தன் ஆட்டை மீட்க இரவில் செல்லும் அந்தோணிக்கு என்ன நேர்ந்தது? ஆட்டுக்குட்டியை மீட்டானா? வாசிக்கலாமா...

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580141907043
Anthonyin Aattu Kutty

Read more from M. Kamalavelan

Related to Anthonyin Aattu Kutty

Related ebooks

Reviews for Anthonyin Aattu Kutty

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anthonyin Aattu Kutty - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    அந்தோணியின் ஆட்டுக் குட்டி

    Anthonyin Aattu Kutty

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தேசிய நெடுஞ்சாலையில்...

    2. தோமையார் திருவிழா

    3. இராயப்பன் கோஷ்டி

    4. பால்பாண்டியின் பரிவு

    5. விபத்து... விபத்து!

    6. நகைகள் எங்கே?

    7. ஏமாந்த இராயப்பன்...

    8. பாராட்டும்... பரிசும்...

    முன்னுரை

    இந்திய நாடு மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. அதன் வேகமான வளர்ச்சி - பொருளாதாரச் செழிப்பு சாலைப் போக்குவரத்துகளால் பெரிதும் அமைகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் நமது அன்றாடத் தேவைகள் முதல் அறிவியல் தொழில் நுட்பக் கருவிகள்வரை சாலைகளின் வழியே மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

    வட்டமான இரப்பர் டயர்களில் நமது வாழ்க்கை வட்டம் சுழல்கிறது.

    எனவேதான் சாலைப் பாதுகாப்பு பற்றி பள்ளிகளிலும், பொது அமைப்புகளிலும் ஓயாமல் எடுத்துக் கூறுகிறோம். அரசு சார்பில் ஆண்டுதோறும் 'சாலைப் பாதுகாப்பு வார விழா' கொண்டாடப்படுகிறது.

    திண்டுக்கல் நகரில் அப்படி நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா ஒன்றிற்கு தற்போது சென்னையில் காவல்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றும் (Inspector General of Police) மதிப்பிற்குரிய திரு.C. சைலேந்திரபாபு, I.P.S. அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள்.

    அந்த விழாவின்போது திண்டுக்கல் திரு. ஐ. லியோனி அவர்கள் தலைமையில் ஒரு பட்டி மன்றமும் நடைபெற்றது. பட்டிமன்றம் 'சாலைப் பாதுகாப்பு விழா’வை மையமாகக் கொண்டு நடத்தப்பெற்றது. ஒரு அணியின் சார்பில் நூலாசிரியரும் கலந்துகொண்டார்.

    இறுதியில் விழாப் பேருரையை திரு.C. சைலேந்திரபாபு அவர்கள் நிகழ்த்தினார்:

    "சாலை விபத்துகளில் பெரும்பாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலேயே பலர் இறக்கிறார்கள். வேலூர் - ஓசூர் சாலையில் நடைபெற்ற ஒரு கோர விபத்து. நானே இதை நேரில் உணர்ந்தேன். அடிபட்டவர்களைத் தங்கள் வாகனங்களில் ஏற்ற யாரும் முன்வரவில்லை. அப்புறம் நானே எங்கள் போலீஸ் ஜீப்பை குறுக்கே நிறுத்தி கட்டாய உதவி பெற்றோம் என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

    அதே விபத்தில் அடிபட்டவர்கள் அணிந்திருந்த நகைகள் பலவும் அப்பகுதி மக்களால் களவாடப்பட்டதையும் கூறினார். அதனைக் கண்டுபிடிக்க அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்தான் உதவினான் என்றும் கூறினார்."

    திரு. சைலேந்திரபாபு அவர்கள் திண்டுக்கல்லில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியபோது, விழாவில் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

    அதன் அடிப்படையில் எழுந்ததே இந்தச் சிறுவர் நாவல், அந்தோணியின் ஆட்டுக்குட்டி. பல ஆண்டுகள் அசை போடப்பட்டு உருவான படைப்பு அந்தோணியின் ஆட்டுக்குட்டி.

    தம்பி, தங்கைகளே நாவலைப் படியுங்கள். சாலையில் பயணம் செய்யும் போது அந்தோணியை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களையும்

    Enjoying the preview?
    Page 1 of 1