Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanuda Thooral
Maanuda Thooral
Maanuda Thooral
Ebook68 pages24 minutes

Maanuda Thooral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் முன்னோர்களின் வழியாக கடத்தி வந்திட்ட மரபணுவில் இருக்கும் அந்த அரிய மானுடமென்னும் மரபணுக்களுக்கு சற்று ஊக்கமளித்து செயல்படுத்த தொடங்குவோமா...?

மானுட தூறல் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கதையில் சில கதாபாத்திரங்கள் மனங்கள் வறண்டுபோன சில மனங்களில் மானுட மழையாக பொழிந்து தங்கள் வாழ்வை மேன்படுத்தி வாழ்ந்து காட்டியிருப்பார்கள்...

Languageதமிழ்
Release dateMay 30, 2023
ISBN6580166009827
Maanuda Thooral

Read more from Vidhya Gangadurai

Related to Maanuda Thooral

Related ebooks

Reviews for Maanuda Thooral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanuda Thooral - Vidhya Gangadurai

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மானுடத் தூறல்

    Maanuda Thooral

    Author:

    வித்யா கங்காதுரை

    Vidhya Gangadurai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidhya-gangadurai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    இன்றைய வேகமான வாழ்க்கை நகர்வில் மனிதர்கள் மனிதம் என்பதை மறந்து சக மனிதனின் வலிகளையும், தேவைகளையும் கவனிக்காமலும், சில நிமிடங்கள் அவர்களின் கூறு வரும் உணர்களை செவிமடுத்து கேட்கக்கூட நேரமில்லாமல் இயந்திரங்களைப் போன்று நகர்ந்து சென்று விடுகிறோம்...

    நம் முன்னோர்களின் வழியாக கடத்தி வந்திட்ட மரபணுவில் இருக்கும் அந்த அரிய மானுடமென்னும் மரபணுக்களுக்கு சற்று ஊக்கமளித்து செயல்படுத்த தொடங்குவோமா...?

    மானுட தூறல் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கதையில் சில கதாபாத்திரங்கள் மனங்கள் வறண்டுபோன சில மனங்களில் மானுட மழையாக பொழிந்து தங்கள் வாழ்வை மேன்படுத்தி வாழ்ந்து காட்டியிருப்பார்கள்...

    ‘மறந்த மரபணுவை

    துறந்திடாமல்

    மனம் கதவுகளை

    திறந்து விளம்பரங்களுக்காக

    மனிதம் பேசாமல்

    மனங்களுக்காக

    மனிதம் பேசுவோமா...?’

    அத்தியாயம் 1

    சென்னை புறநகரில் உள்ள பெரும்புதூரின் பிரதான சாலையில் பேருந்திற்காக மக்கள் காத்திருந்தனர்...

    கல்லூரிக்குச் செல்ல... அரசியும் வேகமாக நடந்து வர... அவளைத் தொடர்ந்து... ஏய், அரசி அரசி நில்லு... நானும் வரேன்... என்று ஓடி வந்தாள்... வானதி...

    வானதி, மெல்ல வாடி... ஓடி வராதே... இன்னும் பத்து நிமிஷம் டைம் இருக்கு பஸ் வர... தன் தோழியைப் பார்த்து குரல் கொடுத்தாள் ஈதலரசி...

    அரசியை நோக்கி வேகமாக ஓடி வந்த வானதி... அரிசியை மோதி நின்றாள்... எருமை, பார்த்து வரமாட்டியா... மெதுவா வாடின்னுதானே சொன்னேன்... என்று தடுமாறி சரியாக நின்றவள்... தன் தோழியையும் விழாமல் பிடித்துக்கொண்டாள்...

    சாரிப்பா, சீக்கிரம் உன் கூடவே வரலாமேன்னு பார்த்தா... அதுக்குள்ள, நீ எப்பவோ கிளம்பிட்டு இருக்க... என்றபடி இருவரும் கல்லூரி விஷயங்களை பேசியபடியே பேருந்து நிலையத்தில் வந்து நின்றனர்... இவர்கள் வழக்கமாக வரும் பேருந்து வரவும்... கூட்ட நெரிசலில் சிக்கி, சிதறாமல் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு தினமும் பயணிக்கும் பேருந்தில் பயணம் செய்தனர்.

    மாநகரப் பேருந்தில்தான் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். கல்லூரியின் வாயிலில் மாநகரப் பேருந்து நிற்கவும்... இருவரும் போர்க்களத்தில் போராடிய வீராங்கனைகளாக களைத்துப் போய் இறங்கினார்கள்.

    போச்சு போச்சு அயர்னிங் பண்ணி, போட்டுட்டு வந்த டிரஸ்ஸெல்லாம்... கசங்கி போச்சு. என்று வானதி புலம்பினாள். அரசி அவளை பார்த்து சிரித்தபடியே தனது ஆடைகளை சரி செய்துகொண்டு புத்தகங்களை கையில் தூக்கியபடி நடக்க... என்னடி, அரசி... நீ மெதுவாகவே நடக்க மாட்டியா, உன் கால்ல எதாவது சக்கரம் வச்சிருக்கியா... என்று கேட்கவும், அதற்கும் அமைதியாக புன்னகைத்தாள் ஈதலரசி.

    வானதியும், அரசியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். பள்ளிப்படிப்பை தொடர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1