Peyar Sollum Pookkal
()
About this ebook
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, வாசகர்களின் பெருக்கம், இதழ்களின் வளர்ச்சி சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. நூற்றுக்கணக்கான வார, மாத இதழ்களின் பரப்பளவில் பெரும்பகுதி சிறுகதைகளே. இதழ்களின் அசுரப்பசிக்கு ஆயிரக்கணக்கான சிறுகதைகளே தீனி. சிறுகதை வனத்திடையே நந்தவனப் பூக்களும் உண்டு. கதைக்காடுகளிடையே எழில் மிக்க தோப்புகளும் உண்டு. புதுமைப்பித்தன் முதல் அகிலன்வரை கல்கி முதல் ஜெயகாந்தன்வரை, லட்சுமி முதல் சிவசங்கரிவரை சிறுகதைத் தோட்டத்திற்கு வளம் சேர்த்தோர் பலர். நாவல்களும் சிறுகதைகளும் அயல்மொழி இலக்கிய வடிவமாயினும் தமிழ் நிலத்தில் வேர்ஊன்றி விழுது விட்டுப் பூத்துக் குலுங்குகின்றன.
சிறுதையின் வடிவம், உள்ளீடு, உத்திகள், வெளிப்பாட்டு வகைகள், புலப்பாட்டு நெறிகள், நாளும் வளர்ந்தோங்கி வருகின்றன. இதழ்கள் பல; கதைகள் மிகப்பல; படிப்போரும் பலர்; வாழுங்கதைகளோ சிலவே. உயிராற்றல் பெற்ற கதைகள் கதையாசிரியர்களின் ஆளுமையால் சாகா வரம் பெற்று விடுகின்றன. வாடா மலர்களாய் மணம் பரப்புகின்றன.
'பெயர் சொல்லும் பூக்கள்' மனசின் விந்தையான போக்கைக் காட்டுவதுடன், பெண்ணின் மனம் லேசில் புரிந்து கொள்ளமுடியாத பெரும் புதிர் என்பதையும் வலியுறுத்துகிறது.
Read more from M. Kamalavelan
Akbar Chakravarthyum Amaichar Birbalum Rating: 0 out of 5 stars0 ratingsAzhukku Padatha Azhagu Rating: 4 out of 5 stars4/5Nandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsNer Kaanalgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaaviya Kavingnar Vaali Rating: 0 out of 5 stars0 ratingsAnthonyin Aattu Kutty Rating: 0 out of 5 stars0 ratingsPakka Balam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsIdaiyinam Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Managalil Abdul Kalam Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Rating: 0 out of 5 stars0 ratingsAzhagarsamiyin Neechal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar Rating: 0 out of 5 stars0 ratingsKudiyarasu Thalaivar K.R.Narayanan Rating: 0 out of 5 stars0 ratingsNer Kaanalgal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsSathanai Semmal Sa.Ve.Su. Rating: 0 out of 5 stars0 ratingsPathippu Semmal Oru Ninaivu Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsAringnar Anna Rating: 0 out of 5 stars0 ratingsPesum Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsSemmozhi Valartha Semmalgal Rating: 0 out of 5 stars0 ratingsNamba Mudiyatha Nalla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsGandhiadigal Rating: 0 out of 5 stars0 ratingsAppavai Azhaithu Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Peyar Sollum Pookkal
Related ebooks
Aathichoodi Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Muttruperatha Manu Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsNeeravar Kenmai Rating: 0 out of 5 stars0 ratingsMayangoli Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Vazhvenum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsKalam Vellum Kalaignar Rating: 0 out of 5 stars0 ratingsMacedonia Maaveeran Rating: 0 out of 5 stars0 ratingsKinatrukkul Cauvery Rating: 0 out of 5 stars0 ratingsEnnattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi Naan Pathi Kanney Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratings“Thelivu” Jananesan 3 Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsAval Chinna Penna? Rating: 0 out of 5 stars0 ratingsSivamalar Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Ullam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Nathi Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsPesum Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsVallalar Pillaithamizh Rating: 0 out of 5 stars0 ratingsOppanai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Vazhi Moondru Vaasal Rating: 3 out of 5 stars3/5Singapoorukku Sila Kazhuthaigal Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 4 Rating: 0 out of 5 stars0 ratingsKottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Thirukkural Nagaichuvai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Peyar Sollum Pookkal
0 ratings0 reviews
Book preview
Peyar Sollum Pookkal - M. Kamalavelan
https://www.pustaka.co.in
பெயர் சொல்லும் பூக்கள்
Peyar Sollum Pookkal
Author:
மா. கமலவேலன்
M. Kamalavelan
For more books
https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, வாசகர்களின் பெருக்கம், இதழ்களின் வளர்ச்சி சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. நூற்றுக்கணக்கான வார, மாத இதழ்களின் பரப்பளவில் பெரும்பகுதி சிறுகதைகளே. இதழ்களின் அசுரப்பசிக்கு ஆயிரக்கணக்கான சிறுகதைகளே தீனி. சிறுகதை வனத்திடையே நந்தவனப் பூக்களும் உண்டு. கதைக்காடுகளிடையே எழில் மிக்க தோப்புகளும் உண்டு. புதுமைப்பித்தன் முதல் அகிலன்வரை கல்கி முதல் ஜெயகாந்தன்வரை, லட்சுமி முதல் சிவசங்கரிவரை சிறுகதைத் தோட்டத்திற்கு வளம் சேர்த்தோர் பலர். நாவல்களும் சிறுகதைகளும் அயல்மொழி இலக்கிய வடிவமாயினும் தமிழ் நிலத்தில் வேர்ஊன்றி விழுது விட்டுப் பூத்துக் குலுங்குகின்றன.
சிறுதையின் வடிவம், உள்ளீடு, உத்திகள், வெளிப்பாட்டு வகைகள், புலப்பாட்டு நெறிகள், நாளும் வளர்ந்தோங்கி வருகின்றன. இதழ்கள் பல; கதைகள் மிகப்பல; படிப்போரும் பலர்; வாழுங்கதைகளோ சிலவே. உயிராற்றல் பெற்ற கதைகள் கதையாசிரியர்களின் ஆளுமையால் சாகா வரம் பெற்று விடுகின்றன. வாடா மலர்களாய் மணம் பரப்புகின்றன.
ஆசிரியர் கமலவேலன் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்.
மக்கள் வாழ்க்கையில் கதைகளுக்குக் களங்களைத் தேடுகிறார். சிறிய நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு சிறப்பான கதைவடிவம் அமைக்கிறார். பாத்திரங்கள் உயிர்பெற்று உலாவுகின்றன. கதை சொல்லும் திறன் இவர்க்குக் கைவந்த கலை. மனிதர்களை அலைக்கழிக்கும் உணர்வுகளை இவர் கதைகள் அழகோவியமாக்குகின்றன. உவகையாயினும் அவலமாயினும் இவர் எழுத்து அழகு சேர்த்துவிடுகிறது. நிகழ்ச்சிகளைத் தோரணமாக்காமல் நிகழ்வுகளின் விளைவுகளை ஓவியமாக்குகிறார். இலையிலுள்ள பனித்துளி பெரிய பனைமரம் முழுவதையும் காட்டுவதுபோல, இவரது சிறிய கதைகள் மனித மனங்களின் அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன. இத்தொகுதி இவர் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை இனங்காட்டும். ஆசிரியர் கமலவேலன் பூக்களைக் கண்டு பூரிப்பவர். மலர்களைக் கண்டு மகிழ்பவர். இவர் எண்ணச் சோலையில் பூத்த வண்ணக் கதை மலர்கள் பல. வண்ணத்தோடும் வடிவத்தோடும் கூடி அவை மணம் பரப்புகின்றன. பூக்கள் மலர்ச்சியின் எண்ணங்கள்; மகிழ்ச்சிதரும் மங்கலப் பொருட்கள், அவற்றின் காட்சி நெஞ்சில் இன்ப நினைவுகளை என்றும் எழுப்புவன. மென்மையும் நன்மையும் வாய்ந்த பூக்களே நூலாசிரியரின் நூல்களுக்குத் தலைப்பாகியுள்ளன.
ஆசிரியர் தூய உள்ளமும் தூய உடையும் எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் உடையவர். பிறந்த குடும்பத்திற்கும் ஊருக்கும் பணியாற்றும் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் நாகரிக வாழ்வினர். இலக்கிய மேதை வல்லிக்கண்ணன் அவர்கள் சிறந்ததோர் பதிப்புரை வழங்கிவிட்டார். அதுவே இவரது சிறுகதைப் படைப்புத் திறனுக்குக் கட்டியம் கூறுகிறது.
அணிந்துரை
வல்லிக்கண்ணன்
உலகம் ஒரு நாடக அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த அரங்கத்தில் வாழ்க்கை நாடகங்கள் ரசமாக நடந்து கொண்டிருக்கின்றன. விதம் விதமான கதை மாந்தர்கள். உணர்ச்சிகளாலும், மனம் எனும் புதிரான ஒரு தத்துவத்தினாலும் ஆட்டிவைக்கப்படுகிற ரகம் ரகமான மனிதர்கள் நடத்திக் காட்டுகிற நாடகங்கள் தான் எத்தனை, எத்தனை!
மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையின் பலவிதமான உணர்ச்சி நாடகங்களையும் கூர்ந்து கவனிக்கக் கற்றுக் கொண்டவர்களுக்குச் சுவை நிறைந்த கதைகள் கதைகளுக்கு விஷயங்கள் கிடைத்தவாறு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நண்பர் கமலவேலன் அவ்விதம் மனிதர்களையும், வாழ்க்கையில் உணர்ச்சிகளும் மனமும் ஆட்டிப்படைக்கிற விநோதங்களையும் கவனிக்கும் இயல்பு பெற்றிருக்கிறார்; அத்துடன் சிந்தனைத்திறமும் கொண்டிருக்கிறார். எனவே அவர் சுவாரஸ்யமான கதைகளை எழுதுவது சாத்தியமாகிறது.
எழுபது வயதைத் தாண்டிவிட்ட ஆச்சி ஒருத்தி நாக்கிற்கு அடிமையாக இருக்கிறாள். ருசியாகச் சாப்பிடுவதில் ஆசை. மாங்காய்ச் சோறு பண்ணும்படி மருமகளுக்கு உத்திரவிடுகிறாள். உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று மருமகள் சொல்லியும் கேட்கவில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறாள். மருமகள் ஒரு கரண்டிச் சோறுதான் உண்டாள். இரவில் மகன் பசியோடு வீட்டுக்கு வருகிறான், மாங்காய்ச் சோறு சாப்பிடும் ஆவலுடன். ஆனால், வீட்டில் யாருமில்லை. ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பதாக அறிந்து, அம்மாவின் உடல் நிலை பற்றிய கவலையோடு ஆஸ்பத்திரிக்கு விரைகிறான். அங்கு ஆச்சி ஆரோக்கியமாகக் காணப்படுகிறாள். மருமகள் தான் மாங்காய்ச் சோற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இப்படி அதிர்ச்சியும் ஆச்சர்யமுமான முடிவுடன் அமைந்துள்ளது 'மாங்காய்ச் சோறு' கதை,
ஆச்சியின் குணமும் போக்கும் ரசமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன கதையில். எதிர்பாராத அதிர்ச்சியும் ஆச்சரியமும் தரக்கூடிய முடிவு கதைக்குத் தனிச்சுவை சேர்க்கிறது.
சிறுகதை எழுதும் உத்தியில் இப்படியான முடிவுகள் தருவதில் ஓ. ஹென்றி என்பவர் பிரசித்தி பெற்ற திறமைசாலி. அவருடைய கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் முடியும். எனவே இந்த உத்தி 'ஓ. ஹென்றி பாணி' என்ற சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. இந்த ரீதியில் கதை எழுதுவதில் கமலவேலன் தேர்ந்தவராக இருக்கிறார். அவருடைய கதைகள் சில இதை எடுத்துக் காட்டுகின்றன.
'அழகு தந்த அதிர்ச்சி', 'காற்று' போன்ற கதைகளை இவ்வகையில் குறிப்பிடலாம்.
மனித சுபாவத்தைச் சித்திரிப்பதன் மூலம், உள இயல் உண்மைகளைக் கமலவேலன் சில கதைகளில் பதிவு செய்திருக்கிறார். இவ்வகையில் நிழல், மின்னலாய்ச் சில இலட்சியங்கள், சுயநலங்கள், பெயர் சொல்லும் பூக்கள் குறிப்பிடத்தக்கவை.
'இதயப் பரிமாற்றங்களாய்த் தொடங்கிய வாழ்க்கை இயந்திர கதியில் திரும்பி' விட்டதில், உடம்பும் மனசும் அலுத்துப் போன மூத்த தம்பதியர் வயது முதிர்ந்த கணவனும் மனைவியும் மாறுதல் தேடி வெளியூர் பயணம் மேற்கொள்கிறார்கள். மனைவிதான் அதற்குத் தூண்டுதலாக இருந்தாள். ஆனால் இரண்டே நாட்களில் அவள் மனம் அலைக்கழியத் தொடங்கியது. கவலையெல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கவேண்டும் என்று புனித ஊர்களுக்குச் சென்றால், அங்கே அவள் உள்ளம் வீட்டுப் பிரச்சினைகள், மகன் மருமகள் பேரன் பேத்தி பற்றிய கவலைகளில் ஆழ்ந்து அமைதியின்றித் தவித்தது. உடனேயே ஊர் திரும்ப வேண்டும் என்று அவள் கணவனை வற்புறுத்துகிறாள்.
மனித மனத்தின் விசித்திரப் போக்கைச் சுட்டும் நல்ல கதை 'நிழல்'. அதே மாதிரி மனத்தின் விந்தை இயல்பைச் சித்திரிக்கும்
சுவையான கதை 'மின்னலாய்ச் சில இலட்சியங்கள்'.
செலவுக்குப் பணம் இல்லாது, கடனும் கிடைக்காத நிலையில், சிக்கனமாக எப்படி எப்படி வாழலாம், செலவுகளைக் குறைத்துப் பணம் மிச்சப்படுத்தலாம் என்று தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறான் ஒருவன். சீலமுத்து என்பது அவன் பெயர். கடனுக்காக அலைகிறபோது உள்ள அவனது மன நிலையையும், கடன் தொகைகையில் கிடைத்ததும் அவன் நடந்து கொள்வதையும் இக்கதை சுவையாக விவரிக்கிறது. முடிவில் வரும் வரிகள் அவன் இயல்பை எடுத்துக்காட்டும் குறியீடு போல் அமைந்துள்ளன.
'சீலமுத்து சிகரெட் பற்ற வைக்கத் தீக்குச்சியை உரசினார். தீச்சுடர் தோன்றியது. சில வினாடிகள் அந்தச் சுடர் ஒளிர்ந்தது. சில வினாடிகள் தாம்'.
சீலமுத்துவின் தீர்மானமும் உள்ளத்தின் வைராக்கியமும் சிறிது நேரம் தெறித்த ஒளி போன்றதுதான். இதைக் கமலவேலன் அழகாக, உயிர்ப்பும் உணர்வும் கலந்த முறையில், கதையாக்கியிருக்கிறார்.
'பெயர் சொல்லும் பூக்கள்' மனசின் விந்தையான போக்கைக் காட்டுவதுடன், பெண்ணின் மனம் லேசில் புரிந்து கொள்ளமுடியாத பெரும் புதிர் என்பதையும் வலியுறுத்துகிறது.
தனசேகரன் மிகுந்த சிரமத்தோடு மனைவிக்கு நகை செய்து கொடுத்தான். அவன் அண்ணனும் அண்ணியும் ஒரு கல்யாண வீட்டுக்குப் போவதற்காக வருகிறார்கள் என்று தெரிந்ததும் மனைவி கோகிலா, புதுநகையை அவர்கள் பார்வையில் படாமல் மறைக்க வழிதேடுகிறாள். எந்த வழியும் சரிப்படவில்லை.
'தன் உழைப்பால் பெற்றதைக் கூட சுதந்திரமாய் அனுபவிக்க விடாமல் ஏழ்மை தடையாக வந்து விடுவதை' எண்ணித் தனசேகரன் குமைகிறான். அவன் அண்ணன் வருகிறார். கல்யாண வீட்டுக்குப் போவதற்காக அல்ல. அவர் மனைவிக்கு ஆபத்து; வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; மூவாயிரம் ரூபாய் பணம் உடனடியாகத் தேவை;