Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam
Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam
Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam
Ebook111 pages36 minutes

Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் மெய்யப்பனாருக்கும் ஓர் நினைவுக் களஞ்சியம் உருவாகும் என்பதை நினைக்க நினைக்க நம் நெஞ்சமும் நினைவுகளால் கனக்கிறதே? பதிப்புச்செம்மலோடு பழகிய நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் கமலவேலனார் இந்நினைவு நூலில் பதிவு செய்துள்ளார். மெய்யப்பனாரின் ஆளுமைத்திறமும், தமிழ்த் திறமும், மனநலமும், பண்பு நலன்களும் புலனாகும் வண்ணம் அவர்தம் தமிழ் வாழ்வில்தான் எத்துணை நிகழ்வுகள்! என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580141909946
Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam

Read more from M. Kamalavelan

Related to Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam

Related ebooks

Reviews for Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பதிப்புச்செம்மல் ஓர் நினைவுக் களஞ்சியம்

    Pathippu Semmal Oru Ninaivu Kalanjiyam

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    1. வனப்பூ

    2. மழையில் மகிழ்ந்தார்

    3. நேரமே பெரிது

    4. சுமார் தவிர்க்கவும்

    5. வீண் செலவுவேண்டாம்

    6. தொழிலாளிக்குப் பாராட்டு

    7. குடும்ப நிகழ்ச்சியையும் மறவாதவர்

    8. உணவு வேளையிலும்...

    9. பார்வையாளர் பதிவேடு

    10. அன்னமும் அமைதியும்

    11. கோபமும் வரும்

    12. யாதும் ஊரே யாவரும் கேளிர்

    13. நன்னர் நெஞ்சம்

    14. எழுத்தாளர் சங்கம்

    15. வெற்றி என்பது வித்தையல்ல

    16. ஆயிரம் ரூபாயில் ஒரு இலட்சம் மரங்கள்

    17. பெயர் சூட்டல்

    18. தனித்த சிந்தனையாளர்

    19. அழைப்பும் அதன் பின்னரும்

    20. உள்ளமெல்லாம் வள்ளுவம்

    21. வேட்டி வாங்கினார்

    22. எதிர்காலம் அறிந்தவர்

    23. ஆச்சியின் அன்பு

    24. அலுவலக நடைமுறைகள்

    25. பயணங்கள்... பயணங்கள்... பயணங்கள்

    அணிந்துரை

    முனைவர் இ. சுந்தரமூர்த்தி

    மேனாள் துணைவேந்தர்

    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

    தமிழ்க் களஞ்சியத்திற்கா ஓர் நினைவுக் களஞ்சியம்? சங்க இலக்கியக் களஞ்சியம், நகரத்தார் கலைக்களஞ்சியம், இந்தியத் தத்துவக் களஞ்சியம், கொங்குக் களஞ்சியம்... எனப் பல களஞ்சியங்களுக்கு வித்திட்ட தமிழ்க் களஞ்சியத்திற்கா ஓர் நினைவுக் களஞ்சியம்?

    உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓய்வறியாத தமிழ் நினைவுச் செம்மலுக்கா ஓர் நினைவுக் களஞ்சியம்? பதிப்புக் களஞ்சியமாகத் திகழ்ந்த தமிழ்க் களஞ்சியத்திற்கா நினைவுக் களஞ்சியம்?

    தமிழறிஞர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ஒரு பண்புச் செம்மலுக்கா நினைவுக் களஞ்சியம்? நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது. நம்ப முடியவில்லை!

    அவரோடு பழகிய பலருக்கும் இவ்வெண்ணங்கள் எழுவது இயல்புதான்.

    ‘யாரோடும் பகைகொள்ளலன்’ என்ற வாக்கிற்கேற்ப எவரையும் புண்படுத்தாத அவருடைய இயல்பும் எளிய வாழ்வும் பழகும் எவரையும் அவர்பால் ஈர்க்கின்றன. உயர்ந்த நிலையில் இருந்தோரையும் எளிய நிலையில் இருந்தோரையும் உள்ளார்ந்த நட்புணர்வோடு பார்த்தவர் மெய்யப்பனார்.

    மெய்யப்பனார் தம் இல்லவிழாக்களில் அனைவரையும் கவர்ந்த நட்புத்திறத்தைக் காணலாம். இலக்கிய விழாக்களில் அவர்தம் ஆளுமைத் திறத்தைக் காணலாம்.

    பதிப்புச்செம்மல் அவருடைய மகனார் திரு. மீனாட்சி சோமசுந்தரத்தையும் அவர்தம் மேலாளர் திரு. இராம குருமூர்த்தியையும் எழுபதாம் அகவை விழாவில் நெஞ்சுருக அறிமுகப்படுத்தியமை இன்னும் நம் மனங்களில் பசுமையாக உள்ளது. மாண்புடைய மனிதநேயத்தை அவ்விழாவில் கண்டோம்.

    எத்துணையும் பேதமுறாது அனைவரையும் போற்றிய பதிப்புச் செம்மலுக்கு இன்று தமிழ் மக்கள் அத்துணைபேரும் கண்ணீர்மல்க நினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.

    தென்காசி எழுபத்தைந்தாம் ஆண்டு திருவள்ளுவர் விழாவில் கலந்துகொண்டபோது திட்டமிட்டு உருவாக்க வேண்டிய தமிழ்ப் பணிகள் எவைஎவை எனக் கலந்து உரையாடிய தமிழ்ச் செம்மல் மெய்யப்பனாரின் தமிழாக்கச் சிந்தனைகள்தாம் எத்துணை எத்துணை?

    எங்கு எப்பொழுது பார்த்தாலும் தமிழுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த சிந்தனை வளமும் கலந்து உரையாடி மகிழும் திறமும் அவருக்கே உரியவை.

    உயர் ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கவேண்டிய பணிகளைத் தாம் ஒருவரே திட்டமிட்டு, இதனை இதனால் இவன் முடிக்கும். என்றாய்ந்து தக்கவரிடம் தந்து நெறிப்படுத்தி ஆக்கப்பணிகள் ஆற்றிய அறிஞர் பெருமகனார் நம் மெய்யப்பனார்.

    களஞ்சியங்கள் பல உருவாக்கிய களஞ்சியச் செம்மல்! தமிழ்த்தளங்கள் குறித்த அனைத்தையும் தம் நினைவில் வைத்திருக்கும் அவரே ஓர் நினைவுக் களஞ்சியம்,

    கமலவேலனாரின் ‘பதிப்புச் செம்மல் ஓர் நினைவுக் களஞ்சியம்’ என்னும் இந்நூலைப் படிக்கும்போது மெய்யப்பனார் நம்மோடு பேசி மகிழ்ந்து கலந்து உறவாடிய காட்சிகள் நம்முன் எழுகின்றன.

    மெய்யப்பனார் பதிப்புச் செம்மல் மட்டுமல்லர்; பல்துறைச் செம்மல்.

    தமிழ்பயின்ற மாணவர்க்கோ தமிழ்ப் பேராசிரியர்

    தமிழ்நூல் வல்லார்க்கோ பதிப்பறிஞர்

    தமிழறிஞர்க்கோ பண்பறிந்து பழகும் பண்பாளர்

    தமிழ்நூல் பதிப்பார்க்கோ பதிப்புவழிகாட்டி

    தமிழ் ஆய்வரங்கினருக்கோ தமிழ்க் கொடையாளர்

    தமிழ் இயக்கத்தாருக்கோ தமிழ்ப் பற்றாளர் நெறியாளர்

    தம் குடும்பத்தார்க்கோ பாசமிகு உறவினர்

    தமிழ்க் குடும்பத்தார்க்கோ உற்றநண்பர்

    தம் நிறுவனத்தார்க்கோ கடிதோச்சி ஆட்கொள்ளும் ஆளுமையர்

    தமிழுலகுக்கோ தமிழ்பேணும் தமிழர்

    பல்துறைப் பண்பாளர் மெய்யப்பனார் தமிழாசிரியராய் விளங்கினார்; தமிழ்ப் பதிப்பாளராய் வளர்ந்தார்; தமிழ் நேயமிக்க தமிழராக வாழ்ந்தார்;

    இல்லை இல்லை இன்றும் நம்மிடையே வாழ்கிறார்.

    பதிப்புச் செம்மல் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தமிழோடும் தமிழ்ச் சிந்தனைகளோடும் நம்முன் அமர்ந்து இதோ என்றும் மாறாப் புன்னகையோடு பேசிக் கொண்டிருக்கின்றார்.

    நவில்தோறும் நவில்தோறும் நூல்நயம் போன்று பயில்தோறும் பயில்தோறும் பண்புடையாளராக நம்முடன் இருக்கின்றார்.

    தமிழைப் போற்றி வாழ்ந்த பாண்டித்துரைத் தேவர் மறைந்தபோது நாகை நீலலோசனியில் ஜி. சதாசிவம் பிள்ளை அவர்கள் கூறியதுபோல், அவர் நம்மோடு உறவாடும் நூலாகத் திகழ்கிறார். மெய்யப்பனார் உருவாக்கிய நூல்களுள் மெய்யப்பனார் வாழ்கிறார்; அவருக்கு அழிவில்லை.

    சித்திரத்தில் நீயிருப்பாய்

    Enjoying the preview?
    Page 1 of 1